• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மாஹாலய பட்சம் பற்றி

praveen

Life is a dream
Staff member
மாஹாலய பட்சம் பற்றி

பொதுவாக மாஹாளய பட்ச தர்பணங்களை ஶ்ரீவைணவர்கள் குறிப்பாக தென்னாட்சார்ய சம்பிரதாயத்தினர் அனுஷ்டிப்பதில்லை ஒருசில வடாச்சாரிய சம்பிரதாயித்தவர்கள் அனுஷ்டிக்கின்றனர்


மாஹாலய பட்சம் தர்பணம் நமது முன்னோர்கள் பூர்வர்கள் அனுஷ்டானம் செய்திருந்தால் மட்டும் நாம் அனுஷ்டிக்கலாம் புதிதாக செய்ய வேண்டியதில்லை


மாஹாளய பட்சம் என்றால் என்ன


கர்ணன் மகாபாரத போரில் கொல்லப்பட்ட பிறகு
உரிய மரியாதைகளோடு யமன் அவரை அழைத்துக் கொண்டார்


யமன் கர்ணனிடம் நீ நிறைய புண்ணியங்களை செய்ததால் சொர்கத்தை நான்றாக அனுபவித்து கொள்ளுங்கள் என்றார்


கர்ணன் மகிழ்வுடன் சொர்கத்தை அனுபவிக்கிறார்


அப்படி இருக்க சில காலம் கழித்து அவருக்கு கடுமையாக பசிக்கிறது


தன்னுடன் உள்ளவர்களிடம் உணவு பரிமாறும் இடம் எங்கே என்று கேட்கிறார்


சொர்க்க வாசிகள் திகைப்படைந்து அவரிடம் இங்கிருப்பவர்களுக்கு பசிக்காது அதனால் உணவு உண்ணும் தேவையே இருக்காது என்கிறார்கள்


தேவ குரு பிரகஸ்பதி நடப்பனவற்றை கவனித்து விட்டு ஆழ்ந்த தியானத்தில் இதற்கான விடையை கண்டுபிடிக்கிறார்


கர்ணனிடம் வந்து கர்ணனின் ஆட்காட்டி விரலை வாயில் வைத்து சுவைக்க சொல்கிறார்


கர்ணன் ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்துவிடுகிறது


கர்ணன் மிகவும் வியப்படைந்து இதற்கான காரணம் என்ன என வினவுகிறார்


குரு விளக்குகிறார்


கர்ணா பிறப்பால் நீ ஒரு வள்ளல் நீ யார் எதை கேட்டாலும் உடனே கொடுத்து விட்டாய் ஆனால் நீ அன்னதானம் மட்டும் செய்யவில்லை அதனால் தான் நீ இங்கே பசியை உணர்ந்தாய்


ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டதே ஏன் எனக் கேட்கிறார் கர்ணன்


குரு மீண்டும் விளக்குகிறார்


கர்ணா ஒரு முறை ஒரு ஏழை பிராமணர் உன் வீட்டிற்கு வந்து உணவு கேட்டார் நீ பொதுவாக அன்னதானம் செய்யும் வழக்கம் இல்லாததால் அதை மறுத்துவிட்டாய் ஆனால் உன் ஆட்காட்டி விரலால் அன்னதானம் நடக்கும் இடத்தை அந்த ஏழை பிராமணர்க்கு காட்டினாய் அவரும் அங்கே சென்று சாப்பிட்டு தன் பசியை ஆற்றிக்கொண்டார் அந்த புண்ணியம் உன் ஆட்காட்டி விரலில் இருந்ததால் நீ ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டது


