• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருப்பாவை (Thiruppavai Paasurams and Explanations)

Status
Not open for further replies.

praveen

Life is a dream
Staff member
திருப்பாவை (Thiruppavai Paasurams and Explanations)

பாடல் 1


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!


சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்


ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்


நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்


பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.


விளக்கம்: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.
 
திருப்பாவை பாடல் -2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி,
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடிமையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டிஉய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.


பொருள்: அன்புத்தோழியரே! அந்த பரந்தா மனையே நம் துணைவனாக அடைய வழி செய்யும் பாவைநோன்பு விரத முறையைக் கேளுங்கள். உணவில் நெய் சேர்க்கவோ, பால் அருந்தவோ கூடாது. சூரிய உதயத்துக்கு முன்பே நீராட வேண்டும். கண்ணில் மை இடக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது தீய செயல்களை மனதால் நினைப்பதையும், தீய சொற்களை பேசுவதையும் தவிர்க்க வேண்டும். பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. ஏழைகளுக்கும், பக்தர்களுக்கும் போதுமான அளவு தர்மம் செய்ய வேண்டும். இந்தப் பாடல் 107 வது திருப்பதியான திருப்பாற்கடல் குறித்து பாடப்படுகிறது.
 
ஹேவிளம்பி ஆண்டு மார்கழி மாதம் 3 தேதி
ஆண்டாள் நாச்சியார் அருளிய
திருப்பாவை பாடல் 3


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.


பொருள்: சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்.


மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை பாடல் 3


முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்


அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்


பொருள்: முத்துப்பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே! கடந்த ஆண்டுகளில், நாங்கள் வந்து எழுப்பும் முன்னதாக நீயே தயாராக இருப்பாய். சிவனே என் தலைவன் என்றும், இன்ப வடிவினன் என்றும், இனிமையானவன் என்றும் தித்திக்க தித்திக்க அவன் புகழ் பேசுவாய். ஆனால், இப்போது இவ்வளவு நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய். கதவைத் திற, என்கிறார்கள்.தூங்கிக் கொண்டிருந்த தோழி, ""ஏதோ தெரியாத்தனமாக தூங்கி விட்டேன். அதற்காக, என்னிடம் கடுமையாகப் பேச வேண்டுமா? இறைவனின் மேல் பற்றுடைய பழமையான அடியவர்கள் நீங்கள். உங்களைப் போல் எனக்கு இந்த விரதமிருந்ததில் அனுபவமில்லை. மேலும், பக்திக்கு நான் புதியவள். என் தவறைப் பெரிதுபடுத்துகிறீர்களே! என வருந்திச் சொல்கிறாள்.வந்த தோழியர் அவளிடம், ""அப்படியில்லையடி! இறைவன் மீது நீ வைத்துள்ளது தூய்மையான அன்பென்பதும், தூய்மையான மனம் படைத்தவர்களாலேயே சிவபெருமானை பாட முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும். நீ சீக்கிரம் எழ வேண்டும் என்பதாலேயே அவசரப்படுத்துகிறோம், என்றனர்.
 
ஆழி மழைக் கண்ணா ஓன்று நீ கை கரவேல்
ஆழியில் புக்கு, முகந்து, கொடு, ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து
பாழி அம் தோளுடை பத்ம நாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


(எளிமையாய் படிப்பதற்காக, பிரித்து எழுதப் பட்டது)


மழையுடைய சிறப்பை, மாலனுடைய சிறப்பாய் விளக்கும் உன்னதப் பதிகம்.


'ஆழி மழைக் கண்ணா': மழைக்குக் கடல் (ஆழி) தான் தாய். கடலில்லையேல் மேகமோ, மழையோ இல்லை. நிலத்துக்கு ஆதாரமே கடல் தான். உலகம் முழுதுமே கடல் சூழ்ந்திருப்பது தான் பிரளயம். ஆதியும் அந்தமும் ஆனது பிரளயம்.


நிலம், கடலில் ஒரு சிறு திரட்டு தான். மழையில்லையேல் வளம் இல்லை. வளம் இல்லையேல் வாழ்வே இல்லை. ' ஆழி சூழ் உலகமெல்லாம் பாரதனே ஆள நீ போய்' என்று கைகேயி ராமனிடம் பேசிய வாசகமாய் கம்பன் சொல்லுவான்.


நோன்பிருக்கும் கோபியர் சிறுமிகள் வேண்டுவது 'பர்ஜன்யன்' என்னும் மழைத் தேவனைக் குறித்து. ஆனாலும் கண்ணன் என்ற பெயரை அல்லாது வேறு எந்த தேவதையையும் வரிக்கத் தெரியாததால், பர்ஜன்யனின் மழை கொடுக்கும் செயலைக் கூட கண்ணனின் பெயரோடு சேர்த்து விளிக்கிறார்கள்.


கண்ணனும் கடல் போன்று கருத்தவன். நம் எல்லோர் மேலும் கருணை மழை பெய்ய ஓங்கி உலகளந்த கார் மேகம் போன்றவன். க்ரியை என்பதை ப்ரம்மனிடமும், சம்ஹரிப்பதை ருத்ரனிடமும், பிரித்துக் கொடுத்து, பரப்ரஹ்மமான விஷ்ணு,


ஜீவாத்மாக்கள் மற்றும் அசேதனங்களின் ரக்ஷணை என்னும் செயலை மட்டும் தன்னிடம் வைத்துக்கொண்டு 'சமுத்திர இவ கம்பீர்யை' என்னும் வகையில் 'ஜகத்தை ஈரக்கையால் தடவி நோக்கவல்லானாக' , கம்பீரனாய் இருக்கிறான்.


'ஓன்று நீ கைகரவேல்': நல்லவர் தீமைகள் எனப் பகுத்துப் பார்க்காமல் எல்லோருக்கும் தேவையான மழையைக் குறையாமல் பெய்திடுவாய்.


'பாபா நாம்வா சுபாம் நாம்வா' என்று நல்ல குணவதிகளையோ, ராக்ஷசிகளையோ, வேறு படுத்தாமல், எங்கள் கோஷ்டியில் நாங்கள் இணைத்துக் கொல்வதைப்போல, எல்லோரையும் சமமாகப் பாவித்து மழை கொடுப்பாய் என்று வேண்டல்.


'கை' என்பது, தானம், கொடுப்பது என்பதற்குக் குறியீடாக சொல்லப் படுவது, எப்படி 'அவனுக்கு ரொம்ப பெரிய தாராளமான கை' என்று கொடை வள்ளல்களைச் சொல்லுமாப்போலே.


'ஆழியில் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி ' - உபயோகங்கள் இல்லாத, பள்ளங்களிலோ, சாக்கடையிலோ ஒதுங்காமல், திரும்பத் திரும்ப சுழற்சிக்கு ஏதுவாக, பெய்யும் மழை நீர், நிலத்தினுள் உபயோகமான பின் கடலில் மட்டும் தான் புக வேணும்.கடல் மணலில், நீர் கூடத் தெரியாத வண்ணம் எல்லா நீரையும் மேகமானது க்ரஹித்துக் கொண்டு, அடிமண் அடியோடே தட்டப் பருகி, ஆர்த்து - ஆரவார மின்னலும் முழங்க லுமான மழையோடு வர வேண்டும்.


'ஓம் மேகேஸ்வன க்ருஷ்ண:' - எப்படி கிருஷ்ணன் கர்ஜனையோடு சொன்ன போதனைகளை நாங்கள் கிரஹிக்கிறோமோ, அவ்வண்ணம் மறைந்து கொண்டே நம் கார்யங்களை நடத்தி அருளும் ஈஸ்வரனைப் போல அல்லாமல், சப்தத்தோடும் முழக்கத்தோடும் ஊரார் அறியும் வண்ணம் மழை பெய்ய வேண்டும்.


மழையால் ஏற்படும் உயரிய பலன்களையும் மீறி, மழைத் தூறல் ஆரம்பித்தவுடனேயே மனத்தில் மகிழ்ச்சி வருவதால், பெரும் சத்தத்தோடும் ஆரவாரத்தோடும் வந்து பெய்து எல்லோர் மனங்களையும் இன்பத்தால் நிரப்பிட, நோன்பிருக்கும் ஆயர் சிறுமிகள் வேண்டுகிறார்கள்.


'ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து ' - சகல பதார்த்தங்களையும் உண்டாக்க வேணும் என்று நினைக்கையில் சர்வேஸ்வரனின் உடல் உருவம் கருத்திருக்கும். உன்னுடைய திருமேனியும் அப்படியே இருக்க வேணும் என்று நோன்பிருக்கும் சிறுமிகள் வரிக்கிறார்கள்.


குடும்பத்துக்காக இராப்பகல், வெய்யிலிலும் மழையிலும் அலைந்து உழைக்கும் குடும்பத் தலைவனின் மேனி கருத்திருக்கும். அடுப்படியில் பல சுவை உணவாக்கும் அன்னையின், பரிஸாராகரின் உடலும் கருத்துத் தானிருக்கும்.


'பாழி அம் தோள் உடைய ' - அழகிய வலிமையான, (இடப் புறத்துத்) தோள்கள் கொண்ட


'பற்பநாபன் கையில்' - பிள்ளைகளை தொட்டிலிலே வளர்த்திப், புற்பாயிட்டுப் பூரித்து ஆயுதம் கொண்டு நோக்கியிருக்கும் தந்தையை/ காவலர்களை போலே, சிருஷ்டிக்குக் காரணமான ப்ரஹ்மனை கமலத்திலே ஆசனம் கொடுத்து அமர்த்தி, கையால் தாங்கிக் கிடக்கும் பத்மநாபன். 'அங்கைத் தலத்திடை ஆழி கொண்டான்' என்ற பெருமை மாலனுக்கு உண்டு.


'ஆழி போல் மின்னி' - ப்ரம்மன் பத்மநாபனின் திரு மகன். திரு வாழி ஆழ்வான் - பிரதம தளபதி. எந்தத் தந்தையும் (பத்மநாபன் போல) தன் பிள்ளைக்குச் செய்யும் கடமைகளை வெளியில் பிரகடனப் படுத்திக் கொள்வதில்லை. திருவாழியாழ்வன், உண்மையான ஊழியனுக்கு ஒப்பானவன். எப்படி ஊழியன் தன் சேவைகளை வெளியில் பிரகடனப்படுத்தி மகிழ்வானோ , அவ்வண்ணம் ஜகத்தைக் காப்பதை மின்னி ஒளிர் ந்துத் தெரிவிக்கிறான்.


'வலம்புரி போல் நின்றதிர்ந்து' - மகா பாரதப் போரிலே எப்படி பாஞ்சஜன்ய த்வனி அதிர்ந்து ஒலித்ததோ அது போல பெரும் சத்தத்துடன் மழையின் சப்தம் ஒலிக்கட்டும்.


'சுடராழியும் பல்லாண்டு', 'அப்பாஞ்சஜன்யமும் பல்லாண்டு' என்னும் வகையில் இரண்டும் தொடர்ந்து தம் திருச் செயலாற்றுமாப் போல. சங்கின் ஒலியானது, பிரணவத்தின் அர்த்தத்தை இடை விடாமல் திருவாய் மொழி முகத்தாலே அருளிச் செய்வது என்ற ஈடும் உண்டு.


'தாழாதே சார்ங்கமுறைத்த சர மழைபோல்' - பிரணவ மந்திரத்தில், பரமாத்மா ஜீவாத்மாக்களின், பகவானின் அருளால் ஏற்பட்ட சம்பந்த்தததை லௌகீகர்களும் அறியும் வண்ணம் தொடர்ந்து உரைத்தலைக் குறிக்கும்.


'வாழ உலகினில் பெய்திடாய்' - உலகம் உய்த்திட பெய்வாய் மழையே


'நாங்களும் மகிழ்ந்து நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்' ஆரோக்கியமாக நனைந்து, நோன்பிற்காகக் குளித்து, பராமனோடு எங் கள் உறவினை பெருக்கிக் கொள்ள அருள்வாய் மழையே
 
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்


பொருள்: வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.
 
திருப்பாவை பாடல் - 6


புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்


பொருள்: அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் "ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.
 
திருப்பாவை பாடல் - 7


கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.


பொருள்: அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை? எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக்கதவைத் திற.
 
திருப்பாவை பாசுரம் -9-
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்


தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபங்கமழத்துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்;
மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.


பொருள்:


பிரகாசமான நவரத்தினங் களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய, நறுமணதிரவியம் மணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு. உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்! அவள் பதிலே சொல்லவில்லையே! அவள் ஊமையா? செவிடா? சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா? உடனே எழு. எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன், மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்.


விளக்கம்:
உலக மக்கள் மாடமாளிகை, பஞ்சு மெத்தை என சொகுசு வாழ்க்கையில் சிக்கி சோம்பலில் கட்டுண்டு கிடக்கின்றனர். இதில் இருந்து அவர்களை மீட்டு பகவானின் இருப்பிடமான வைகுண்டமே நிலையானது என்பதை அறிவுறுத்த வேண்டும். அந்த வைகுண்டத்தை அடைய பகவானின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும்.


Andal Nachiyar Thiruvadigale Saranam


Tiruppavai Pasuram 9


Thoomani maadathu sutrum vilakkeriya
Dhoopam kamazha thuyil anai mel kann valarum
Maamaan magale! mani-k-kadavam thaalthiravaai!
Maameer! Avalai ezhuppeero! Un magal thaan
Oomayo? anri-ch-chevido? ananthalo?
Ema-p-perum thuyil manthira-p-pattalo?
Maa maayan, Maadhavan, Vaikuntan, enrenru
Naamam palavum navinru-el or empaavaai


Oh my uncle’s daughter, who sleeps,
In the soft cotton bed,
In the pearl filled Villa,
Well lit from all sides,
And full of the smoke of incense,
Please open the ornamental door.
Oh aunt, why don’t you wake her up,
Is your daughter dumb or deaf, Or down right lazy,
Or she is in trance of deep pleasurable sleep,
Let us all call him the great enchanter,
Madhavan and he who lives in Vaikunta,
By several of His names,
And get benefited,
 
திருப்பாவை பாசுரம் -10-
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலா ரெம்பாவாய்.


பொருள்:


முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக் கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா.


விளக்கம்:
யாராவது நன்றாகத் தூங்கினால் “சரியான கும்பகர்ணன் என்று சொல்வோம். இது ஆண்டாள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன “ஜோக் என்பதை இந்தப் பாடல் தெளிவுபடுத்துகிறது. நகைச்சுவை உணர்வு ஆயுளை அதிகரிக்கும். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். ஆண்டாள் நமக்கு திருப்பாவையின் மூலம் ஆயுள்விருத்தியைத் தந்திருக்கிறாள்.


Andal Nachiyar Thiruvadigale Saranam
Tiruppavai Pasuram -10


10. Notru suvargam
Notru Suvargam puguginra ammanai!
Maatramum thaaraaro vaasal thiravaadaar
Naatrathuzhaai mudi Naraayana: nammaal
Potra-p-parai tharum punniyanal pandorunaal
Kootrathin Vaai veezhnda Kumbakarananum
Thotrum unakke perum thuyilthan thandhaano
Aatra ananthal udayaai! arumkalame
Thetramaai vandhu thira-el or empaavaai
 
திருப்பாவை பாசுரம் -11-
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்


கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின் முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்


பொருள்:


கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே! புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே! நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே! இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே! அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?
விளக்கம்:
நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. தோழியோ எழுந்து வந்தபாடில்லை! நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? அவளை விட்டுவிட்டு, நீராடச் சென்றிருப்போம். ஆனால், பக்திநெறிக்கு இது அழகல்ல. பிறரை விட்டுவிட்டு, தான் மட்டும் இறைவனை அடைய முயன்றால் அது நடக்காத ஒன்று. எல்லோருமாய் இறைவனை நாட வேண்டும், அவன் புகழ் பேச வேண்டும். அப்போது தான் அவனருள் கிடைக்கும். இதனால் தான் கூட்டுப்பிரார்த்தனைக்கு மகத்துவம் அதிகமாக இருக்கிறது.


