அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள்
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது, “கருடா! சௌக்கியமா?” - இத்தொடரை அனைவரும் கேட்டிருப்போம்.
ஆனால் முதன்முதலில் கருடனைப் பார்த்து சௌக்கியமா என்று கேட்ட பாம்பு யார் தெரியுமா? பிரம்ம புராணத்தில் ஒரு சம்பவம்.
ஆதிசேஷனின்மகனுக்கு மணிநாகன் என்று பெயர். அவனுக்குக் கருடனைக் கண்டால் பயம். அந்த பயம் தீர வேண்டும் என வேண்டிப் பரமசிவனைக் குறித்து அவன் தவம் புரிந்தான்.
ஆசுதோஷியான சிவனும் அவனுக்குக் காட்சி தந்து, ‘இனி கருடனைக் குறித்து நீ அஞ்சத் தேவையில்லை,’ என்று வரமளித்தார்.பரமசிவன் தந்த வரத்தின் பலத்தால், பாற்கடலுக்குச் சென்ற மணிநாகன் கருடனை ஏளனமாகப் பார்த்து, “
#கருடா! #சௌக்கியமா?” என்று கேட்டான்.
கடுங்கோபம் கொண்ட கருடன் மணிநாகனைத் தன் அலகால் கொத்திச்சென்று சிறைபிடித்தார்.
மணிநாகன் பரமசிவனிடம் தன்னைக் காக்குமாறு மனதாற வேண்டினான். உடனே சிவன் நந்திகேஸ்வரரைப் பாற்கடலுக்கு அனுப்பி வைத்தார்.
சிவபெருமான் மணிநாகனை மீட்டுத் தரும்படி வேண்டிக் கொண்டதாகத் திருமாலிடம் நந்திகேஸ்வரர் கூறினார்.
திருமால் கருடனை அழைத்து, “கருடா! மணிநாகன் சிவபெருமானுக்கு மிகவும் பிரியமானவன்.அவனை நீ சிறைபிடித்து வைத்துள்ளது மிகவும் தவறு. அவனை விடுவித்து விடு!” என்று கூறினார்.
திருமாலின் இந்த வார்த்தைகள் கருடனின் கோபத்தீயில் எண்ணெயை ஊற்றுவது போல இருந்தன. “உங்கள்கண்ணெதிரே அவன் என்னை ஏளனம் செய்தான்.
அதை நீங்கள் தட்டிக் கேட்கவில்லை. இப்போது அவனைச் சிறையிலிருந்து விடுவிக்கவும் சொல்கிறீர்கள். அந்தப் பரமசிவன் தன்பக்தன் மேல் இவ்வளவுபரிவு கொண்டு அவனை விடுவிக்க வேண்டித் தூதுவரை அனுப்புகிறார்.
ஆனால் உங்களுக்கு உங்கள் பக்தனான என்மேல் அத்தகைய பரிவு இல்லையே!” என்று கோபத்துடன் திருமாலைப் பார்த்துச் சொன்னார்
கருடன்
.“அப்படியில்லை கருடா! நம்மைத் தேடி வந்த தூதுவர் வேண்டிக் கொள்வதை நாம் நிறைவேற்றித் தர வேண்டாமா?” என்று கேட்டார் திருமால்.
“அப்படியாயின், நான் இதுவரை உங்களுக்கு எவ்வளவு தொண்டு செய்திருக்கிறேன்? என்னுடைய ஆதரவு இல்லாமல் உங்களால் அசுரர்களை வெல்ல முடியுமா?
நான் உங்களுக்கு வாகனமாக இல்லாவிட்டால் உம் அடியார்கள் அழைக்கும் போதெல்லாம் உங்களால் அவர்கள் இருப்பிடம் சென்று அவர்களைக் காக்க முடியுமா?” என்று வரிசையாகக் கேள்விக் கணைகளைத் தொடுத்தார் கருடன்.
திருமால் சிரித்தபடி, “ஆம் கருடா! உன்னுடைய பலத்தால் தான் நான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றேன்!” என்று சொல்லிக் கொண்டே,
#தன்சுண்டுவிரலைக் #கருடனின்_கிரீடத்தின்
#மேல்_வைத்தார்.
அடுத்த நொடி, அந்தச் சுண்டு விரலின் சுமை தாங்க முடியாமல், அவரது கிரீடம், முகம், மார்பு எல்லாம் வயிற்றுக்குள்ளே #அழுந்திப்போய் கோரமான #வடிவம் பெற்றார் #கருடன்.
