நைச்சியானு சந்தானம்
நன்மை தீமைக ளொன்றும் அறியேன் நாரணா! என்னும் இத்தனையல்லால்*
புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப் புகழ்வானன்று கண்டாய் திருமாலே!*
உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன்
ஓவாதே நமோ நாரணா! என்பன்* வன்மையாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவனென்னும் வன்மை கண்டாயே.
ஸ்ரீபெரியாழ்வார் ? பெ. திருமொழி 5.1.3 நா.தி.பி(435)
ச்ரிய: பதியானவனே!
‘நாராயணா!’ என்று கூப்பிடுகையாகிற இவ்வளவொழிய
(வேறு) நன்மை தீமை ஒன்றையும்
அறிகிறேனில்லை.
(எனக்கு இயற்கையாக உள்ள) அற்பத்தனத்தினால்
உன்னைக் குறித்து
வஞ்சகமான சொற்களைச் சொல்லி
புகழுவனல்லன் (அடியேன்). உன்னை
இடைவிடாது ஸ்மரித்துக் கொண்டிருக்கத்தக்க வழிகளில் ஒரு வழியையும்
அறிந்தேனில்லை;
(ஒரு நொடிப்பொழுதும்) ஒழிவின்றி (இடைவிடாமல்)
நமோ நாராயணா என்னா நின்றேன்.
அடியேனுக்கு மிடுக்காவது
உன்னுடைய கோயிலில் வாழுகின்றவன் வைஷ்ணவன் என்கிற மிடுக்கோடு
முன்னிலையசைச் சொல்.
“எம்பெருமானே! அடியேன் ‘நாராயணா! நாராயணா” என்று இத்திருநாமத்தையிட்டுக் கூப்பிடுகையாகிற இந்த ஒற்றை மாத்திரம் அறிவேனேயொழிய, இத்திருநாமம் சொல்லுகை நன்மையாய்த் தலைகட்டுகிறதோ, அன்றித் தீமையாய்த் தலைகட்டுகிறதோ என்பதையும் நான் அறிகின்றிலேன்” என்று ஆழ்வார் அருளிச்செய்ய; அதற்கு எம்பெருமான், “ஆழ்வீர்! என்ன பயனை விரும்பி நீர் இங்ஙனே திருநாமம் சொல்லநின்றீர்? பிரயோஜநாந்தரபாராய் ஏனிப்படி கபடம் பேசுகின்றீர்?” என்று கேட்க, அது கேட்டு ஆழ்வார், “அப்பனே! பிரயோஜனத்தைப் பேணுகையாகிற அற்பத்தனத்தினால் நான் ‘நாராயணா!” என்று சொல்லி உன்னைக் கபடமாகக் புகழுமவனல்லன்காண்” என்ன; அது கேட்டு எம்பெருமான், “நீர் ஒரு பிரயோஜனத்தையும் மெய்யே விரும்பீனரில்லையாகில், மோக்ஷமாகிற பரமபுருஷார்த்தத்தை விரும்பி, அது பெறுகைக்கு உறுப்பான வழிகளில் முயலப்பாரீர்” என்ன; அது கேட்டு ஆழ்வார், “நாராணனே! மோக்ஷப்ராப்திக்கு நிரந்தர ஸ்மரணாதிகன் வேண்டுமென்று சாஸ்திரங்களிற் சொல்லியபடி அடியேன் அனுட்டிக்கவல்லனல்லன்; ஒரு நொடிப்பொழுதும் வாய்மாறாமல் திருவஷ்டாக்ஷாரத்தையே அடியேன் அநுஸந்திக்கவல்வேன்; ஒருக்ஷணம் அதுமாறினாலும் எனக்கு ஸத்தை குலையுமே” என்ற; அதுகேட்டு எம்பெருமான், “ஆழ்வீர்! நீர் சொல்வதெல்லாம் சால அழகிதாயிருந்தது; ஒரு க்ஷணம் திருநாமம் சொல்லாதொழியில் ஸத்தை குலையுமென்கிறீர்; ‘என்வாயாற் சொல்லில் உனக்கு அவத்யாவஹமாகும்’ என்றுஞ் சொல்லா நின்றீர்; இதெல்லாம் பெருத்த மிடுக்காயிருந்ததே!” என்ன; அதற்கு ஆழ்வார், “மிடுக்கா? அந்த மிடுக்குக்கு என்ன குறை? உன்னுடைய அபிமாநம் குறைவற்றிருக்கும்படி உள்கோயில் வாசலிலேயே வாழப்பெற்ற வைஷ்ணவன் என்கிற ஆகாசத்தினாலுண்டான மிடுக்குக்குக் குறைவில்லை” என்பதாய்ச் சொல்லுகிறது, இப்பாட்டு,
நன்மை தீமைக ளொன்றும் அறியேன் நாரணா! என்னும் இத்தனையல்லால்*
புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப் புகழ்வானன்று கண்டாய் திருமாலே!*
உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன்
ஓவாதே நமோ நாரணா! என்பன்* வன்மையாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவனென்னும் வன்மை கண்டாயே.