Andal Nachiyar Thiruvadigale Saranam
Tiruppavai Pasuram -11


kaRRuk kaRavaik kaNangkaL pala kaRandhu
seRRAr thiRal azhiyach senRu seruch seyyum
kuRRam onRillAdha kOvalar tham poRkodiyE!
puRRaravalgul punamayilE pOdharAy! suRRaththuth
thOzhimAr ellArum vandhu nin
muRRam pugundhu mugil vaNNan pEr pAda
siRRAdhE pEsAdhE selvap peNdAtti! nI
eRRukku uRangkum poruLElOr empAvAy


Oh daughter of the cattle baron,
Who milks herds of cows,
And wages war on enemies
And makes his enemies loose their strength,
Oh Golden tendril, Oh lass who has the mount of venus,
Like the hood of the snake, Wake up and come,
When your flock of friends,
Have come to your courtyard, And sing of Krishna,
Who has the colour of the cloud, Oh rich, rich lady,
How can you neither move nor talk, And lie in deep trance,
 
கனைத்து இளம் கற்று எருமை கன்றுக்கு, இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும், நற் செல்வன் தங்காய்
பனித் தலை வீழ உன் வாசல் கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடேலோர் எம்பாவாய்
இனித் தான் எழுந்திராய், ஈதென்னப் பேருறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்


12 - ம் பாட்டில், இளையாழ்வானைப் போலவே, விடாது கண்ணனோடே இருக்கும் ஒருவனுடைய தங்கை, பெரிய பக்தி குறிக்கோள் இல்லாதவளை, தோழிமார்கள் துயில் எழுப்புவதாய் குறிப்பு. அண்ணன் எந்த ஒரு காரணத்தையோ, பலனுக்காகவும் பரமனைப் பற்றியவன் அல்லன்.


கண்ணனை அடையும் வழி முறைகள் 'உபாயங்கள்' எனப்படும். அவனுடைய திருவடி சரணம் அடைதல் 'உபே யம்' ஆகும். எந்த ஒரு உபாயத்தையும் கொள்ளாமல் அவனோடே மனத்தினால் கலந்திருப்பதே உபேயம்.


'கனைத்திளம் கற்றெருமைக் கன்றுக்கு இரங்கி ' - இளமையினால் மடிகளில் பால் கனத்து, கன்றுகளைப் பற்றிய எண்ணம் வந்தவுடனேயே, எருமை இனங்கள். எங்கே திரிந்து கிடக்கிறதோ, எப்போது அவை வந்து பால் குடித்திடுமோ என்ற ஏக்கத்தினால் கனைத்திருக்குமாம்.


'சொரணை இல்லையா! நீ என்ன எருமை மாடா' என்று பிறரை நாம் ஏசுகிறோம். எந்த ஜீவனிலுமே தாய்மைக்கு உள்ள அன்பிலும் கரிசனத்திலும் என்றும் பாகுபாடு கிடையாது.


துக்கம் தொண்டையை அடைக்கும் போது நம்மையும் அறியாமல் நமக்கும் கனைப்பு ஏற்படும். யாருமே வந்து கறக்காமல் போனாலும் கூட, கன்று குடிப்பதாக எண்ணிக் கொண்டு தனக்குத்தானே திருக் காம்புகளின் வழியாக பாலினை வெளியில் பெய்து கிடக்குமாம்.


'நனைத்தில்லம் சேறாக்கும்'


கறக்கும் கோபர்கள் வாராததனாலும், தானே வெளி வரும் பால், பாத்திரங்களில் பிடிக்கப் பெறாமையாலும், கொட்டில்களில், தரையில் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து வீட்டிற்குள்ளும் புகுந்து, முழு வீட்டின் தரையையே, வெள்ளைச் சேறாக்கி விடுமாம்.


இந்த அமுத வரிகளின் உட்பொருள். கண்ணனை எண்ணி நமக்குள் பெருகிடும் பக்தி பிரவாகம், கண்ணனால் அறியப் பெறாமையால், பெருக்கெடுத்து ஓடி, நம் இல்லம் முழுவதுமே நனைத்துக் கிடக்குமாம்.


மேகங்கள் ஆழியுள் (கடலில்) புகுந்து நீரையெல்லாம் அருந்தி மேற்சென்று மழை கொடுக்குமாம். ஆனால் திருமலையில் பரவி கிடக்கும் நீரூற்றுக்களிலோ தானே ஊற்றெடுத்துப் பெருகி நிறைந்திருக்கும்.


நல்ல பக்தர்கள் மற்றும் ஞானிகள் தங்களுடைய ஆற்றாமையாலே, அவர்களே கேட்காமல் போனாலும் எல்லோருக்கும் ஞான உபதேசங்களை வழங்கிக் கிடப்பார்கள். அர்ஜுனன், வேண்டிக் கேட்காத போதிலும், போர்க்களத்தினில் 'பூய ஏவ மகா பாஹோச் ச்ருணுமே பரம் வச:', தானே வலிந்து, அவனுக்கு நற்போ தனைகளை, கண்ணன் அருளியதைப் போலே


'நற்செல்வன் தங்காய்' இளையாழ்வான் போன்று கண்ணனை விடாதுத் தொடர்ந்து கிடக்கும் தமையனைக் கொண்டவளே!. எழுந்திராய் என்று எழுப்பப் படுகிறாள். அவன் உறவால் மட்டும் அல்லாது குணத்தாலும் அண்ணனானாவன் என்ற குறிப்பு.


'லக்ஷ்மணோ லக்ஷ்மி சம்பன்ன' - லக்ஷ்மணனுடைய சுயப் பலனற்ற ராம கைங்கர்யம் தான் உயரிய செல்வம். அந்தச் செல்வத்தை அளவிலதாய், கிருஷ்ண கைங்கர்யத்தினால் நிரந்தரமாகக் கொண்டவன், உறங்கி இருப்பவளின் அண்ணன்


தோழிகள் உறங்கியவளிடம் சொல்கிறார்கள். உன் அண்ணனை விடக் கூட, எம் போன்ற பக்தர்களிடம் இன்னும் கரிசனையோடு இருக்க வேண்டாமோ நீ. விபீஷண ஆழ்வானை விடவும், அவனுடைய தங்கை 'திரிஜடை' ஸீதா பிராட்டிக்கு நெருக்கமானவளாய் இருந்தது போலே.


'பனித் தலை வீழ நின் வாசல் கடை பற்றி' - மேலிருந்து பனி மழை பொழிந்து கிடக்கிறது, காலடியில் பால் வெள்ளம் சேறாகிப் பெருகிக் கிடக்கிறது. இடைப்பட்ட தோழியர்கள் மனத்தில் பக்தி வெள்ளம் ப்ரவாஹித்து பரவி கிடக்கிறது.


வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்கள் எப்படி ஒரு படகைப் பிடித்துக் கொண்டிருப்பார்களோ, அது போலே உறங்குபவளின் வீட்டின் புழக்கடை உத்திரத்தைப் பற்றிக் கொண்டு நின்றிடும் தோழிகளாம்.


'சினத்தினால்' - இரு சாராரின் சினத்தைக் குறிக்கும் சொல். முதலாவது, கிருஷ்ணனால் மனது பேதலிக்கப் பட்டு, அவன் சம்பந்தம் கிடைக்கப் பெறாமல் கோபம் கொண்ட கோபியர்கள், மற்றும், இராவணன், வருந்தித் திருந்திடுவான் என்று ராமபிரான் காத்திருந்தும் மாறிடாதவனை , வலியச் சென்று போர் ஆற்றிட வேண்டுமே, என்று எண்ணிய தயாளுவான ராமனின் 'சினம்'.


பெண்கள் மனத்தை அலைக்கழிப்பவனான கண்ணன் பற்றிப் பேசும் போது, பெண்களின் நலனையே பெரிதாய்க் கொண்ட ராமபிரானை பிரஸ்தாபிக்கிறார்கள்.


கூனியின் முதுகுக் கோணலைப் பந்தடித்துச் சரி செய்து, கைகேயியின் சொல்லுக்குப் பணிந்து, சபரிக்கு மோக்ஷம் கொடுத்து, அகலிகையின் சாபம் தீர்த்து, உள்ள நாள் முழுதும் சீதை ஒருவள் மட்டுமே மனைவியாக கொண்ட ஏக பத்தினி விரதனின் பெருமையைப் பேசுகிறார்கள் தோழி மார்கள்.


'தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியானைப் பாடேலோர் எம்பாவாய்'


கண்ணனை நினைத்த மாத்திரத்திலே கோபியர்களுக்கு அளவற்ற அன்பினாலும், மனோ நெருக்கத்தாலும் கோபம் பொங்கிடும், தங்களை விரைவில் வந்தடைய வில்லையே என்பதால். 'கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்' என்னும் வகையில் அவன் நாமத்தை யார் பாடக் கேட்டும் விரக வயப்பட்ட கோபியர்க்குக் கோபம் கொப்புளிக்குமாம்.


ராமனுடைய பராக்கிரமங்களால், எண்ணிய மாத்திரத்திலேயே யாருக்கும் மனதினில் தேன் ஊறி இனிமை கொடுக்கும்.

தண்ணீரைப் போன்று தயையும் கருணையும் நாலா பக்கத்திலும் பெருக்கிக் கிடப்பவன் ராமன் .


'ததோ ராமோ மஹா தேஜோ ராவணேன க்ருதவ் ரணம் த்ருஷ்ட்வா
ப்லவஹ சார்த்தூலம் கோபாஸ்வ வசமே யிவான்'


- ராவணனால் அம்புத் தைத்து ரணம் திருவடிகளில் பட்ட போதும், நீரின் மேல் கிளம்பிய நெருப்பினனாய் காட்சி தந்தார். தனக்கு ஏற்பட்ட வலி கூடச் சாதாரணமானவனுக்கு, எந்த ஒழுக்கமும் அற்ற அரக்கன் ராவணனின் அம்பு மழையை எதிர்கொள்ள வேண்டிக் கிடக்கிறதே என்ற காரணத்தினாலேயே சினம் கொண்டார்.


'பாடவும் நீ வாய் திறவாய் இனித்தாய் எழுந்திராய்' - எங்கள் மனோ வியாகூலங்களைக் கேட்ட பின்னும் உறங்குவாயோ. குறைந்தது எங்களோடு பேசவாவது செய்.


'ஈதென்ன பேருறக்கம்' - இது என்ன பெண்ணே, அவ்வளவு ஆழமானத் தூக்கம். சூரியச் சந்திரர்கள் மாற்றங்களை அறிந்தே சம்சாரிகள் தூக்கம் களைந்து விடுவார்கள். எம்பெருமான் பள்ளி எழுச்சிப் பாடிடவும் எழுந்திடுவான், இது என்ன முடிவில்லாத தூக்கம்.


'அனைத்தில்லத்தோரும் அறிந்தேலோரெம்பாவாய்' - நாங்கள் உன்னை உறக்கத்தில் இருந்து எழுப்புவதை ஊரார் எல்லோரும் அறிந்து கொண்டு விட்டார்கள். பகவத் விஷயங்கள் எவ்வளவு ரகசியமாகக் காப்பாற்றி வைத்தாலும், எப்படியோ எல்லாரும் அறிந்து கொள்வார்கள். நான்கு சுவர்களுக்குள் கற்றுக் கொடுக்கிற அஸ்திரப் பிரயோகங்களை, வெளியில் இருந்தே அறிந்து கொண்ட ஏகலைவனைப் போலே.


இந்தப் பாடலின் உட்பொருள், நாம் அழுத்தமானஆணவத் திரையை மனத்துக்குள் கொண்டோமென்றால், ஆழ்ந்த தூக்கத்தினைபோலே, ஞான விழிப்பு ஏற்படவே செய்யாது.
 
திருப்பாவை பாசுரம் -13-
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்

புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.


பொருள்:


பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், பிறன் மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடியே, நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்றாகி விட்டது. கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து விட்டது. வியாழன் மறைந்து விட்டது. பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே! விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும் உடல்நடுங்கும்படி, குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்? அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே! மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா? எனவே, தூக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா.
விளக்கம்:
“கள்ளம் தவிர்ந்து என்கிறாள் ஆண்டாள். தூக்கம் ஒரு திருட்டுத்தனம். பொருளைத் திருடினால் மட்டும் திருட்டல்ல! நேரத்தை வீணடிப்பதும் ஒரு வகையில் திருட்டு தான்! அதிலும், பகவானை நினைக்காத ஒவ்வொரு நிமிடமும் நமக்கு நாமே செய்யும் திருட்டு தான். வயதான பிறகு திருப்பாவையைப் படிக்கலமே என நினைக்கக் கூடாது. அப்போது, வாய் உளற ஆரம்பிக்கும். சில நேரங்களில் பாட முடியாமலே போய்விடும். இந்தப் பாடல் வெளியாகும் பத்திரிகையைப் பிடிக்க முடியாமல் கைகள் நடுங்கும். அப்போது, பகவானை நினைத்து என்ன பயன்? இளமையிலேயே, பகவானின் திருநாமங்களைச் சொல்லி, அவனது திருக்கதையைப் படித்தால் செல்வங்கள் நம்மைத் தேடி வராதோ?


Andal Nachiyar Thiruvadigale Saranam
Tiruppavai Pasuram -13

Pullin vaay keendaanai pollaa arakkanai
Killi kalaindhaanai keerththi mai paadi poy
Pillaigal ellaarum paavai kalambukkaar
Velli ezhundhu viyaazham urangitru
Pullum silambina kaan podhari kanninaay
Kulla kulira kudaindhu neeraadaadhe
Palli kidaththiyo! Paavaay! Nee nan naalaal
Kallam thavirndhu kalandhelor embaavaay.

The lasses have reached,
The place of prayer for Pavai,
Singing the fame of our Lord.
Who killed the ogre who came like a stork.
And who cut off the heads of the bad ogre, One by one.
The venushas risen in the morning,
The Jupiter has vanished from the sky,
The birds are making lot of sound,
Of beautiful one with wide eyes red as a flower.
Without taking bath by dipping
again and again in ice cold water,
Would you prefer to sleep.
Oh lass, On this holy day,
Do not stay aside, And come to bathe with us.
 
திருப்பாவை பாடல் -14


உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.


பொருள்: எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று
கொண்டிருக்கின்றனர்.ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே.
 
திருப்பாவை பாசுரம் -15-
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்


எல்லே. இளம் கிளியே இன்னம் உறங்குதியோ
சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்


பொருள்:


“”ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, “”கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுகிறேன், என்கிறாள்.
உடனே தோழிகள், “”உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர்.அப்போது அவள், “”சரி..சரி…எனக்கு பேசத்தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன், என்கிறாள்.””அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது? என்று கடிந்து கொள்கிறார்கள். அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள். “”என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா? என்கிறாள்.தோழிகள் அவளிடம், “”நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய், என்கிறார்கள்.
விளக்கம்:
ஒரு பாடலை இருதரப்பார் பாடுவது போல், அவர்களின் பெயரைக் குறிப்பிடாமலே இனிமைபட பாடியிருக்கிறாள் ஆண்டாள். பெண்களுக்கு பேசக்கற்றுத்தரவா வேண்டும்! இந்தப் பாடலில் ஒரு பெண்ணை மற்ற பெண்கள் கலாய்க்கும் படியான ஒரு சூழலை நகைச்சுவை ததும்ப பாடியிருக்கிறாள். படிக்கப்படிக்க சர்க்கரைத் துண்டாய் இனிக்கும் பாடல் இது. இந்தப் பாட்டுடன் தோழியை எழுப்பும் படலம் முடிந்து விடுகிறது.


Tiruppavai Pasuram -15-




Elle ilam kiliye innam urangudhiyo
chil enru azhaiyen min nangaiyeer podharuginren
vallai un katturaigal pande un vaay aridhum
valleergal neengale naane thaan aayiduga
ollai nee podhaay unakkenna verudaiyai
ellaarum pondhaaro pondhaar pondhu ennikkol
val aanai konraanai maatraarai maatrazhikka
vallaanai maayanai paadelor embaavaay


“Hey, little bird, Are you still sleeping? ”
“Don’t disturb my sleep , Lasses, I will just come”.
“You are good in your speech, We know what you mean.”
“You be good, but leave me alone”
“Come quickly, why is it different for you?”
“Have every one gone?” “Gone, think they have gone”
“Please wake up and sing,
Of he who killed the big elephant,
Of him who can remove enmity from enemies,
And of him who is the holy enchanter,
 
திருப்பாவை பாசுரம் -16-
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்


நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்


பொருள்:


எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை (சிறு முரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். “அதெல்லாம் முடியாது என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக.


