• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My pen words

Status
Not open for further replies.
In despair, failure in exams or love
need not make your head bow
Or push you to commit suicide
Probably for want of a proper guide
If Parents or friends chide
You need not have to sulk and hide
Some words may not gladden you
Some words need not sadden you
Whatever may come, do not despair
Be prepared to face life with a dare
In spite of Failures in exams or love
Many have achieved laurels and you learn how.
 
பென்(pen) மொழிகள்


Cutting jokes is no easy joke

Though it looks simple for the ordinary folk

A joke that comes out spontaneous

Gets a response that is instantaneous

A joke invariably is above all logic

Just to create the effect of a magic

Once you start its dissection and analysis

That really kills the joke and makes it tragic
 
அவ்வையார் மூதுரை

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாத

ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்

நீர் மேல் எழுத்துக்கு நேர். 2

Help rendered to the good

Is like a carving on a rock

Help given to the heartless


Is like writing on a watery track
 
Senior republicans want to dump

The vulgar and vile tongued Trump

Whose chances to win have become bleak

After his infamous video leak

In this mighty electoral game

He has become a national shame
 
பென் (pen) மொழிகள்

If you control yourself

And win over your emotions

you are a holy saint.

If emotions and temper


take control of you,


you are an unholy giant
 
Pakistan is a breeding ground of terrorism
Works against the values of humanism
It is terrorists' haven and their utopia
suffering from an anti Indian phobia
Keeping the illegally occupied property
And lacking civility and propriety
It wants to seize Kashmir by hook or
crook
Which India can no more brook
It exports terrorist to India and
Causes intrusion of its forces
Like a thief to destabilise India and suck its resources
It was Mumbai some years back
It was Pathankot in recent days
Its atrocities in Uri sector
Causing woeful spectre
No use warning the neighbour
Words cannot mend this traitor
What we need is immediate action
And reduce our enemy to a fraction
It is time for us to support Baluchistan
And encourage them to work against Pakistan
It is time we liberate Kashmir that is
occupied
And merge it with Kashmir in our side
Now it is Uri where they indulged in a shameful act
Unmindful of political delicacy and tact
Causing many of our army men to perish
Creating conditions that are nightmarish
It is time we rescind its MFN status
Cut economic and trade ties and create a hiatus
We have waited for too long and it is very late
It is time that Pakistan is declared a rogue state
 
பென்(pen) மொழிகள்
Development without destruction
Plants with no pollution effluxion
Progress without plundering nature
These alone can save our earth's future
 
Even though I would like to weep

I feel like Laughing nonstop

When I see what these men do

When they stand on the dais

They talk as if they are very wise

They promise the moon

And that too very soon

The minute they come down

They talk like a foolish clown

With money in their hands

They make even an ass to dance

On listening to them, the poor man

becomes their immediate fan

His weakness, these people use

To get votes unmindful of their views

Stashing money in unforeseen corners

Many of these pose as if they are donors

They behave as if they are great

But in fact they are cheats as on date

But people mistake them to be leaders

And act at all times as their cheerleaders

When i think of all these things

I feel like laughing nonstop

Even though i would like to weep"
 
சிறு கதை
எல்லாமே ரெடிமேட் மயம் ஜகத்!
அன்று:
"துணி வாங்கித் தைக்கக் கொடுத்து லோலோன்னு டெய்லர் கடைக்கு அலைஞ்சு சட்டையோ, பேண்டோ, ப்ளவுசோ தெச்சு வாங்கறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுது. அதனாலே ஒரு டெய்லரிங் மெஷீன் வாங்கிக் கொடுங்க. எனக்கு டெய்லரிங் தெரியும். நானே இனி நமக்கு வேண்டிய டிரஸ்ஸையெல்லாம் வீட்டுலேயே தெச்சுக்கப் போறேன். செலவும் மிச்சம். டெய்லர் கிட்டே போய்த் தொங்க வேண்டிய அவசியமும் இல்லே. ரெடிமேட்லே வாங்கினா கொஞ்சம் முன்னே பின்னேத்தான் இருக்கும். கரெக்டா ஃபிட் ஆகாது" ன்னு சொன்னே. சரின்னு நான் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்தேன். ஆரம்ப சூரத்தனம்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி வாங்கின ஒரு வாரம் அந்த மெஷினை டர் புர்ருன்னு ஓட்டி நாலைஞ்சு ப்ளௌசுகளைத் தெச்சே. அப்புறம் அதை உபயோகப் படுத்தின மாதிரியே தெரியல்லியே. ஏன்? என்ன ஆச்சு?
"அது ரொம்ப நேரம் இழுக்குதுங்க. ரொம்ப நேரம் தெச்சா முதுகுவலியும் கழுத்து வலியும் வருது. அதனாலே அதை உபயோகிக்கிறதை நிறுத்திட்டேன்".
"அப்படின்னா மறுபடியும் டெய்லர் கிட்டே தான் போகணுமா?"
"ஊஹும். வேணாங்க. ரெடிமேடா வாங்கிப் போம்".
"அது சரியா வராதுன்னு சொல்லித் தானே நீ தையல் மெஷினையே கேட்டே".
"அதனாலே என்னங்க? சைஸ் சரியில்லேன்னா, இப்ப ரெடிமேட் கடைகளிலே எல்லாம் ஆல்டர் பண்ணித்தர அவங்க டெய்லர்களே இருக்காங்க. ஒரு நிமிஷத்துலே ஆல்டர் பண்ணிக் கொடுத்துடுவாங்க".


எல்லாமே ரெடிமேட் மயம் ஜகத்! தொடருகிறது...(2)
"காப்பிக் கொட்டையை கடையிலேயிருந்து வாங்கி அதை வீட்டிலேயே வறுத்து அறைச்சி பொடியை ஃபில்டர்லே போட்டு அதுலே வென்னீரை ஊத்தி அந்த டிகாக்ஷன்லே காஃபி போட்டாத்தான் கும்பகோணம் டிகிரி காஃபி மாதிரி இருக்கும். உங்களுக்கு அதுதான் ரொம்பப் பிடிக்குமாச்சே. அதனாலே காஃபி கிரைண்டர் வாங்கிக் கொடுங்க"ன்னு கேட்டே. நானும் வாங்கிக் கொடுத்தேன். ஆனா அதை மூணே நாள்லே தூக்கி எறிஞ்சிட்டு காஃபி மேக்கர் கேட்டே. அப்பப்போ காஃபிப் பொடி கடையிலிருந்து வாங்கிட்டு வந்து காஃபி போட ஆரம்பிச்சே. ஏன்னு கேட்டதுக்கு "கும்பகோணம் காஃபி சாப்பிடாட்டா உயிரா போயிடும்? இந்தக் காஃபி மேக்கர் காஃபியும் நல்லாத்தான் இருக்கு. இதையே சாப்பிடுங்க"ன்னு சொன்னே. என்னமோ நான் ஒருத்தன் தான் இந்தக் காஃபியை சாப்பிடற மாதிரியும் நீ என்னவோ காஃபியே குடிக்காத மாதிரியும் பேசினே. இப்ப என்னடான்னா காஃபி மேக்கரையும் தூக்கி எறிஞ்சிட்டு இப்ப என்னை இன்ஸ்டண்ட் காஃபி வாங்கிக் கிட்டு வரச் சொல்றே".
"ஆமாங்க. ஆம்பிளைங்க உங்களுக்கு எங்கே பொம்பளைங்க கஷ்டம் புரியப் போகுது? நெனச்சா நீங்க உங்க ஃப்ரெண்டுகளை வீட்டுக்குக் கூப்பிட்டுக்கிட்டு வந்து எல்லாருக்கும் காஃபி கொடுக்கச் சொல்வீங்க. அதுக்கு இனஸ்டண்ட காஃபி கொடுக்கிறது தான் ஈஸி வழி. அது புரியாம நீங்க பேசாதீங்க".


