பீஷ்ம ஏகாதசி (விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பிறந்த நா
குருக்ஷேத்ரத்தில் தான் கண்ணன் சொன்ன பகவத் கீதையும் தோன்றியது, கண்ணன் கேட்ட விஷ்ணு ஸஹஸ்ர நாமமும் தோன்றியது. எனவேதான் குருக்ஷேத்ரம், தர்மக்ஷேத்ரம் என்று போற்றப்படுகிறது. பீஷ்ம பிதாமகர் அம்பு படுக்கையில் இருக்கும் சமயம், பாண்டவர்கள் ஸ்ரீகிருஷ்ணனுடன் சென்று அவரை வணங்குகிறார்கள். அப்போது ஸ்ரீகிருஷ்ணன் பீஷ்மரை, பாண்டவர்களுக்கு தர்மத்தை உபதேசிக்கும்படி கோருகிறார். பீஷ்மரும் அவ்வாறே அவர்களுக்கு பல தர்மோபதேசங்களை செய்து விட்டு, ஸ்ரீமன் நாராயணனின் பெருமைகளை போற்றும் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் என்ற திவ்ய ஸ்தோத்ரத்தையும் உபதேசிக்கிறார். இப்படிப்பட்ட ஆயிரம் நாமங்களால் போடப்படும் ஸ்ரீமஹா விஷ்ணு வேறு யாரும் அல்லர். அவரேதான் இந்த ஸ்ரீகிருஷ்ணர் என்ற உண்மையையும் கூறி பரந்தாமனை வணங்குகிறார். ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் அவதரித்த இந்த நன்னாளில் நாம் அனைவரும் தவறாமல் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்வோம். ( தினமுமே ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் செய்வது நற்பலன்கள் தரும்)
குருக்ஷேத்ரத்தில் தான் கண்ணன் சொன்ன பகவத் கீதையும் தோன்றியது, கண்ணன் கேட்ட விஷ்ணு ஸஹஸ்ர நாமமும் தோன்றியது. எனவேதான் குருக்ஷேத்ரம், தர்மக்ஷேத்ரம் என்று போற்றப்படுகிறது. பீஷ்ம பிதாமகர் அம்பு படுக்கையில் இருக்கும் சமயம், பாண்டவர்கள் ஸ்ரீகிருஷ்ணனுடன் சென்று அவரை வணங்குகிறார்கள். அப்போது ஸ்ரீகிருஷ்ணன் பீஷ்மரை, பாண்டவர்களுக்கு தர்மத்தை உபதேசிக்கும்படி கோருகிறார். பீஷ்மரும் அவ்வாறே அவர்களுக்கு பல தர்மோபதேசங்களை செய்து விட்டு, ஸ்ரீமன் நாராயணனின் பெருமைகளை போற்றும் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் என்ற திவ்ய ஸ்தோத்ரத்தையும் உபதேசிக்கிறார். இப்படிப்பட்ட ஆயிரம் நாமங்களால் போடப்படும் ஸ்ரீமஹா விஷ்ணு வேறு யாரும் அல்லர். அவரேதான் இந்த ஸ்ரீகிருஷ்ணர் என்ற உண்மையையும் கூறி பரந்தாமனை வணங்குகிறார். ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் அவதரித்த இந்த நன்னாளில் நாம் அனைவரும் தவறாமல் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்வோம். ( தினமுமே ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் செய்வது நற்பலன்கள் தரும்)