விளக்கம்:


ஒருவர் ஒரு செயலைச் செய்யப் போவதாக தெரிந்த ஒருவரிடம் சொல்கிறார். ஒருவேளை, அது அவருக்கு பிடிக்காமல் இருந்தாலும் கூட, ஆரம்பத்திலேயே, “”இதைச் செய்யாதே, நீ செய்யப் போவது உருப்படவா போகுது போன்ற அபசகுனமான வார்த்தைகளை பேசிவிடக்கூடாது. “அப்படியா? என்று ஆரம்பித்து, செய்யப்போகும் பணியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதன் பின், “இப்படி செய்தால் நன்றாக இருக்குமே என்று சாந்தமாக அறிவுரை சொல்லலாம். சொற்கள் மனித வாழ்வில் மிக முக்கியமானவை என்று ஆண்டாள் இப்பாடல் மூலம் நமக்கு அறிவுறுத்துகிறாள்.


Andal Nachiyar Thiruvadigale Saranam
Tiruppavai Pasuram -16


Naayaganaay ninra nandhagopan udaiya
koyil kaappaane! kodi thonrum thorana
vaayil kaappaane! mani kadhavam thaal thiravaay
aayar sirumiyaromukku arai parai
maayan mani vannan nennale vaay nerndhaan
thooyomaay vandhom thuyil ezha paaduvaan
vaayaal munnam munnam maatraadhe ammaa! nee
neya nilai kadhavam neekkelor embaavaay


Hey, He who guards the palace of Nanda Gopa,
Hey, who guards the ornamental door with flags,
Please be kind to open the door with bells,
For yesterday the enchanter Kannan,
Has promised to give beating drums,
To us the girls from the houses of cow herds.
We have come after purification,
To wake Him up with song,
So do not talk of this and that, Hey dear man,
And open the door with closed latches,
 
திருப்பாவை திவ்ய பிரவாகம் - 19 - பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த மூவாயிர/அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிய ஆறாயிரப் படிகளை அனுசரித்தது.


17 - ம் பாடல்


அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழல் அடி செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்


ஒரே திரளாய் உள்ளே நுழைய, நந்தகோபனின் திரு மாளிகைக் காவலர்கள், கதவுகளின் கரும் தாள்களைத் திறந்து விடுகிறார்கள்.


கண்ணனுடைய அருளைப் பெறுகைக்கு காத்திருக்கும் கோபியர் குழாம், ஏற்கனவே பெற்றனுபவித்துக் கொண்டிருக்கும் நந்தகோபனார் தொடங்கி, வரிசையாக ஒவ்வொருவராய் எழுப்புகிறார்கள். வைணவத்தில் குரு பரம்பரையை சேவித்தல் ஸ்ரேஷ்டமானது. 'முறை தப்பாமே குரு பரம்பரை வழியே பற்றுகை' என்பதாக.


திருவாசல் காப்பாளர்களின் அனுமதி கொண்டு உள்ளே வந்த பெண்கள், உறங்கிக் கிடக்கும் கிருஷ்ணனையே நோக்கிப் பார்த்துக் கிடக்கும் நந்தகோபரை, பெருமாளாகப் பாவித்து துயிலெழுப்புகிறார்கள்.


'ஸாஷான் மன்மத மன்மத:' என்ற மன்மதனான கண்ணனைக் கண்டால் விடார்கள் கோபியர்கள், என்பதனால் அவனையே பார்த்துக் கிடக்கும் நந்தகோபனைச் சென்று பற்றினார்கள்.


இந்தப் பாடல் ப்ராதான்யமாக கண்ணனைப் பெற்ற நந்தகோபனைப் போற்றிடும் விசேஷம். .


'அம்பரமே, தண்ணீரே, சோறே' - வானமே, தண்ணீரே, என்று எல்லையற்றுத் தருகிற வஸ்துக்களோடு, சோறே, வஸ்திரங்களே என்ற என்றுமே நமக்குத் தேவைப்படும் நித்ய அத்யாவசியங்கள், கொடுத்தருளும், எங்கள் பெருமானே என்று நந்தகோபனைத் துதிக்கிறார்கள்.


கிருஷ்ணனைப் பெற்றுத் தருகிற ஸ்வாமித்வத்தால் நந்தகோபர் எம்பெருமான் ஆனார். இந்த உடம்பின் அத்யாவசியங்களான வானமும், தண்ணீரும், சோறும், வஸ்திரங்களையும் தருவதில் தயக்கம் இல்லாத தயாளனே, எங்கள் மனத்துக்கு ஆதாரமான கண்ணனை நாங்கள் கண்டருள தயை செய்யுங்கள்.


'அறம்செய்யும்' - கொடை மற்றுமன்று, கர்த்தவ்யம் என்னும் தர்மத்தையும் விடாத மன்னனே. 'ஏகைக பல லாபாய ஸர்வ லாபாய கேசவ' - உலகத்திலே உள்ள எல்லா லாபங்களுக்குள்ளும் பிரதம லாபமான கண்ணனை எங்களுக்கு அருள வல்ல பெரும் கொடை வள்ளலே.


'நந்த கோபாலா துயிலெழாய்' - உள்ளே நுழைந்த ஆய்ச்சிகள், கிருஷ்ணனுக்குப் பக்கத்தில் உறங்கும் யசோதா பிராட்டியை முதலில் எழுப்பிடாமல், கட்டிலின் வெளிப்புறத்தில் வேலும் கூர்வாளோடும் 'கூர் வேல் கொடுந் தொழிலனான நந்தகோபன்' தன்னை எழுப்பிடுவது எதனால்.


ஆய்ச்சி மார்கள் அறிந்தோ அறியாமலோ 'த்வய நிஷ்டர்கள்' - அதாவது பிராட்டியையும், அவள் மூலமாக எம்பெருமானையும் ஆஸ்ரயித்து நிற்கும் பக்தைகள். யசோதை பிராட்டி வாத்சல்யத்தோடு கண்ணனை ஒரு புறத்திலும், நந்தகோபனை மற்றொரு புறத்திலும் அணைத்துக் கிடக்கிறாள், எப்படி பிராட்டி பரமத்மனை ஒரு புறத்திலும், விபூதி எனப்படும் உலகப் பிரஜைகளை இன்னொரு புறத்திலும் அணைத்துக் கிடப்பதைப் போல


'கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே குல விளக்கே' யசோதா பிராட்டியைப் பற்றிய உரைகள் இவை. வஞ்சிக் கொம்பு போல வளர்ந்து கிடக்கும் ஆயர் குல குமரிப் பெண்களின் உயர்ந்த தலைவியே. கொழுந்தே - கொழுந்தினைப் போன்ற ஆயர் சிறுமியர்கள் வேதனை பட்டால் துயருறும், முகம் மாறிடும் பெரும் பெண்ணரசியே.


அடியேன் சற்றே மாறுபட்டு, கொம்பனார் எனப்படும் கொம்புகள் கொண்ட ஆவினங்களுக்கு உணவு செய்வித்து அவைகளைப் ப்ரீதியோடு பராமரித்திடும் அன்னையே என்று யோசித்ததுண்டு.


'எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்' - நாங்களாகவே மனதினால் சுவீகரித்துக் கொண்டக் கண்ணனைப் பெற்ற எம்பெருமாட்டியே!, அன்னையே!. எம்பெருமான் நந்தகோபன் ஆனதால் யசோதா எம்பெருமாட்டியானாள்.