எல்லாமே ரெடிமேட் மயம் ஜகத்! தொடர்கிறது (3)
(இடைப்பட்ட நாட்களில்)
"ஆட்டுக் கல்லுலே இட்லிக்கு மாவு அரைக்கிறது கஷ்டமா இருக்கு. மிக்ஸி இருந்தா சௌகரியமா இருக்கும்னு சொன்னே. அதுக்காக மிக்ஸி வாங்கிக் கொடுத்தேன். கொஞ்ச நாள் கழிச்சி இட்லி மாவு அரைக்க மிக்ஸி லாயக்கில்லே. சட்னி மாதிரி சமாசாரங்களுக்குத்தான் அது லாயக்கு. அதனாலே வெட் கிரைண்டர் வாங்கிக் கொடுங்கன்னு கேட்டே. வாங்கிக் கொடுத்தேன். இப்ப வீட்டுலே மிக்ஸி இருக்கு, வெட் கிரைண்டர் இருக்கு. ஆனா அதையெல்லாம் ஏன் நீ உபயோகிக்க மாட்டேங்கறே?"
"நீங்க வேறே. யாருங்க அந்தக் கல்லை தினமும் தூக்கி எடுத்து நல்லாக் கழுவி அப்புறம் கிரைண்டரையும் முழுசா தினமும் சுத்தம் செய்யறது? போதாததுக்கு கையை வெட்டிக்காம இந்த மிக்ஸியைக் கிளீன் பண்றதும் பெரிய பாடா இருக்கு. இதுக்குப் பழைய ஆட்டுக்கல், அம்மிக் கல்லே தேவலை. அதிலேயும் குறிப்பா நான் அரைக்க ஆரம்பிக்கும்போது பாத்து சொல்லி வெச்சாப்பலே கரண்ட் இருக்கிறதில்லை."
"அப்படின்னா ஆட்டுக் கல், அம்மிக் கல்லைத்தான் உபயோகிக்கப் போறியா?"
"ஊஹூம். இப்பத்தான் ரெடிமேட் இட்லி தோசைமாவே கிடைக்குதே. அதை வாங்கிட்டாப் போச்சு".
(சில நாட்கள் கழித்து)
"ஏன் ஹோட்டலுக்குப் போய் இட்லி வாங்கிக்கிட்டு வரச்சொல்றே என்னை? அதான் ரெடிமேட் மாவு இருக்கு இல்லே? அப்புறம் என்ன?"
"மாவு இருந்தா ஆச்சா? இட்லி தோசைக்குத் தொட்டுக்க சட்னி, சாம்பார் இல்லேன்னா நீங்க சாப்பிடுவீங்களா? அதான் சொல்றேன் பேசாம ஹோட்டலுக்குப் போய் இட்டிலி தோசை வாங்கிக்கிட்டு வந்துடுங்க".
எல்லாமே ரெடிமேட் மயம் ஜகத்!தொடர்கிறது (4)
"கார்ப்பரேஷன் குழாய்த் தண்ணியிலே புழு இருக்குன்னு சொன்னே. நானும் பாத்தேன். இந்தத் தண்ணி சுத்தம் பத்தாதுன்னு நீயும் உன் பக்கத்து வீட்டு சிநேகிதி பத்மா அவ வீட்டுலே வச்சிருக்கமாதிரி தண்ணி சுத்தீகரிக்கிற ப்யூரிஃபயர் வேணும்னு கேட்டே. வாங்கிக் கொடுத்தேன். நீயும் அதுலே தண்ணியை சுத்தம் பண்ணி அந்தத் தண்ணியைத்தான் இனிமேலே குடிப்போம்னு சொன்னே. அந்த மாதிரி மூணு மாசமா அதை உபயோகிச்சிட்டு இருந்தே. இப்ப ஏன் அதை உபயோகப்படுத்தாம கேன் வாட்டர் வாங்கணும்னு சொல்றே?"
"அதை ஏன் கேக்கறீங்க? அதுலே ரொம்ப மெல்லிசா தண்ணி வருதா, அதைப் பாத்திரத்திலே பிடிச்சு வெக்கவே ரொம்ப நேரம் ஆகுது. வேலைக்காரிக்கிட்டே சொன்னா அவ இது என்னோட வேலை இல்லேங்கறா. அப்படிப் பிடிச்சாலும் அந்தத் தண்ணியிலே கையைப் போட்டு உளப்பறா. அதனாலே நானே தான் தண்ணி பிடிக்க வேண்டியிருக்கு. அதைத் தவிர அப்பப்போ சுத்தம் பண்ணி மெயின்டெயின் பண்றது பேஜாரா இருக்கு. ஒவ்வொருதடவையும் கம்பெனிக்கு ஃபோன் பண்ணி அவங்க ஆள் வந்து ப்யூரிஃபயரை சுத்தம் செய்யறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுது. காரண்டி பீரியட் முடிஞ்சா அதுக்கு வேறே தண்டமா 600 இல்லை 700 ன்னு செலவு பண்ண வேண்டி இருக்கு. அந்த பத்மா கூட இந்த உபத்திரவம் எல்லாம் வேணாம்னுட்டு இப்ப கேன் வாட்டர் வாங்க ஆரம்பிச்சுட்டா.
"இப்ப புரியுது உன்னோட அட்வைசர் யாருன்னு"
அதை விடுங்க. கேன் வாட்டர் வாங்கினா பிரச்சினையே இல்லை. ஒரு ஃபோன் பண்ணினாப் போதும். அடுத்த அரை மணி இல்லே ஒரு மணி நேரத்துக்குள்ளே டாண்ணு தண்ணீர் கேன் வந்து சேர்ந்துடும். அதான்".


தொடரும்
எல்லாமே ரெடிமேட் மயம் ஜகத்!தொடர்கிறது (5)
"நான் உனக்கு ரெடிமேட் சப்பாத்தி மேக்கர் வாங்கித் தந்தேனே. என்ன ஆச்சு?"
அதை ஏன் கேக்கறீங்க? அந்தப் பாழாப் போன சப்பாத்தி மேக்கர் டிவியிலே அவங்க காட்டும்போது பார்க்க ரொம்ப நல்லாத்தான் வேலை செய்யுது. அமர்க்களமா உப்பி சப்பாத்தி வரதைப் பாத்துத்தான் ஆசைப் பட்டுக் கேட்டேன். நீங்களும் வாங்கிக் கொடுத்தீங்க. ஆனால் நான் என்ன தான் செஞ்சாலும் சப்பாத்தி நம்ம வீட்டிலே அந்த மாதிரி வரவே மாட்டேங்குது. அது என்ன ரகசியமோ தெரியல்லே?"
"அதனாலே அதைத் தூக்கி எறிஞ்சிட்டு பழையபடி கல்லுலே கட்டையை வச்சி உருட்டி உருட்டி செய்யப்போறியா?"
"அது முடியாதுன்னுதானே அந்த சப்பாத்தி மேக்கரை வாங்கினேன். திரும்பவும் அதுக்கே போனா எப்படி?"
பின்னே என்னதான் பண்ணப் போறே?
"இப்பத்தான் எல்லாக் கடையிலும் ரெடிமேட் சப்பாத்தியே விக்குதே. அதை வாங்கிட்டாப் போச்சு".
"ஆனா தொட்டுக்கறதுக்கு நீ ஏதானும் செய்ய வேண்டி இருக்குமே?"
"அதுக்குக்கூட ரெடிமேட் சமாசாரங்கள் எல்லாம் வந்திடுச்சே. அதை வாங்கிட்டாப் போச்சு".
"அதுவும் சரிதான். ஆனா அப்பக்கூட அந்தப் பொட்டலத்தைப் பிரிச்சி அதுலே என்ன டைரக்ஷன் கொடுத்திருக்காங்களோ அது மாதிரி செய்யணுமே. அது போர் இல்லியா?
அதுவும் ரெடிமேடா வந்துடும் கொஞ்ச நாளிலே".
"எல்லாம் ரெடிமேடாக் கிடைக்கிற இடம் ஹோட்டல் இருக்கும்போது உனக்கு என்ன கவலை? அதுவும் இப்ப அநேகமா எல்லா ஹோட்டல்களிலேயும் கூட ஹோம் டெலிவரி செர்விஸ் ஆரம்பிச்சி இருக்காங்க. ஹோம் டெலிவரியே நம்ம மாதிரி ஆளுங்களுக்குத்தான் இருக்கு. அப்புறம் என்ன ? அதனாலே நம்ம கிரைண்டர், சப்பாத்தி மேக்கர், தண்ணி ப்யூரிஃபயர் எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிடுவோமா?"
"ஊம். அதையெல்லாம் ஒண்ணும் தூக்கி எறிய வேண்டாம். ஒரு ஆபத்து அவசரத்துக்கு இருந்துட்டுப் போகட்டும்".
தொடரும்




எல்லாமே ரெடிமேட் மயம் ஜகத்!தொடர்கிறது (6)
(இன்று)
"நீங்க கம்ப்யூட்டர் வாங்கும்போது என்ன சொன்னீங்க? நான் ஆன் லைன்லயே இனிமே ரயில் டிக்கெட், ப்ளேன் டிக்கெட் எல்லாம் புக் பண்ணிடுவேன். இனிமே மணிக் கணக்குலே க்யூலே நிக்க வேண்டிய அவசியமேயில்லை. டிராவல் ஏஜென்ட் கிட்டேயும் போக வேண்டியது இல்லை. ஃபோன் பில், கரெண்ட் பில், வீட்டு வரி இப்படி சகலத்தையும் நான் இனிமே வீட்டிலே உக்காந்துகிட்டே பே பண்ணிடுவேன்னு சொன்னீங்க? செஞ்சீங்களா? பேயும் பண்ணல்லை. பிசாசும் பண்ணல்லை. கேட்டா எனக்கு பாஸ் வேர்டு எல்லாம் குழம்பிப் போகுது, இல்லே மறந்து போகுது. கம்ப்யூட்டர் விவரங்களையெல்லாம் திருடறாங்க. ஆன்லைன்லே அடிக்கடி போனா நம்ம பாங்க் மற்றும் மத்த முக்கியமான விவரங்களெல்லாம் அவங்க கைக்குப் போயிட்டா நம்ம பணமெல்லாம் அரோகரா ஆயிடும்னு சொல்லி பழைய படி நீங்க க்யூலே நின்னு காத்திருந்துதான் டிக்கெட் எல்லாம் வாங்கறீங்க. ஃபோன் பில், எலக்டிரிசிடி பில், வரி கட்டறதெல்லாம் பழைய மாதிரி க்யூவிலே நின்னு காத்திருந்து தான் பே பண்றீங்க. நான் இதை யார் கிட்டே போய்ச் சொல்றது? அதனாலே நீங்க உங்க கம்ப்யூட்டரைத்தூக்கிப் போடும்போது என்னோடே கிரைண்டர், மிக்ஸி எல்லாத்தையும் தூக்கிப் போடலாம்".
"அதெல்லாம் இல்லை. இனிமேல் டிராவல் ஏஜென்ட் மூலம் டிக்கெட் வாங்கிடுவேன். நம்ம காம்ப்ளக்ஸ் அசோசியேஷன் மூலமா வரி யெல்லாம் கட்டிடுவேன்".
"என்னைச் சொன்னீங்களே? உங்களுக்கும் இப்ப எல்லாம் ரெடிமேடா நடக்கணும்னு ஆசைதான். அது சரிப்பட்டு
வராததாலே உங்க வேலையையெல்லாம் செய்ய ஆள் தேவைப்படுது". இல்லியா?.
தொடரும்
எல்லாமே ரெடிமேட் மயம் ஜகத்!தொடர்கிறது (7)
"அது சரி. டாக்டர் இந்த மாதிரி சொல்லிட்டாரே நம்ம ரெண்டு பேருக்கும் குழந்தை பிறக்கிறதுக்கான சான்ஸே இல்லேன்னு".
"நீயோ ரெடிமேட் ஆசாமி. எல்லாம் தயாரா உனக்கு உடனே கிடைக்கணும். அதான் ஆண்டவன் உன்னாலே பத்து மாசம் பொறுமையா சுமந்து குழந்தை பெக்கப் பொறுமையில்லேன்னு தான் குழந்தை பாக்கியத்தைக் கொடுக்கலையோ என்னவோ?"
"நீங்க சும்மா இருங்க. என்னைக் குத்திக் காட்ட நேரம் கிடைச்சா விட மாட்டீங்களே".
"வாடகைத்தாய் (surrogate mother) மூலமா குழந்தை பெத்துக்கறதைப்பத்தி உன்னுடைய ஐடியா என்ன ?"
"வேணாங்க. அதுலே நிறைய சிக்கல் இருக்கு. அது மட்டுமில்லை. அந்த ஐடியாவே எனக்குப் பிடிக்கலை. அதுக்கும் பத்து மாசம் காத்துக்கிட்டிருக்கணும்".
"அப்படின்னா ரெடிமேடா ஒரு குழந்தை வேணுங்கறே. அதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு. என்னங்க அது"?
"அதுதான் ஏற்கெனவே பிறந்த ரெடியா இருக்கிற ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக்கிறதுதான்".
வாழ்க்கையிலே எல்லாமே ரெடிமேட் ஆனது மட்டுமில்லாம வாழ்க்கையே ரெடிமேட் ஆயிடுத்து. உம்.
ஆனாலும் அவரவர்களுடைய வாழ்க்கையை அவரவர்கள்தான் வாழ்ந்தாகணும். அதற்கு பதிலான குறுக்கு வழியோ அல்லது ரெடி மேடான தீர்வோ எதுவும் கிடையாது.
முற்றும்






 
அவ்வையார் பாடல்கள் மூதுரை

சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும்

கந்தம் குறை படாது; ஆதலால்-தம்தம்

தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால்

மனம் சிறியர் ஆவரோ மற்று?

