• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

உழக்கரிசி பிள்ளையார் கோயில்

praveen

Life is a dream
Staff member
உழக்கரிசி பிள்ளையார் கோயில்

பழமையான பிள்ளையார் கோயில்
------------------------------------------------------


அம்பலவாணபுரம் என்னும் இடத்தில் தான் கருணை பிள்ளையார் என்ற உழக்கரிசி பிள்ளையார் உள்ளார். இந்தப் பிள்ளையார் மிகவும் விசேசமானவர். தென் திசையை சிவன் சக்தி திருமணத்தின் போது சமன் செய்ய பொதிகை மலை வந்தார் அகத்தியர். அப்போது பல தெய்வங்களை இந்த பகுதியில் பிரதிட்சை செய்து வணங்கினார் அவர்.

அதுபோலவே அகத்தியர் வணங்கிய பிள்ளையார் தான் அம்பலவணாபுரம் உழக்கரிசி பிள்ளையார். காலங்கள் கடந்தது. இந்தப் பிள்ளையார் இருந்த இடத்தினை யாரும் கவனிக்காமல் விட்டு விட்டனர். இதனால் அவர் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார். 18 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது இப்பகுதியில் ஒரு ஆங்கிலேயர் துரை வேட்டையாட வந்தார்.

அவர் இவ்வழியாக வரும் போது வெள்ளத்துரையின் குதிரை கால் பட்டு மீண்டும் வெளிப்பட்டார் உழக்கரிசி பிள்ளையார். அப்போது குதிரையில் குழம்படி பட்டு பிள்ளையார் மீது ரத்தம் பீரிட்டது. இதை கண்ட வெள்ளயன் அரண்டு போய் விட்டான். உடனே அங்கிருந்து மக்களிடம் இந்த பிள்ளையாரை நீங்கள் வைத்து வணங்குங்கள். நான் அதற்கு உதவி புரிகிறேன் என்று கூறினார். மக்கள் சரியென்று அந்த பிள்ளையாரை மீண்டும் பிரதிட்சை செய்து வணங்க ஆரம்பித்தனர்.

அந்த வெள்ளைத்துரை இப்பிள்ளையாருக்கு மானியமாக தினமும் உழக்கு அரிசி கொடுத்தார். ஆகவே இந்த பிள்ளையாருக்கு உழக்கரிசி பிள்ளையார் என்று பெயர் வந்தது. மேலும் இவரை வணங்கும் போது மிக கருணையாய் பக்தருக்கு அருளினார் . ஆகவே அவருக்கு கருணை பிள்ளையார் என்ற பெயரும் வந்தது.

இந்தக்கோவில் 120 வருடம் பழமையானவை. முற்காலத்தில் அகத்தியர், சிவன், சக்தி திருமணக்காட்சியை காண இங்கு வந்த போது அகத்தியர் வைத்து வணங்கிய பிள்ளையார்களில் உழக்கரசி பிள்ளையாரும், நெல்லை சந்தி பிள்ளையாரும் அடங்குவர். இந்தக் கோவில் இரண்டுமே திருவாவடுதுறை ஆதினத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் தான் இக்கோவிலுக்கு நித்திய கட்டளை செய்து வருகிறார்கள்.


திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் இவ்வூர் உள்ளது.
 

Latest ads

Back
Top