கர்ணன் கண்களில் நீர் திரண்டு விட்டது


உடனே யம தர்ம ராஜனிடம் சென்று முறையிடுகிறார்


நான் ஒரு பட்ஷம் {[(நாற்பத்து ஐந்து நாள் - முக்தியானவர்களுக்கு ஒரு பட்சம் என்பது நாற்பத்து ஐந்து நாள் ) நாம் பதினைந்து நாளாக மட்டும் கொண்டாடுகிறோம் ] அதாவது மாஹளய பட்சம் புரட்டாசி பவுர்ணமி முதல் ஐப்பசி அமாவாசை வரை 45 நாள் நம் முன்னோர்கள் கர்ணனை போல் சூட்சம ரூபத்தில் பூமியில் இருப்பர் ஐப்பசிமாத அமாவாசையில் மீண்டும் மேல்லோகம் புறப்பட்டு செல்வர் அதைகொண்டாடும் விதமாகவே அவர்களுக்கு செல்லும் பாதைக்கு வெளிச்சம் கொடுக்கவே வீடுகளில் தீபங்களை வரிசையாக ஏற்றி வழி ஏற்றிஅனுப்புவர் அதுவே தீபாவளி நன்னாளாகும் - (இன்றும் பிராமணர்கள் முக்தியானவர்களின் பேரன்களை அந்த பூதவுடல் போகும் வழிக்கு வெளிச்சம் காட்ட நெய்தீபம் ஏற்றி கொண்டு முன்னே செல்ல சொல்லுவார்) - அதை தான் நாம் தீபாவளி அன்று மாஹாளய பட்சத்துக்கு வந்து மீண்டும் செல்லும் பிதுர்களுக்கு செய்கிறோம் இது தான் தீபாவளிக்கான உண்மையான விளக்கம்} மனித உ டலுடன் பூலோகம் செல்ல அனுமதி வேண்டும் நான் போய் அன்னதானம் செய்து விட்டு வருகிறேன் என்கிறார்


யமதர்மராஜனும் அனுமதிக்கிறார்


கர்ணனும் பூலோகம் வந்து யாரும் அடையாளம் கண்டு கொள்ளாத இடத்தில் அன்ன தானம் செய்கிறார்


கர்ணன் மிகவும் நல்ல நோக்கத்துக்காக இதை மகிழ்வுடன் செய்கிறார்நாற்பத்து ஐந்து நாட்கள் முடிந்தவுடன் யமன் மீண்டும் வந்து மனித உடலை துறந்து விட்டு சொர்கம் வர சொல்கிறார் கர்ணன் மகிழ்வுடன் செல்கிறார்


யமன் நகர்ந்து கொண்டே சொல்கிறார்


மனிதர்கள் பூலோகத்தில் உள்ள சுகங்களை அனுபவிக்கவே மீண்டும் மீண்டும் பூலோகம் வர வேண்டும் என்று கேட்பார்கள் ஆனால் நீங்கள் எதற்காக மனித உடலுடன் பூலோகம் வந்தீர்களோ அதை முழுமையாக முடித்து விட்டு உங்கள் வார்த்தைகளை காப்பாற்றி விட்டீர்கள் நீங்கள் இப்போது என்னிடம் ஒரு வரம் கேட்கலாம் என்கிறார்


கர்ணன் யம தர்மராஜரே மனிதர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி உணவு அளிக்க கலியில் மறந்து விடுகிறார்கள் அதனால் இந்த எனது நாற்பத்து ஐந்து நாள் அன்னதான பக்ஷத்தில்


முன்னோர்களுக்காக மனிதர்களாக பிறந்தவர்கள் செய்யும் திதி மற்றும் அன்னதானம் ஆகியவை எங்களை போல் முக்தியாகி இனி கர்மங்களே செய்ய வேண்டாத அவர்களின் முன்னோர்கள்களை சென்று அடைய வேண்டும்


அதுபோல் முந்தய கர்ம வினைகளால் பூமிக்கும் சொர்கத்துக்கும் இடையில் பிதுர் லோகத்தில் தவிக்கும் அவர்களின்
முன்னோர்களையும் இந்த பலன் சென்றடய வேண்டும் என கேட்கிறார்


யமன் மகிழ்வுடன் ஒப்புகொள்கிறார்


எனவே யார் எல்லாம் இந்த மாஹாளய பக்ஷத்தில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் பிதுர்களுக்கு திதி அளிக்கிறார்களோ அவர்கள் பாக்கியம் பெற்றவர்கள் என்பதே இந்த மாஹால்ய பட்ச அஅமாவாசையின் விளக்கம்


உலகுக்கே சூரியன் சொந்தம் என்பதால் அவரது புத்திரனான கர்ணனும் நமக்குச் சொந்தமாகிறான்


அவன் பூமியில் வந்து தர்மம் செய்த மகாளயபட்ச காலத்தில் நாம் எல்லோருமே முன்னோர்களை வரவேற்று குறைந்தது தற்காலத்தில் 14 நாட்களாவது தர்ப்பணம் முதலானவை செய்ய வேண்டும் என ஒரு வித அனுஷ்டானம் சிலர் செய்கின்றனர்


இந்த வருடம் மாஹாலய பட்சம் 25/9/-2018 முதல் 08/10/2018 வரை பித்ரு தர்பண காலம்
 

Latest ads

Back
Top