ஊர் முழுவதும் திரிந்து, அழிவு செய்து, மூலையில் இருப்பனான கண்ணனின் அன்பு ஒன்றையே பெரிதாகக் கொண்டு, ஊரே திரண்டு வந்து அவன் மேல் பழி சொன்னாலும், வெறும் கண்டிப்பாய், 'செய்தாயா' என்று மட்டும் கேட்டு விட்டு, ஒருவிதத்தில் கண்ணனின் குறும்புகளுக்குத் துணை போன யசோதையே, நாங்கள் வந்துக் காத்துக் கிடைப்பதையோ எங்கள் குறைகளையோ அறிய மாட்டாயோ?


'அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உலகளந்த' தேவர்களையும் ஜகத்தையும் தீய சக்திகளிடமிருந்து காத்திட, ஆகாசத்தையே அறுத்துக் கொண்டு வளர்ந்து, உறங்கிடும் குழந்தையை அணைத்துக் கிடக்கும் தாயைப் போலவும், தலையில் எண்ணையை ஊற வைத்துக் குளிர்விப்பதான திருவடிகளை ஜகத்தின் மேல் வைத்து உலகத்தை அளந்த திரு விக்ரமனே.


'உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்' - தேவர்களின் தலைவனே நீ உறங்கியது போதும். ரக்ஷகர்களுக்கு தூக்கம் சரியோ?, 'சதா பஸ்யந்தி', என்னும் வகையில் இமை கொட்டாமல் இறுதி நிலையில் உடல் கிடக்கும், உத்தமர்களின் கண்களுக்கு ஸ்பர்சித்து மூடச் செய்திடும், உத்தமனே. எங்களுக்கு முகம் காட்டாமல் தூங்கி இருந்து, எங்களையும் கண்கள் மூடச் செய்திடாதே. சம்ஸார தூக்கத்தில் ஆழ்த்தி விடாதே.


'செம்பொன் கழலடி செல்வா பலதேவா உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்' - இளைய பெருமாள் கண்ணனுக்கு முன் பிறந்த பலராமனே. அவனுக்கு முன்னாலேயே 'பிள்ளை பிறக்கைக்கு பொற்கால் பொலியப் பிறந்த சீமானே', நீயும் உன் தம்பியும், ஒருவரைப் பிரியாமல் இன்னொருவர் கட்டிக் கொண்டு கிடக்கும் உறக்கத்திலிருந்து எழுந்திருக்க மாட்டீர்களோ?. அவனையும் எழுப்பி நீயும் எழுந்திடுவாய்.
 
திருப்பாவை பாசுரம் -18-
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்


உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


பொருள்:


மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்.


விளக்கம்:
பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராக சுவாமி சன்னதிக்கு போகக்கூடாது. தாயாரை முதலில் சேவிக்க வேண்டும். வீட்டில் கூட அப்படித்தானே! அப்பாவிடம் கோரிக்கை வைத்தால் “எதற்கடா அதெல்லாம் என்று மீசையை முறுக்குவார். அதையே, அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச்சொன்னால், அதே கோரிக்கை பத்தே நிமிடத்தில் நிறைவேறி விடும். இதுபோல் தான் நாராயணனிடம் ஒரு கோரிக்கை வைத்தால்…அந்த மாயன் அவ்வளவு எளிதில் ஏற்கமாட்டான். அதையே தாயாரிடம் சொல்லி வைத்துவிட்டால் அவனால் தப்பவே முடியாது. நரசிம்மரின் கோபத்தைக் கூட அடக்கியவள் அல்லவா அவள்! அதனால், கண்ணனின் மனைவி நப்பின்னையை எழுப்பி, கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.


Andal Nachiyar Thiruvadigale Saranam
Tiruppavai Pasuram -18-




Undhu madha kalitran odaadha thol valiyan
nandhagopan marumagale nappinnaay
kandham kamazhum kuzhali kadai thiravaay
vandhu engum kozhi azhaiththana kaan maadhavi
pandhal mel pal kaal kuyilinangal koovina kaan
pandhu aar virali un maiththunan per paada
chendhaamarai kaiyaal seeraar valai olippa
vandhu thiravaay magizhndhelor embaavaay.


Hey, Who is the fair daughter in law,
Of Nanda gopa, who has several elephants,
And who is a great hero who never ran away from his enemies,
Hey Lady Nappinnai, who has hair surrounded by holy scent,
Please be kind to open the door.
The cocks are everywhere waking us up,
The koels flock on the jasmine Pandals,
And coo so that we all wake up,
Hey Lady who happily plays ball,
To help us sing your Lords fame,
With your hands with tingling bangles,
Please open the door with happiness,
 
திருப்பாவை பாசுரம் -20-


ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்


முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்


பொருள்:


முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.


விளக்கம்:
கண்ணனின் திருக்குணங்களையும், நப்பின்னையின் அழகையும் வர்ணிக்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். கண்ணன் கடவுள். அவள் எல்லோருக்கும் பொதுவானவன், அவன் நப்பின்னைக்கு மட்டும் சொந்தமானவன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் அவனையும் கேட்கிறார்கள். உக்கமும் தட்டொளியும் ஆகிய விசிறியையும், கண்ணாடியையும் ஏன் கேட்கிறார்கள். விசிறினால் காற்று வரும். வீசுபவனுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ளவனுக்கும் சேர்த்து! நம் செயல்பாடுகள் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயன் தருவதாக அமைய வேண்டும் என்பது இதன் உட்கருத்து. கண்ணாடி உருவத்தைக் காட்டும். ஆனால், உருவத்தில் ஒட்டியுள்ள அழகையோ, அழுக்கையோ தன்னில் ஒட்டிக்கொள்ளாது. வாழ்க்கை என்றால் பட்டும் படாமலும், இந்த உடல் ஒரு வாடகை வீடு, இதை எந்த நேரமும் காலி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும் இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. ஆண்டாளின் கவித்திறமையில் ஒளிந்துள்ள மறைபொருளுக்கு ஈடேது!


Andal Nachiyar Thiruvadigale Saranam

Tiruppavai Pasuram 20


Muppaththu moovar amararkku mun senru
Kappam thavirkkum kaliye thuyil ezhaay
Seppam udaiyaay thiral udaiyaay setraarkku
Veppam kodukkum vimalaa thuyil ezhaay
Seppenna men mulai chevvaay chiru marungul
Nappinnai nangaay thiruve thuyil ezhaay
Ukkamum thattoliyum thandhu un manaalanai
Ippodhe emmai neeraattelor embaavaay


Please wake up Oh, Lord,
Who removed sorrow and fear,
From the thirty three sections of Devas,
Even before they approached you,
Oh Lord, Who is glittering like gold,
Oh Lord, who has inimitable valour, Please wake up,
Oh Lady Nappinnai, Who has desirable busts like golden pots.
Who has little red mouth,
And who has thin narrow hips,
Please wake up, Oh Goddess of wealth.
Please give mirror and fan,
Just now to your consort,
And allow us to take bath,
 
ஏற்றக் கலங்கள் எதிர் கொண்டு மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமாப் போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்


புருஷாகார பூதை (கண்ணனையும் ஜகத்திலுள்ள வஸ்துக்களையும் இணைக்கக் கூடிய பாலமானவள்) நப்பின்னை, கோபியர்கள் மனக் கிடையை உணர்ந்து அவர்களோடு சேர்ந்து கண்ணனைத் துயிலெழுப்பி, அர்த்திக்கக் கடவோம் என்று கூறுகிறாள்.


கிருஷ்ணனுடைய அம்புகளுக்கு இலக்கானவர்கள். எப்படி அவன் காலடிகளில் விழுகிறார்களோ, அது போன்று அவனுடைய குண ஸ்வரூபத்துக்கு அடிமையாகி நாமும் அவன் காலடிகளில் சரணம் புகுவோம் என்று நப்பின்னை உட்பட்ட கோபியர் கூட்டம் முனைகிறார்கள்.


'ஏற்றக் கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப' - நிரப்புவதற்க்காக வைக்கப்படும் பாத்திரங்களிலே, எதிர்த்துப் பொங்கி வெளியில் ததும்பிடும் (பால்). பாத்திரம் எதுவானாலும் பால் சொரியும் பேதம் பசுக்களுக்கு இல்லை. பாத்திரம் நிரம்பி வழிவது பசுக்களின் குற்றமா?.


