• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

vata savithri vratham.

kgopalan

Active member
28-6-2018. வியாழன் வட சாவித்ரி வ்ருதம். puja vidhanam is there in www.drik panchang.com


வட வ்ருக்ஷம் என்பது ஆல மரம்.. இந்த ஆல மரம் நல்ல குழந்தைகளையும், நல்ல ஞானத்தையும் வழங்கும் சக்தி வாய்ந்தது.
ஶ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஆல மரத்து அடியில் அமர்ந்து


ஸநகாதி முனிவர்களுக்கு ஞானோபதேசம் செய்கிறார். ஆல மரம் போல் தழைத்து வாழ வேண்டும் என்பது பழமொழி.


ஜ்யேஷ்டே மாஸி ஸிதே பக்ஷே பூர்ணிமாயாம் இதம் வ்ருதம்
என்கின்ற படி ஜ்யேஷ்ட மாத பெளர்ணமியான இன்று இந்த வட ஸாவித்ரீ வ்ருதத்தை செய்யலாம்.


இதை 26, 27, 28 ஆகிய மூன்று நாட்களிலோ அல்லது 28ஆம் தேதியான இன்றோ (பெளர்ணமி யன்று மட்டுமோ) செய்யலாம்.


பெண்கள் தங்களது ஸெளபாக்கியம் நிலைக்கவும் , அன்பான கணவன், நீண்ட ஆயுள் முதலியவற்றை அடையவும் இந்த ஆல மர பூஜை செய்யலாம் .பவிஷ்யோத்தர புராணம் இதை செய்வதால் பெண்களுக்கு ஒரு போதும் வைதவ்யம் ஏற்படாது என்கிறது.


ஸாவித்ரி தேவி இந்த வ்ருதம் செய்து தான் ஸத்யவானுக்கு அல்பாயுஸ் என்று தெரிந்தும் திருமணம் செய்து கொண்டு யமனிடமிருந்து தன் கணவனை மீட்டாள்.;


ஆதலால் இதற்கு வட ஸாவித்ரீ வ்ருதம் என்று பெயர்.


ஸுவாசினி பெண்கள் இன்று காலையில் ஸ்நானம் செய்து பூஜை அறையில் அமர்ந்து கொண்டு சுக்லாம்பரதரம்+சாந்தயே. மமோபாத்த+
ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் “”மம ஜன்ம ஜன்மநி அ வைதவ்ய


ப்ராப்தயே பர்து: சிராயு ராரோக்ய ஸம்பதாதி ப்ராப்தி காமநயா ஸாவித்ரீ வ்ருதம் கரிஷ்யே” என்று ஸங்கல்பம் செய்து கொண்டு அருகே இருக்கும் ஆல மரத்திற்கு சென்று குடத்தில் நிறைய ஜலம் எடுத்துக்கொண்டு


வட மூலே ஸ்திதோ ப்ருஹ்மா வட மத்யே ஜனார்த்தன:
வடாக்ரே து சிவம் வித்யாத் ஸாவித்ரீ வ்ருத ஸம்யுதா வட
ஸிஞ்சாமி தே மூலம் ஸலிலைரம்ருதோபமை:


என்ற ஸ்லோகம் சொல்லி ஆல மரத்திற்கு நிறைய ஜலம் விட
வேண்டும் .பிறகு பக்தியோடு ஐந்து அல்லது ஏழு தடவை ஆல
மரத்தை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்து வீட்டிற்கு வந்து விட வேண்டும்.


வீட்டில் ஹால் சுவற்றில் கிழக்கு முகமாக மஞ்சள் அல்லது காவியால் ஆல மரம் படம் வரைந்தோ, அல்லது ஒரு சுத்தமான துணி விரித்து


அதில் ஒரு பாத்ரம் நிறைய பச்சரிசி வைத்து அதில் சில தங்கம் அல்லது வெள்ளி காசுக்களை வைத்து அதில் ஸாவித்ரியை பூஜை செய்யலாம்.


