• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஆண்டாளுக்கு ஒரு புடவை வாங்குங்க... நாளை, கூ&#2

Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
ஆண்டாளுக்கு ஒரு புடவை வாங்குங்க... நாளை, கூ&#2

[h=1]ஆண்டாளுக்கு ஒரு புடவை வாங்குங்க... நாளை, கூடாரை வல்லி விழா மறக்காதீங்க![/h]By வி. ராம்ஜி

andal3jpg


நமக்கெல்லாம் திருப்பாவை தந்த ஆண்டாளை, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியை, பாசுரங்களால் பரந்தாமனை மெய்யுருகப் பாடிய ஆண்டாள் நாச்சியாரை நாம் கொண்டாட வேண்டாமா. அவளை ஆடிப்பூரத்தில் கொண்டாடுவது போல், கொண்டாடி மகிழ்வது போல், வணங்கிப் போற்றுவது போல், இன்னொரு தினமும் இருக்கிறது. அது... கூடாரை வல்லி விழா! இந்த விழா நாளைய தினம். அதாவது... மார்கழி 27ம் நாள். ஜனவரி 11ம் தேதி. நாளைய தினம் வியாழக்கிழமை நன்னாளில், ஆண்டாளைக் கொண்டாடுவோம்.

முன்னதாக, கூடாரைவல்லி வைபவம் நிகழ்ந்த காரணங்களைப் பார்ப்போம்.

'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ எனும் பாசுரம், மார்கழி மாதம் 27ம் நாள் அனுசந்தனம் செய்யப்படுகிறது. அதாவது இந்தப் பாடலைப் பாடி, திருமாலை வழிபடுவார்கள் பக்தர்கள். அதாவது நாளைய தினமான, ஜனவரி 11ம் தேதி.

ஆண்டாள்... எவ்வளவு சிறந்த பக்தை; எத்தனை நேர்த்தியாக தமிழ்மொழியை ஆட்சி செய்திருக்கிறாள் பாருங்கள்.
முதல் ஐந்து பாடல்களில், நோன்பு நோற்பதன் மாண்பைக் கூறுகிறாள் . அடுத்து, ஆறு முதல் பதினைந்தாம் பாடல் வரை கண்ணனது லீலாவினோதங்களை விவரிக்கிறாள். அறியாமையில் மூழ்கி, உறங்கிக் கொண்டிருக்கும் ஆயர்குலப் பெண்களை உறக்கத்தில் இருந்து விழித்தெழப் பாடுகிறாள். இறைவனின் அனுபவங்களைப் பெறாமல் அறியாமையில் தவழும் மானிடர்களை விழித்தெழக் கூறுவதாக அமைந்துள்ளன இந்தப் பாடல்கள்!
.................................
.................................

எனவே இந்த நாளில், நாளைய தினத்தில், அனைவரும் இல்லங்களிலும் அருகில் உள்ள கோயில்களிலும் பால்சோறு எனப்படுகிற அக்கார அடிசில் செய்து, பகவானுக்கு நைவேத்தியமாகப் படைத்து, அக்கம்பக்கத்தார் அனைவரையும் அழைத்து பகிர்ந்து வழங்குங்கள். பெண்கள் புத்தாடை அணிந்து கொள்வதும் அணிகலன்கள் அணிந்து கொள்வதும் சுபிட்சத்தைக் கொடுக்கும். ஆண்டாளின் மன விருப்பத்தை நாராயணன் நிறைவேற்றித் தந்தருளியது போல், நம் விருப்பங்களை அந்த ஆண்டாளே நிறைவேற்றி அருள்வாள்.

முடிந்தால், ஆண்டாளுக்கு அழகாய் ஒரு புடவை எடுத்து சார்த்துங்கள். ரோஜாவும் சாமந்தியும் முல்லையும் தாமரையும் என மலர்கள் சூட்டுங்கள். மகிழ்ந்து போவாள் ஆண்டாள்.

’மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடியிருந்து குளிர்ந்தேரொ லெம்பாவாய்; எனும் பதத்தின் மூலம், ஆண்டாள் உலக ஒற்றுமையை சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கிறாள். அதாவது இறைவன் முன்னே அனைவரும் சமம் எனும் உணர்வை வலியுறுத்தியவள். நமக்கெல்லாம் வழிகாட்டி!

அதன் பொருட்டே, வைணவத் தலங்களில் சமதர்ம சமுதாயம் எனும் அடிப்படையில், காலை மாலை வேளைகளில், ஆண்டாளின் பாசுரமும் திவ்விய பிரபந்தப் பாசுரங்களும் பாடப்படுகின்றன. பிறகு பக்தர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடியிருந்து (இதை கோஷ்டி விநியோகம் என்பர்) பிரசாதங்களை விநியோகம் செய்யும் மரபு உண்டாயிற்று. அந்த சமயத்தில் உயர்ந்தவர், தாழ்ந்தவர், அறிவுடையார், அறிவிலார், ஆண், பெண், குழந்தைகள், முதியவர்கள் என எந்த வேறுபாடும் இல்லாமல், அனைவரும் ஒன்றாகப் பாடி பகவானுக்கு அமுது செய்த பிரசாதங்களை உண்டு மகிழும் வழக்கம், நாம் பெற்றது ஆண்டாளால்தான் என்கிறார் மதுரை அம்பி பட்டாச்சார்யர்.

திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே!
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயர் அரங்கற்கேகண்ணி உகந்தளித்தாள் வாழியே!


Read more at: http://tamil.thehindu.com/society/spirituality/article22411092.ece
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top