• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

விநாயகர் சதுர்த்தியில் விநாயகரை எவ்வாற&#

praveen

Life is a dream
Staff member
விநாயகர் சதுர்த்தியில் விநாயகரை எவ்வாற&#

How to pray to Lord Ganesha during Ganesh Chaturthi

கணபதியின் பிறப்பு:


ஒருமுறை பிரணவ வனத்தில் பராசக்தி பெண் யானை வடிவு கொண்டு ஓடினாள். சிவபெருமான் அவளை ஆண் யானை வடிவுடன் பின் தொட ர்ந்தார். அந்த வேளையில் இருவருக்கும் இடையே யானை வடிவில் ஒருசக்தி வெளிப்பட்டது. தெய்வ நல்வடிவுடன்கூடிய அக்குழந்தையை சிவசக்தியர் அணைத்து மகிழ்ந்தனர். அவரை க் கணங்களின் அதி பதியாக்கி கணபதி என்று பெயர் சூட்டினார் சிவபெ ருமான். கணபதியைத் தம்மீது அமர்த்தி ப் பட்டாபி ஷேகம் செய்தார். அக்கோலம் ஆனைமுகற்கு அருளிய அண்ணல் என்று கொண்டாடப்படுகிறது. அதனால் சிவனை கஜ அனுக்கிரகர் என்றும், விக்னேசப் பிரசாதர் எனவும் அழைப்பர். சிவ ன் ஆண் யானையாகவும், அம்பிகை பெண் யானையாகவும் இருக்க விநாயகரான கணபதி தோன்றினார் என்பதை திருஞான சம்பந்தர் பின்வருமாறு அருளிச் செய்துள்ளார்:


பிடியதன் உருவுமை கொள மிகு கரியது,
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே!


விநாயகர் அவதாரம்:


விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவிதான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து, யாரையும் உள்ளேவிடாதே என்று கூறிச் சென்றாள். அப் போது சிவன் வர, காப்பாளன் தடுக்க, பரசுவால் அவன் தலையைத் துண் டித்து உள்ளே சென்றார் சிவன். தேவி வெகுண்டாள். நிலையை உணர்ந்த சிவன் முதலில் தென்பட்ட உயிரினமான யானை யின் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து, உன்னை வணங் காமல் எவரும் எது செய்தாலு ம் அது விக்னம் அடையும். நீயே யாவ ருக்கும் தலை வன். எனவே விநாயகன் என்றார். விக்னத்தை ஏற்படுத்துபவனு ம் அவ ன்; நிவாரணம் செய்பவனும் அவன்; காரிய ஜயம் தருபவனும் அவ ன்.


ஸர்வ விக்னஹரம் தேவம்
ஸர்வ விக்ன விவர்ஜிதம்
ஸர்வ ஸத்தி ப்ரதாதாரம்
வந்தே அஹம் கணநாயகம்.


என்று போற்றுகிறது. அவரது தந்தை, தாயான சிவ-பராசக்தி வணங்கு வதால் அவரது பெயர் ஜ்யேஷ்டராஜன் ஆயிற்று.


பிள்ளையார் என்பது ஏன்?


தாய், தந்தை, மாமன், மாமி என்று அனைத்து உறவுப்பெயருக்கும் ஆர் என்னும் விகுதியை ச் சேர்த்து தாயார், தந்தையார், மாமனார், மா மியார் என்று சொல்வது வழக்கம். ஆனால், வீட்டில் உள்ள சிறு குழந்தைகளை பிள்ளை யார் என்று யாரும் சொல்வதில்லை. விதி விலக்காக, விநாயகரை மட்டும் பிள்ளையார் என்று சிறப்பித்துக் கூறுகிறோ ம். சிவபார்வதி யின் பிள்ளைகளில் மூத்தவர், சிறந்தவர் என்ற காரணத்தால் விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வழங்கப் படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா இவரைப் பற்றி?


உடலில் உள்ள ஆறு ஆதாரங்களில் விநாயகருக்குரியது மூலா தாரம்!


விநாயகரை அருகம்புல்லால் பூஜிக்க உகந்த நாள் அஷ்டமி! உல கின் மிகப் பழமையான ரிக் வேதத்தில் விநாயகர் பற்றிய குறிப்பு இடம் பெற் றுள்ளது!


விநாயகப் பெருமானை இந்து சமயத் தின் முழு முதற்கடவுளாக மாற்றி யவர்கள்- குப்தர்கள். திருவரங்கத் திருமாலின் ஏகாந்த நித்திரைக் கோல த்தை முதன் முதலில் தொழுதவர்கள் கணபதி யும், அகத்திய ரும்!


மதுரைத் திருத்தலம் அருகிலுள்ள திருபுவனத்தில் தேங்காய் பிள்ளை யார் தெற்கு நோக்கி அமர்ந்துள்ளார். இவரின் இயற்பெயர் விசாலாட்சி விநாயகர்!


பதினொரு விநாயகர்கள் உள்ள திருத்தலம் திருப்பாசூர்! இவர்கள் வாசீஸ்வரர் கோயிலில் ஒரு சன்னதியில் உள்ளனர்.


திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோயிலில் உள்ள நெல்லிக்கனி விநாயகருக்கு, நெல்லிக்கனி மாலை சாத்தி வழிபடுவர்!


÷ஷாடச (பதினாறு) விநாயகர்களில் முதலாமானவர் பால கணபதி!


விநாயகர் வழிபாடு தமிழருக்கு உரியதென மறைமலையடிகள் குறிப்பி டுகிறார்.


கி.மு 6-ஆம் நூற்றாண்டு நூலான தத்ரேய ஆரண்யத்தில் யானைக் கொம்புடைய இறைவன் எனக் குறிக்கப்படும் கடவுள், விநாயகர்!