However much the sandalwood is ground,

Its smell would not get shrunk

Even in their dire adversity it is found

the nobility of the great will not get sunk
 
பென் ( pen) மொழிகள்




Work is what we do with an aim

It may be to earn money or for a gain

But duty is what we do as part of service

not hoping for any return or gain

Raising children until they are on their own

Caring the aged parents without groan or a moan

Helping the deaf, the dumb and the blind

With a very courteous and unreserved mind

Are duties done for no gain of any kind

Work is more mundane, physical and oral

Duty is more divine, spiritual and moral
 
Some say Idli is bland
I feel Idli is grand
They say Idli is a waste
Since it doesn't have any taste
But to me with sambar and chutney
Idli is a super breakfast over many
This controversy is going on for ages
I can write about it many pages
Idli with the right accomplishment
Gives one a good nourishment
Idli has a foreign origin, some say
It entered India through Karnataka one day
The world today acknowledges it as the best breakfast
For idli's sake, i am prepared to go on fast
Love idli and give it its due place in your daily menu
You can make it in your kitchen: no need to go to a different venue
As I already pointed out, idli is not deadly
Let us treat it with due respect very kindly
 
Deepavali is a festival of light and sound
A national festival celebrated all round
Make the deafening sounds lighter
Make the day for everyone brighter
Avoid cracking deafening bombs
Knowing pretty well the resulting harms
Handle with care the fireworks that brighten the sky
Without gutting houses and affecting your eye
Let us all enjoy this festival without damage
Irrespective of one's status, style and age
Let us not make it a festival of pollution
Let us make it a day of joy and jubilation
 
பென் ( pen) மொழிகள்
Name and fame cannot absolve one of any crime
A crime is a crime committed nonchalantly any time
Law should not buckle and break before one's popularity
Justice should never become the victim of one's personality
 
She is only a homemaker: she has no work




Patrick came home from work and found his three children outside, still in their pyjamas, playing in the mud, with empty food boxes and wrappers strewn all around the front garden.




The door of his wife, Valerie's car was open, as was the front door to the house and there was no sign of the dog. Proceeding into the hall, Patrick found an even bigger mess. A lamp had been knocked over, and the rug was piled up against one wall. In the front room the TV was loudly blaring a cartoon channel, and the family room was strewn with toys and various items of clothing.




In the kitchen, dishes filled the sink, breakfast food was spilled on the worktop, the fridge door was open wide, dog food was spilled on the floor, a broken glass lay under the table, and a small pile of sand was spread by the back door.




Patrick quickly headed up the stairs, stepping over toys and more piles of clothes, looking for Valerie. He was worried she might be ill, collapsed, that something serious had happened.




He was met with a small trickle of water as it made its way out the bathroom door. As he peered inside he found wet towels, scummy soap and more toys strewn over the floor. Miles of toilet paper lay in a heap and toothpaste had been smeared over the mirror and sink.




As he rushed to the bedroom, he found Valerie still curled up in the bed in her pyjamas, reading a novel. She looked up at him, smiled, and asked how his day went.




Patrick looked at Valerie, bewildered and asked, 'What happened here today?'




Valerie again smiled and answered, 'You know every day when you come home from work and you ask me sarcastically what in the world I do all day?'




'Yes,' was Patrick's startled reply.




Valerie answered, 'Well, today, I DIDN'T DO IT.'
 
பென் (pen) மொழிகள்

Silence is considered golden

That was in the days olden

Silence today is considered regressive

With a negative connotation

And noise quite aggressive

With a positive connotation

Silence is associated with depression

Noise is associated with expression

Silence is indicative of social seclusion

Noise is indicative of social inclusion

Silence is a form of punishment

And leads to a sort of a confinement

Noise is a sort of accomplishment

And is a part of social excitement

Highly vocal people only succeed

The silent only fail and recede

The speaker only becomes a leader

The dumb slides down the ladder
 
பென் (pen) மொழிகள்

To enjoy a lecture, you need not be a teacher

To enjoy a hymn, you need not be a preacher

To enjoy music, you need not be a musician

To enjoy a fan, you need not be an electrician

To enjoy an art, you need not be an artist

To enjoy a lyric, you need not be a lyricist

To enjoy a book, you need not be a writer

To enjoy wrestling, you need not be a fighter

To enjoy a dance you need not be a dancer

To enjoy a fight, you need not be a lancer

To enjoy food, you need not be a cook

To enjoy a joke, you don't need a book

To enjoy a film, you need not be an actor

To enjoy health, you need not be a doctor

All that you need is a taste and a mind

Based on common sense, that is what we find
 
பென் (pen) மொழிகள்

A small stone held close to the eye can hide the moon

The same held a little away will make it a speck soon

If you keep your troubles close to your mind

And make it your integral part, you go blind

But the minute you keep the trouble far away

you see the problem shrinks and paves the way
 
பென் (pen) மொழிகள்

Let not failures fluster you

Setbacks sadden you

Disappointments disturb you

Keep your mind strong and agile

All your troubles will go brittle and fragile

Surround yourself with people who matter

And by those for whom you matter

Believe in yourself that nothing is impossible

Don't give up or cave in, until you become invincible
 
City facing adversity

The cyclone in all its ferocity

Crossed at super critical velocity

Causing severe damage with its high intensity

To the basic infrastructure of the entire city

As never before in its annals of Chennai

Shattering all panels and making people cry

Uprooting thousands of roadside trees

The sight of which makes one freeze

Blocking all the arterial city roads

Blowing away many of the billboards

Bringing traffic to a dead halt

That was no individual's fault

The electric poles were turned and bent

Cutting the supply of current

Immersing the city into deadly darkness

Reducing the city to a state of starkness

Cars and vans were swept aside like toys

Causing anxiety and killing the people's joy

A few were really killed in the ghastly fury

Many others suffered serious injury

Rooftops of buildings were blown

Vardha is the name of this latest cyclone.

It is this that devastated Chennai this year

It was deluge that inundated Chennai last year

The lessons that we learnt then

Helped to face the present calamity by our men
 
Hundred years from now




It will not make much difference friend, a hundred years from now,

If you live in a stately mansion or a floating river scow.

If the clothes you wear were a tailor made or just pieced together somehow,

If you eat big bread or beans and cake a hundred years from now.

Won't matter what your bank account or the maker of car you drive,

For the grave will claim all your riches and fame and the things for which you strive.

There's a deadline that we all must meet, noone will show up late.

It won't matter all the places you've been, each one will keep that date.

We will only have in eternity what we gave away on Earth.

When we go to the grave we can only save the things of eternal worth.

What matters friend the earthly gain for which some men will bow?

For your destiny will be sealed you see a hundred years from now.
 
My prosaic verse

The lament of a lady

We are afraid of even walking

Because of the fear of stalking

We are groped in light and in the dark

In public streets or in a public park

Some develop an one sided love

and if for their wish, we do not bow

We are subject to rape or acid attack

Or a murderous hit or a deadly whack

For our cause, we have no defenders

Most people seem to support the offenders

We are blamed for no fault of ours

justice denied, we are left to grieve for hours

We are not just objects of lust

We are also humans at our best

With a soul, a brain and a heart

and are in no way inferior but are smart

We have emotions and feelings

As in all day today human dealings

The victims are stigmatised and blamed

The culprits go scot free unashamed

Day in and day out we are only advised

The guilty are never punished nor chastised

The offenders seem to have a birth right

To molest and grope ladies day and night

Being born as a female is a woeful accident

But being born as a male is a happy incident

Why the hell is this discrimination?

Is this the bane of our mighty nation?

Parents and society have a role to play

By training the boys in the right way

And not by criticising the girls who suffer

Rather than being born a girl, death, I prefer
 
கற்பனைக் குதிரை 3

சென்ற ஆண்டு பொங்கலுக்கு முன் எழுதப்பட்ட கதை




பொங்கலோ பொங்கல்

ராகு

தை பிறக்குது, தை பிறக்குது, பொங்கல் வருது, பொங்கல் வருது என்று அவரவர்கள் கொட்டாய் விட்டு முடியும் நேரத்தில், அதாவது விடியும் நேரத்தில், குடுகுடுப்பைக்காரர் வாக்குச் சொல்ல அதைக்கேட்டு அரைத் தூக்கத்தில் இருந்த சில இளம் கன்னியர் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற நம்பிக்கையில் மறுபடியும் இழுத்துப் போர்த்திக்கொண்டு தங்கள் கனவுகளைத் தொடர்ந்தனர்.

ஆனால் அதே நேரத்தில் குடுகுடுப்பைக்காரன் சொன்னதைக் கேட்ட பெண்களைப் பெற்ற சில அப்பன்மார்கள் தை பிறந்தால் வழி பிறக்குமோ இல்லையோ, நம் விழி பிதுங்குமே என்று கவலைப்பட ஒரு வழியாகத் தை மாதம் பிறந்தது.