அப்போதுதான் தன் பலத்தால் திருமாலைத் #தாங்கவில்லை. அவரைத்தாங்குவதற்குரிய பலத்தையும் #திருமால்தான் #தனக்குத்தந்துள்ளார் என்பதை உணர்ந்து கொண்டார்கருடன்.
தன் தவறை உணர்ந்து, “#உங்களைக் காண வேண்டுமெனில்
#அதற்குரியபார்வையை #நீங்கள்தந்தால்தான் #உங்களைக்காணஇயலும். உங்களை அறிய வேண்டுமெனில் அதற்குரிய அறிவையும்
#நீங்கள்_தந்தால்தான்
#அறிய_இயலும்.
#உங்களைத் #தாங்கவேண்டுமெனில், #அதற்குரியபலத்தையும் #நீங்கள்தந்தால்தான்
#தாங்க_இயலும். இதை இப்போது #உணர்ந்து விட்டேன். #அடியேனை
#மன்னித்தருள_வேண்டும்!” என்று பிரார்த்தித்தார் கருடன்.
கருடனை மன்னித்த திருமால், “#கருடா நீ கோதாவரி நதியில் நீராடி உன் பழைய வடிவத்தை #மீண்டும்_பெறுவாய்!” என்று கூறினார்.அவ்வாறே கருடனும் கோதாவரியில் நீராடி மீண்டும் நல்வடிவைப் பெற்றார்.
#மணிநாகனையும் தன் பிடியிலிருந்து #விடுவித்தார். இந்த லீலையின் மூலமாகக் கருடனைப் போன்ற நித்யசூரிகளுக்குக்கூட பலம் தருபவராகத்தான் விளங்குவதை உணர்த்தினார் திருமால்.
இப்படி #அனைவருக்கும்_பலம் தருபவராகத் திருமால் விளங்குவதால் ‘#ப்ராணதஹ:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு #ஸஹஸ்ரநாமத்தின் 66-வது திருநாமம். “
#ப்ராணதாயநமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் பங்கேற்கும் தேர்வுகள், நேர்காணல்கள், அலுவலகப் பணிகள் உள்ளிட்டவற்றை #எதிர்கொள்வதற்கான #பலத்தைத்திருமால் #தந்தருள்வார்.
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது, “கருடா! சௌக்கியமா?” - இத்தொடரை அனைவரும் கேட்டிருப்போம்.
ஆனால் முதன்முதலில் கருடனைப் பார்த்து சௌக்கியமா என்று கேட்ட பாம்பு யார் தெரியுமா? பிரம்ம புராணத்தில் ஒரு சம்பவம்.
ஆதிசேஷனின்மகனுக்கு மணிநாகன் என்று பெயர். அவனுக்குக் கருடனைக் கண்டால் பயம். அந்த பயம் தீர வேண்டும் என வேண்டிப் பரமசிவனைக் குறித்து அவன் தவம் புரிந்தான்.
ஆசுதோஷியான சிவனும் அவனுக்குக் காட்சி தந்து, ‘இனி கருடனைக் குறித்து நீ அஞ்சத் தேவையில்லை,’ என்று வரமளித்தார்.பரமசிவன் தந்த வரத்தின் பலத்தால், பாற்கடலுக்குச் சென்ற மணிநாகன் கருடனை ஏளனமாகப் பார்த்து, “
#கருடா! #சௌக்கியமா?” என்று கேட்டான்.
கடுங்கோபம் கொண்ட கருடன் மணிநாகனைத் தன் அலகால் கொத்திச்சென்று சிறைபிடித்தார்.
மணிநாகன் பரமசிவனிடம் தன்னைக் காக்குமாறு மனதாற வேண்டினான். உடனே சிவன் நந்திகேஸ்வரரைப் பாற்கடலுக்கு அனுப்பி வைத்தார்.
சிவபெருமான் மணிநாகனை மீட்டுத் தரும்படி வேண்டிக் கொண்டதாகத் திருமாலிடம் நந்திகேஸ்வரர் கூறினார்.
திருமால் கருடனை அழைத்து, “கருடா! மணிநாகன் சிவபெருமானுக்கு மிகவும் பிரியமானவன்.அவனை நீ சிறைபிடித்து வைத்துள்ளது மிகவும் தவறு. அவனை விடுவித்து விடு!” என்று கூறினார்.
திருமாலின் இந்த வார்த்தைகள் கருடனின் கோபத்தீயில் எண்ணெயை ஊற்றுவது போல இருந்தன. “உங்கள்கண்ணெதிரே அவன் என்னை ஏளனம் செய்தான்.