ஆவணி மாத சிறப்பு


கேரளத்தில் ஆவணியே (சிம்ம மாதம்) கொல்லம் ஆண்டின் (மலையாள புத்தாண்டு) முதல் மாதமாகப் பின்பற்றப்படுகிறது. முழு முதற்கட வுளான விநாயகருக்குரிய விநாயகர் சதுர்த்தி ஆவணியில் கொண்டாடப்படுவதன் அடிப்படையில் இவ்வாறு பின்பற்றுகின்றனர். கேரளத்தின் முக்கிய விழாவான ஓணம், இதே மாதத்தில் கொண்டா டப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இம் மாதத்தில் நவக் கிரக முதல்வரான சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்தில் ஆட்சி பெறுகிறார்.


விநாயகரால் விளைந்த நன்மைகள்:


கணபதி இல்லாவிட்டால் அகஸ்தியர் தமது கமண்டத்தில் எடுத்துச் சென்ற காவிரி மீண் டும் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்குமா? காகரூப மாக வந்து கமண்டலத்தைக் கவிழ்த்து காவிரியை வெளிப்படுத்தினா ரே! கணபதி இல்லாவிட்டால் ஸ்ரீ ரங்க நாதர் நமக்குக் கிடைத்திருப் பாரா? அவரது விக்ரகம் இலங்கைக் கல் லவா போயிருந்திருக்கும். கீழே வைக்கக்கூடாது என்ற நிபந்தனை யுடன், ஸ்ரீராமர் தான் வழிபட்ட ரங்க நாதர் விக்ரகத்தை விபீஷணனுக் குக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்டு இலங்கை நோக்கி வந்த விபீஷணன் ஸ்ரீரங்கம் பகுதியை அடைந்த போது மாலை நேரமாகி விட்டது. மாலைச்சந்தி கர்மங்க ளைச் செய்ய வேண்டுமே என விபீ ஷணன் யோசித்தபோது, விநாயகர் ஒரு சிறுவன் வடிவில் எதிரே வந் தார். அந்தச் சிறுவனிடம் சற்று நேரம் விக்ரகத்தை க் கையில் வைத்தி ருக்குமாறு கொடுத்த விபீஷணன் ஆற்றங்கரை நோக்கிச் சென் றான். அவன் திரும்பிவந்து பெற்றுக் கொள்வதற்குள் அதைத் தரையி ல் வைத் துவிட்டார் விநாயகர். அது அங்கேயே நிலை கொண்டு விட்டது. விக்ரகத்தைப் பெயர்த் தெடுக்க எவ்வளவோ முயன்றா ன் விபீஷ்ணன். ஆனால் இயல வில்லை. அந்த ஆத்திரத்தில் சிறுவனின் தலையில் ஓடிப்போ ய் குட்டினான். பின்னர் உண்மை யறிந்து வணங்கிச் சென்றான். அவ்வாறு கோயில் கொண்டவரே ஸ்ரீரங்கநாதர். திருச்சி மலைமீதிருக் கும் உச்சிப் பிள் ளையாரே இந்தத் திருவிளையா டல் புரிந்தவர். அவர் தலையில் குட்டுப்பட்ட தழும்பு இருப்பதைக் காண லாம்.


இதேபோன்ற ஒரு நிகழ்வை இராவணனிடமும் நிகழ்த்தினார் பிள்ளை யார் இராவணன் தவம் பல புரிந்து சிவனிடம் வரம் பெற்று, அவரிட மிருந்து ஆத்மலிங்கத்தைப் பெற்றுக்கொண்டு இலங்கை திரும்பிக்கொ ண்டிருந்தான். அவனும் சிறுவன் வடிவில் வந்த விநாய கரிடம் ஆத்ம லிங்கத்தைத் தர, அதைத் தரை யில் வைத்துவிட்டார் விநாயகர். அதுவே கர்நாடக மாநிலத்திலுள்ள கோ கர்ணம் அங்குள்ள கணபதி தலையிலும் இராவணன் குட்டிய வடுவைக் காணலா ம். பராசக்தி தேவி பண்டாசுர வதத்திற்குக் கிளம்பினாள். ஆனால் விக்னயந்திரம் அதற்கு இடையூறாக இருந்தது. சக்திதே வி சிவனையும் கணப தியையும் நினை க்க, கணபதி அந்த விக்ன யந்திரத்தைத் தூளாக்கினார். அதன் பிறகே பராசக்தியால் பண்டாசுர வதம் செய்ய முடிந்தது.


விநாயகர் மூஷிக வாகனர் ஆனது எப்படி?


விநாயகரின் சிறப்பான வாகனம் மூஞ்சுறு (எலி) தான். மூஞ்சுறு எப்படி விநாயகருக்கு வாகனமானது. விநாயகப் பெருமானைப் போற்றி வண ங்கும் கிரவுஞ்சன் என்னும் கந்தர்வ இளைஞன் ஒரு வன் பூலோ கத்தில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர் ஒரு வரின் மனைவியைக் கண்டு மோகித்து அவளின் கரங்களைப் பற்றி இழுத்தான். அதைக் கண்டு கோபங் கொண்ட முனிவர், மண்ணைத் தோண்டி வளையில் பதுங்கும் மூஷிகமாக மாறக் கட வாய் என சாபமி ட்டார். அதனால் மூஷிகமாக (எலி) மாறி பரா சர முனிவரின் ஆசிரமத்தில் புகுந்து எல்லா வற்றையும் கடித்துக் குதறி நாசம் செய்த தோடு அங்குள்ள மரங்களின் வேர்களைத் துண்டித்து விழச் செய்தும் அட்டகாசம் செய்த வண்ணம் இருந் தான். அச்சமயம் அபினந்தன் என்ற மன்னன் ஒரு யாகம் செய் தான். இந்திரன் தன் பதவிக்கு பங்கம் வராதிருக்க காலநேமி எனும் கொடிய அசுரனைத் தோற்றுவித்து அந்த யாகத்தை அழிக்கும்படி உத்தர விட்டான். ஆனால் அவனோ அந்த யாகத்தை அழித்ததோடு மட்டும் அல்லாமல் பூவுலகம் முழுவதிலும் எங்கெங்கு யாகம் நடக்கின்றதோ அங்கெ ல்லாம் சென்று அவற் றை நாசப் படுத்தி அனைவரையும் துன்புறு த்தத் தொடங்கி னான். அதிலிருந்து விடுபட அனைவரும் ஈசனை வேண்ட அவரும் அருள் புரிந்தார். வரேனியன் என்னும் மன்னரு க்கு மகனாகத் தாம் பிறக்கப் போவதாகச் சொல்லி அவ்விதமே யானை முக த்துடன் அவதரித்தார். அதைக் கண்ட ராணியும் மன்னனும் வருத்த மடைந்து சாமுத்ரிகா லட்சணங்களுடன், பிறக்காத இக்குழந்தையை எ டுத்துச்சென்று எங்காவது போட்டு விடு ங்கள் என்று கட்டளையிட்டனர். அவன து படைவீரர்கள் அக்குழந்தை யை எடு த்துக் கொண்டு போய் காட்டில் ஒரு குள த்தின் கரையில் வைத்து விட்டுச் சென் றுவிட்டனர். அவ்வழியே நீராடச் சென் ற பராசரர் அக்குழந்தையைக் கண்டு அதி சயித்து நம் பெருமாளே இந்தக் குழந் தையை நமக்கு அளித்துள்ளான் என்று அகமகிழ்ந்து வளர்த்து வந்தார். அக்குழ ந்தையும் நாளும் வளர்ந்து வரலானார்.


