• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸ்ரீ வில்லிபுத்தூரில் முத்துக்குறி.....

Status
Not open for further replies.

tnkesaven

Active member
ஸ்ரீ வில்லிபுத்தூரில் முத்துக்குறி.....

ஸ்ரீ வில்லிபுத்தூரில் முத்துக்குறி.....

ஸ்ரீ வில்லிபுத்தூரில் நடக்கும் உற்சவங்களில் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு முத்துக்குறி.

ஆண்டாள் எம்பெருமானையே எப்போதும் நினைப்பவள்.

அவள் குறத்தியிடம் குறி கேட்கிறாள். இதற்கு முத்துக்குறி என்று பெயர்.

அரையர் ஸ்வாமி ஒரு கருப்புப் பட்டுத் துணியில் சோழிகளைப் போட்டு குறி சொல்வது போல் அபிநயம் செய்வார்.

ஆடித் திருநாளிலும், பங்குனித் திருநாளிலும் ஒன்பதாம் நாள் விழாவுக்குப் பிறகு திருமங்கையாழ்வார் அருளிச் செய்த திருநெடுந்தாண்டகம் என்கிற பாசுரத்தில் 'பட்டு உடுக்கும் அயர்த்திரங்கும் பாவை போனாள்' என்று தொடங்கும் பாடலுக்கு அரையர் அபிநயம் செய்வார்.

மார்கழி மாத உத்சவத்தில் ஆண்டாள் கோயில் பிரகாரத்தில் ஆண்டாள் மட்டும் தனியாக எழுந்தருளியிருக்க, தலையில் குல்லா அணிந்து, அரையர் அபிநயம் செய்வார்.

செங்கமலக் கோயிலுள்ளான் சீரார் இளங்கோதை அங்கு அவனைச் சேர்ந்து அடி வணங்கிச் சூழ்ந்து கொண்டு,"உள்ள நோய் தீர ஒரு மருந்துண்டோ? கட்டுவிச்சி சொல்" என்பாள். இது ஆண்டாள் கேள்வி.

இனி கட்டுவிச்சியின் பதில்.

"உண்டு. உண்டு தேவி..! ஒரு மருந்து உண்டு சொல்கிறேன். சூழ நீர் பாயும் தென்னங்குறுங்குடி, திருமாலிருஞ்சோலை சுக்கு குத்தி கழத்தட்டி, வஞ்சி நகரமென்னும் இஞ்சி நறுக்கி, ஞானசாரம், ப்ரமேயசாரம் என்கிற சாற்றை எடுத்து, ஸ்ரீ சைலேச தயா பாத்திரத்தில் சேர்த்து, அச்சுதன் என்னும் அடுப்பை வைத்து, உத்தமன் என்னும் உமியைத் தூவி, வேங்கடமென்னும் விறகை முறித்திட்டு, நீர்மலை என்னும் நெருப்பை மூட்டி, மணி மந்திரம் என்னும் துடுப்பினாலே, வானமாமலை என்னும் வட்டிலில் சேர்த்து, திருமணிகூடத்திலே இறக்கி, உபதேச ரத்னமாலை என்னும் உரைகலத்திலிட்டு, கண்ணினுண் சிறுத்தாம்பினால் மாத்திரை தேய்த்து, விண்ணகரம் என்னும் மேல் பொடி போட்டுக் கண்ணபுரம் என்னும் கரண்டியால் கலக்கி, திருவாய்மொழி என்னும் தேனைக் கலந்து திருப்பள்ளியெழுச்சி என்று திகழக்கலக்கித் திருக்குடந்தை என்று எடுத்துப் புசி. உன் நோய் தீரும்.

இப்போது கோதையின் தோழிகள் கேட்கிறார்கள்.

"என்ன மருந்து புசித்தாய்?"

" எங்கும் வில்லா மருந்து. விலையில்லா மருந்து. வடக்கே சென்று வாயு புத்திரன் கொணர்ந்த மருந்து. ஆழ்வார்கள், ஆசார்யர்கள் அனுஸந்தித்த மருந்து. ஸ்ரீமந் நாராயண என்று தொடங்கும் த்வய மாமருந்து' என்கிறாள் கோதை.

முத்துக்குறி..

அரையர்களே, தங்களை அலங்கரித்துக் கொண்டு, தாளங்கள் தட்டி, தமிழ்ப் பாசுரங்கள் இடையே முழங்க, ஆடி அபிநயித்துக் காட்டுவார்கள்!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top