• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

விஸ்வகர்மா ஜெயந்தி (17-9-18)

praveen

Life is a dream
Staff member
விஸ்வகர்மா ஜெயந்தி (17-9-18)

தேவ சிற்பி என்று புகழப்படும் ஸ்ரீ விஸ்வகர்மாவேஸநாதனமான ஸப்த ரிஷிகளுக்கும் முதன்மையானவர். பிரபாஸூக்கும், யோக சித்தைக்கும் மகனாய் அவதரித்தவர். யோக சித்தை மஹா பிரஹஸ்பதியின் சகோதரி. பிராஸ் அட்டம பஸூவின் எட்டாம் தலைமுறை ரிஷிகுமாரர்.


#ரிக்_வேதம்
#விஸ்வகர்மாவைப் #புகழ்வதைக்-கண்ணுறுங்கள்:


முழு உலகத்தையும் வடிவமைத்த தெய்வீக கைவினைஞன் விஸ்வகர்மா. (ரிக் வேதம் 10.81.03)


இவரே தெய்வங்களின் வசிப்பிடங்களையும், அவர்களது வாஹனங்களையும், பறக்கும் இரதங்களையும் வடிவமைத்தவர்.


நான்காவது துணை வேதமாகிய ஸ்தபத வேதத்தை வெளிப்படுத்தியவர்.
அறுபத்து நான்கு ஆய கலைகளுக்குத் தலைவரானவர்.
சொர்க்கம், நரகம் இவைகளோடு பதினான்கு உலகங்களையும் படைத்த ஆதி பிரம்மன்.


#தெய்வங்களுக்கு #ஆயுதங்களையும் #செய்தளித்தருளியவர். குறிப்பாக #இந்திரனுக்காக #ததிச்சி என்ற முனிவரின் முதுகெலும்பிலிருந்து #வஜ்ராயுதத்தையும், #விஷ்ணுவிற்காக #சாரங்கம் என்னும் #வில்லையும், #சிவபெருமானுக்காக #பிங்களம் என்னும் #வில்லையும்_படைத்தளித்தவர்.


சிவ-பார்வதி திருமணத்தின் போது லங்கா பட்டிணத்தை #ஸமுத்திரத்தின்-மத்தியில் #படைத்தவர்.


இராமபிரானுக்கு உதவுவதற்காக கடலினில் ஸேதுவை கட்டும் #வல்லமையுள்ள #நளன் என்னும் வானரத்தைப் #படைத்தவர்.


ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் ஆட்சிப்பீடமான #துவாரகையையும், #எமபுரத்தையும் #சிருஷ்டித்தவர்.


இப்படி பலப்பல அற்புத நிகழ்வுகளை வேதப்பதிவுகளிலிருந்து கூறிக்கொண்டே போகலாம்.


வசிஸ்ட புராணம் (3.6.11)ல் கூறப்பட்டுள்ளவாறு,
ஸ்ரீ விராட் விஸ்வகர்மாவானவர், தனது ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து பிரம்மாக்களை படைத்தார். பஞ்ச பிரம்மாக்கள் என்றும் பஞ்ச பிரம்ம ரிஷிகள் என்றும் அழைக்கப்பட்ட இவர்கள்:1. சானக பிரம்ம ரிஷி,
2.ஸநாதன பிரம்ம ரிஷி, 3. அபுவநஸ பிரம்ம ரிஷி,
4. ப்ரத்னஸ பிரம்ம ரிஷி, 5. ஸூபர்ணஸ பிரம்ம ரிஷி


ரிக் வேதம் (10.81. மற்றும் 10.82)
ஸ்ரீ விராட் விஸ்வகர்மாவின் சொரூபத்தை சித்தரிக்கிறது:
உலகத்தின் முழு முதல் தோற்றுவிக்கும் சக்தியாகவும், உலகத் தந்தையாகவும் விளங்குபவர் தனது அனைத்துப் புறங்களிலும் விழிகளையும், வதனங்களையும், புஜங்களையும், பாதங்களையும் உடையவர்.
மஹாபாரதம், ஹரிவம்சம் போன்ற மஹா காவியங்கள் “கலைகளின் தேவன். ஆயிரக்கணக்கான தொழில்நுட்பங்களை விளைவிப்பவர், கடவுளர்களின் சிற்பி, மிகவும் முதல்தரமான, மேம்பட்ட, தலைமையான தொழில் நிபுணர், அணிகலன்களில் புதுமைகளைப் புகுத்துபவர், முடிவும்-அழிவும் அற்ற நிலையான இறைவன்.” என்று விராட் ரூபத்தைப் புகழ்கின்றன.


நான்கு கரங்களையுடைத்தும், மணிமுடி தரி்த்தும், மணம் நிறைந்த மலர்களைச்சூடியும், பட்டாடை உடுத்தும், நவரத்ன சிம்மாஞஸத்தில் வீற்றும், தனது நான்கு கரங்களில் புனிதநீர்க் கமண்டலமும், ஒலைச்சுவடியும், பாசக் கயிறும், அளக்கும் கருவியும் தாங்கியவராய் வேத-புராண-சாஸ்த்ரங்களிலே வர்ணிக்கப்படுகிறார்.
 

Latest ads

Back
Top