A
agopal
Guest
உய்த்துணர் உணர்வை
பகிர்.
எவன் சிவன்?
நீ வைத்த பேர் அல்லவோ சிவன்?
பெருஞ்சோதிக்கு பெயர் ஒன்று தேவையா?
சோதியே பெயர் அல்லவா?
உணர் உணற்றுபவனை,
உணர் உண்மையான உமை எனும் பொருளை,
உணர் உணர்வை,
உணர் உணருபவனை,
உணர் அனைத்தும் உணர்வு என்பதை,
உண்மையும் உணர்வு, பொய்யும் உணர்வு,
உணர்வே ஒளியும், காரிருளும்,
சப்தமும்,
உணர்வே நிசப்தமும், பரவெளியும், பரவெளின் தோற்றமும்.
பாற்கடலில் உறையும் பரன்தாமனும், கைலாயத்தின் உச்சத்தில் உள்ள சிவமும்,
மறைகளேந்திய நான்முகனும், நீலமேக தேவகி மைந்தனும் உணர்வே!
வண்ணங்களும்,
அதற்க்கேற்ப இயங்கும் மனிதர்களும், கோள்களும், முப்பது முக்கோடி தேவர்களும், ஆதித்தியனும்,
நிலவும்,அனைத்து விண்மீன்களும், இயற்கையும், செயற்கையும், இப்பூமியும்,
அனைத்து உலகங்களும்,
நீயும், நானும், உணர்வே என்று உணர்.
உணர்வின் இச்சைக்கேற்ப இயங்குகின்றன அனைத்தும் என்று உணர்.
இச்சை குன்றினால் ஒடுங்கும் அனைத்தும் குறைக்கேறப்ப!
இச்சை குன்ற, உரக்க நகைப்பான் மகாகாலபைரவன்,
ஒடுங்கும் நீரும், நெருப்பும்
குறைக்கேற்ப்ப, எரிமலையும் கொந்தளிக்கும், நிலமும் நடுங்கும், ஓடும் சிவ பயத்தினால் காற்று,
ஆகாயம் நிறம் மாறும்,
சிவ மயம் சிவ பயமாகும்.
ஓடுவாய் வாழ்க்கையின் ஓரத்திர்க்கு.
அத்தனை அரிதா மெய் பொருள் காண்பது?
மறைகளுக்கு ஏற்ப அனுதினமும் மெய் உறைத்தாயா?
தர்மமும் தானமும் தான் செய்தாயா?
அகவலின் படி மலமது மூன்றின் மயக்கம் தான் அறுத்தாயா?
பொருள் உணராமல் ஓதினாய் மறைகளை,
ஈடுபாடில்லாமல் செய்தாய் உன் சடங்குகளை,
மறந்தாய் உன் பிறவிக்கடனை,
பாடினாய் அனைத்துலகும் இன்பமுற என்று, மறந்தாய் உன் உலகை.
உன்னுள் இருக்கும் பரம்பொருளை மறைத்தாய் பற்பல மலத்தை கொண்டு,
கபட வேடதாரியானாய்,
உண்மையை மறைத்தாய்,
நடத்தினாய் நாடகங்கள் பல,
நடித்தாய் அதில் பற்பட வேடங்களில்,
போராடினாய் சிலவற்றில்,
வெற்றி பெற்றாய் சிலவற்றில்,
நானே நடத்தி, நானே நடித்தேன் என்றாய்
நானே வெற்றி பெற்றேன் என்றாய்!
மமதையில் மெய் மறந்தாய்.
ஓடுவது நீயன்று, ஓட்டுனர்கள் பல
ஆடுவது நீ அன்று, ஆடுவர் பல,
பாடுவது நீயன்று, பாடுவர் பல,
உய்த்துணர் உயிறே,
உய்த்துணர்,
உய்த்துணர் அது உணர்வே!
உணர்வை காதலித்தது முதல் உயிர்.
காலம் கழிந்தது அவ்வுயிர்க்கு,
பின் தொடர்ந்தது உணர்வை அது,
உணர்வு புருசனாய் ஓர் உடம்பெடுக்க,
அவ்வுயிர் எடுத்த உருவங்களோ பற்பல - உணர்வை நெருங்க,
யுகங்கள் பல ஓடின, காலங்கள் பல கூடின, காதல் கழியவில்லை
ஆட்டங்கள் முடியவில்லை,
இதோ ஓர் ஆட்டம்,
நடக்கின்றது இன்று,
அனைவருக்கும் பங்குண்டு,
ஆடுங்கள் தெளிவாய்!
நாடகங்கள் நடக்கட்டும்,
வாழ்க்கை தொடரட்டும்.
அறிவாய் உன் பங்கை,
உன்னை அறிந்தால்,
உணர்வை அறிந்தால்.
அன்போ சிவமாகும்,
சிவமோ உணர்வாகும்.
அறிந்தாயா நில்லா உலகை,
அறிந்தாயா காதலை நீ,
அறிந்தாயா அன்பை நீ
உணர்ந்தாயா உணர்வை?
