V
V.Balasubramani
Guest
சொல்கிறார்கள்
[h=1]Gardening adds years to your life and life to your years. – Unknown
சொல்கிறார்கள்[/h]
ஒரு நிமிடம் கூட சும்மா உட்காரபிடிக்காது!
திருச்சி, எடமலைப்பட்டி புதுாரில், மாடி தோட்டம் அமைத்து பராமரித்து வரும், 91 வயது பாட்டி, ஜெயலட்சுமி: என் கணவர், இறந்து விட்டார். எங்களுக்கு ஐந்து பெண், இரண்டு ஆண் குழந்தைகள். நாலாவது தலைமுறையை பார்த்து விட்ட நான், ஐந்தாவது மகள் வீட்டில் வசித்து வருகிறேன்.மாடித்தோட்டம் அமைத்து நாலைந்து ஆண்டுகளாகிறது. எந்த விதையை கேட்டாலும் பிள்ளைகள், மறக்காமல் வாங்கி தந்து விடுவர். எனக்கு ஒரு நிமிடம் கூட சும்மா உட்கார பிடிக்காது. அந்த உழைப்பு தான், இந்த வயதிலும் மாடித்தோட்டம் போட வைத்துள்ளது.
பெயின்ட் வாளி, பழைய பிளாஸ்டிக் வாளிகளில், செம்மண், மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம் போட்டு, இயற்கை உரக் காய்கறி தொட்டிகளை தயார் செய்து கொள்வேன். முதலில் காய்கறி, பூச்செடி விதைகளை போட்டு நாற்று உருவாக்கி, இயற்கை உரக் காய்கறி தொட்டிகளில் அவற்றை நட்டு, இரண்டு வேளையும் தண்ணீர் ஊற்றுவேன். பாகல், பீர்க்கை, புடலை, அவரை கொடி, வெண்டை, தக்காளி, கத்திரிக்காய், வெள்ளை முள்ளங்கி, கொத்தவரங்காய், கீரை வகைகளும் உள்ளன. எனக்கும், என் மகளுக்கும் போக மீதியை, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தந்து விடுவேன்.
மூலிகைகளில் துளசி, துாதுவளை, பிரண்டை, சிறியாநங்கை, கீழாநெல்லி, திருநீற்றுப்பச்சிலை, ஓமவல்லி வளர்த்து வருகிறேன்.துளசி, துாதுவளை, சளிக்கு நல்லது. சிறியாநங்கை இலையை தினசரி மென்று வந்தாலே, சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். கீழாநெல்லி, மஞ்சள் காமாலை நோய்க்கு கைக்கண்ட மருந்து.
அதுபோல, திருநீற்றுப் பச்சிலை, கொய்யா இலை, குப்பைமேனி மூன்றையும் அரைத்து, தோல் பிரச்னை உள்ள இடங்களில் தேய்த்தால், பிரச்னை நீங்கும்.அதுபோல், அடுக்கு நந்தியாவட்டை பூவை விளக்கெண்ணை விட்டு வதக்கி, வெள்ளை துணியில் கட்டி, கண்ணில் ஒற்றி எடுத்தால், கண்களுக்கு குளிர்ச்சி. சுமங்கலிகள் யாராவது வீட்டுக்கு வந்தால், வெற்றிலை கொடியிலிருந்து பறித்து, தாம்பூலம் தந்து அனுப்புவோம்.
Read more at: http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93
[h=1]Gardening adds years to your life and life to your years. – Unknown
சொல்கிறார்கள்[/h]
ஒரு நிமிடம் கூட சும்மா உட்காரபிடிக்காது!
திருச்சி, எடமலைப்பட்டி புதுாரில், மாடி தோட்டம் அமைத்து பராமரித்து வரும், 91 வயது பாட்டி, ஜெயலட்சுமி: என் கணவர், இறந்து விட்டார். எங்களுக்கு ஐந்து பெண், இரண்டு ஆண் குழந்தைகள். நாலாவது தலைமுறையை பார்த்து விட்ட நான், ஐந்தாவது மகள் வீட்டில் வசித்து வருகிறேன்.மாடித்தோட்டம் அமைத்து நாலைந்து ஆண்டுகளாகிறது. எந்த விதையை கேட்டாலும் பிள்ளைகள், மறக்காமல் வாங்கி தந்து விடுவர். எனக்கு ஒரு நிமிடம் கூட சும்மா உட்கார பிடிக்காது. அந்த உழைப்பு தான், இந்த வயதிலும் மாடித்தோட்டம் போட வைத்துள்ளது.
பெயின்ட் வாளி, பழைய பிளாஸ்டிக் வாளிகளில், செம்மண், மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம் போட்டு, இயற்கை உரக் காய்கறி தொட்டிகளை தயார் செய்து கொள்வேன். முதலில் காய்கறி, பூச்செடி விதைகளை போட்டு நாற்று உருவாக்கி, இயற்கை உரக் காய்கறி தொட்டிகளில் அவற்றை நட்டு, இரண்டு வேளையும் தண்ணீர் ஊற்றுவேன். பாகல், பீர்க்கை, புடலை, அவரை கொடி, வெண்டை, தக்காளி, கத்திரிக்காய், வெள்ளை முள்ளங்கி, கொத்தவரங்காய், கீரை வகைகளும் உள்ளன. எனக்கும், என் மகளுக்கும் போக மீதியை, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தந்து விடுவேன்.
மூலிகைகளில் துளசி, துாதுவளை, பிரண்டை, சிறியாநங்கை, கீழாநெல்லி, திருநீற்றுப்பச்சிலை, ஓமவல்லி வளர்த்து வருகிறேன்.துளசி, துாதுவளை, சளிக்கு நல்லது. சிறியாநங்கை இலையை தினசரி மென்று வந்தாலே, சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். கீழாநெல்லி, மஞ்சள் காமாலை நோய்க்கு கைக்கண்ட மருந்து.
அதுபோல, திருநீற்றுப் பச்சிலை, கொய்யா இலை, குப்பைமேனி மூன்றையும் அரைத்து, தோல் பிரச்னை உள்ள இடங்களில் தேய்த்தால், பிரச்னை நீங்கும்.அதுபோல், அடுக்கு நந்தியாவட்டை பூவை விளக்கெண்ணை விட்டு வதக்கி, வெள்ளை துணியில் கட்டி, கண்ணில் ஒற்றி எடுத்தால், கண்களுக்கு குளிர்ச்சி. சுமங்கலிகள் யாராவது வீட்டுக்கு வந்தால், வெற்றிலை கொடியிலிருந்து பறித்து, தாம்பூலம் தந்து அனுப்புவோம்.
Read more at: http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93