• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பெருமாளுக்கு மண்சட்டியில் நிவேதனம்

praveen

Life is a dream
Staff member
பெருமாளுக்கு மண்சட்டியில் நிவேதனம்

பெருமாள் கோயில்களில் சிறப்பு மிக்கதாகக் கருதப்படுவது திருப்பதி தலம். அத்திருத்தலத்துக்கு அருகில் முன்னொரு காலத்தில் பீமன் என்னும் குயவர் வாழ்ந்துவந்தார். அவர் பெருமாள் பக்தர். ஒவ்வொரு சனியும் விரதம் இருப்பதாகச் சங்கல்பம் எடுத்துக் கொண்டார். தொடர்ச்சியான வேலைகளால் விரதம் இருக்க முடியவில்லை. கோயிலுக்குச் சென்றாலும் நின்று நிதானித்து வழிபட மாட்டார். சம்பிரதாய முறைப்படி வழிபடுவதும் அவருக்குத் தெரியாது. ‘#பெருமாளேநீயேஎல்லாம்’ என்பதை மட்டும் மந்திரம் போல உச்சரித்துவிட்டு வந்துவிடுவார்.


நாட்கள் செல்லச் செல்ல கோயிலுக்கும் தொடர்ந்து செல்ல முடியாத நிலை. அதனால் பெருமாளை வீட்டுக்கே அழைத்து வழிபடுவது என்று பீமன் முடிவு செய்தார். அவர் குயவர் என்பதால் களிமண்ணால் பெருமாள் சிலையை வடித்தார். #பெருமாளுக்கு #அலங்காரம் செய்யவோ, #ஆபரணங்கள் வாங்கவோ அவரிடம் #பொருள் #இல்லை. அதனால் #களிமண்ணையே #சிறு_சிறு #உருண்டைகளாக்கி அவற்றை #மாலைபோல் தொடுத்துப் #பெருமாளுக்கு அணிவித்து #மகிழ்ந்தார்.


அந்த ஊரின் அரசன் தொண்டைமானும் பெருமாள் பக்தர். ஒவ்வொரு சனிக்கிழமையும் அவர் விரதமிருந்து பெருமாளுக்குத் #தங்க மாலை #அணிவித்து #வழிபடுவார். ஒருநாள் காலை அவர் கோயிலுக்குச் சென்றபோது #தங்கமாலை மறைந்து, #மண்மாலை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். என்ன தவறு நிகழ்ந்திருக்கும் என்ற #யோசனையுடனேயே #உறங்கினார். கனவில் தோன்றிய பெருமாள், #பீமன் குறித்தும் அவருடைய #பக்தியைக் குறித்தும் அரசனுக்கு #அறிவித்தார்.


பீமனின் பக்தியைப் பெருமாள் வாயாலேயே கேட்டறிந்த மன்னன், பீமனின் குடிசைக்குச் சென்றார். அவருக்குப் பொன்னும் பொருளும் வாரிவழங்கினார். ஆனால் அந்தப் #பொருட்களில் எல்லாம் #மயங்காமல் இறுதிவரை பெருமாளையே துதித்து, முடிவில் #வைகுண்டப்பதவி #அடைந்தார். பீமன் என்னும் அந்தக் #குயவனின் #பக்தியைப்_பறைசாற்றும் வகையில் இன்றுவரை பெருமாளுக்கு #மண்சட்டியில்தான்
#திருவமுது படைக்கப்படுகிறது.
 

Latest ads

Back
Top