ஸ்ரீபெரியாழ்வார் ? பெ. திருமொழி 5.1.3 நா.தி.பி(435)
ச்ரிய: பதியானவனே!
‘நாராயணா!’ என்று கூப்பிடுகையாகிற இவ்வளவொழிய
(வேறு) நன்மை தீமை ஒன்றையும்
அறிகிறேனில்லை.
(எனக்கு இயற்கையாக உள்ள) அற்பத்தனத்தினால்
உன்னைக் குறித்து
வஞ்சகமான சொற்களைச் சொல்லி
புகழுவனல்லன் (அடியேன்). உன்னை
இடைவிடாது ஸ்மரித்துக் கொண்டிருக்கத்தக்க வழிகளில் ஒரு வழியையும்
அறிந்தேனில்லை;
(ஒரு நொடிப்பொழுதும்) ஒழிவின்றி (இடைவிடாமல்)
நமோ நாராயணா என்னா நின்றேன்.
அடியேனுக்கு மிடுக்காவது
உன்னுடைய கோயிலில் வாழுகின்றவன் வைஷ்ணவன் என்கிற மிடுக்கோடு
முன்னிலையசைச் சொல்.
“எம்பெருமானே! அடியேன் ‘நாராயணா! நாராயணா” என்று இத்திருநாமத்தையிட்டுக் கூப்பிடுகையாகிற இந்த ஒற்றை மாத்திரம் அறிவேனேயொழிய, இத்திருநாமம் சொல்லுகை நன்மையாய்த் தலைகட்டுகிறதோ, அன்றித் தீமையாய்த் தலைகட்டுகிறதோ என்பதையும் நான் அறிகின்றிலேன்” என்று ஆழ்வார் அருளிச்செய்ய; அதற்கு எம்பெருமான், “ஆழ்வீர்! என்ன பயனை விரும்பி நீர் இங்ஙனே திருநாமம் சொல்லநின்றீர்? பிரயோஜநாந்தரபாராய் ஏனிப்படி கபடம் பேசுகின்றீர்?” என்று கேட்க, அது கேட்டு ஆழ்வார், “அப்பனே! பிரயோஜனத்தைப் பேணுகையாகிற அற்பத்தனத்தினால் நான் ‘நாராயணா!” என்று சொல்லி உன்னைக் கபடமாகக் புகழுமவனல்லன்காண்” என்ன; அது கேட்டு எம்பெருமான், “நீர் ஒரு பிரயோஜனத்தையும் மெய்யே விரும்பீனரில்லையாகில், மோக்ஷமாகிற பரமபுருஷார்த்தத்தை விரும்பி, அது பெறுகைக்கு உறுப்பான வழிகளில் முயலப்பாரீர்” என்ன; அது கேட்டு ஆழ்வார், “நாராணனே! மோக்ஷப்ராப்திக்கு நிரந்தர ஸ்மரணாதிகன் வேண்டுமென்று சாஸ்திரங்களிற் சொல்லியபடி அடியேன் அனுட்டிக்கவல்லனல்லன்; ஒரு நொடிப்பொழுதும் வாய்மாறாமல் திருவஷ்டாக்ஷாரத்தையே அடியேன் அநுஸந்திக்கவல்வேன்; ஒருக்ஷணம் அதுமாறினாலும் எனக்கு ஸத்தை குலையுமே” என்ற; அதுகேட்டு எம்பெருமான், “ஆழ்வீர்! நீர் சொல்வதெல்லாம் சால அழகிதாயிருந்தது; ஒரு க்ஷணம் திருநாமம் சொல்லாதொழியில் ஸத்தை குலையுமென்கிறீர்; ‘என்வாயாற் சொல்லில் உனக்கு அவத்யாவஹமாகும்’ என்றுஞ் சொல்லா நின்றீர்; இதெல்லாம் பெருத்த மிடுக்காயிருந்ததே!” என்ன; அதற்கு ஆழ்வார், “மிடுக்கா? அந்த மிடுக்குக்கு என்ன குறை? உன்னுடைய அபிமாநம் குறைவற்றிருக்கும்படி உள்கோயில் வாசலிலேயே வாழப்பெற்ற வைஷ்ணவன் என்கிற ஆகாசத்தினாலுண்டான மிடுக்குக்குக் குறைவில்லை” என்பதாய்ச் சொல்லுகிறது, இப்பாட்டு,