F
Falcon
Guest
மாமி! இலை போடலாமா?
I stumbled upon this story today in Face Book….which I thought of sharing with members of this Forum…
This story may resemble what is happening in most of Brahmin families today … where they have a daughter for marriage and efforts taken by the parents in selecting a prospective groom ..more especially who suits all their conditions and expectations…
The story goes like this….
மாமி! இலை போடலாமா?
காட்சி – 1
பாட்டி : ஹலோ ! யார் பேசறேள்!
எதிர்முனை: நான் நங்கநல்லூர்லேந்து ராஜமணி ஐய்ர் பேசறேன். ஒங்க பொண் போட்டோவையும் ஜாதகத்தையும் கல்யாணமே வைபோகமே வெப்ஸைட்டுல பாத்தேன். ரொம்ப பிடிச்சிருந்த்து.
பாட்டி: பொண்ண உங்க புள்ளைக்குன்னா பிடிக்கணும்.
எதிர்முனை:என் புள்ளக்குத்தான் பிடிச்சிருக்கு.ஜாதகமும் பொருந்தி இருக்கு.
பாட்டி: பொருத்தம் எல்லாம் நாங்க பார்த்தப்புறம் நிச்சயம் பண்ணிக்கலாம். சரி சரி ! நல்லநாளாப் பாத்து போன் பண்ணிருக்கேள். என் பொண்ணு வந்தா தகவலைச் சொல்லிட்டு போன் பண்ணச் சொல்றேன்.
------------------------------------------------------------------------------------
காட்சி 2
சாரு உள்ளே வருதல்
பாட்டி: சாரு, நீ வெளியிலே போயிருக்கறச்சே போன் வந்தது. நங்கநல்லூரிலிருந்து ராஜமணி ஐயர் பேசினார். நம்ப சுபா போட்டோவையும் ஜாதகத்தையும் பார்த்தாளாம். உன்னை பேச சொன்னா. நம்பர் எழுதி வச்சிருக்கேன்.
சாரு: சரிம்மா.
போன் டயல் செய்தல்.
சாரு: ஹலோ நான் நுங்கம்பாக்கத்திலிருந்து சாருமதி ராமசந்திரன் பேசறேன். என் பொண்ணு ஜாதக விஷயமா பேச சொன்னேளாமே?
எதிர்முனை: ஆமாம் மாமி ........
சாரு: உங்க பையன் என்ன பண்றார்?
எதிர்முனை: CTS ல வேலை பண்றான்.
சாரு: CTS லே வேலையா? அப்போ US போயிட்டு வந்திருக்கணுமே!
எதிர்முனை: இல்ல மாமி! இனிமேதான்!
சாரு: இனிமேதானா? எங்காத்துப் பொண் TCS லே இருக்கா. இரண்டு தடவை London போயிட்டு வந்துட்டா.
எதிர்முனை: அப்படியா... கல்யாணம் ஆனதும் ரெண்டுபேருமா போயிட்டு வரட்டுமே!
சாரு: சரி......நீங்க இருக்கறது flat ஆ ? இல்லை independent houseஆ? Flatதானா? சரி நான் எங்காத்து மாமாவையும் பொண்ணையும் கலந்து பேசிட்டு கூப்பிடறேன்.
பாட்டி: ஏண்டி சாரு ? அவா பாலக்காடாமே ? அதை விசாரிச்சுட்டியா?
சாரு: அம்மா கொஞ்சம் பேசாமல் இரு. நம்ப சுபா வந்தவுடன் டிஸ்கஸ் பண்ணிட்டு அப்புறம் மிச்சத்தை விசாரிக்கலாம்.
சுபாவும் அப்பாவும் உள்ளே நுழைகிறார்கள்.
சாரு: ஏன்னா. நங்கநல்லூரில் இருந்து ஒரு மாமா போன் பண்ணினார். நம்ப சுபா ஜாதகம் பொருந்தியிருக்காம். பையன் CTS ல வேல பாக்கறான். ஆனா இன்னும் ஒரு தடவை கூட US போகலயாம். எப்படின்னா பார்க்கிறது ?