மார்கழி விடியற்காலைக் குளிர் இன்னும் பரிபூரணமாக மறையாததால் இளசுகள் எல்லாம் போர்வையிலிருந்து வெளியே வரத் தயங்கியபடி இருக்க அம்மாக்கள் வாயிலில் சற்று நடுங்கிய கையுடன் தண்ணீர் தெளித்துச் சுண்ணாம்பு மற்றும் சில வண்ணப்பொடிகள் கொண்டு கோலம் போட ஆரம்பித்தனர். தான் உண்ணப் போகும் பொங்கலை நினைத்து நாவில் உமிழ் நீர் சுரக்க தை பிறந்த மகிழ்ச்சியில் அந்த வீட்டுக்குப் பெரிய பாட்டன்மார்கள் அன்றைய பொங்கலில் நிறைய திராட்சையையும் முந்திரிப் பருப்பையும் மறக்காமல் போடச் சொல்லி விட்டு அவரவர் வீட்டுத் திண்ணையிலோ அல்லது ஈஸி சேரிலோ அமர்ந்தபடி பேப்பரைப் படித்தபடி ஒரு சிலரும், பிறர் படிக்க அதைக்கேட்டு ரசித்தபடி ஒரு சிலரும் வழக்கம் போல அரசியல்வாதிகளைத் திட்டியபடியும், அரசாங்கத்தை மோசமாக விமரிசித்தபடியும் அன்றைய அரசியலை அக்கு வேறு ஆணிவேறாக அலசிக் கொண்டு இருந்தனர். தூக்கம் தெளிந்து எழுந்த குழந்தைகள் பொங்கலுக்காக வாங்கி வைத்திருந்த முழுக் கரும்பைப் பார்த்தபடி அதை எப்போது தின்னலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருந்தனர். இந்தப் பல்லில்லாத் தாத்தாக்களும் பாட்டிகளும் எப்படி இதைச் சாப்பிடுவார்கள் என்று அவர்களுக்கு ஒரு நெருடல், ஒரு கவலை. அதே நேரத்தில் பொங்கலுக்கு மாத்திரம் ஏன் இப்படி ஒரு விழா என்று புரியாமல் அவர்களுக்குள் ஒரு குழப்பம். பொங்கலின் பெருமையையும் அதன் மகிமையையும் குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஒரு சில பெரியவர்கள் அவர்களுக்குத் தெரிந்த அளவில் குழந்தைகளை அழைத்து அந்த நேரம் பொங்கல் ரெடி ஆகாததால் அவர்கள் கண்களில் பொங்கலைக் காட்டாமல் பொங்கல் மகிமையை விளக்கினர்.

அன்று டிவியில் பொங்கல் பண்டிகையின் பழமையையும் பெருமையையும் விளக்கும் விதத்தில் சிலப்பதிகார காலத்தில் கண்ணகி செய்த பொங்கல் சிறந்ததா இல்லை மாதவி செய்த பொங்கல் சிறந்ததா என்று நடக்க இருக்கும் சிறப்புப் பட்டி மன்ற நிகழ்ச்சி எப்போதும் போலில்லாமல் ஒரு சினிமா அளவிற்கு இரண்டரை மணி நேரம் நடக்க விருப்பதால், குழந்தைகளை உஷார் படுத்தி " பொங்கல் பற்றி பட்டி மன்றத்தில் பல அறிஞர்கள் நின்று பேசுவார்கள். எல்லோரும் உட்கார்ந்து கேளுங்கள், நீங்கள் பொங்கலைப் பற்றிய பல உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம்" என்று கட்டளை இட்டபடி அவர்களுக்கு முன் இவர்கள் நாற்காலியிலோ தரையிலோ அமர்ந்தபடி டிவியையே உற்றுப் பார்க்க ஆரம்பித்தனர். இந்தப் பட்டி மன்றம் பார்ப்பதில் பொங்கல் சாப்பிடுவதைக் காட்டிலும் அதிக ஆர்வம் காட்டியபடி தமிழ் கூறும் நல்லுலகம் அனைத்தும் அந்த ஆர்வக் கோளாறின் காரணமாக பொங்கல் பண்டிகையை மறந்து அவரவர்கள் சொந்தக்காசு போட்டு வாங்கின டிவி முன்போ இல்லை இனாமாகவோ அல்லது விலை இல்லாப் பரிசாகவோ கிடைத்த டிவி முன்போ அமர்ந்து வாய்க்குள் ஈயா அல்லது கொசுவா எது போகிறது என்று தெரியாமல் கவனித்தபடி பார்க்க ஆரம்பித்தனர். அவர்கள் எதிர்பார்த்த நேரமும் வந்தது. பட்டி மன்றமும் ஆரம்பமாயிற்று. நடுவர் நட்ட நடு சிம்மாசனத்தில் அமர, பேச்சாளர்கள் இரு அணிகளாகப் பிரிந்து அதில் கண்ணகி அணியைச் சேர்ந்தவர்கள் ஒரு புறமும், மாதவி அணியைச் சேர்ந்தவர்கள் எதிர்புறமும் அமைய, நடுநிலையாளர் வணக்கத்துடனும் வழக்கம் போல ஒரு சிரிப்புடனும் தொண்டையைக் கனைக்க, அரங்கமே அதிரும்படி அவர் ஏதோ ஒரு பெரிய ஹாஸ்யத்தைச் சொல்லிவிட்டாரோ என்று சந்தேகப்படும் வகையில் கைதட்டி வாய்விட்டுச் சிரித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். நடுவருடைய வழக்கமான பேச்சாளரைப்பற்றிய அறிமுகங்களுக்குப் பிறகு நடுவர் கண்ணகி அணியைச் சார்ந்த அறிஞரைப் பேச அழைத்தார். அவ்வணியைச் சார்ந்த தமிழ்ப்புலவர் ஒருவர் மேடை ஏறி தன் பையன் தீபாவளிபோல் மத்தாப்பும் பட்டாசும் இல்லாத பண்டிகை ஒரு பண்டிகையா என்று கேட்டதாகவும், பொங்கல் பிடிக்காத பக்கத்து வீட்டைப் பையன் ஏன் இட்டிலிக்கோ, வடைக்கோ, மசாலா தோசைக்கோ இல்லை மசாலா நூடில்ஸுக்கோ இப்படி ஒரு விழா கொண்டாடுவதில்லை என்று ஏக்கத்துடன் கேட்டதனால் அவனுடைய தந்தை அவனைப் பொங்கலுக்கு வாங்கின கரும்பினாலே அடித்ததையும் நெக்குருகச் சொல்லி அது ஒரு அறுவடைத்திருவிழா என்று தான் விளக்கிக் கூறியதாகவம், அதைக் கேட்டு , மற்றவர்களைக் காட்டிலும் அறிவுத்திறன் அதிகம் படைத்த தன் பையன் ஒரு வடைகூட இல்லாமல் கொண்டாடப்படும் இவ்விழா எப்படி அறுவடைத்திருவிழா என்று பெயர் பெற்றது என்று கேட்டதாகவும், பரீட்சை ஹாலில் கேட்ட கேள்விக்கு விடை தெரியாமல் முழிக்கும் மாணவர்கள் போல தான் முழிக்க நேர்ந்ததையும் கடைசியில் எவ்வாறு அந்தப் பையனை சமாதானப் படுத்தினார் என்பதையும் முகவுரையாகக் கூறி கண்ணகி செய்த பொங்கலின் பெருமையை விளக்கினார். இன்னொருவர் எவ்வாறு இளங்கோ அடிகள் கண்ணகியின் பொங்கற் சிறப்பையும் பூம்புகாரில் கொண்டாடப்பட்ட இந்திரவிழாவைவிட இது எவ்வாறு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என்பதையும் அவரது கட்டைக் குரலில் இளங்கோ அடிகளே ஏன் இப்படிப் பாடினோம் என்று மனம் நொந்து போகும் அளவிற்கு பாடி முடித்து மேலும் புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, கலிங்கத்துப்பரணி என்று தனக்குத்தெரிந்த நூல்களைப் பற்றி பலரும் இவற்றை எல்லாம் படித்து இருக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் கிடைத்த முப்பது நிமிடங்களில் விளாசித்தள்ளி கண்ணகி செய்த பொங்கலின் சிறப்பை எடுத்துக்கூறினார். அடுத்தவர் பொங்கலன்று பொங்கலைச்சாப்பிடலாம். தீபாவளி அன்று தீபாவளியைச்சாப்பிட முடியுமா என்று ஆரம்பிக்க இந்தப் பட்டிமன்றக் கட்டிடமே இடிந்து விழுமளவிற்குக் கை, கால்தட்டலுடன் கட்டடம் கிடுகிடுத்தது. எப்படி எல்லாப் பண்டிகைகளை விடவும் பொங்கல் மிகச்சிறந்த பண்டிகை என்பதை மற்ற பண்டிகைகளோடு ஒப்பிட்டுப்பேசி, கடைசியில் தான் கண்ணகி அணியைச் சேர்ந்தவர் என்று நினைவு வந்தவராக " எனவே, கண்ணகிப் பொங்கல் என்ற சொல் எப்படிக் காணும் பொங்கல் என்று மருவிற்று என்பதற்கு மற்றவர்கள் சொல்ல மறந்து போன தமிழ் இலக்கியங்களிலிருந்து பாயின்ட் பாயின்டாக ஒரு சில பாயின்டுகளை அள்ளி வீசினார். அப்போது எழுந்த கை தட்டலில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு சிலரும் திடீரென்று கண் திறந்து பார்த்துத் தாங்கள் பட்டிமன்றத்தில் இருப்பதை உணர்ந்து சரிந்து கொண்டு இருந்த நிலையிலிருந்து எழுந்து சரியாக சீட்டில் உட்கார்ந்தனர். பட்டி மன்றத்தில் பேசியவர்களைவிட இந்தக் காட்சியை டிவி நேயர்கள் அதிகமாக ரசித்ததாகக் கேள்வி. கண்ணகி அணிக்கு எதிர் அணியினரோ எதிரணிக்குச் சற்றும் சளைக்காமல் கண்ணகியின் பொங்கல் பழமை கலந்தது, மாதவியின் பொங்கல் புதுமை நிறைந்தது என்று கண்ணகி அணியினர் சொன்ன அதே நூல்களிலிருந்து மேற்கோள் காட்ட, நடுவர் திணறிப்போனார். அடுத்து வந்தவர் ஏன் பொங்கலுக்கு மாத்திரம் தனித் திருவிழா, மற்றத் தின்பண்டங்களுக்கு ஏன் இதுவரையிலும் திருவிழா எடுப்பதில்லை, அதற்கு எவ்வாறு கண்ணகிதான் மூலகாரணம் என்பதை யாராலும் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு செய்யுள் மூலம் விளக்கினார். முன்னாளில் செங்கல் திருவிழா எவ்வாறு தமிழனின் கட்டிடக்கலை அறிவை வெளி உலகிற்குக் காட்ட கொண்டாடப் பட்டது என்பதையும் அது எவ்வாறு நாளாவட்டத்தில் அல்லது சதுரத்தில் பொங்கல் விழாவாக மாறியது என்பதையும் அவையோரின் அட்டகாச ஆர்ப்பரிப்பின் மத்தியில் எடுத்து உரைத்தார். இப்படி ஆண்மணிகளே இவ்வளவு ஆரவாரத்துடன் பொங்கலைப்பற்றிப் பேசும் போது ஆரவாரத்திற்கே மூலகாரணமான பெண்மணிகள் சும்மா விட்டு விடுவார்களா?