அதை நீங்கள் தட்டிக் கேட்கவில்லை. இப்போது அவனைச் சிறையிலிருந்து விடுவிக்கவும் சொல்கிறீர்கள். அந்தப் பரமசிவன் தன்பக்தன் மேல் இவ்வளவுபரிவு கொண்டு அவனை விடுவிக்க வேண்டித் தூதுவரை அனுப்புகிறார்.
ஆனால் உங்களுக்கு உங்கள் பக்தனான என்மேல் அத்தகைய பரிவு இல்லையே!” என்று கோபத்துடன் திருமாலைப் பார்த்துச் சொன்னார்
கருடன்
.“அப்படியில்லை கருடா! நம்மைத் தேடி வந்த தூதுவர் வேண்டிக் கொள்வதை நாம் நிறைவேற்றித் தர வேண்டாமா?” என்று கேட்டார் திருமால்.
“அப்படியாயின், நான் இதுவரை உங்களுக்கு எவ்வளவு தொண்டு செய்திருக்கிறேன்? என்னுடைய ஆதரவு இல்லாமல் உங்களால் அசுரர்களை வெல்ல முடியுமா?
நான் உங்களுக்கு வாகனமாக இல்லாவிட்டால் உம் அடியார்கள் அழைக்கும் போதெல்லாம் உங்களால் அவர்கள் இருப்பிடம் சென்று அவர்களைக் காக்க முடியுமா?” என்று வரிசையாகக் கேள்விக் கணைகளைத் தொடுத்தார் கருடன்.
திருமால் சிரித்தபடி, “ஆம் கருடா! உன்னுடைய பலத்தால் தான் நான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றேன்!” என்று சொல்லிக் கொண்டே,
#தன்சுண்டுவிரலைக் #கருடனின்_கிரீடத்தின்
#மேல்_வைத்தார்.
அடுத்த நொடி, அந்தச் சுண்டு விரலின் சுமை தாங்க முடியாமல், அவரது கிரீடம், முகம், மார்பு எல்லாம் வயிற்றுக்குள்ளே #அழுந்திப்போய் கோரமான #வடிவம் பெற்றார் #கருடன்.
அப்போதுதான் தன் பலத்தால் திருமாலைத் #தாங்கவில்லை. அவரைத்தாங்குவதற்குரிய பலத்தையும் #திருமால்தான் #தனக்குத்தந்துள்ளார் என்பதை உணர்ந்து கொண்டார்கருடன்.
தன் தவறை உணர்ந்து, “#உங்களைக் காண வேண்டுமெனில்
#அதற்குரியபார்வையை #நீங்கள்தந்தால்தான் #உங்களைக்காணஇயலும். உங்களை அறிய வேண்டுமெனில் அதற்குரிய அறிவையும்
#நீங்கள்_தந்தால்தான்
#அறிய_இயலும்.
#உங்களைத் #தாங்கவேண்டுமெனில், #அதற்குரியபலத்தையும் #நீங்கள்தந்தால்தான்
#தாங்க_இயலும். இதை இப்போது #உணர்ந்து விட்டேன். #அடியேனை
#மன்னித்தருள_வேண்டும்!” என்று பிரார்த்தித்தார் கருடன்.
கருடனை மன்னித்த திருமால், “#கருடா நீ கோதாவரி நதியில் நீராடி உன் பழைய வடிவத்தை #மீண்டும்_பெறுவாய்!” என்று கூறினார்.அவ்வாறே கருடனும் கோதாவரியில் நீராடி மீண்டும் நல்வடிவைப் பெற்றார்.
#மணிநாகனையும் தன் பிடியிலிருந்து #விடுவித்தார். இந்த லீலையின் மூலமாகக் கருடனைப் போன்ற நித்யசூரிகளுக்குக்கூட பலம் தருபவராகத்தான் விளங்குவதை உணர்த்தினார் திருமால்.
இப்படி #அனைவருக்கும்_பலம் தருபவராகத் திருமால் விளங்குவதால் ‘#ப்ராணதஹ:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு #ஸஹஸ்ரநாமத்தின் 66-வது திருநாமம். “
#ப்ராணதாயநமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் பங்கேற்கும் தேர்வுகள், நேர்காணல்கள், அலுவலகப் பணிகள் உள்ளிட்டவற்றை #எதிர்கொள்வதற்கான #பலத்தைத்திருமால் #தந்தருள்வார்.