மகாசங்கடஹர சதுர்த்தி
விநாயகர்_சதுர்த்திக்குமுன்பு வரும்தேய்பிறைசதுர்த்திக்கு "மகாசங்கடஹர சதுர்த்தி" என்று பெயர். இந்நாளில் விநாயகரை வழிபட்டால் தடையனைத்தும் விலகும். வாழ்வில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும். அதற்காக விநாயகரை வழிபடும் விதத்தில் பிரார்த்தனை இங்கு உள்ளது.
* கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே!
வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவாவரம் தர காத்திருக்கும் குணநிதியே!
பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே!
உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே!
ஒப்பில்லாத உயர்ந்த தயாள குணமுள்ளவனே! கஜமுகாசுரனை வென்றவனே!
கெட்டதை அழித்து நல்லதைச் செய்து என்னைக் காக்கும் விநாயகனே!
உனக்கு என் வணக்கம்.
* இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளி கொண்டவனே!
பாவங்களைக் களைந்து சொர்க்கத்தைத் தருபவனே!
தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை மிக்கவனே!
யானை முகத்தோனே! அளப்பரிய சக்தியால் அளவற்ற
செல்வத்தை தருபவனே! எல்லையில்லாத பரம்பொருளே!
விநாயகப் பெருமானே! உன் திருவடிகளை சரணடைந்து அருளை வேண்டுகிறேன்.
உனக்கு என் நமஸ்காரம்.
* உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே!
நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனநிறைவைத் தருபவனே!
நாங்கள் செய்யும் குற்றங்களைக் கூட குணமாகக் கொள்பவனே!
ஓம் என்ற மந்திர வடிவினனே! நிலையானவனே! கருணாகரனே!
சகிப்புத்தன்மை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களை தருபவனே!
உலகத்தாரால் புகழ்ந்து போற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம்.
* திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய மூத்த புத்திரனே!
எங்கள் துன்பத்தை தீர்த்து வை. துாய்மையான மனதைக் கொடு.
உலகம் அழியும் காலத்திலும் உன் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருபவனே!
உண்மை வெற்றி பெற துணை நிற்பவனே! கன்னத்தில் மதநீர் பொழியும் கஜமுகனே!
முதலும் முடிவுமில்லாத பரம்பொருளே! உன் திருவடிகளில் என் தலை வைத்து வணங்குகி றேன். எம்பெருமானே! நீ வாழ்க, வாழ்க!
* பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை உடையவனே! ஒற்றைக் கொம்பனே! காலனுக்கே காலனான சிவபெருமானின் மைந்தனே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! கஷ்டங்களை நீக்குபவனே! யோகிகளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப்பொருளே! யானைமுக கணேசா! காலமெல்லாம் உன்னையே நினைத்து, வணங்கி வருகிறேன். வள்ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்களில் சரணமடைகிறேன். விநாயகனே!
விநாயகர்_சதுர்த்திக்குமுன்பு வரும்தேய்பிறைசதுர்த்திக்கு "மகாசங்கடஹர சதுர்த்தி" என்று பெயர். இந்நாளில் விநாயகரை வழிபட்டால் தடையனைத்தும் விலகும். வாழ்வில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும். அதற்காக விநாயகரை வழிபடும் விதத்தில் பிரார்த்தனை இங்கு உள்ளது.
* கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே!
வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவாவரம் தர காத்திருக்கும் குணநிதியே!
பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே!
உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே!
ஒப்பில்லாத உயர்ந்த தயாள குணமுள்ளவனே! கஜமுகாசுரனை வென்றவனே!
கெட்டதை அழித்து நல்லதைச் செய்து என்னைக் காக்கும் விநாயகனே!
உனக்கு என் வணக்கம்.
* இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளி கொண்டவனே!
பாவங்களைக் களைந்து சொர்க்கத்தைத் தருபவனே!
தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை மிக்கவனே!
யானை முகத்தோனே! அளப்பரிய சக்தியால் அளவற்ற
செல்வத்தை தருபவனே! எல்லையில்லாத பரம்பொருளே!
விநாயகப் பெருமானே! உன் திருவடிகளை சரணடைந்து அருளை வேண்டுகிறேன்.
உனக்கு என் நமஸ்காரம்.
* உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே!
நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனநிறைவைத் தருபவனே!
நாங்கள் செய்யும் குற்றங்களைக் கூட குணமாகக் கொள்பவனே!
ஓம் என்ற மந்திர வடிவினனே! நிலையானவனே! கருணாகரனே!
சகிப்புத்தன்மை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களை தருபவனே!
உலகத்தாரால் புகழ்ந்து போற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம்.
* திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய மூத்த புத்திரனே!
எங்கள் துன்பத்தை தீர்த்து வை. துாய்மையான மனதைக் கொடு.
உலகம் அழியும் காலத்திலும் உன் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருபவனே!
உண்மை வெற்றி பெற துணை நிற்பவனே! கன்னத்தில் மதநீர் பொழியும் கஜமுகனே!
முதலும் முடிவுமில்லாத பரம்பொருளே! உன் திருவடிகளில் என் தலை வைத்து வணங்குகி றேன். எம்பெருமானே! நீ வாழ்க, வாழ்க!
* பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை உடையவனே! ஒற்றைக் கொம்பனே! காலனுக்கே காலனான சிவபெருமானின் மைந்தனே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! கஷ்டங்களை நீக்குபவனே! யோகிகளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப்பொருளே! யானைமுக கணேசா! காலமெல்லாம் உன்னையே நினைத்து, வணங்கி வருகிறேன். வள்ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்களில் சரணமடைகிறேன். விநாயகனே!