கண்ணகி சார்பில் பேசிய பெண் கண்ணகி பழங்காலத்தைச் சேர்ந்தவராயினும் அவர் செய்த பொங்கலை மிஞ்சக்கூடிய மணமும் சுவையும் இன்றைக்கு நாம் செய்யும் குலோப்ஜானாக இருந்தாலும் சரி, ரஸகுல்லாவாக இருந்தாலும் சரி எந்தப் பதார்தத்திலும்கிடையாது என்பதைக் கேட்போர் நாவிலிருந்து உமிழ்நீர் சொட்டி அவர்களது உள்ளங்களையும் உடலையும் நனைத்தது. அந்தப் பெண்மணி அதற்கும் ஒரு படியோ, லிட்டரோ மேலே போய் கண்ணகி தயாரித்த பொங்கலின் ரெசிபியை ஒவ்வொன்றாக அதற்கான இலக்கிய இலக்கண நயங்களுடனும், உதாரணங்களுடனும் விளக்கினார், இதைக் கேட்ட நடுவர் இந்தப் பொங்கலை அங்கேயே அப்போதே சாப்பிடவேண்டும் என்ற தன்னால் கட்டுப் படுத்த முடியாத தன் அவாவை "வாவ்" என்று கூறி அடக்கிக் கொண்டதை பார்வையாளர்கள் ரசித்தனர். அதை எதிர்த்து மாதவியின் பொங்கலைச் சிறப்பித்துப் பேசிய பெண்மணி, மாதவியின் பொங்கல் ரெசிபியையும், அவர் பொங்கல் செய்த விதத்தையும் வீடியோப் படம் போடாக் குறையாக விளக்கி, அது எவ்வாறு மணம், குணம், ரசம் இவற்றில் சிறந்தது என்பதையும், அதில் அறுசுவை மட்டுமின்றி இன்று நம்மால் கண்டுகொள்ள முடியாத ஏழெட்டு சுவைகள் இருப்பதையும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்ற ஐம்பெரும் காப்பியங்களிலிருந்தும் அடுக்கடுக்காக மேற்கோள்களைக்காட்டினார். மற்றும் இன்னொருவர் எவ்வாறு வாசுகி இந்தப் பொங்கலைச் சமைத்துப்போட, அதை உண்ட பிறகுதான் திருவள்ளுவருக்கு திருக்குறள் எழுதும் ஒரு வேகம் வந்தது என்பதை சபையோர் கண்ணகி முற்பட்டவரா இல்லை வள்ளுவர் முற்பட்டவரா என்ற ஆராய்ச்சியில் குழம்ப மெய் சிலிர்க்கும் வகையில் விளக்கினார். மற்றொரு பெண்மணி " இப்பண்டிகையைப் பொங்கல் என்ற தமிழ்ப் பெயரால் அழைக்கிறோம். இப்பொங்கல் என்ற சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் கிடையாது என்று கூறிக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அப்படி இருந்திருந்தால் இன்று இந்தச்சொல் மறைந்து அந்த ஆங்கிலச் சொல்தான் அனைவர் நாவிலும் நடமாடிக் கொண்டு இருக்கும். நல்ல வேளையாகப் பொங்கல் தப்பியது என்றார். மேலும் தொடர்ந்து " பொங்கல் என்றால் அது வெண் பொங்கலாகக்கூட இருக்கலாம். ஆனால் நீங்களோ அதை சர்க்கரைப் பொங்கல் என்று கூறுகிறீர்கள். ஆனால் அதற்கு வெல்லத்தைத்தான் பயன்படுத்துகிறீர்கள். வெல்லப் பொங்கல் என்று சொல்வதில்லையே" என்ற வினாவை என்னிடம் ஓர் விதண்டாவாதி எழுப்பினார். அதற்கு விடை இங்கே கூறுகிறேன். இலக்கியங்களில் பார்த்த போது முதலில் தோன்றியது சர்க்கரைப் பொங்கல்தான் என்றும், வெல்லத்தைப் பயன் படுத்தினாலும் அந்தக்காலத்தில் வெல்லம் கருப்பட்டி என்றும் சர்க்கரை என்றும் அழைக்கப்பட்டதற்கு சர்க்கரைப்பாடியாரின் சர்க்கரைப்பத்து என்ற கவிதைகள் ஆதாரம் என்றும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். பிறகு தொடர்ந்து கண்ணகிதான் அதற்கு சர்க்கரைப் பொங்கல் என்று பெயர் வைத்தாரென்றும் அதற்குப் போட்டியாக அப்போது வெண் பொங்கல் இல்லாததால் அது வெறும் பொங்கலென்றே அழைக்கப் படலாயிற்று என்பதை அவர் அடித்துச் சொன்னதில் அவர் முன் இருந்த மைக் அங்கிருந்து எகிறி மண்டபத்தில் முதல்வரிசையில் அமர்ந்திருந்தவரின் மூக்கைப் பதம் பார்த்தது. இதனால் அங்கு ஐந்து நிமிடம் ஏற்பட்ட தடையில் பேச்சாளர் சாரி சொல்ல, ஒருவர் அந்த மைக்கை மறுபடியும் மேடை ஏற்றி மூக்கில் அடிபட்டவரை தன் கையிலிருந்த பழைய கர்சீஃபினால் துடைக்க அந்த கர்சீஃபின் வாசனையோ அல்லது நாற்றமோ தாங்காமல் மூக்கில் அடி பட்டவர் முனகியபடி வெளியேற பட்டி மன்றம் தொடர்ந்தது.

இவ்வளவு "பழமையான" தமிழருக்கே உரித்தான கண்ணகி-மாதவி காலத்தில் இருந்து கொண்டாடப்படும் இந்த பொங்கல் விழாவைக் கொண்டாடுவது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்று ஒவ்வொருவரும் மாறி மாறிக் கூற, டிவியின் முன்னால் உட்கார்ந்து கொண்டு கேட்டுக் கொண்டிருந்த மூன்றாவது படிக்கும் ஒரு பையன் "ஏம்ப்பா, பொங்கல் இவ்வளவு பழமை வாய்ந்தது என்றால் அது கெட்டுப் போகாமல் இருக்குமா, அதைச் சாப்பிட்டால் வயற்றுக் கோளாறு ஏதும் வந்துவிடாதா?" என்ற தன்தீராத சந்தேகத்தை அருகிலிருந்த தன் தந்தையிடம் கேட்கிறான். அப்போது அவன் தந்தைக்கு வந்த கோபத்தை விவரிக்கவொண்ணாது. இருந்தாலும் நல்ல நாளும் அதுவுமாக அவனை இப்போது அடித்தால் அவன் கூச்சல் போட்டு அழ ஆரம்பித்து விட்டால் பட்டி மன்றத்தைத் தொடர்ந்து காண முடியாது என்ற கரிசனத்தில் அவனைப் பார்த்து "நடுவர் இப்போது தீர்ப்பு அளிக்கும் நேரம் இது. என்னைத்தொந்திரவு செய்யாதே" என்று கூறி அவன் வாயைப் பொங்கல் நுழையாத அளவிற்குப் பொத்தினார். நடுவரும் தன்தரப்பில் எப்படி இரு அணிகளும் பொங்கலை கலக்கு கலக்கு என்று கலக்கினார்கள் என்றும் கண்ணகியின் பொங்கலிலேயே திராட்சை, முந்திரிப் பருப்பு இவை அதிகமாக இருந்ததாகவும், மாதவியின் பொங்கலில் கொஞ்சம் செங்கற் பொடியும், காய்ந்த சில திராட்சைகளும் இருந்ததனால் கண்ணகியின் பொங்கல் கிராம விவசாயிகளின் வீட்டுப் பொங்கல் என்றும் மாதவியின் பொங்கல் வெறும் ஹோட்டல் பொங்கலே என்றும் அதனால் ஹோட்டல் பொங்கலை விட வீட்டுப் பொங்கலே சிறந்தது என்றும் தீர்ப்பளிக்க பட்டி மன்றம் வந்திருந்த அனைவரும் அவரவர்கள் வீட்டிற்குப் போகும் வரை கை தட்டிக் கொண்டே போக பட்டி மன்றம் இனிதே முடிந்தது.

அதைப் பார்த்து முடித்த வீட்டுப் பெரியவர்கள் "சரி பொங்கல் சாப்பிட உட்காரலாமா" என்று அந்த வீட்டு அம்மணிகளைக் கேட்க "அடடா, நாங்களும் பட்டி மன்றம் பார்த்துக் கொண்டு இருந்தபடியால் இன்னும் பொங்கலுக்காக அடுப்பையே மூட்டவில்லை, உலையும் வைக்கவில்லை" என்பதை சோகத்துடன் சொல்லி, வேகமாக காஸ் அடுப்பை ஏற்றி குக்கர்ரை மஞ்சள் இஞ்சிக் கொத்து கொண்ட கொடியினால் சுற்றி அதற்கு மஞ்சள் பூசி ஸ்டிக்கர் குங்குமம் இட்டு "என்னங்க, எதுக்கும் இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ளே பொங்கல் ஆயிடும், கொஞ்சம் நேரமாயிட்டுது பொறுத்துக்குங்க" என்று சொன்னார்கள். இதைக்கேட்ட வீட்டு ஆண்கள் பொறுமை இழந்துப் பொங்கிப் பசி தாங்கமுடியாமல் பொருமினார்கள். ஆனால் அந்த வீட்டுப் பெரியவர்களோ பொரும முடியாத அளவு பசியில் இருந்த படியால் கோபத்தில் பொங்கியவர்களைப் பார்த்து " பொங்கியது போதும். பொறுத்து இருங்கள். நாம் அனைவரும் பட்டி மன்றத்தில் மூழ்கி இருந்து விட்டு இன்று பெண்களை மாத்திரம்குறை சொல்வது அந்தக் கண்ணகிக்கும், ஏன் அந்த மாதவிக்கும் கூட அடுக்காது" என்று கூறி அனைவரையும் சமாதானப் படுத்த பொங்கல் நன்னாள் இனிதே நிறைவேறியது.