கண்ணனைப் போன்றே அவன் ஸ்பரிசத்தால் நெகிழ்ந்து வளர்ந்த பசுக்கள், அர்த்திக்க வரும் பக்தனுக்குள் பேதம் கொள்ளாமல் அருளை வாரி இறைத்திடும், அவனைப் போலவே, பாத்திரங்களுக்குள் பேதமில்லாமல் பாலை நிரப்பி வழியச் செய்திடுமாம். நந்தகோபனுடைய, வீரமும், தருமமும், புஜ பலமும் அவன் நாட்டின் பசுக்களிலும் நிறைந்து கிடக்கிறதென்பதும் குறிப்பு.


'மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்' - கலம் (பாத்திரம்) அடியில் வைக்காமல் போனாலும் மடி தணியாமல் இருப்பதனால் பால் சொரிகின்ற பசுக்கள். பெண்களுக்கும் பேதைகளுக்கும் கூட பயமில்லாது அணை த்துக் கொள்ளும் வண்ணம் அமைந்த சௌஜன்யமான வள்ளல்கள் போன்ற பெருமை மிகுந்த பசுக்கள்.


'வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் என் வள்ளல்' - 'எத்தைத் தா என்று கேட்டாலும் தந்திடும் குற்றமற்ற எங்கள் கண்ணன்', என்னுமாப் போலே.


'ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்' - ஆற்றல் மிகுந்த கிருஷ்ணனுடையது போன்ற தன்மைகள் கொண்ட நந்தகோபனின் மகன் என்ற கூற்று. மகனால் தந்தைக்கும், தந்தையால் மகற்கும் பெருமை.


'ஸமஸ்த கல்யாண குணாம்ருதோ அதி', 'அகில ஹேய ப்ரத்யநீக', 'அபரிமித குண கணவ் கமகர்ணவ்' என்பவை கிருஷ்ணனின்ஆற்றல்களின் எல்லைகள்.


சுயமாகவே பல செல்வங்களுக்குச் சொந்தமான நந்தகோபருக்கு, கண்ணன் பிறந்ததால் அவனே ஈடில்லாச் செல்வமாகி, இன்னும் பெருகியதாம்.


நீ எத்தனைச் செல்வானானாலும், அந்தச் செருக்கினால், எங்களை மறந்திடாமல் நினைவு கொள்வாய். எல்லாம் அறிந்து, உணர்ந்தவனையே 'அறிவுறாய்' என்று சொல்லும் படியாலே, அவனுக்குப் பிடித்தவர்களை மட்டும் பற்றிக் கொண்டு, மற்றவரை அவன் விட்டு விடக் கூடாதென்பது ஆயர் சிறுமியர்கள் கோரிக்கை.


'ஊற்றமுடையாய் பெரியாய்' -வேதங்களால் பலமுறை பல்லோர்களால் அர்ச்சிக்கப் பெற்று வன்மை பெருகியவன். 'நாராயண பரோ வேத:', 'வேத முதல்வன்', 'நான் மறைகள் தேடியோடும் செல்வன்', என்கிற வேதங்களின் உற்பத்திக்கு வித்தானவன்.


'உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே' வேறு பாடற்று யாரும் காணும் வண்ணம் நினைப்பவர்க்கு, அர்ச்சிப்பவருக்கு, நிந்திப்பவருக்குக் கூடத் தோற்றம் அளிக்கும் எளிதான சுடர் போன்றவனே.


விதிப் பயனால் தோன்றிடும் நாமெல்லாம், ஒவ்வொரு பிறவியிலும், அழித்தால் மாற்றுக் குறையும் தங்கமாய் மழுங்கிக் கொண்டே போகிறோம். அவனோ அனைவருக்கும் அனுக்ரஹ கார்யங்களே செய்வதனால், நெருப்பிலிட்ட மாணிக்கம் போலே சுடர்கிறான். 'பரவு தொல் சீர் கண்ணா என் பரஞ் சுடரே' என்று விளிக்கப் பெறுகிறான். உன்னுடைய கல்யாண சம்பத்துக் குணங்கள் பரிமளிக்கும் வண்ணம் விழித்திடாய்.


'மாற்றாருனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண் ஆற்றாது வந்து உன் அடி பணியுமாப் போலே ' - பரம ஸ்வரூபனனான மாலனுக்கும் எதிரிகள் உண்டோ?. பகவத விரோதிகள் அவனுக்கு எதிரிகள். அன்பர்களின் எதிரிகள் அவனுக்கு எதிரிகள்.


அவனால் அம்பு பட்டவர்கள் காலிலே வீழ்ந்தாவது பிழைத்துக் கொள்ளலாம், ஆனால், துர்க் குணம் கொண்டவர்களுக்கு விடிவில்லை.


உன்னோடு போரிட்டுத் , தங்களுடைய வலிமைகளைத் தொலைத்து, ஓரிடத்திலும் புகலற்று, உன் வீட்டு வாசலின் கீழே வீழ்ந்து 'தமேவ சரணம் கத', என்று ராமனுடைய காலிலே வீழ்ந்த காகாசுரன் போல இருக்கை.


'போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய் ' பெரியாழ்வாரைப் போலப் பல்லாண்டு பாடிப், எங்களைத் தோற்கடித்த உன் விசேஷ குணங்களைப் பாடி புகழ வந்துள்ளோம், எழுந்திராய்.
 
திருப்பாவை பாசுரம் -22-
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்


அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச் சிறிலே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்


Andal Nachiyar Thiruvadigale Saranam
Tiruppavai Pasuram -22-




Am kan maa nyaalaththu arasar abimaana
Pangamaay vandhu nin palli kattir keezhe
Sangam iruppaar pol vandhu thalaippeydhom
Kingini vaay cheydha thaamarai poo pole
Sengan chiru chiridhe emmel vizhiyaavo
Thingalum aadhiththanum ezhundhaar pol
Am kan irandum kondu engal mel nokkudhiyel
Engal mel saabam izhindhelor embaavaay
 
திருப்பாவை பாசுரம் -23-
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்


மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


பொருள்:


மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.
விளக்கம்:
எதிரே இருப்பவன் கடவுள் என்பதற்காக வீட்டைக் கொடு, பொருளைக் கொடு, நகையைக் கொடு, வாகனத்தைக் கொடு…என நம் கோரிக்கைகளை ஆண்டவன் முன்னால் வைக்கக்கூடாது. அவை நமக்கு அமைய வேண்டுமென்ற விதியிருந்தால், நம் உழைப்பைப் பொறுத்து அவை இறைவனால் நமக்குத் தரப்பட்டு விடும். எனவே, நியாயமான கோரிக்கைகளையே இறைவனிடம் சொல்ல வேண்டும். இதைத்தான் ஆயர்குலப் பெண் கள் நாங்கள் கேட்பது நியாயம் எனத் தெரிந்தால் மட்டும் அதைக் கொடு எனக் கேட்கிறார்கள். அவர்கள் கேட்டது என்ன? அந்தக் கண்ணனையே கேட்டார்கள். அவனோடு கலந்து விட்டால் சோறு எதற்கு? வாகனம் எதற்கு? இதர வசதிகள் எதற்கு? அதற்கெல்லாம் மேலான பேரின்பமல்லவா கிடைக்கும். அதனால் அவனையே கேட்டார்கள் ஆயர்குலப் பெண்கள்.


Andal Nachiyar Thiruvadigale Saranam
Tiruppavai Pasuram -23-


Maari malai muzhainchil manni kidandhu urangum
Seeriya singam arivutru thee vizhiththu
Veri mayir ponga eppaadum perndhu udhari
Moori nimirndhu muzhangi purappattu
Podharumaa pole nee poovaippoo vannaa un
Koyil ninru ingngane pondharuli koppudaiya
Seeriya singaasanaththu irundhu yaam vandha
Kaariyam aaraayndhu arulelor embaavaay


Like the majestic lion wakes up with ire,
From the mountain cave in the rainy season,
Looks with fiery sight,
And with deep angry sweat from all the hairs,
Turns up its head with awe,
And comes out making lots of din,
Hey Lord, who is the colour of the blue lotus,
Come from your temple to here,
And sit on the majestic royal throne,
And hear with compassion,
For why we have come here,
 
திருப்பாவை பாசுரம் -24-
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்


அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்


பொருள்:
மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.
விளக்கம்:
இந்த பாசுரம் மிக முக்கியமானது. இதை தினமும் நாம் பாராயணம் செய்யலாம். இதை “போற்றிப் பாசுரம் என்பர். இந்த பாசுரத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து, கண்ணன் பாலகனாக இருந்த போது நிகழ்த்திய வீரச்செயல்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதன் மூலம் அவர்கள் தைரியத்தை வளர்த்துக் கொள்வார்கள்.


Andal Nachiyar Thiruvadigale Saranam
Tiruppavai Pasuram -24-


Anru iv ulagam alandhaay adi potri
Senrangu then ilangai setraay thiral potri
Ponra chakatam udhaiththaay pugazh potri
Kanru kunil aaverindhaay kazhal potri
Kunru kudaiyaay eduththaay gunam potri
Venru pagai kedukkum nin kaiyil vel potri
Enrenrum un sevagame eththi parai kolvaan
Inru yaam vandhom irangelor embaavaay


We worship your feet which measured the world then,
We worship your fame of winning over the king of Southern Lanka,
We worship thine valour in breaking
the ogre who came like a cart,
We worship thy strength which threw the calf on the tree,
We worship thine goodness in making
the mountain as an umbrella,
And we worship the great spear in your hand,
which led to your victory,
We have come hear to sing always for ever your praises,
And get as gift the drums to sing,
 
திருப்பாவை பாசுரம் -25
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்


ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்


பொருள்:


தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.


விளக்கம்:


பக்தன் பக்தி செலுத்தும் போது, இறைவன் அவனுக்கு சேவகனாகி விடுகிறான். தனது உயிருக்குயிரான பக்தன் பிரகலாதனுக்கும் அவனது தந்தை இரணியனுக்கும் வாதம் நடக்கிறது. “உன் நாராயணன் எங்கே இருக்கிறான்? என்று இரணியன் கேட்க, பெருமாளுக்கு கை, கால் உதறி விடுகிறது. உடனே உலகிலுள்ள எல்லா ஜீவன்களுக்குள்ளும் அவன் சென்று விட்டான். ஒரு அணுவைக் கூட அவன் பாக்கி வைக்கவில்லை. பிரகலாதன் என்ன பதில் சொன்னாலும் அதற்குள் இருந்து வெளிப்பட வேண்டுமே என்ற பயத்தில் அவன் இருந்தான். அவன் “தூண் என்று சொல்லவே, அதற்குள்ளும் மறைந்திருந்த பகவான், நரசிம்மமாய் வெளிப்பட்டார். பக்தனுக்கு அவர் செய்த சேவையைப் பார்த்தீர்களா! தன்னிடம் பக்தி செலுத்திய பாண்டவர்களுக்காக அமாவாசை நேரத்தையே மாற்றிய தயாள குணம் படைத்த வரல்லவா! இவற்றையெல்லாம் படித்தாலே நாம் அவனை அடைந்து விடலாம் என்பது இப்பாடலின் உட்கருத்து.


Andal Nachiyar Thiruvadigale Saranam
Tiruppavai Pasuram -25-


Oruththi maganaay pirandhu or iravil
Oruththi maganaay oliththu valara
Tharikkilaan aagi thaan theengu ninaindha
Karuththai pizhaippiththu kanchan vayitril
Neruppenna ninra nedumaale!, unnai
Aruththiththu vandhom parai tharudhiyaagil
Thiruththakka selvamum sevagamum yaam paadi
Varuththamum theerndhu magizhndhelor embaavaay


Being born to woman,
And in the same night in hiding.
You became the son of another,
But this he could not tolerate,
And wanted to cause more harm to you,
And you great one, became,
The fire in the stomach of that Kamsa,
We have come here with desire for a drum,
And if you give the drum to us,
We would sing about thine great fame and wealth,
And would end our sorrows and become happy,
 
திருப்பாவை பாசுரம் -26-
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்


மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.


பொருள்:


பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன் பிற்கு, உல கத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.
விளக்கம்: பாஞ்சஜன்யம் என்னும் சங்கை திருமால் ஏந்தியிருக்கிறார். இந்த சங்கின் கதையைக் கேளுங்கள். பஞ்சசன் என்ற அசுரன் சாந்தீபனி என்ற முனிவரின் மகனைக் கொன்று விட்டு, கடலில் போய் மறைந்து கொண்டான். கிருஷ்ணர் அவரிடம் மாணவராகச் சேர்ந்தார். குருதட்சணையாக தன் மகனைக் கொன்ற அசுரனை பழிவாங்க வேண்டும் என சாந்தீபனி முனிவர் உத்தரவிட்டார். கிருஷ்ணரும் பஞ்சசனைக் கொன்று அவனைச் சங்காக மாற்றி தனது கையில் வைத்துக் கொண்டார். அசுரசங்கு என்பதால் தான் குருக்ஷத்திரக்களத்தில் அதை ஊதும்போதெல்லாம் அதன் பேரொலி கேட்டு எதிரிப்படைகள் நடுங்கின.


Andal Nachiyar Thiruvadigale Saranam
Tiruppavai Pasuram -25-


Maale! Manivannaa! Maargazhi neeraaduvaan
Melaiyaar seyvanagal venduvana kettiyel
Nyaalaththai ellaam nadunga muralvana
Paal anna vannaththu un paancha sanniyame
Polvana sankangal poy paadudaiyanave
Saala perum paraiye pallaandu isaippaare
Kola vilakke kodiye vidhaaname
Aalin ilaiyaay arulelor embaavaay


Oh Lord Vishnu,
Oh lord who is like the blue sapphire,
If you ask us what we need,
In your great grace and great deeds,
For our holy bath of Marghazhi,
We will ask for very many conches
Like the milk white conch of yours called Pancha Janya,
Very many big drums whose sound can be heard everywhere,
Several musicians of fame to sing “Pallandu ”
Several beautiful pretty lamps,
Several flags and cloths to make tents,
Oh, He who sleeps on a banyan leaf at time of deluge,
Please give us them all,
 
திருப்பாவை பாசுரம் -27-
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்


கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்


பொருள்:


எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.
விளக்கம்:
“கூடாரை வெல்லும் என்ற சொற்றொடரில் இருந்து “கூடாரவல்லி என்ற வார்த்தை பிறந்தது. இப்போது பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் கூடாரவல்லி விழா கொண்டாடப்படும். இன்று அக்கார அடிசில் எனப்படும் உணவு பிரசித்தம். சாப்பாட்டின் மீது நெய் மிதக்கும். சர்க்கரைப் பொங்கல் போன்ற இந்த உணவின் சுவை அலாதியானது. விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான இந்த உணவை சாப்பிடுகிறார்கள். பால்சோறு என்பது பாற்கடலையும் குறிக்கும். “”கண்ணா! உன் தரிசனம் கிடைத்து விட்டது. நாங்கள் நீ பள்ளிகொள்ளும் பாற்கடலில் இருப்பது போல் உணர்கிறோம். இதுவே நித்யசுகம். இந்த சுகத்தை எங்களுக்கு நிரந்தரமாகக் கொடு, என வேண்டுகிறார்கள்.


Andal Nachiyar Thiruvadigale Saranam
Tiruppavai Pasuram -27-


Koodaarai vellum seer govindhaa undhannai
Paadi parai kondu yaam perum sammaanam
Naadu pugazhum parisinaal nanraaga
Choodagame thol valaiye thode sevip poove
Paadagame enranaiya palagalanum yaam anivom
Aadai uduppom adhan pinne paar choru
Mooda ney peydhu muzhangai vazhi vaara
Koodi irundhu kulirndhelor embaavaay


Hey Lord Govinda,


who is known for victory over enemies,
After singing you we will get drums and many gifts,
And after being praised by all the people,
Wear we will the golden flower on our hair,
Wear we will golden bracelets,
Wear we will golden ear studs,
Wear we would then the golden flowers on the ear,
Wear we will ornaments on the legs,
Wear we will pretty new dresses,
Eat we will rice mixed with milk,
Covering the rice fully with ghee,
And with the ghee dripping from our forehands,
We will be together and be happy,
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top