அஸ்மின் சித்ர படே அல்லது அஸ்மின் கலசே வட வ்ருக்ஷம், ப்ருஹ்மாணம், ஸாவித்ரீம், ஸத்யவந்தம், தர்மராஜம், நாரதம் ச ஆவாஹயாமி.
–ஸ்தாபயாமி- பூஜயாமி என்று பூக்களை போட்டு ஆஸனம் முதலிய 16 உபசார பூஜை செய்து தேங்காய், பழம், அச்சு வெல்லம் நிவேதனம் செய்ய வேண்டும்.


ஓங்கார பூர்விகே தேவி ஸர்வ துக்க நிவாரணி வேத மாதர் நமஸ்துப்யம் ஸெளபாக்கியஞ்ச ப்ரயஸ்சமே என்று ப்ரார்தித்துக் கொள்ளவும். கையில் புஷ்பம் அக்ஷதை வைத்துக்கொண்டு


கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி சுத்த ஜலத்தால் அர்க்யம் தர
வேன்டும்.


ஓங்கார பூர்விகே தேவி ஸர்வ துக்க நிவாரணீ வேத மாதர் நமஸ்
துப்யம் அ வைதவ்யம் ப்ரயஸ்சமே.வேத மாத்ரே நம: இதமர்கியம்.


பதிவ்ரதே மஹா பாகே வஹ்ணி யாநே சுசி ஸ்மிதே த்ருடவ்ருதே
த்ருடமதே பர்துஸ்ச ப்ரியவாதினி ஸாவித்ரியை நம; இதமர்கியம்.


அ வைதவ்யம்ஸ்ச ஸெளபாக்கியம் தேஹி த்வம் மம ஸுவ்ரதே.
புத்ரான் பெளத்ராம்ஸ்ச ஸெளக்யஞ்ச க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே ஸாவித்ரியை நம: இதமர்க்கியம்.


த்வயா ஸ்ருஷ்டம் ஜகத் ஸர்வம் ஸ தேவாஸுர மாநவம் ஸத்ய
வ்ரத தரோ தேவ ப்ருஹ்ம ரூப நமோஸ்துதே ப்ருஹ்மணே நம;
இதமர்க்கியம்.


த்வம் கர்ம ஸாக்ஷி லோகானாம் சுபா சுப விவேசக:
க்ருஹாணார்க்கியம் தர்மராஜ வைவஸ்வத நமோஸ்துதே.
யமாய நம: இதமர்க்கியம்.


பிறகு கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி ப்ரார்த்தனை செய்து கொள்ளவும்.
அவியோகோ யதா தேவ ஸாவித்ர்யா ஸஹிதஸ்ய தே
அவியோக ஸ் ததா ஸ்மாகம் பூயாஜ் ஜன்மநி ஜன்மநி.


பிறகு ஒரு மூங்கில் தட்டில் மஞ்சள், குங்குமம், வளையல் சீப்பு, கண்ணாடி மாலை (புடவை) ரவிக்கை துண்டு முதலிய ஸெளபாக்கிய த்ரவ்யங்கள் தக்ஷிணை வைத்து


ஸெளபாக்கிய த்ரவ்யம் ஸுபகே வ்ரத ஸம்பூர்த்தி ஹேதவே
ப்ருஹ்மண: ப்ரீண நார்த்தாய ஸாவித்ரீ ப்ரதிக்ருஹ்யதாம் இதம்
ஸெளபாக்கிய த்ரவ்யம் ஸாவித்ர்யாதி ப்ரீத்யர்த்தம் ஸம்ப்ரததே .


என்று சொல்லி அம்மன் சன்னதியில் வைத்து விட்டு , பிறகு அதை வயதான சுமங்கலி பெண்களுக்கு தந்து விட வேண்டும். அன்று இரவு
ஸாவித்ரீ ஸத்யவானீன் சரித்ரத்தை படிக்கவோ, கேட்கவோ வேண்டும்.


இவ்வாறு பூஜை செய்ய முடியாதவர்கள் ஆல மரத்திற்கு ஜலம் விட்டு
விட்டு நமஸ்கரித்து, அர்க்யம் தந்து சரித்ரம் படிக்கலாம்.


இதனால் எப்படி பட்ட ஆபத்துகளிலிருந்தும் தனது கணவனை மீட்டு விடலாம். .கருத்து வேறுபாடுகள் நீங்கி கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நீடிக்கும்..
 

Latest ads

Back
Top