ஆமாம், நீங்க என்ன சார், பானை, விறகு அடுப்பு இல்லாம கிராமத்துலே எப்படி சார் குக்கரையும்,காஸ் அடுப்பையைம் பயன்படுத்தறதாச் சொல்றீங்க என்று சில தமிழன்பர்கள் கோபத்துடன் என்னைச்சாட "ஐயா, நீங்க எல்லாம் எந்தக் காலத்துலே இருக்கீங்க? அரசாங்கமே குக்கர், காஸ் அடுப்பு எல்லாத்தையும் எல்லாக் கிராமத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கிய பிறகு கிராம மக்கள் பலரும் தங்களிடம் இருந்த பானை, விறகு அடுப்பு எல்லாத்தையும் எப்பவோ தூக்கி எறிஞ்சிட்டாங்க. அதை எல்லாம் இப்ப ஜனங்க மறந்தே போயிட்டாங்க. இன்னும் நீங்க விறகு அடுப்பு, பானை இதுக்குள்ளேயே இருக்கீங்க. அதுலே இருந்து வெளியே வாங்க" என்று சொன்ன என்னைத் தமிழினத் துரோகி என்று திட்டியபடியே அடுத்த வருடம் போடவிருக்கும் ரோட்டிற்காக சென்ற வருடத்திலிருந்தே மக்களுக்குப் பயன்படுமே என்ற நல்ல எண்ணத்தில் ரோட்டோரம் குவித்து வைக்கப் பட்டு இருந்த ஜல்லி ( இதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்று நினைக்கிறேன்) மற்றும் கருங்கற்களை என்வீட்டின் மேல் பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டபடி எறிந்து மகிழ்ந்தனர்..



--
R. Guruswamy
 
ஜல்லிக்கட்டுக்கதை
இக்கதையும் சென்ற ஆண்டு பொங்கலுக்கு முன் எழுதப்பட்ட கதை
கற்பனைக்குதிரை 4
ஜல்லிக் கட்டுக் கதை ( பகுதி1)
இது ஒரு கட்டுக்கதை அல்ல. நம் தமிழ்நாட்டில் இன்றைய வரலாற்றின் நிகழ்வின் அடிப் படையில் எழுதப் பட்ட இந்த ஆண்டு பொங்கலுக்கு முன்னால் எழுதப்பட்ட ஒரு கற்பனை.
முன்னுரை
பள்ளிக்கட்டு, சபரிமலைக்கு; கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை, சாமியே ஐயப்பா, ஐயப்பா சாமியே,
சாமியேய்........ சரணம் ஐயப்பா என்ற சரண கோஷம் விண்ணை முட்ட மகர சங்கிராந்தி முடிவடையும் நேரத்தில் "ஜல்லிக்கட்டு, தமிழர்களுக்கு; குத்தும், காயமும் உடலுக்கு மெத்தை, அஃதின்றிப் பொங்கலே பொய்யப்பா, ஏறு தழுவுதலே..... மெய்யப்பா, அது தமிழனின் உரிமையப்பா" என்ற கோஷம் போடும் நிலைமைக்கு தமிழர்கள் இன்று தள்ளப் பட்டுவிட்டனர். இதனால் பல வீடுகளிலும் மகிழ்ச்சியும் பொங்கலும் பொங்க வேண்டிய வேளையில் தமிழக மக்களும், அதைவிட வரப்போகும் தேர்தல் காரணமாக, அரசியல் கட்சிகளும் ஆர்ப்பரித்துப் பொங்கும் நிலை தோன்றிவிட்டது. ஜல்லிக்கட்டை பிராணிகளின் வதைத் தடுப்புப் பிரிவின் கீழ் சுப்ரீம் கோர்ட் தடை செய்ததை நீக்க பத்து நாட்களுக்கு முன் ஒரு போராட்டம் நடந்தது. தேர்தல் இன்னும் சில மாதங்களே இருக்கும் இந்நேரத்தில் திடீரென்று தமிழர்களின் வீரம் பற்றிய நினைவு வரவே, கடந்த ஐந்து மாதங்களாக நடந்து வந்த மதுவிலக்கு ஆதரவுப் பிரசாரத்தை தேர்தல் அறிக்கைகளுக்குள் பூட்டிவைத்து விட்டு, முழு ஆவேசத்துடன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிகளும் குதித்தன. மத்திய அரசும் அதே நோக்கத்தை ஒட்டி ஜல்லிக் கட்டு நிகழ்ச்சியை அனுமதித்து ஒரு சட்டம் ஒன்று இயற்ற, நம்பிக்கை இழந்து இருந்த ஒரு சில ஜல்லிக்கட்டு வீரர்களும் ஆர்வத்துடனும், ஆரவாரத்துடனும் எழ, அதுவரையில் அக்கடா என்று இருந்த எருதுகள், ஒரு சோகப் பார்வையுடனும் பயத்துடனும் எழுந்தன. இதனால் தமிழ்நாடே இன்று இரண்டு பட்டு ஒரு சாரார் ஜல்லிக்கட்டை ஆதரித்தும், இன்னொருசாரார் வழக்கம்போல் அதை எதிர்த்தும் நிற்க, மாடுபிடிச் சண்டை சூடு பிடிக்க ஆரம்பித்தது. சபாஷ் சரியான போட்டி என்று இந்தச் சண்டையைப் பற்றி எந்தத் தீர்மானமும் செய்யாத பலர் எட்ட இருந்து வேடிக்கை பார்த்து மகிழ்ந்தனர். இதற்குள் மிருகவதைத் தடுப்புச் சட்ட ஆதரவளர்கள் அதிர்ச்சியுற்று இந்த மத்திய அரசின் சட்டத்தை எதிர்க்க, பொங்கல் இரண்டே நாட்கள் இருக்கும்போது இந்த எருதுச் சண்டைக்குத் தடை விதித்தது சுப்ரிம் கோர்ட். மக்கள் தங்கள் கட்சியை எடுத்துப்பேச, இந்த வாயில்லா ஜீவன்களான எருதுகளுக்குப் பதில் மிருக வதைத்தடுப்புச் சட்ட ஆதரவாளர்கள் குரல் கொடுக்கிறார்கள். ஆனாலும் எருதுகளுக்கு முழு நியாயம் செய்ததாக ஆகுமா? எனவே என்னுடைய இந்தக் கோர்ட்டில் மனிதர்கள் தங்கள் பக்கத்தை எடுத்துச் சொன்ன பிறகு, எருதுகளையே தங்கள் கட்சிக்குப் பேச அனுமதிக்கிறேன்.


பகுதி2


வழக்கம்போல் இல்லாமல், வீண்வாதங்களை எல்லாம் சென்ஸார் செய்து சுருக்கமாக வழங்கப்பட்ட வழக்கின் சாரம் இதோ:
வாதப் பிரதிவாதங்கள்
நீதிபதி: உங்க கட்சி வாதத்தை ஆரம்பியுங்க.


ஜ(ல்லிக்கட்டை ஆதரிக்கும் மக்கள் கட்சியின்) வக்கீல்: நீதிபதி அவர்களே, ஜல்லிக்கட்டு என்பது மஞ்சு விரட்டு என்ற பெயரிலும், மாடுபிடிச்சண்டை என்ற பெயரிலும், ஏறு தழுவுதல் என்ற பெயரிலும் இன்னும் பல்வேறு பெயர்களிலும் தமிழ்நாடு முழுவதும் தமிழனின் ஒரு வீர விளையாட்டாக புராண காலந்தொட்டு அனுசரித்து வரப்படுகிறது. பசுவை லட்சுமியின் அம்சமாகக் கருதுவது போல் .....


எருது வக்கீல்: இங்கே எங்களைப் பற்றிப் பேசாமல் எதிர் கட்சி வக்கீல் பசுக்களை அனாவசியமாக இழுக்கிறார். ( நீதிபதி: அமைதி, அமைதி)


ஜ.வக்கீல்: நான் இங்கு பசுவைப்பற்றி பேச வரவில்லை, மைலார்ட். எப்படிப் பசுவையும், எருதையைம்
மனிதர்கள் கௌரவப் படுத்துகிறார்கள் என்று சொல்ல வந்தேனே ஒழிய பசுவைப் பற்றிப் பேசவரவில்லை.


நீதிபதி: சரி, நேரத்தை வீண் அடிக்காமல் சுருக்காக உங்கள் கட்சியின் கருத்தைச் சொல்லுங்கள்.


ஜ.வக்கீல்: தமிழ்க் கடவுளான சிவனின் வாகனமாகக் கௌரவிக்கப்படும் எருதைப் போற்றுவது தமிழனின் மரபு. இதோ இங்கே நிற்கிறாரே எருது வக்கீல், அவரையும் நாங்கள் மதிக்கிறோம். சாதுப் பசுவுடன் நாங்கள் இந்த வீர விளையாட்டை விளையாடவில்லை. ஆண்மை மிக்க, வீரியம் வாய்ந்த வீர எருதுடன்தான் விளையாடுகிறோம். இது தமிழனின் ஒரு கலாசாரச் சின்னம். இதைத்தடை செய்வது என்பது தமிழினத்தை இழிவு படுத்துவதாகும். இந்த விளையாட்டிற்கு ஏன் தடை?


எ.வக்கீல்: மை லார்ட்,இது ஒரு கொடுமையான விளையாட்டு. இதில் நாங்கள் சித்திர வதை செய்யப்படுகிறோம். நாங்கள் பொதி சுமக்கிறோம். வண்டி இழுக்கிறோம். ஏர் உழுகிறோம். அதைப் பற்றி எல்லாம் என்றாவது நாங்கள் எங்கள் உணவை உண்ணும் நேரம் தவிர, வேறு நேரத்தில் எங்கள் வாயைத்திறந்து இருக்கிறோமா? ஆனால் வீர விளையாட்டு என்று சொல்லி இவர்கள் எங்களின் தோலைக் குத்திக் கிளறிக் காயப்படுத்திப் பலவித இன்னல்களுக்கும், கொடுமைகளுக்கும் உட்படுத்துகிறார்கள். எனவே இதைத்தடை செய்ய வேண்டும்.