அப்பா : நீ சொன்னா சரியாதான் இருக்கும் சாரு.
சாரு: சுபா நீ என்னடி சொல்றே?
சுபா: அம்மா நேக்கு தலையை வலிக்கிறது. முதல்லே ஒரு டம்ளர் காபி கொடு. சாயங்காலம் ஆபீஸ் விட்டு வந்த்துமே வரனை பற்றி பேசறே. இந்த மூணு வருஷத்தில் பதினாறு பையன்களுக்கு மேலே சீரியஸ் ஆக டிஸ்கஸ் பண்ணியாச்சு. பாட்டி இதுல உன்னோடதுதான் மேஜர் ஷேர். எங்க கொஞ்சம் லிஸ்ட் பண்ணு..
பாட்டி: போது போகலைன்னா பாட்டி தலைய உருட்டாதே! பாம்பே பையன் ஒருத்தன் வந்தான். அவன் ஃபாரினே போகலைன்னு தட்டிக் கழிச்சோம். டெல்லிப்புள்ளை ஒருத்தன் வந்தான். கண்ணுக்கு லக்ஷணமா இருந்தான்.
சாரு: அவனோட அப்பா அம்மா கூடவே இருப்பான்னுட்டான். உன்னை எப்படி அந்த மாப்பிள்ளக்குக் குடுக்கறது,
பாட்டி: கல்க்கத்தா மாப்பிள்ளையும் அக்ககா தங்கைகளோட பொறந்தவன். கமிட்டெட் பர்ஸன் அப்படீன்னு சொல்லி கல்தா குடுத்தோம்.
சுபா: ஆக ஒரு பையனை கூட நீ கண்ணுல காட்டல.
சாரு: என்னடி பண்றது? நம்ப expectationக்கு மேட்ச் ஆக ஒரு பையனுமே இருக்க மாட்டேன் என்கிறானே.
சுபா: சரி சரி காப்பியைக் கொண்டா.
To be continued.....
P.S: Those who have gone through this story are requested to ignore please.
Source: Face Book
I stumbled upon this story today in Face Book….which I thought of sharing with members of this Forum…
This story may resemble what is happening in most of Brahmin families today … where they have a daughter for marriage and efforts taken by the parents in selecting a prospective groom ..more especially who suits all their conditions and expectations…
The story goes like this….
மாமி! இலை போடலாமா?
காட்சி – 1
பாட்டி : ஹலோ ! யார் பேசறேள்!
எதிர்முனை: நான் நங்கநல்லூர்லேந்து ராஜமணி ஐய்ர் பேசறேன். ஒங்க பொண் போட்டோவையும் ஜாதகத்தையும் கல்யாணமே வைபோகமே வெப்ஸைட்டுல பாத்தேன். ரொம்ப பிடிச்சிருந்த்து.
பாட்டி: பொண்ண உங்க புள்ளைக்குன்னா பிடிக்கணும்.
எதிர்முனை:என் புள்ளக்குத்தான் பிடிச்சிருக்கு.ஜாதகமும் பொருந்தி இருக்கு.
பாட்டி: பொருத்தம் எல்லாம் நாங்க பார்த்தப்புறம் நிச்சயம் பண்ணிக்கலாம். சரி சரி ! நல்லநாளாப் பாத்து போன் பண்ணிருக்கேள். என் பொண்ணு வந்தா தகவலைச் சொல்லிட்டு போன் பண்ணச் சொல்றேன்.
------------------------------------------------------------------------------------
காட்சி 2
சாரு உள்ளே வருதல்
பாட்டி: சாரு, நீ வெளியிலே போயிருக்கறச்சே போன் வந்தது. நங்கநல்லூரிலிருந்து ராஜமணி ஐயர் பேசினார். நம்ப சுபா போட்டோவையும் ஜாதகத்தையும் பார்த்தாளாம். உன்னை பேச சொன்னா. நம்பர் எழுதி வச்சிருக்கேன்.
சாரு: சரிம்மா.
போன் டயல் செய்தல்.