உணர் உணருபவனை.
.
பகிர்.
எவன் சிவன்?
நீ வைத்த பேர் அல்லவோ சிவன்?
பெருஞ்சோதிக்கு பெயர் ஒன்று தேவையா?
சோதியே பெயர் அல்லவா?
உணர் உணற்றுபவனை,
உணர் உண்மையான உமை எனும் பொருளை,
உணர் உணர்வை,
உணர் உணருபவனை,
உணர் அனைத்தும் உணர்வு என்பதை,
உண்மையும் உணர்வு, பொய்யும் உணர்வு,
உணர்வே ஒளியும், காரிருளும்,
சப்தமும்,
உணர்வே நிசப்தமும், பரவெளியும், பரவெளின் தோற்றமும்.
பாற்கடலில் உறையும் பரன்தாமனும், கைலாயத்தின் உச்சத்தில் உள்ள சிவமும்,
மறைகளேந்திய நான்முகனும், நீலமேக தேவகி மைந்தனும் உணர்வே!
வண்ணங்களும்,
அதற்க்கேற்ப இயங்கும் மனிதர்களும், கோள்களும், முப்பது முக்கோடி தேவர்களும், ஆதித்தியனும்,
நிலவும்,அனைத்து விண்மீன்களும், இயற்கையும், செயற்கையும், இப்பூமியும்,
அனைத்து உலகங்களும்,
நீயும், நானும், உணர்வே என்று உணர்.
உணர்வின் இச்சைக்கேற்ப இயங்குகின்றன அனைத்தும் என்று உணர்.
இச்சை குன்றினால் ஒடுங்கும் அனைத்தும் குறைக்கேறப்ப!
இச்சை குன்ற, உரக்க நகைப்பான் மகாகாலபைரவன்,
ஒடுங்கும் நீரும், நெருப்பும்
குறைக்கேற்ப்ப, எரிமலையும் கொந்தளிக்கும், நிலமும் நடுங்கும், ஓடும் சிவ பயத்தினால் காற்று,
ஆகாயம் நிறம் மாறும்,
சிவ மயம் சிவ பயமாகும்.
ஓடுவாய் வாழ்க்கையின் ஓரத்திர்க்கு.
அத்தனை அரிதா மெய் பொருள் காண்பது?
மறைகளுக்கு ஏற்ப அனுதினமும் மெய் உறைத்தாயா?
தர்மமும் தானமும் தான் செய்தாயா?
அகவலின் படி மலமது மூன்றின் மயக்கம் தான் அறுத்தாயா?
பொருள் உணராமல் ஓதினாய் மறைகளை,
ஈடுபாடில்லாமல் செய்தாய் உன் சடங்குகளை,
மறந்தாய் உன் பிறவிக்கடனை,
பாடினாய் அனைத்துலகும் இன்பமுற என்று, மறந்தாய் உன் உலகை.
உன்னுள் இருக்கும் பரம்பொருளை மறைத்தாய் பற்பல மலத்தை கொண்டு,
கபட வேடதாரியானாய்,
உண்மையை மறைத்தாய்,
நடத்தினாய் நாடகங்கள் பல,
நடித்தாய் அதில் பற்பட வேடங்களில்,
போராடினாய் சிலவற்றில்,
வெற்றி பெற்றாய் சிலவற்றில்,
நானே நடத்தி, நானே நடித்தேன் என்றாய்
நானே வெற்றி பெற்றேன் என்றாய்!
மமதையில் மெய் மறந்தாய்.
ஓடுவது நீயன்று, ஓட்டுனர்கள் பல
ஆடுவது நீ அன்று, ஆடுவர் பல,
பாடுவது நீயன்று, பாடுவர் பல,
உய்த்துணர் உயிறே,
உய்த்துணர்,
உய்த்துணர் அது உணர்வே!
உணர்வை காதலித்தது முதல் உயிர்.
காலம் கழிந்தது அவ்வுயிர்க்கு,
பின் தொடர்ந்தது உணர்வை அது,
உணர்வு புருசனாய் ஓர் உடம்பெடுக்க,
அவ்வுயிர் எடுத்த உருவங்களோ பற்பல - உணர்வை நெருங்க,
யுகங்கள் பல ஓடின, காலங்கள் பல கூடின, காதல் கழியவில்லை
ஆட்டங்கள் முடியவில்லை,
இதோ ஓர் ஆட்டம்,
நடக்கின்றது இன்று,
அனைவருக்கும் பங்குண்டு,
ஆடுங்கள் தெளிவாய்!
நாடகங்கள் நடக்கட்டும்,
வாழ்க்கை தொடரட்டும்.
அறிவாய் உன் பங்கை,
உன்னை அறிந்தால்,
உணர்வை அறிந்தால்.
அன்போ சிவமாகும்,
சிவமோ உணர்வாகும்.
அறிந்தாயா நில்லா உலகை,
அறிந்தாயா காதலை நீ,
அறிந்தாயா அன்பை நீ
உணர்ந்தாயா உணர்வை?
உணர் உணருபவனை.
.