V
V.Balasubramani
Guest
மார்கழி ஏன் பெண்களுக்கு ஸ்பெஷல்..?!
[h=1]மார்கழி ஏன் பெண்களுக்கு ஸ்பெஷல்..?![/h]
மார்கழி வந்துவிட்டது. உடலை நடுங்கவைக்கும் குளிருக்கு அஞ்சி உச்சி முதல் உள்ளங்கால் வரை போர்த்திக்கொண்டு விடிந்த பின்னரும் தூங்குவோர் நிறைய பேர். ஆனால், பெரும்பாலான பெண்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல், அதிகாலையிலேயே எழுந்து வாசல் தெளித்து கோலமிட்டு, கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துக்கின்றனர். அப்படி மார்கழி மாதத்தில் என்னதான் விசேஷம்?
'மார்கழியில விரதம் இருந்தா மனசு நிறைஞ்ச மணாளன் கிடைப்பான்' என்கிறார்களே... மார்கழிக்கும் திருமணத்துக்கும் என்ன சம்பந்தம்? நகரங்களில் காண முடியவில்லை எனினும் இன்றும் பல ஊர்களிலும், கிராமங்களிலும் மார்கழிக் கோலத்தின் நடுவில் சாணிப் பிள்ளையாரும், அதன் மேல் பூக்களையும் வைப்பது எதற்காக?
இதுபோன்ற நம் சந்தேகங்களுக்கு ஆன்மிகத்துடன் அறிவியலையும் கலந்து விளக்கம் தருகிறார், சேலம் கோட்டை அழகிரி நாத ஸ்வாமி கோயிலின் பட்டாச்சார்யார் எஸ்.சுதர்சனம் பட்டர்.
''மார்கழி மாதத்தில் அதிகாலையில் கோலமிடும் வழிபாட்டு முறை வகுக்கப்பட்டதன் காரணம் என்ன?"
''ஆடியில் அம்மனும், புரட்டாசியில் பெருமாளும், மார்கழியில் அனைத்து தெய்வங்களும் என, மாதத்துக்கு ஒரு தெய்வம் என வழிபட வகுத்துள்ளார்கள் நம் முன்னோர். ஏனெனில், ஆடியில் பலமுள்ள காற்று வீசும். அப்படி வீசும் காற்று விஷக்காற்று என்பதால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து அம்மன் கோயில்களில் உள்ள கிருமிநாசினியான வேப்பிலையின் மணத்தை சுவாசிக்கும் போது, விஷக்காற்று முறியடிக்கப்படுவதுடன், இயற்கையான ஆக்சிஜனும் கிடைக்கிறது.
[h=1]Read more at: http://www.vikatan.com/news/womens/75074-what-is-special-about-margazhi-month.art[/h]
[h=1]மார்கழி ஏன் பெண்களுக்கு ஸ்பெஷல்..?![/h]
மார்கழி வந்துவிட்டது. உடலை நடுங்கவைக்கும் குளிருக்கு அஞ்சி உச்சி முதல் உள்ளங்கால் வரை போர்த்திக்கொண்டு விடிந்த பின்னரும் தூங்குவோர் நிறைய பேர். ஆனால், பெரும்பாலான பெண்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல், அதிகாலையிலேயே எழுந்து வாசல் தெளித்து கோலமிட்டு, கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துக்கின்றனர். அப்படி மார்கழி மாதத்தில் என்னதான் விசேஷம்?
'மார்கழியில விரதம் இருந்தா மனசு நிறைஞ்ச மணாளன் கிடைப்பான்' என்கிறார்களே... மார்கழிக்கும் திருமணத்துக்கும் என்ன சம்பந்தம்? நகரங்களில் காண முடியவில்லை எனினும் இன்றும் பல ஊர்களிலும், கிராமங்களிலும் மார்கழிக் கோலத்தின் நடுவில் சாணிப் பிள்ளையாரும், அதன் மேல் பூக்களையும் வைப்பது எதற்காக?
இதுபோன்ற நம் சந்தேகங்களுக்கு ஆன்மிகத்துடன் அறிவியலையும் கலந்து விளக்கம் தருகிறார், சேலம் கோட்டை அழகிரி நாத ஸ்வாமி கோயிலின் பட்டாச்சார்யார் எஸ்.சுதர்சனம் பட்டர்.
''மார்கழி மாதத்தில் அதிகாலையில் கோலமிடும் வழிபாட்டு முறை வகுக்கப்பட்டதன் காரணம் என்ன?"
''ஆடியில் அம்மனும், புரட்டாசியில் பெருமாளும், மார்கழியில் அனைத்து தெய்வங்களும் என, மாதத்துக்கு ஒரு தெய்வம் என வழிபட வகுத்துள்ளார்கள் நம் முன்னோர். ஏனெனில், ஆடியில் பலமுள்ள காற்று வீசும். அப்படி வீசும் காற்று விஷக்காற்று என்பதால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து அம்மன் கோயில்களில் உள்ள கிருமிநாசினியான வேப்பிலையின் மணத்தை சுவாசிக்கும் போது, விஷக்காற்று முறியடிக்கப்படுவதுடன், இயற்கையான ஆக்சிஜனும் கிடைக்கிறது.
[h=1]Read more at: http://www.vikatan.com/news/womens/75074-what-is-special-about-margazhi-month.art[/h]