• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ரமணியின் கவிதைகள்

Status
Not open for further replies.

saidevo

Active member
ரமணியின் கவிதைகள்

சொல்விளையாடல் 1. தொடும்-தொடலை
(கலிவிருத்தம்)

(பதினாறு வயதில் மாண்ட ஒரு சிறுவனின் ஈமச் சடங்கில் இரு புலவர்களுக் கிடையில் உரையாடல்)

தொடுமெனச் சொன்னார் தொடலை யென்றேன்
சுடுமெனச் சொன்னார் சுடலை யென்றேன்
அடுமெனச் சொன்னார் அடலை யென்றேன்
விடுமெனச் சொன்னார் விடலை யென்றேன்!

[தொடலை = மாலை; அடலை = சாம்பல்; சுடலை = சுடுகாடு;
விடலை = பதினாறு வயதுச் சிறுவன்]

பொருள்:
புலவரவர்
தொடும் பிணத்தை என்றார்; நான் தொடலை (மாலை) என்றேன்.
சுடும் நெருப்பு என்றார்; ஆம், சுடலை (சுடுகாடு) என்றேன்.
அடும் (அழித்துவிடும் ) என்றார்; முடிவில் அடலை (சாம்பல்) என்றேன்.
சரி விடும் என்றார்; விடலை (பதினாறு வயதுச் சிறுவன்) என்றேன்!

--ரமணி, 16/03/2017

*****
 
சொல்விளையாடல் 2. உழல்-உழலை
(கலிவிருத்தம்)

உழல்கிறேன் நாளும் கழுத்தில் உழலை
சுழல்கொளும் மனத்தில் இல்லை சுழலை
அழல்வணன் உளத்திலை விரைவின் அழலை
கழல்கள் பணியேன் வினைகளோ கழலை!

[உழலை = செக்கு மரத்தடி; சுழலை = வஞ்சகம்;
அழல்வணன் = நெருப்புபோல் வண்ணம்கொண்ட சிவன்;
அழலை = களைப்பு;
கழலை = கழுத்து, வயிற்றில் வரும் பெருங் கட்டி நோய்]

--ரமணி, 16/03/2017

*****

சொல்விளையாடல் 3. புத்தகம்-முத்தமிழ்
(கலிவிருத்தம்)

புத்தகம் வளர்த்ததால் புத்தகம் விட்டேன்
முத்தமிழ்ச் சொல்லற முத்தமிழ் மனத்தில்
எத்தனம் போதும் எத்தனமும் வீணெனும்
வித்தகம் எழுந்து வித்தகம் விழுந்ததே.

பொருள்
புத்து-அகம் வளர்த்ததால் புத்தகம் விட்டேன்
முத்தமிழ்ச் சொல்லற முத்து-அமிழ் மனத்தில்
எத்தனம் போதும் எத்-தனமும் வீணெனும்
வித்து-அகம் எழுந்து வித்தகம் விழுந்ததே.

--ரமணி, 16/03/2017

*****
 
சொல்விளையாடல் 4. சிந்தனை-எந்திரி
(கலிவிருத்தம்)

சிந்தனை மனத்தில் சிந்தனை குறைத்தே
எந்திரி வாழ்வில் எந்திரி கண்டதில்
கந்துகம் மனத்தில் கந்துகந்து நிற்க
வந்தது போக வந்தது நின்றது!

பொருள்
சிந்து (கடல்) அனை (அனைய = போன்ற, கடைக்குறை விகாரம்) மனத்தில் சிந்தனையைக் குறைத்தே
எந்து-((என்ன, எப்படி என்று) இரி (ஓடும்) வாழ்வில், எந்திரி (பொம்மலாட்டப் பாவையை ஆட்டுவிப்போனைக்) கண்டதில்
கந்துகம் (மனக் குதிரை) மனத்தில் கந்து (தூண்) உகந்து நிற்க
வந்தது எல்லாம் போனது ஆகி, இப்போது வந்த-அது (இந்த ஞானம்) நின்றது!

--ரமணி, 16/03/2017

*****
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top