மூஷிகன் பராசரரின் குடிசைக்கு வந்து அட்டகாசம் செய்வது கண்டு கணேச பெருமான் தமது பரசு ஆயுதத்தை எடுத்து மூஷிகன்மேல் வீசி னார். பரசு அவனை நோக்கிப் பாய்வதைக் கண்டு பயந் தபடி இங்குமங் கும் ஓடினான். பூமியைக் குடைந்தபடி பாதாள லோகம் வரை சென்றா ன். அப்போதும் பரசு ஆயுதம் அவனைத் துரத்தி வருவதைக் கண்டு சோர்ந்து போனான். பரசும் அவனைக் கட்டி இழுத்து வந்து பெருமான் முன் பாக நிறுத்தியது. மூஷிகன் தன் முந்தைய வரலாற்றைக் கூறி தம்மை மன்னித்தருளும் படி வேண் டினான். விநாயகரும் அவனை அரவணை த்து அருளினார். அதன்பின் காலநேமியை அழிக்க எண்ணங்கொண்ட போது அவனா கவே விநாயக பெருமானின் பாதங்களில் விழுந்து சரண டைந்து நற்கதி பெற்றான். இவ்விதமாய் மூஷிகத்தை வாகன மாகப் பெற்ற விநாயகர் மூஷிக வாகனர் என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப் படுகிறார்.


விநாயகர் சதுர்த்தியன்று கடைபிடிக்க வேண்டியவை!


விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகா லையி லேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பின் நீராடி வந்து பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன் மேல் தலை வாழையிலை யை, அதன் நுனி வடக்குப் புறமாக இருக்கும் படி வைத்து அதில் அரி சியைப் பரப்ப வேண்டும். அரிசியி ன் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன் கீழ் ஓம் என எழுத வேண்டும். மணையின் இருபுறமும் குத்து விளக் கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொரு ட்களை தயாராக வைக்க வேண்டும்.


நம் வீட்டுப் பிள்ளைகள் மூலமாக, களிமண்ணால் செய்யப்பட்ட வல ஞ்சுழி விநாயகரை வாங்கி வரச் செய்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட் டு, தொப்பையில் காசு வைக்க வேண்டும். பிள்ளை யாருக்கு அரை யில் துண்டு கட்டி, பூமாலை, அறு கம்புல் மாலை அணிவித்து, மணை ப் பல கையில் இருத்த வேண்டும். குன்றி மணியால் கண்களைத் திற க்க வேண்டும். பின்னர் பிள்ளையார் குடை வைத்து, விளக்குகளை ஏற்றி பூஜை யைத் தொடங்க வேண்டும்.


கொழுக்கட்டை, சுண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங் கள், அர்ச்சனை மலர்கள், பத்ரங்கள் 21 எனும் எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. இல்லாவிட்டாலும் நம்மால் முடி ந்ததைக் கொண்டு பூஜை செய் யலாம். தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்ய வேண் டும். பின்னர்,


ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம், க்ளௌம் கம், கணபதயே
வர வரத ஸர்வ ஜனம்மே வஸமாயை ஸ்வாஹா


எனும் கணபதியின் மூல மந்திரத்தை 21 முறை (அல்) 51 முறை சொல்லி பூஜை யை முடிக்க வேண்டும். பூஜை முடிந்த தும் குழந்தைகளுக்கு நிவேதனப் பட்சண ங்களை வழங்கி நாமும் சாப்பிடலாம். வீட்டில் பூஜை முடித்தபின் ஆலயம் சென்று விநாயகரை வணங்கி வரலாம். காலை-மாலை இருவேளையும் பூஜை செய்வது சிறப்பு. விநாயகர் சதுர்த்திக் குப் பின் விநாயகர் சிலையை விவர்ஜனம் செய்யவேண்டும். விநாயக ர் சதுர்த் தியையும் சேர்த்து, அன்றைய தினமோ அல்லது ஒன்றைப் படையில் அமையும் படியாக 3,5,7-ஆவது நாட்களிலோ இதை மேற் கொள்ளலாம். ஆண்கள் மட்டுமே பிள்ளையாரை நீரில் கரைக்க வே ண்டும். விநாயகர் வீட்டில் இருக்கும்வரை அவரு க்கு இருவேளை பூஜை நைவேத்தியம் செய்ய வேண்டும். பிள்ளையார் சிலை சேத மடையாமல் பார்த்துக் கொள் ள வேண்டி யது அவசியம். தொப்பையில் பதித்த காசை எடுத்து வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெ ருகும்; லட்சுமி கடாட்சம் கிட்டும்.


கணபதிக்கு பிரியமான 21:


கணபதிக்குப் படைக்கப்படும் இலை, பூ, அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் போன்ற ஒவ்வொன்றும் 21 என் னும் எண்ணிக் கையில் இருக்க வேண்டும் என்பர். அதிலென்ன சிறப்பு?


ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5; அவற்றின் காரியங் கள் – 5+5=10; மனம்=1. ஆக மொத்தம் 21. விநாயகரை பூஜிக்கும் போது ஞானே ந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஒன்றுபடா விட்டால் பலனில் லை. இதை நினைவுபடுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.


மலர்கள் 21:


புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை. சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங் கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.


அபிஷேகப் பொருட்கள் 21:


தண்ணீர், எண்ணெய், சீயக்காய், சந்தனாதித்தைலம், மாப்பொடி, மஞ்ச ள் பொடி, திரவியப் பொடி, பஞ்சக வ்யம், ரஸப்பஞ்சாமிர்தம், பழப்ப ஞ்சா மிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர்.


இலைகள் 21:


மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந் தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாது ளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரி சங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு.


நிவேதனப் பொருட்கள் 21:


மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினை மாவு, பால், பாகு, கற் கண்டு, சர்க்க ரைப் பொங்கல், பாய சம், முக்கனிகள், விளாம்பழம், நாவ ற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம்.


திதிக்குரிய கணபதி:


பொதுவாக விநாயகருக்கு சதுர்த்தி திதி உகந்தது என்றாலும், ஒவ்வொரு திதிக்கு மே அதற்குரிய கணபதிகள் உள்ளனர். அந்த நாளில் அதற்குரிய கணபதியை வழிபடுவது சிறப்பு பலன் தரும் என்பர்.


பிரதமை- பாலகணபதி; துவிதியை- தருண கணபதி; திரிதியை- பக்தி கணபதி; சதுர்த்தி- வீர கணபதி; பஞ்சமி- சக்தி கணபதி; சஷ்டி-துவிஜ கணபதி; சப்தமி-சித்தி கணபதி; அஷ்டமி- உச்சிஷ்ட கணபதி; நவமி- விக்ன கணபதி; தசமி- க்ஷிப்ர கணபதி; ஏகாதசி-ஹேரம்ப கணபதி; துவாதசி- லட்சுமி கண பதி; திரயோதசி- மகாகணபதி; சதுர்த்தசி-விஜய கணபதி; அமாவாசை, பவுர்ணமி- நித்ய கணபதி. அந்தந்த திதிக்குரிய கணபதி நாமத்தை 108 முறை கூறி தோப்புக்கரணம் போட்டு பக்தியுடன் வணங்கி வந்தால், நம் வாழ்வில் எதிர்ப்படும் விக்கினங்கள் விலகி சகல வளங்களும் கைகூடும்.


அருள்புரிவாய் ஆனைமுகா!


விநாயகர் சதுர்த்தியன்று மோதகம், பொரி, கடலை, பழம் படைத்து சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம் இதோ!


கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வண ங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவாவரம் வர காத்தி ருக்கும் குணநிதியே! பிரகாசமான ஒளிக்க ற்றையை உடைய சந் திரனை தலை யில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளை யாட்டாகச் செய்பவ னே! ஒப்பில்லாத உயர்ந்த தயாள குணம் கொண்டவனே! கஜமுகாசுர னை கொன்றவனே! அதர்ம த்தை அழித்து தர்மத்தைக் காப்பவனே! என்னைக் காக்கும் விநாய கனே!


உனக்கு என் வணக்கம்.


இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளி கொண்டவனே! பாவங்களை க் களைந்து புண்ணியத்தை அருள்பவனே! தேவர்களு க்கெல்லாம் தேவனே! கருணைமிக்க வனே! யானை முகத்தோனே ! அளப்பரிய சக்தியால் செல்வவளத்தை அருள்பவனே ! எல்லை யில்லாத பரம் பொருளே! விநா யகப் பெருமானே! உன் திருவடிகளை சர ணடைந்து வேண்டுகி றேன். உனக்கு என் நமஸ் காரம்.


உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்கு பவர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருபவனே! நாங்கள் செய்யும் குற்றங் களைக் கூட மன்னித்து அருள்பவனே! ஓம் என்ற மந்திரவடிவினனே! நிலையானவனே! கருணாமூர்த்தியே! சகிப் புத் தன்மை, பொறுமை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களைத் தருபவனே! உலகத்தா ரால் புகழ்ந்து போ ற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம். திரிபுரம் எரித்த சிவ பெருமா னுடைய மூத்த புத்தி ரனே! எங்கள் துன்பத்தை தீர்த்து, தூய்மையான உள்ளத்தைத் தருவாயாக.


உலகம் அழியும் காலத்திலும் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருப வனே! உண் மை வெற்றிபெற என்றும் துணை நிற்பவ னே! மதநீர் பொழி யும் கஜமுகனே! முதலு ம் முடிவுமில்லாத பரம்பொருளே! உன் திருவடிகளில் என் தலை தா ழ்த்தி வணங்குகிறேன். எம்பெருமானே! மங்க லத்தை தந்தருள்வாயாக.


பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை கொண்டவ னே! ஒற்றைக் கொம்பனே! காலனுக்கே காலனான சிவபெருமானின் பிள்ளையே! ஆதியும் அந்தமும் இல்லாதவ னே! துன்பங்களைப் போக் குபவனே! யோகிக ளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப் பொருளே! யானை முக கணேசனே! காலமெல்லாம் உன் னை நினைத்து,வணங்கி வருகி றேன். வள் ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்க ளில் சரணம டைகிறேன். எங்களுக்கு இம்மை யில் சகல செல்வத்தையும், மறுமை யில் முக் தியையும் தந்தருள் வாயாக
 
விநாயகர் சதுர்த்தியில் விநாயகரை எவ்வாற&#

How to pray to Lord Ganesha during Ganesh Chaturthi

கணபதியின் பிறப்பு:


ஒருமுறை பிரணவ வனத்தில் பராசக்தி பெண் யானை வடிவு கொண்டு ஓடினாள். சிவபெருமான் அவளை ஆண் யானை வடிவுடன் பின் தொட ர்ந்தார். அந்த வேளையில் இருவருக்கும் இடையே யானை வடிவில் ஒருசக்தி வெளிப்பட்டது. தெய்வ நல்வடிவுடன்கூடிய அக்குழந்தையை சிவசக்தியர் அணைத்து மகிழ்ந்தனர். அவரை க் கணங்களின் அதி பதியாக்கி கணபதி என்று பெயர் சூட்டினார் சிவபெ ருமான். கணபதியைத் தம்மீது அமர்த்தி ப் பட்டாபி ஷேகம் செய்தார். அக்கோலம் ஆனைமுகற்கு அருளிய அண்ணல் என்று கொண்டாடப்படுகிறது. அதனால் சிவனை கஜ அனுக்கிரகர் என்றும், விக்னேசப் பிரசாதர் எனவும் அழைப்பர். சிவ ன் ஆண் யானையாகவும், அம்பிகை பெண் யானையாகவும் இருக்க விநாயகரான கணபதி தோன்றினார் என்பதை திருஞான சம்பந்தர் பின்வருமாறு அருளிச் செய்துள்ளார்:


பிடியதன் உருவுமை கொள மிகு கரியது,
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே!


விநாயகர் அவதாரம்:


விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவிதான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து, யாரையும் உள்ளேவிடாதே என்று கூறிச் சென்றாள். அப் போது சிவன் வர, காப்பாளன் தடுக்க, பரசுவால் அவன் தலையைத் துண் டித்து உள்ளே சென்றார் சிவன். தேவி வெகுண்டாள். நிலையை உணர்ந்த சிவன் முதலில் தென்பட்ட உயிரினமான யானை யின் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து, உன்னை வணங் காமல் எவரும் எது செய்தாலு ம் அது விக்னம் அடையும். நீயே யாவ ருக்கும் தலை வன். எனவே விநாயகன் என்றார். விக்னத்தை ஏற்படுத்துபவனு ம் அவ ன்; நிவாரணம் செய்பவனும் அவன்; காரிய ஜயம் தருபவனும் அவ ன்.


ஸர்வ விக்னஹரம் தேவம்
ஸர்வ விக்ன விவர்ஜிதம்
ஸர்வ ஸத்தி ப்ரதாதாரம்
வந்தே அஹம் கணநாயகம்.


என்று போற்றுகிறது. அவரது தந்தை, தாயான சிவ-பராசக்தி வணங்கு வதால் அவரது பெயர் ஜ்யேஷ்டராஜன் ஆயிற்று.


பிள்ளையார் என்பது ஏன்?


தாய், தந்தை, மாமன், மாமி என்று அனைத்து உறவுப்பெயருக்கும் ஆர் என்னும் விகுதியை ச் சேர்த்து தாயார், தந்தையார், மாமனார், மா மியார் என்று சொல்வது வழக்கம். ஆனால், வீட்டில் உள்ள சிறு குழந்தைகளை பிள்ளை யார் என்று யாரும் சொல்வதில்லை. விதி விலக்காக, விநாயகரை மட்டும் பிள்ளையார் என்று சிறப்பித்துக் கூறுகிறோ ம். சிவபார்வதி யின் பிள்ளைகளில் மூத்தவர், சிறந்தவர் என்ற காரணத்தால் விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வழங்கப் படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா இவரைப் பற்றி?


உடலில் உள்ள ஆறு ஆதாரங்களில் விநாயகருக்குரியது மூலா தாரம்!


விநாயகரை அருகம்புல்லால் பூஜிக்க உகந்த நாள் அஷ்டமி! உல கின் மிகப் பழமையான ரிக் வேதத்தில் விநாயகர் பற்றிய குறிப்பு இடம் பெற் றுள்ளது!


விநாயகப் பெருமானை இந்து சமயத் தின் முழு முதற்கடவுளாக மாற்றி யவர்கள்- குப்தர்கள். திருவரங்கத் திருமாலின் ஏகாந்த நித்திரைக் கோல த்தை முதன் முதலில் தொழுதவர்கள் கணபதி யும், அகத்திய ரும்!


மதுரைத் திருத்தலம் அருகிலுள்ள திருபுவனத்தில் தேங்காய் பிள்ளை யார் தெற்கு நோக்கி அமர்ந்துள்ளார். இவரின் இயற்பெயர் விசாலாட்சி விநாயகர்!


பதினொரு விநாயகர்கள் உள்ள திருத்தலம் திருப்பாசூர்! இவர்கள் வாசீஸ்வரர் கோயிலில் ஒரு சன்னதியில் உள்ளனர்.


திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோயிலில் உள்ள நெல்லிக்கனி விநாயகருக்கு, நெல்லிக்கனி மாலை சாத்தி வழிபடுவர்!


÷ஷாடச (பதினாறு) விநாயகர்களில் முதலாமானவர் பால கணபதி!


விநாயகர் வழிபாடு தமிழருக்கு உரியதென மறைமலையடிகள் குறிப்பி டுகிறார்.


கி.மு 6-ஆம் நூற்றாண்டு நூலான தத்ரேய ஆரண்யத்தில் யானைக் கொம்புடைய இறைவன் எனக் குறிக்கப்படும் கடவுள், விநாயகர்!


