திருமால் பெருமைக்கு நிகரேது
உன்றன்
திருவடி நிழலுக்கு இணையேது
பெருமானே உன்றன் திருநாமம் – பத்து
பெயர்களில் விளங்கும் அவதாரம் (திருமால் பெருமைக்கு)
கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம் தன்னைக்
காப்பதற்கே கொண்ட அவதாரம் – மச்ச அவதாரம்
அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் – எங்கள்
அச்சுதனே உந்தன் அவதாரம் – கூர்ம அவதாரம்
பூமியைக் காத்திட ஒரு காலம் – நீ
புனைந்தது மற்றொரு அவதாரம் – வராக அவதாரம்
நாராயணா என்னும் திருநாமம் – நிலை
நாட்டிட இன்னும் ஒரு அவதாரம் – நரசிம்ம அவதாரம்
மாவலி சிரம் தன்னில் கால் வைத்து – இந்த
மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம் – வாமன அவதாரம்
தாய் தந்தை சொல்லே உயர் வேதம் – என்று
சாற்றியதும் ஒரு அவதாரம் – பரசுராம அவதாரம்
ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் எனும்
உயர்வினைக் காட்டிய அவதாரம் – ராம அவதாரம்
ரகுகுலம் கொண்டது ஒரு ராமன் – பின்பு
யதுகுலம் கண்டது பலராமன் – பலராமன்
அரசுமுறை வழிநெறி காக்க – நீ
அடைந்தது இன்னொரு அவதாரம் – கண்ணன் அவதாரம்
விதி நடந்ததென மதி முடிந்ததென
வினையின் பயனே உருவாக
நிலை மறந்தவரும் நெறியிழந்தவரும்
உணரும் வண்ணம் தெளிவாக,
இன்னல் ஒழித்து புவி காக்க – நீ
எடுக்க வேண்டும் ஒரு அவதாரம் – கல்கி அவதாரம் (திருமால் பெருமைக்கு
உன்றன்
திருவடி நிழலுக்கு இணையேது
பெருமானே உன்றன் திருநாமம் – பத்து
பெயர்களில் விளங்கும் அவதாரம் (திருமால் பெருமைக்கு)
கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம் தன்னைக்
காப்பதற்கே கொண்ட அவதாரம் – மச்ச அவதாரம்
அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் – எங்கள்
அச்சுதனே உந்தன் அவதாரம் – கூர்ம அவதாரம்
பூமியைக் காத்திட ஒரு காலம் – நீ
புனைந்தது மற்றொரு அவதாரம் – வராக அவதாரம்
நாராயணா என்னும் திருநாமம் – நிலை
நாட்டிட இன்னும் ஒரு அவதாரம் – நரசிம்ம அவதாரம்
மாவலி சிரம் தன்னில் கால் வைத்து – இந்த
மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம் – வாமன அவதாரம்
தாய் தந்தை சொல்லே உயர் வேதம் – என்று
சாற்றியதும் ஒரு அவதாரம் – பரசுராம அவதாரம்
ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் எனும்
உயர்வினைக் காட்டிய அவதாரம் – ராம அவதாரம்
ரகுகுலம் கொண்டது ஒரு ராமன் – பின்பு
யதுகுலம் கண்டது பலராமன் – பலராமன்
அரசுமுறை வழிநெறி காக்க – நீ
அடைந்தது இன்னொரு அவதாரம் – கண்ணன் அவதாரம்
விதி நடந்ததென மதி முடிந்ததென
வினையின் பயனே உருவாக
நிலை மறந்தவரும் நெறியிழந்தவரும்
உணரும் வண்ணம் தெளிவாக,
இன்னல் ஒழித்து புவி காக்க – நீ
எடுக்க வேண்டும் ஒரு அவதாரம் – கல்கி அவதாரம் (திருமால் பெருமைக்கு