ஜ.வக்கீல்: இந்த எருது வக்கீல் இந்த வீர விளையாட்டைப் பற்றி எதுவுமே தெரியாத, ஏன் எருதுகளை வாழ்க்கையிலே பார்த்திராத பல எருமைகளாலும் - மன்னிக்க வேண்டும்- சோணங்கிகளினாலும் தூண்டப்பட்டு இவர் இவ்வாறு பேசுவது பற்றிக்கொண்டு வருகிறது. இதை எதிர்ப்பவர்கள் பெரும்பாலோரும் பண்பற்ற படித்தவர்கள், நகரவாசிகள்தான். நகரத்திலிருந்து நகரா இந்த நகரவாசிகளுக்கு, நம் ஊர் கிராமங்களைப்பற்றியும் அவர்களுடைய பழக்க வழக்கங்களைப் பற்றியும் என்ன தெரியும்? இவர்களுக்கு எருதுக்கும் உள்ள வேறுபாடு தெரியுமா? அவர்கள் என்றாவது ஒரு எருதையாவது அருகிலிருந்து பார்த்திருப்பார்களா? அன்புடன் அதைத் தடவிக் கொடுத்து இருப்பார்களா? அரவணைத்து இருப்பார்களா? கரப்பான்பூச்சி, எருது, எருமை இப்படி எதைக் கண்டாலும் பயந்து காத தூரம் ஓடுபவர்கள் அவர்கள். அவர்கள் பேச்சைக்கேட்டு அவர்களின் வக்கீல் பேசுவதைக் கண்டால் ஏதோ சம்திங் வாங்கிக் கொண்டுதான் இவ்வாறு பேசுகிறார் என்று தோன்றுகிறது


எ. வக்கீல்: இதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன், மை லார்ட். இவர் எங்கள் இனத்தைக் கொடுமைப்படுத்துவது மாத்திரம் இல்லாமல் அவமானமும் படுத்துகிறார். இந்த மனிதர்கள் மாதிரி ஏதவது சம்திங் வாங்கிக்கொண்டு சுயலாபம் பார்க்கும் கயவர்கள் அல்ல நாங்கள். லஞ்சம் வாங்குவதும் ஊழல் செய்வதும், நம்பிக்கைத் துரோகம் செய்வதும் இந்த மனிதர்களின் புத்தி. சுட்டுப் போட்டாலும் எங்களுக்கு இந்தப் புத்தி வராது. ஜல்லிக்கட்டு வேண்டும் என்று மல்லுக்கட்டுக்கு நிற்கும் நீங்கள், எப்போதாவது எங்கள் வயிறு நிறையும் அளவிற்குக் புல்லுக்கட்டாவது கண்களில் காண்பித்திருப்பீர்களா?


ஜ.வக்கீல்: இதை நான் ஆட்சேபிக்கிறேன். சினிமா வசனம் போல கேட்க அழகாய் இருக்கிறது என்பதால் வாய்க்கு வந்ததை பேசக்கூடாது. நாளொன்றுக்கு நூறு ரூபாய்க்குப் புல்லுக்கட்டு வாங்கிப் போடுகிறோம்.....


நீதிபதி: சரி, விஷயத்திற்கு வாருங்கள்.


ஜ.வக்கீல்: நாங்கள் எல்லாக் காளைகளுடனும், முக்கியமாக சோதாக் காளைகளுடனும் மோதுவதில்லை. இதற்காக என்றே பராமரிக்கப்பட்டு பழக்கப்படுத்தப்பட்ட வீரியம் வாய்ந்த காளைகளுடன்தான் மோதுகிறோம். ஏறுதழுவுதல் என்ற இது, தவறாக எருதுடன் மோதல், சண்டை போடுதல் என்று விஷம்ப் பிரசாரம் செய்யப்படுகிறது. வீரியம் வாய்ந்த காளைகளை களத்தில் இறக்கி அவற்றை ஒரு குறிப்பிட்ட தூரம் ஓடவிட்டு அது துள்ளிக்குதித்து வீரிட்டு ஓடும்போது அந்தக் குறிப்பிட்ட எல்லைக்குள் அந்த எருதினால் உதறப்படாமலும், தள்ளப்படாமலும், கீழே விழாமலும்எருதிற்கு எந்த பாதிப்பும், சேதமும் இல்லாமலும் அதைக் கடைசி வரையில் அணைத்து அரவணைத்துச் செல்பவனே வெற்றி பெற்றவனாகக் கருதப்படுவான். அந்த வீரனுக்கு அக்காலத்தில் பொற்காசும் தற்காலத்தில் அதற்கேற்ப காகிதக்காசும் கொடுத்துக் கொண்டாடப்படுவதுதான் இந்த வீர விளையாட்டு. இதில் வெற்றி பெற்ற வீரனையே மணப்பதாக பல வீரப்பெண்மணிகள் சபதம் எடுப்பது வழக்கம். இது தமிழ்நாட்டின் தொன்றுதொட்ட பழக்கம். இன்றும் இந்த வீரவழக்கம் தொடருகிறது.


பகுதி3


எ. வக்கீல்:: இவர்களுடைய வீர சபதத்திற்கும், விளையாட்டிற்கும் நாங்கள் என்ன விளையாட்டுப் பொருளா? இந்தக் கேடு கெட்ட மனிதர்கள் ஜெயிக்க எங்களுக்குப் பிடிக்காத சனியன் பிடித்த சாராயத்தை ஊற்றியும், வேறு விதத்தில் போதை ஏற்றியும், கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவியும் எங்களை ஆத்திரப்படுத்தியும், ஆவேசப்படுத்தியும் வெறி ஏற்றுவார்கள். நாங்கள் வாடிவாசலிலிருந்து வேகமாக அரங்கத்திற்கு வந்த உடனே எங்கள் மீது பல போக்கற்ற இளம் வாலிபர்கள் பாய்ந்து, கூறிய ஆணிகள் பதித்த கட்டைகளாலும், ஈட்டி போன்ற உபகரணங்களாலும் படுகாயப்படுத்துவது கொடுமை இல்லாமல் வேறு என்ன? எங்கள் சம்மதம் பெறாமல் எங்களுக்கு இஷ்டமில்லாத இந்தச் சண்டையில் எங்களை ஈடுபடுத்துவது ஒருதலைப் பட்சமானது. எங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் எங்கள் கொம்பினால் குத்தப்பட்டும் தூக்கி எறியப்பட்டும் ஒரு சிலர் இறப்பதும், படுகாயங்களடைவதும் ஆண்டுதோறும் நடை பெறுகின்றன. ஆனால் அவர்கள் காயத்திற்கும் இறப்புக்களுக்கும் நாங்கள் பொறுப்பில்லை. அவர்களே அதை விரும்பி ஏற்றுக்கொண்டுதான் வருகிறார்கள். நீங்கள் எங்களுக்குப் பலவிதத்திலும் புரிகிற கொடுமைகளுக்கு உங்களை மிதித்து, குத்திக் கொன்றால் கூட தப்பே இல்லை. நாங்கள் உங்களை மாதிரி கேடு கெட்ட ஜன்மங்கள் இல்லை. அந்தப் பாவம் எங்களுக்கு வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். மேலும் பார்க்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகப் பெருமக்கள் விசிலடித்தும், கூக்குரலிட்டும் எங்களை நடுங்க வைப்பதால் நாங்கள் அரண்டு போய் உயிருக்குப் பயந்து ஓடும்போது எங்கள் மேல் பலர் பாய்ந்து துன்புறுத்துவது கொடுமை இல்லாமல் அது வீர விளையாட்டா? அப்படி வீர விளையாட்டு விளையாட வேண்டுமென்றால் வாருங்கள். ஒண்டிக்கு ஒண்டி விளையாடுவோம், வருவீர்களா? உங்க வீரத்தை அப்போது காட்டுங்கள். நாங்கள் உங்களைவிட பலமடங்கு பலசாலிகள் தான். எங்கள் ஒருவரின் சராசரி எடை 350 கிலோ கிராம். உங்களின் சராசரி எடை ஒருவர்க்கு 70 கிலோ கிராம்னு வைத்துக் கொள்ளுவோம். அப்படி இருக்க சம பலத்துடனோ அல்லது எடையுடனோ ஒரு ஐந்து பேர் எங்கள் மேல் பாய்ந்து போராடினால் அது நியாயம். தர்மம். அதை விட்டுவிட்டு ஊரிலே இருக்கிற எல்லோரும் பாய்ந்தால் அது எப்படி நியாயமோ, முறையோ ஆகும்? ஏன் உங்கள் வீரத்தைக் காட்ட ஒரு சிங்கத்தோடோ அல்லது புலியோடோ சண்டை போடுவதுதானே. முறம் கொண்டு ஒரு தமிழ்ப் பெண் புலியை விரட்டியதாகப் பெருமை அடித்துக் கொள்ளும் நீங்கள், ஏன் எங்களைப் போன்ற சாதுவான ஆடு,மாடு, கோழி கொக்கு போன்றவர்களிடம் உங்கள் வீரத்தைக் காட்டுகிறீர்கள்? ஏனென்றால் நாங்கள் இளிச்ச வாயர்கள். நாங்கள் வெறும் புல்பூண்டுகளைத் தான் சாப்பிடுகிறோம். உங்களையும் சாப்பிடுவதில்லை. உங்களைப் போல வேறு உயிரினங்களையும் சாப்பிடுவதில்லையே. உங்களுக்கு உதவியாகத்தானே நாங்கள் இருக்கிறோம். அப்படி இருக்க நீங்கள் ஏன் எங்களைத் தொந்திரவு செய்கிறீர்கள்?