ஆவணி மாத சிறப்பு


கேரளத்தில் ஆவணியே (சிம்ம மாதம்) கொல்லம் ஆண்டின் (மலையாள புத்தாண்டு) முதல் மாதமாகப் பின்பற்றப்படுகிறது. முழு முதற்கட வுளான விநாயகருக்குரிய விநாயகர் சதுர்த்தி ஆவணியில் கொண்டாடப்படுவதன் அடிப்படையில் இவ்வாறு பின்பற்றுகின்றனர். கேரளத்தின் முக்கிய விழாவான ஓணம், இதே மாதத்தில் கொண்டா டப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இம் மாதத்தில் நவக் கிரக முதல்வரான சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்தில் ஆட்சி பெறுகிறார்.


விநாயகரால் விளைந்த நன்மைகள்:


கணபதி இல்லாவிட்டால் அகஸ்தியர் தமது கமண்டத்தில் எடுத்துச் சென்ற காவிரி மீண் டும் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்குமா? காகரூப மாக வந்து கமண்டலத்தைக் கவிழ்த்து காவிரியை வெளிப்படுத்தினா ரே! கணபதி இல்லாவிட்டால் ஸ்ரீ ரங்க நாதர் நமக்குக் கிடைத்திருப் பாரா? அவரது விக்ரகம் இலங்கைக் கல் லவா போயிருந்திருக்கும். கீழே வைக்கக்கூடாது என்ற நிபந்தனை யுடன், ஸ்ரீராமர் தான் வழிபட்ட ரங்க நாதர் விக்ரகத்தை விபீஷணனுக் குக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்டு இலங்கை நோக்கி வந்த விபீஷணன் ஸ்ரீரங்கம் பகுதியை அடைந்த போது மாலை நேரமாகி விட்டது. மாலைச்சந்தி கர்மங்க ளைச் செய்ய வேண்டுமே என விபீ ஷணன் யோசித்தபோது, விநாயகர் ஒரு சிறுவன் வடிவில் எதிரே வந் தார். அந்தச் சிறுவனிடம் சற்று நேரம் விக்ரகத்தை க் கையில் வைத்தி ருக்குமாறு கொடுத்த விபீஷணன் ஆற்றங்கரை நோக்கிச் சென் றான். அவன் திரும்பிவந்து பெற்றுக் கொள்வதற்குள் அதைத் தரையி ல் வைத் துவிட்டார் விநாயகர். அது அங்கேயே நிலை கொண்டு விட்டது. விக்ரகத்தைப் பெயர்த் தெடுக்க எவ்வளவோ முயன்றா ன் விபீஷ்ணன். ஆனால் இயல வில்லை. அந்த ஆத்திரத்தில் சிறுவனின் தலையில் ஓடிப்போ ய் குட்டினான். பின்னர் உண்மை யறிந்து வணங்கிச் சென்றான். அவ்வாறு கோயில் கொண்டவரே ஸ்ரீரங்கநாதர். திருச்சி மலைமீதிருக் கும் உச்சிப் பிள் ளையாரே இந்தத் திருவிளையா டல் புரிந்தவர். அவர் தலையில் குட்டுப்பட்ட தழும்பு இருப்பதைக் காண லாம்.


இதேபோன்ற ஒரு நிகழ்வை இராவணனிடமும் நிகழ்த்தினார் பிள்ளை யார் இராவணன் தவம் பல புரிந்து சிவனிடம் வரம் பெற்று, அவரிட மிருந்து ஆத்மலிங்கத்தைப் பெற்றுக்கொண்டு இலங்கை திரும்பிக்கொ ண்டிருந்தான். அவனும் சிறுவன் வடிவில் வந்த விநாய கரிடம் ஆத்ம லிங்கத்தைத் தர, அதைத் தரை யில் வைத்துவிட்டார் விநாயகர். அதுவே கர்நாடக மாநிலத்திலுள்ள கோ கர்ணம் அங்குள்ள கணபதி தலையிலும் இராவணன் குட்டிய வடுவைக் காணலா ம். பராசக்தி தேவி பண்டாசுர வதத்திற்குக் கிளம்பினாள். ஆனால் விக்னயந்திரம் அதற்கு இடையூறாக இருந்தது. சக்திதே வி சிவனையும் கணப தியையும் நினை க்க, கணபதி அந்த விக்ன யந்திரத்தைத் தூளாக்கினார். அதன் பிறகே பராசக்தியால் பண்டாசுர வதம் செய்ய முடிந்தது.


விநாயகர் மூஷிக வாகனர் ஆனது எப்படி?


விநாயகரின் சிறப்பான வாகனம் மூஞ்சுறு (எலி) தான். மூஞ்சுறு எப்படி விநாயகருக்கு வாகனமானது. விநாயகப் பெருமானைப் போற்றி வண ங்கும் கிரவுஞ்சன் என்னும் கந்தர்வ இளைஞன் ஒரு வன் பூலோ கத்தில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர் ஒரு வரின் மனைவியைக் கண்டு மோகித்து அவளின் கரங்களைப் பற்றி இழுத்தான். அதைக் கண்டு கோபங் கொண்ட முனிவர், மண்ணைத் தோண்டி வளையில் பதுங்கும் மூஷிகமாக மாறக் கட வாய் என சாபமி ட்டார். அதனால் மூஷிகமாக (எலி) மாறி பரா சர முனிவரின் ஆசிரமத்தில் புகுந்து எல்லா வற்றையும் கடித்துக் குதறி நாசம் செய்த தோடு அங்குள்ள மரங்களின் வேர்களைத் துண்டித்து விழச் செய்தும் அட்டகாசம் செய்த வண்ணம் இருந் தான். அச்சமயம் அபினந்தன் என்ற மன்னன் ஒரு யாகம் செய் தான். இந்திரன் தன் பதவிக்கு பங்கம் வராதிருக்க காலநேமி எனும் கொடிய அசுரனைத் தோற்றுவித்து அந்த யாகத்தை அழிக்கும்படி உத்தர விட்டான். ஆனால் அவனோ அந்த யாகத்தை அழித்ததோடு மட்டும் அல்லாமல் பூவுலகம் முழுவதிலும் எங்கெங்கு யாகம் நடக்கின்றதோ அங்கெ ல்லாம் சென்று அவற் றை நாசப் படுத்தி அனைவரையும் துன்புறு த்தத் தொடங்கி னான். அதிலிருந்து விடுபட அனைவரும் ஈசனை வேண்ட அவரும் அருள் புரிந்தார். வரேனியன் என்னும் மன்னரு க்கு மகனாகத் தாம் பிறக்கப் போவதாகச் சொல்லி அவ்விதமே யானை முக த்துடன் அவதரித்தார். அதைக் கண்ட ராணியும் மன்னனும் வருத்த மடைந்து சாமுத்ரிகா லட்சணங்களுடன், பிறக்காத இக்குழந்தையை எ டுத்துச்சென்று எங்காவது போட்டு விடு ங்கள் என்று கட்டளையிட்டனர். அவன து படைவீரர்கள் அக்குழந்தை யை எடு த்துக் கொண்டு போய் காட்டில் ஒரு குள த்தின் கரையில் வைத்து விட்டுச் சென் றுவிட்டனர். அவ்வழியே நீராடச் சென் ற பராசரர் அக்குழந்தையைக் கண்டு அதி சயித்து நம் பெருமாளே இந்தக் குழந் தையை நமக்கு அளித்துள்ளான் என்று அகமகிழ்ந்து வளர்த்து வந்தார். அக்குழ ந்தையும் நாளும் வளர்ந்து வரலானார்.


