R
ramachandran girija
Guest
கிரிஜாவின் கவிதை துளிகள்
கல்வி :-
========
கற்பதற்கு பிறந்தேனா ? இல்லை
கற்பிப்பதற்கு பிறந்தேனா?
கற்பனைகளை புதுப்பிக்க தானா?
கற்றுளியாய் இங்கே நானும்?
கற்க மறந்த நேரங்கள் இல்லவே இல்லை
கற்க பிறந்த நேரத்தில் துன்பங்கள் கொள்ளை
கற்க துணிந்த நேரத்தில் கண்களும் பளபளக்க
கற்க முடியாது என்றால் பிறவியும் ஏனோ?
கற்கலாம் இயற்கையிடம் இருந்து
கற்கலாம் சுற்றுப் புறத்தில் இருந்து
கற்கலாம் மானிட பாடங்களை
கற்கலாம் நேசத்தின் பாதையினை !!
கற்று முடிந்ததற்கு எண்ணுவரும் உளரோ?
கற்று முடிய நாட்களும் குறைவே !!
கற்று சிறக்கும் பொழுதுகள் நல்லவை
கற்று பிறக்கும் ஞானமே சிறந்தது !!!
கற்று நிற்கவே ஜென்மங்கள் உடையது
கற்று பெற்றிட பலவும் உள்ளது
கற்று போற்றிட ஆன்மிகம் உள்ளது
கற்று பாருங்கள் !! கலியும் நல்லது !!!
*** ஆக்கம் ரா. கிரிஜா
கல்வி :-
========
கற்பதற்கு பிறந்தேனா ? இல்லை
கற்பிப்பதற்கு பிறந்தேனா?
கற்பனைகளை புதுப்பிக்க தானா?
கற்றுளியாய் இங்கே நானும்?
கற்க மறந்த நேரங்கள் இல்லவே இல்லை
கற்க பிறந்த நேரத்தில் துன்பங்கள் கொள்ளை
கற்க துணிந்த நேரத்தில் கண்களும் பளபளக்க
கற்க முடியாது என்றால் பிறவியும் ஏனோ?
கற்கலாம் இயற்கையிடம் இருந்து
கற்கலாம் சுற்றுப் புறத்தில் இருந்து
கற்கலாம் மானிட பாடங்களை
கற்கலாம் நேசத்தின் பாதையினை !!
கற்று முடிந்ததற்கு எண்ணுவரும் உளரோ?
கற்று முடிய நாட்களும் குறைவே !!
கற்று சிறக்கும் பொழுதுகள் நல்லவை
கற்று பிறக்கும் ஞானமே சிறந்தது !!!
கற்று நிற்கவே ஜென்மங்கள் உடையது
கற்று பெற்றிட பலவும் உள்ளது
கற்று போற்றிட ஆன்மிகம் உள்ளது
கற்று பாருங்கள் !! கலியும் நல்லது !!!
*** ஆக்கம் ரா. கிரிஜா