ஜ. வக்கீல்: இவர் உண்மையை மாற்றிக்கூறுகிறார் யுவர் ஆனர். யாரும் இவர் கூறுவது போல் குச்சிகளையும், ஆணிகளையும் பயன்படுத்துவதில்லை. சாராயம் கொடுப்பதில்லை. கண்களில் மிளகாய்ப் பொடி தூவுவதில்லை. எங்கோ, எப்போதோ நடந்திருக்கலாம். அவ்வாறு நடப்பது தெரிந்தால் நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். எங்கள் வீர விளையாட்டை ஒழிப்பதற்கென்றே இவர் எங்கள் மீது வீண் பழி சுமத்துகிறார். நான் கேட்கிறேன் நாங்கள் விளையாடும் இந்த விளையாட்டு ஒரு கொடுமையான விளையாட்டென்றால், உங்களால் சுமக்க முடியாத அளவுக்குச் சுமைகளை ஏற்றி வண்டியை இழுக்க முடியாமல் இழுக்கும்படி செய்வதற்கு என்ன பெயர்? காய்ச்சிய இரும்பினால் உங்கள் உடம்பில் சூடு போடும் வழக்கத்திற்கு என்ன பெயர்? உங்களை ஆண்மையை இழக்கப் பயன் படுத்தப்படும் முறையின் கொடுமைக்கு என்ன பெயர்? இது தவிர வயதின்காரணமாகவோ, வேறு காரணங்களுக்காகவோ பயன்படாது போன முப்பது அல்லது நாற்பது எருதுகளை பத்து எருதுகளே கொள்ளளவு உள்ள ஒரு லாரியில், கால்கள் அசைக்க முடியாமலும், படுக்கவும் முடியாமலும் கட்டிப்போட்டு, ஆகாரமும் தண்ணீரும் இன்றி நின்றபடி நெடு நேரம் பயணம் செய்யும்படி செய்வதற்கு என்ன பெயர்? கடைசியல் கேரளாவிலுள்ள இறைச்சிக் கூடங்களுக்கு அனுப்பப் பட்டு அங்கு நீங்கள் தலை கீழாகத் தொங்க விடப்பட்டு கொடூரமாகக் கொல்லப்படுவதற்கு என்ன பெயர்? சாப்பிடுவதற்காகப் பல மிருகங்களும் கொல்லப்படுகின்றனவே, அதற்கு எல்லாம் என்ன பெயர்? சாமி பேரைச் சொல்லிப் பலி இடுகிறார்களே அதற்கு என்ன பெயர்? நாய்களையும் பூனைகளையும் வீட்டில் வளர்க்கிறார்களே. அவற்றின் இயற்கைச் சூழலிலிருந்து பிரித்து வீட்டுக்குள் அடைக்கப்படுவது என்ன நியாயம்? இதற்கு எல்லாம் நாட்டில் தடை இருக்கிறதா? இல்லையே. இதை எல்லாம் தடை செய்யாமல் ஒரு தமிழ் நாட்டு வீர விளையாட்டைத் தடை செய்வது என்ன நியாயம்? இதைத்தடை செய்வதனால் நல்ல வீரிய எருமைகள் நாட்டில் இல்லாமல் போய்விடும். நாட்டு மக்களிடம் ஏற்கெனவே மங்கிவிட்ட வீர உணர்ச்சி ஜல்லிக்கட்டுத் தடையினால் இன்னும் மங்கி வடும். பல இளம் பெண்களின் கனவுகள் சிதைந்து விடும். இப்போதே இந்த எருதுகளின் மதிப்பு மார்க்கெட்டில் வெகுவாகக் குறைந்து விட்டது. இதை எல்லாம் யோசிக்க வேண்டாமா? இந்த ஜல்லிக்கட்டினால் பொங்கல் திருவிழா பொலிவு அடைகிறது. பல வெளி நாட்டவரும் வந்து இதைப் பார்ப்பதால் இதன் மதிப்பு கூடுகிறது. இது இல்லை என்றால் பொங்கல் திருவிழா எங்களுக்குக் கருப்புப்பொங்கல் விழாதானே தவிர இனிப்புப் பொங்கல் விழா இல்லை. தமிழர்களின் பண்பாட்டையே சீர் அழிக்கும் இந்தத் தடை உடனடியாக நீக்கப்பட வேண்டும். அனைத்துக் கட்சிகளுமே ஆதரிக்கும் இந்த ஜல்லிக் கட்டு நடைபெற தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் அனைவர் சார்பிலும் கனம் நீதிபதி அவர்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


பகுதி4
*
எ. வக்கீல்: இவர் குறிப்பிட்ட கொடூரங்கள் பலவற்றிற்கும் ஏற்கெனவே தடைச்சட்டம் உள்ளது. அதை சரியான முறையில் அமல் படுத்தாததுதான் தவறே தவிர அந்தச் சட்டங்கள் இல்லாமல் இல்லை. நீங்கள் கூறிய வேறு சில கருத்துக்களை நாங்கள் ஏற்றுக் கொண்டு அவற்றையும் தடை செய்ய அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வோம். உண்பதற்காக உயிர்கள் கொல்லப்படுவது இயற்கையின் நியதி. கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்ற பழமொழி நீங்கள் அறிந்ததே. நாய்களையும் பூனைகளையும் வளர்ப்பது தடை செய்யப்படவேண்டும் என்றால் எங்களையும் வீட்டுப் பிராணியாக வளர்க்கக் கூடாது. நாங்கள் மிருக வதைத்தடை அமைப்புடன் பேசி நீங்கள் சொன்ன பல தடைச்சட்டங்களையும் கொண்டு வருவோம். மக்களின் வீர விளையாட்டுக்கு எதிரி அல்ல நாங்கள். சிங்கம் அல்லது புலியுடன் போராடி உங்களின் வீரத்தைக் காட்டுங்களேன். இல்லை வேறு பழந்தமிழ் வீர விளையாட்டுக்களான கபடி, வில்வித்தை, மல்போர், சிலம்பம் என்று ஏராளமான விளையாட்டுகளுக்கு உயிர் கொடுத்து உங்கள் வீரத்தை நிலை நாட்டுங்களேன்.அப்போது நாங்கள் மட்டுமல்ல, இந்த உலகமே உங்கள் வீரத்தைப் போற்றும். தமிழர்கள் பின் பற்ற எவ்வளவோ வேறு பல நல்ல பண்புகளும் பாரம்பரியமும் இருக்க, ஏதோ ஜல்லிக்கட்டு ஒன்றுதான் தமிழர்களின் புராதான வீர விளையாட்டு என்பது உங்கள் நெஞ்சில் வீரமுமில்லை, ஈரமுமில்லை என்று காட்டுகிறது. மறக்கப்பட்ட மற்ற வீர விளையட்டுக்களுக்கு புத்துயிர் கொடுங்கள். எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள். "அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்கிறார்கள். எனவே இந்த ஐல்லிக்கட்டை ஆதரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும்" என்று எதிர் கட்சி வக்கீல் கேட்டுக் கொண்டார். நான் சொல்கிறேன். வரும் தேர்தலில் அரசியல் ஆதாயம் பெறவே அவர்கள் இதை ஆதரிக்கிறார்கள். அவர்கள் மற்றவர்கள் இதில் ஈடுபடுவதை ஆதரிக்கிறார்களே தவிர , இது வரையில் தங்கள் வீட்டு வீர மகன்களை இந்த விளயாட்டிற்கு என்றாவது அனுப்பி இருப்பார்களா? கிடையாது? அது ஏன்? எனவே கனம் நீதிபதி அவர்களே! எங்கள் பக்கம் உள்ள நியாயங்களை ஏற்று எங்களை ஜல்லிக்கட்டிலிருந்து விடுவிக்க ஜல்லிக்கட்டுத் தடை தொடரவேண்டும் என்று விரும்புகிறேன்.
இரு பக்க வாதங்களும் ஓய்ந்தன. முடிவை எல்லோரும் ஆவலுடன் எதிர் பார்த்தவாறு நீதிபதியையே பார்க்கின்றனர்.


தீர்ப்பு
நீதிபதி: இதற்கான தீர்ப்பு போன வருட பொங்கலுக்கு முன்பு கூறியது போலவே, அடுத்த பொங்கல் வரையிலும் ஒத்தி வைக்கப்படுகிறது.


இதனால் எருதுக் கூட்டம் சந்தோஷமடைய, அவர்களின் எதிரிக்கூட்டம் பெரும் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்தார்கள். வாதாடிய ஜல்லிக்கட்டு வக்கீலுக்கு சல்லிக்காசு கூட தரமாட்டோம் என்ற கோபத்துடன் அவர் தெருவில் நடமாட முடியாத அளவிற்கு ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அவர்மீது ஆத்திரம் அடைந்து ரோட்டில் இருந்த ஜல்லிக்கற்களை இவர்மீதும், அரசாங்கக் கட்டிடங்களின்மீது எறிந்தும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தார்கள். ஒரு சிலர் ரோடுகளில் "தான் உண்டு, தன் வேலை உண்டு" என்று திரிந்த சில எருதுகளின் மீது காரணமில்லாமல் ஆத்திரம் கொண்டு, ஓரிரு கற்களை வீசினார்கள். அவை பயந்து நாற்கால் பாய்ச்சலில் ஓடவே அவற்றைத் தொடர்ந்து துரத்தி ஒரு சிலர் தங்கள் ஜல்லிக்கட்டு ஆர்வத்தைத் தீர்த்துக் கொண்டனர். வேறு சிலர் ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கல் பொங்கலே இல்லை, அது கருப்புப் பொங்கல் என்றும் கசப்புப் பொங்கல் என்றும் கூறி தங்கள் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தனர். வேறு பலர் ஆங்காங்கே நடு ரோட்டில் உட்கார்ந்து பொங்கல் சாப்பிடாமல் தர்ணா செய்தார்கள். போராட்டங்கள் நடத்தினார்கள். சில இடங்களில் இதைக் கண்டிக்கும் வகையில் நாய்ப் பிடிச்சண்டைகளப் போட்டு மகிழ்ந்தார்கள். மக்கள் பலரும் வரவிருக்கும் தேர்தலில் யாருக்கும் ஓட்டுப் போடுவதில்லை என்று கட்சிகள் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் வரை தீர்மானித்தார்கள். அரசியல் கட்சிகள் என்ன செய்வது என்று தெரியாமல் வழக்கம்போல மத்திய அரசை திட்டித் தீர்த்தார்கள். அதே சமயத்தில் தங்கள் குழந்தைகள் யாரும் ஜல்லிக்கட்டில் ஈடுபடுவதை விரும்பாமல் தடுத்தார்கள். ( இதற்கிடையே ஆங்காங்கே அரசாங்கத்தின் மறைமுக ஆசியுடனும், போலீஸின் பாராமுகத்துடனும் ஜல்லிக்கட்டு நடந்ததாக இரகசியச் செய்திகள் பகிரங்கமாகக் கசிய ஆரம்பித்தன.) சட்டத்திற்குப் பயந்த சில வீர வாலிபர்கள் மஞ்சு விரட்டு என்று கூறப்படும் இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை உள்ளூரிலிருக்கும் மஞ்சு என்ற பெயர் கொண்ட பெண்களை பின்னாலே சென்று விரட்ட ஆரம்பித்தார்கள்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top