மூஷிகன் பராசரரின் குடிசைக்கு வந்து அட்டகாசம் செய்வது கண்டு கணேச பெருமான் தமது பரசு ஆயுதத்தை எடுத்து மூஷிகன்மேல் வீசி னார். பரசு அவனை நோக்கிப் பாய்வதைக் கண்டு பயந் தபடி இங்குமங் கும் ஓடினான். பூமியைக் குடைந்தபடி பாதாள லோகம் வரை சென்றா ன். அப்போதும் பரசு ஆயுதம் அவனைத் துரத்தி வருவதைக் கண்டு சோர்ந்து போனான். பரசும் அவனைக் கட்டி இழுத்து வந்து பெருமான் முன் பாக நிறுத்தியது. மூஷிகன் தன் முந்தைய வரலாற்றைக் கூறி தம்மை மன்னித்தருளும் படி வேண் டினான். விநாயகரும் அவனை அரவணை த்து அருளினார். அதன்பின் காலநேமியை அழிக்க எண்ணங்கொண்ட போது அவனா கவே விநாயக பெருமானின் பாதங்களில் விழுந்து சரண டைந்து நற்கதி பெற்றான். இவ்விதமாய் மூஷிகத்தை வாகன மாகப் பெற்ற விநாயகர் மூஷிக வாகனர் என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப் படுகிறார்.


விநாயகர் சதுர்த்தியன்று கடைபிடிக்க வேண்டியவை!


விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகா லையி லேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பின் நீராடி வந்து பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன் மேல் தலை வாழையிலை யை, அதன் நுனி வடக்குப் புறமாக இருக்கும் படி வைத்து அதில் அரி சியைப் பரப்ப வேண்டும். அரிசியி ன் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன் கீழ் ஓம் என எழுத வேண்டும். மணையின் இருபுறமும் குத்து விளக் கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொரு ட்களை தயாராக வைக்க வேண்டும்.


நம் வீட்டுப் பிள்ளைகள் மூலமாக, களிமண்ணால் செய்யப்பட்ட வல ஞ்சுழி விநாயகரை வாங்கி வரச் செய்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட் டு, தொப்பையில் காசு வைக்க வேண்டும். பிள்ளை யாருக்கு அரை யில் துண்டு கட்டி, பூமாலை, அறு கம்புல் மாலை அணிவித்து, மணை ப் பல கையில் இருத்த வேண்டும். குன்றி மணியால் கண்களைத் திற க்க வேண்டும். பின்னர் பிள்ளையார் குடை வைத்து, விளக்குகளை ஏற்றி பூஜை யைத் தொடங்க வேண்டும்.


கொழுக்கட்டை, சுண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங் கள், அர்ச்சனை மலர்கள், பத்ரங்கள் 21 எனும் எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. இல்லாவிட்டாலும் நம்மால் முடி ந்ததைக் கொண்டு பூஜை செய் யலாம். தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்ய வேண் டும். பின்னர்,


ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம், க்ளௌம் கம், கணபதயே
வர வரத ஸர்வ ஜனம்மே வஸமாயை ஸ்வாஹா


எனும் கணபதியின் மூல மந்திரத்தை 21 முறை (அல்) 51 முறை சொல்லி பூஜை யை முடிக்க வேண்டும். பூஜை முடிந்த தும் குழந்தைகளுக்கு நிவேதனப் பட்சண ங்களை வழங்கி நாமும் சாப்பிடலாம். வீட்டில் பூஜை முடித்தபின் ஆலயம் சென்று விநாயகரை வணங்கி வரலாம். காலை-மாலை இருவேளையும் பூஜை செய்வது சிறப்பு. விநாயகர் சதுர்த்திக் குப் பின் விநாயகர் சிலையை விவர்ஜனம் செய்யவேண்டும். விநாயக ர் சதுர்த் தியையும் சேர்த்து, அன்றைய தினமோ அல்லது ஒன்றைப் படையில் அமையும் படியாக 3,5,7-ஆவது நாட்களிலோ இதை மேற் கொள்ளலாம். ஆண்கள் மட்டுமே பிள்ளையாரை நீரில் கரைக்க வே ண்டும். விநாயகர் வீட்டில் இருக்கும்வரை அவரு க்கு இருவேளை பூஜை நைவேத்தியம் செய்ய வேண்டும். பிள்ளையார் சிலை சேத மடையாமல் பார்த்துக் கொள் ள வேண்டி யது அவசியம். தொப்பையில் பதித்த காசை எடுத்து வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெ ருகும்; லட்சுமி கடாட்சம் கிட்டும்.