சாரு: ஹலோ நான் நுங்கம்பாக்கத்திலிருந்து சாருமதி ராமசந்திரன் பேசறேன். என் பொண்ணு ஜாதக விஷயமா பேச சொன்னேளாமே?
எதிர்முனை: ஆமாம் மாமி ........
சாரு: உங்க பையன் என்ன பண்றார்?
எதிர்முனை: CTS ல வேலை பண்றான்.
சாரு: CTS லே வேலையா? அப்போ US போயிட்டு வந்திருக்கணுமே!
எதிர்முனை: இல்ல மாமி! இனிமேதான்!
சாரு: இனிமேதானா? எங்காத்துப் பொண் TCS லே இருக்கா. இரண்டு தடவை London போயிட்டு வந்துட்டா.
எதிர்முனை: அப்படியா... கல்யாணம் ஆனதும் ரெண்டுபேருமா போயிட்டு வரட்டுமே!
சாரு: சரி......நீங்க இருக்கறது flat ஆ ? இல்லை independent houseஆ? Flatதானா? சரி நான் எங்காத்து மாமாவையும் பொண்ணையும் கலந்து பேசிட்டு கூப்பிடறேன்.
பாட்டி: ஏண்டி சாரு ? அவா பாலக்காடாமே ? அதை விசாரிச்சுட்டியா?
சாரு: அம்மா கொஞ்சம் பேசாமல் இரு. நம்ப சுபா வந்தவுடன் டிஸ்கஸ் பண்ணிட்டு அப்புறம் மிச்சத்தை விசாரிக்கலாம்.
சுபாவும் அப்பாவும் உள்ளே நுழைகிறார்கள்.
சாரு: ஏன்னா. நங்கநல்லூரில் இருந்து ஒரு மாமா போன் பண்ணினார். நம்ப சுபா ஜாதகம் பொருந்தியிருக்காம். பையன் CTS ல வேல பாக்கறான். ஆனா இன்னும் ஒரு தடவை கூட US போகலயாம். எப்படின்னா பார்க்கிறது ?
அப்பா : நீ சொன்னா சரியாதான் இருக்கும் சாரு.
சாரு: சுபா நீ என்னடி சொல்றே?
சுபா: அம்மா நேக்கு தலையை வலிக்கிறது. முதல்லே ஒரு டம்ளர் காபி கொடு. சாயங்காலம் ஆபீஸ் விட்டு வந்த்துமே வரனை பற்றி பேசறே. இந்த மூணு வருஷத்தில் பதினாறு பையன்களுக்கு மேலே சீரியஸ் ஆக டிஸ்கஸ் பண்ணியாச்சு. பாட்டி இதுல உன்னோடதுதான் மேஜர் ஷேர். எங்க கொஞ்சம் லிஸ்ட் பண்ணு..
பாட்டி: போது போகலைன்னா பாட்டி தலைய உருட்டாதே! பாம்பே பையன் ஒருத்தன் வந்தான். அவன் ஃபாரினே போகலைன்னு தட்டிக் கழிச்சோம். டெல்லிப்புள்ளை ஒருத்தன் வந்தான். கண்ணுக்கு லக்ஷணமா இருந்தான்.
சாரு: அவனோட அப்பா அம்மா கூடவே இருப்பான்னுட்டான். உன்னை எப்படி அந்த மாப்பிள்ளக்குக் குடுக்கறது,
பாட்டி: கல்க்கத்தா மாப்பிள்ளையும் அக்ககா தங்கைகளோட பொறந்தவன். கமிட்டெட் பர்ஸன் அப்படீன்னு சொல்லி கல்தா குடுத்தோம்.
சுபா: ஆக ஒரு பையனை கூட நீ கண்ணுல காட்டல.
சாரு: என்னடி பண்றது? நம்ப expectationக்கு மேட்ச் ஆக ஒரு பையனுமே இருக்க மாட்டேன் என்கிறானே.
சுபா: சரி சரி காப்பியைக் கொண்டா.
To be continued.....
P.S: Those who have gone through this story are requested to ignore please.
Source: Face Book
Last edited by a moderator: