• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

லஞ்சம்...

Status
Not open for further replies.
[FONT=&quot]......
''வணக்கம் சார்'' என்று ,பைலில் மூழ்கியிருந்த கிளெர்க்கைப்பார்த்து கை கூப்பினார் ராம்.''என்ன வேணும்'' என்று முகத்தை தூக்கிப்பார்த்தார் கிளெர்க்.சிறிய வயதுதான் ..30..35..வயசுதான் இருக்கும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டார் ராம்.''சொத்து வரி பெயர் மாற்றம் செய்யணும் ..அப்பிடியே ஈ பீ யும் பெயர் மாற்றம் செய்யணும் எல்லா டாக்குமெண்ட்ஸ் உம் இதுல இருக்கு சார் ''என்று ஒரு பெரிய கவரை கொடுத்தார் ராம்.'' சார் இதே மாதிரி நெறய கேஸ் இருக்கு. நீங்க வெச்சுட்டு போங்க ஒரு வாரம் கழிச்சு வாங்க'' என்றார் கிளெர்க்.''சார் நான் 2....3..தரம் வந்துட்டேன். என்னால ரொம்ப அலைய முடியாது நீங்க கொஞ்சம் பெரிய மனசு பண்ணி சீக்கிரம் முடிச்சுக்குடுங்க''என்று கை கூப்பினார் ராம்.''சார் நீங்க நெனைக்கிற மாதிரி ஒடனே எல்லாம் செய்ய முடியாது.நெறய பெண்டிங் இருக்குன்னு சொன்னேன்ல ''என்று சொல்லி , வேலையில் மூழ்கினார் கிளெர்க்.இதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் வெளியில் வந்தார் ராம்.வெயிலுக்கு இதமாக ஒரு இளநீர் குடிக்கலாம் என்று கடைக்கு வந்தார்.''என்ன சாமி இன்னும் வேலை முடியலையா'' என்று அருகில் வந்தான் அந்த ஆஃபீஸ் பியூன்.''இல்லப்பா , 2..3 தரம் வந்தாச்சு கிளெர்க் பேப்பர் வாங்க மாட்டேங்கறாரு என்ன செய்யறதுன்னு தெரியல''என்று வருத்தத்துடன் சொன்னார்.சிலதடவை வந்ததில் பரிச்சியமாகியிருந்தான் அந்த பியூன்.''இப்பிடியெல்லாம் சொன்னா நடக்காது சாமி , கொஞ்சம் வெட்டணும்'' என்றான் பியூன்.''எவ்ளோ ஆகும்'' என்றார். 5 என்று விரலை விரித்து காட்டினான்.சரி கொடுத்து தொலைப்போம். காரியம் ஆனால் சரி என்று தலையாட்டினார்.''யார் கிட்ட கொடுக்கணும்''. ''என்கிட்ட குடுங்க சாமி ஒரே வாரத்தில ஒங்க வேலை முடிஞ்சுரும் எல்லாம் நா பாத்துக்கிறேன்'' என்று உறுதி சொன்னான் பியூன். யோசித்தார் ராம்.''யோசிக்காதிங்க எல்லாம் நம்பிக்கை தான் சாமி. ''கிளெர்க்குக்கு 3 கொடுக்கணும் மத்தது தான் எங்க 3 பேருக்கும் ''என்று இன்னும் 2 பேர் இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டினான்.''.ஐந்தாயிரமும் பேப்பர்களும் பியூனின் கைக்கு போனது.மனம் கனத்தது.
மறுநாள் விடுமுறை. தனது பால்ய ஸ்னேஹிதன் நாராயணனை பார்த்துவிட்டு வரலாம் என்று அவன் வீட்டிற்கு சென்றார்.''வாடா ராம் எப்பிடிடா இருக்க ..ரொம்ப நாளாச்சே ஒன்ன பாத்து '' என்று வரவேற்றான் நாராயணன்.நாராயணன் சற்று வறுமையிலிருந்தவன் .இரண்டு பிள்ளைகள் .நண்பர்களின் உதவியோடு பிள்ளைகளை படிக்கவைத்து, இப்போது இருவரும் நல்ல வேலையில் இருக்கிறார்கள்.
''வாடா வந்து உட்காரு'' என்று உள்ளே அழைத்துப்போனான். உள்ளே அமர்ந்தார்கள் இருவரும்.'' ராஜி யாரு வைத்திருக்கான் பாரு காபி கொண்டுவா'' என்று மனைவியை அழைத்து சொல்லிவிட்டு ராம் பக்கம் திரும்பினான் நாராயணன். இருவரும் சற்று அமைதியாய் இருந்த போது உள்ளே இருந்து ஒரு வாலிபன் வந்தான்.அவனை பார்த்ததும்''டேய் ரமேஷ் நா சொல்லிருக்கேன்ன்ல என்னோட பால்ய ஸ்னேஹிதன் ராம்ன்னு அது இவன்தான்...டேய் ராம் இவன் என்னோட மூத்த மகன் ரமேஷ்..இங்க தாசில்தார் ஆபிஸ்ல இருக்கான். மூணு மாசம் முன்னாடி தான் திருச்சிலே இருந்து மாறி வந்தான் '' என்று பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தான். அட இவன் நம்மை வெரட்டி விட்ட பையன் இல்ல என்று ஆச்சரியப்பட்டாலும் , ஏதும் காட்டிக்கொள்ளாமல் '' வணக்கம் தம்பி'' என்று கை கூப்பினார்.அவனும் மரியாதைக்கு வணக்கம் சொன்னான்.'' ரமேஷ் ஒனக்கு ஞ்சாபாகம் இருக்கா? நீ பி எஸ் சீ ..மூணாவது வருஷம் படிக்கும்போது கடைசீ செமிஸ்டருக்கு கட்ட பணம் இல்லாம நாம எவ்ளோ திண்டாடினோம்.இவர் தான் செமிஸ்டர் பணமும் , பரீட்சைக்கு பணமும் கட்டினார்.நீயும் படிச்சு முடிச்சு இப்ப கவர்மெண்ட் வேலைக்கு வந்திட்ட'' என்று பழைய கதையை சொன்னான் நாராயணன்.இந்த அங்கிள் பணம் கட்டியா நாம படிச்சோம்? ஆனா இவர் கிட்டயே காசு வாங்கிட்டமே என்று குற்ற உணர்ச்சியால் வெட்க்கி தலை குனிந்தான் ரமேஷ்.இது போல் எவ்வளவு பேர் யார் யாருக்கோ எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்திருப்பார்கள் .
அவர்களிடம் நான் லஞ்சம் வாங்கியா வேலை செய்து கொடுத்தேன்?. அப்பாவிடமே லஞ்சம் வாங்கியதைப்போல் எண்ணி வெட்கினான் ரமேஷ்.இவர்களைப்போல் நல்ல உள்ளங்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் உதவி செய்யத்தானே நமக்கு அரசாங்கம் வேலை கொடுத்திருக்கிறது ...இனிமேல் நான் லஞ்சம் வாங்க மாட்டேன் என்று உறுதி பூண்டவனாய் ..'' அங்கிள் ஒரே வாரத்தில ஒங்க வேலையை முடிச்சுடுறேன் ..நீங்க யாருக்கும் ஒரு பைசா கொடுக்க வேண்டாம்'' என்று சொன்னான் ரமேஷ்.ஏதோ புரிந்தவராய் புன்னகைத்தார் ராம். ஒன்றும் புரியாமல் முழித்தான் நாராயணன்.






[/FONT]

[FONT=&quot]LikeShow more reactions
CommentShare






[/FONT]
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top