கணபதிக்கு பிரியமான 21:


கணபதிக்குப் படைக்கப்படும் இலை, பூ, அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் போன்ற ஒவ்வொன்றும் 21 என் னும் எண்ணிக் கையில் இருக்க வேண்டும் என்பர். அதிலென்ன சிறப்பு?


ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5; அவற்றின் காரியங் கள் – 5+5=10; மனம்=1. ஆக மொத்தம் 21. விநாயகரை பூஜிக்கும் போது ஞானே ந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஒன்றுபடா விட்டால் பலனில் லை. இதை நினைவுபடுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.


மலர்கள் 21:


புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை. சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங் கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.


அபிஷேகப் பொருட்கள் 21:


தண்ணீர், எண்ணெய், சீயக்காய், சந்தனாதித்தைலம், மாப்பொடி, மஞ்ச ள் பொடி, திரவியப் பொடி, பஞ்சக வ்யம், ரஸப்பஞ்சாமிர்தம், பழப்ப ஞ்சா மிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர்.


இலைகள் 21:


மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந் தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாது ளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரி சங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு.


நிவேதனப் பொருட்கள் 21:


மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினை மாவு, பால், பாகு, கற் கண்டு, சர்க்க ரைப் பொங்கல், பாய சம், முக்கனிகள், விளாம்பழம், நாவ ற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம்.


திதிக்குரிய கணபதி:


பொதுவாக விநாயகருக்கு சதுர்த்தி திதி உகந்தது என்றாலும், ஒவ்வொரு திதிக்கு மே அதற்குரிய கணபதிகள் உள்ளனர். அந்த நாளில் அதற்குரிய கணபதியை வழிபடுவது சிறப்பு பலன் தரும் என்பர்.


பிரதமை- பாலகணபதி; துவிதியை- தருண கணபதி; திரிதியை- பக்தி கணபதி; சதுர்த்தி- வீர கணபதி; பஞ்சமி- சக்தி கணபதி; சஷ்டி-துவிஜ கணபதி; சப்தமி-சித்தி கணபதி; அஷ்டமி- உச்சிஷ்ட கணபதி; நவமி- விக்ன கணபதி; தசமி- க்ஷிப்ர கணபதி; ஏகாதசி-ஹேரம்ப கணபதி; துவாதசி- லட்சுமி கண பதி; திரயோதசி- மகாகணபதி; சதுர்த்தசி-விஜய கணபதி; அமாவாசை, பவுர்ணமி- நித்ய கணபதி. அந்தந்த திதிக்குரிய கணபதி நாமத்தை 108 முறை கூறி தோப்புக்கரணம் போட்டு பக்தியுடன் வணங்கி வந்தால், நம் வாழ்வில் எதிர்ப்படும் விக்கினங்கள் விலகி சகல வளங்களும் கைகூடும்.


அருள்புரிவாய் ஆனைமுகா!


விநாயகர் சதுர்த்தியன்று மோதகம், பொரி, கடலை, பழம் படைத்து சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம் இதோ!


கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வண ங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவாவரம் வர காத்தி ருக்கும் குணநிதியே! பிரகாசமான ஒளிக்க ற்றையை உடைய சந் திரனை தலை யில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளை யாட்டாகச் செய்பவ னே! ஒப்பில்லாத உயர்ந்த தயாள குணம் கொண்டவனே! கஜமுகாசுர னை கொன்றவனே! அதர்ம த்தை அழித்து தர்மத்தைக் காப்பவனே! என்னைக் காக்கும் விநாய கனே!


உனக்கு என் வணக்கம்.


இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளி கொண்டவனே! பாவங்களை க் களைந்து புண்ணியத்தை அருள்பவனே! தேவர்களு க்கெல்லாம் தேவனே! கருணைமிக்க வனே! யானை முகத்தோனே ! அளப்பரிய சக்தியால் செல்வவளத்தை அருள்பவனே ! எல்லை யில்லாத பரம் பொருளே! விநா யகப் பெருமானே! உன் திருவடிகளை சர ணடைந்து வேண்டுகி றேன். உனக்கு என் நமஸ் காரம்.


உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்கு பவர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருபவனே! நாங்கள் செய்யும் குற்றங் களைக் கூட மன்னித்து அருள்பவனே! ஓம் என்ற மந்திரவடிவினனே! நிலையானவனே! கருணாமூர்த்தியே! சகிப் புத் தன்மை, பொறுமை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களைத் தருபவனே! உலகத்தா ரால் புகழ்ந்து போ ற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம். திரிபுரம் எரித்த சிவ பெருமா னுடைய மூத்த புத்தி ரனே! எங்கள் துன்பத்தை தீர்த்து, தூய்மையான உள்ளத்தைத் தருவாயாக.


உலகம் அழியும் காலத்திலும் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருப வனே! உண் மை வெற்றிபெற என்றும் துணை நிற்பவ னே! மதநீர் பொழி யும் கஜமுகனே! முதலு ம் முடிவுமில்லாத பரம்பொருளே! உன் திருவடிகளில் என் தலை தா ழ்த்தி வணங்குகிறேன். எம்பெருமானே! மங்க லத்தை தந்தருள்வாயாக.


பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை கொண்டவ னே! ஒற்றைக் கொம்பனே! காலனுக்கே காலனான சிவபெருமானின் பிள்ளையே! ஆதியும் அந்தமும் இல்லாதவ னே! துன்பங்களைப் போக் குபவனே! யோகிக ளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப் பொருளே! யானை முக கணேசனே! காலமெல்லாம் உன் னை நினைத்து,வணங்கி வருகி றேன். வள் ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்க ளில் சரணம டைகிறேன். எங்களுக்கு இம்மை யில் சகல செல்வத்தையும், மறுமை யில் முக் தியையும் தந்தருள் வாயாக
Parveen Sir can’t read Tamil.can we have a translated version.thks
 

Latest ads

Back
Top