• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மஹாளய Special

Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest

மஹாளய நாட்களில் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்!

இந்த மஹாளய தொடரில் இடம் பெரும் தகவல்கள் உண்மையில் அரிதினும் அரிது.
படித்து, பகிர்ந்து, பயன்பெறுங்கள்.

நம்மை தேடி வரும் முன்னோர்களின் ஆசி !

இந்த ஆண்டு, செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 30 வரை மகாளய பட்சம் நடக்கிறது.

இது ஓர் அரிய மகத்தான புண்ணிய புனித காலமாகும்.

தெய்வத்திற்கு சமமான நமது முன்னோர்கள் நம்மீது அவர்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் அன்பு காரணமாக நம் வீடு தேடிவருவதோடு மட்டுமல்லாமல் நம்முடன் சுமார் 15 நாட்கள் தங்கியிருக்கும் பரமபவித்திரமான காலமும் நேரமும் ஆகும் இது.

இதன் மகத்துவத்தையும் தெய்வீக பெருமையும் மிகப்பழைமையான நூல்கள் அற்புதமாக விளக்கியுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் சூரிய பகவான் அவரது சொந்த ராசியான சிம்மத்தில் சஞ்சரிக்கும் போது தேய்பிறையில் ஆரம்பமாகும் மகாளய பட்சம் ( மகாளய காலம் ) ஆரம்பமான தினத்திலிருந்து பதினைந்து நாட்கள் வரை நீடித்து அமாவாசை அன்று முடிவடைகிறது.

மரணம் என்பது நமது வாழ்வின் முடிவல்ல என்பதையும் இப்பிறவிக்கும் மறுபிறவிக்கும் இடையே உள்ள ஒரு நிலையே அது என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளோம்.

ஆதலால் நமது முன்னோர்களின் மரணத்திற்கு பிறகும் நமக்கும் அவர்களுக்கும் உள்ள உறவும் பிணைப்பும் நீடிக்கவே செய்கின்றன.

ஆதலால் அவர்களது மரணத்திற்கு பிறகு பித்ரு லோகத்திற்கும் இதர உலகங்களுக்கும் செல்லும் நீண்ட பயணத்தின் போதும் கூட நாம் நன்றாக இருக்க வேண்டுமே என்று கவலைப்படுகிறார்கள்.

நாமும் அவர்களுக்கு திதி தரப்பணம் ஆகியவற்றின் மூலம் நமது நன்றியை காட்டி வருகிறோம்.

இந்த திதி தரப்பணம் ஆகியவற்றில் நாம் அளிக்கும் பிண்டம் (சாதம் ) சூரியன் மூலம் சென்று பித்ரு தேவதைகளின் சக்தியினால் அமுதமாக மாறி நமது முன்னோர்கள் எந்த உலகத்தில் இருந்தாலும் அவர்களுக்கு அன்னமாக ( உணவாக) அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்விதம் நாம் அளிக்கும் அன்னத்தை அமுதமாக ஏற்று உண்ட பிறகு அவர்கள் நம்மை மகிழ்ச்சியுடன் ஆசீர்வதிக்கின்றனர்.

அவர்களது ஆசி பித்ரு தேவதைகளின் மூலம் அவர்ககளிடமிருந்து சூரிய பகவான் மூலம் நமக்கு திரும்ப கிடைக்கின்றது.

அவர்களது இந்த ஆசி நம் குடும்பத்திலும் பல நன்மைகளை உடனுக்குடன் அளிக்கின்றது.

முக்கியமாக குல விருத்தி சந்தான பாக்கியம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஒற்றுமை ஆரோக்கியம் ஆகியவற்றை தருகிறது.

பட்சம் என்ற 15 நாட்கள் நமது பித்ருக்களை சூரியனின் கிரணங்களின் மூலம் பித்ரு தேவதைகள் நம்மிடம் அனுப்பி வைக்கிறார்கள்.

அவர்கள் நமது வீட்டிற்கு வந்து நம்முடன் 15 நாட்கள் தங்கியிருந்து நாம் செய்யும் பூஜைகளை பெற்றுக்கொண்டு மனமகிழ்ந்து அவர்களது உலகங்களுக்கு செல்கிறார்கள்.

நமது பித்ருக்கள் தங்கியிருக்கும் இந்த 15 நாட்களும் மகத்தான புனிதம் பெற்றவையாகும்.
மகா புருஷர்களான நமது முன்னோர்கள் நம்முடன் தங்கி இருப்பதால் இந்த 15 நாட்களும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். அசைவ உணவு கண்டிப்பாக கூடாது.

காக்கைகளுக்கு எள் கலந்த அன்னமிடுவது, ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் செய்வது, பசுக்களுக்கு உணவு அளிப்பது உள்ளிட்டவற்றை யார் வேண்டுமானாலும் செய்யலாம்…

மேலும் நம்மை அறியாமல் நமது முன்னோர்களில் எவருக்கேனும் அவர்களுக்குரிய பித்ருக்கடன் வழங்கப்படாமல் இருந்திருந்தால் அது தீர்க்கப்பட்டுவிடும் !

பித்ரு தேவதைகளின் நல்லாசிகள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்.
கிருத திரேதா யுகங்களில் பித்ருக்கள் தங்கியிருக்கும் இந்த மகாளய பட்சம் 15 நாட்களும் பித்ருக்களுக்கு தினமும் திதி கொடுத்து வந்திருக்கிறார்கள்.

அந்த வழக்கம் நின்று போய் தற்போது இந்த 15 நாட்களில் ஒரு நாள் தான் பலரும் திதி கொடுக்கிறார்கள்.

அந்த ஒருநாள் திதி கூட கொடுக்காமல் இருந்தால் நமது அறியாமையினால் நாம் நமது முன்னோர்களின் நல்லாசியை பெறத்தவறி விடுவோம்.

இந்த 15 நாட்களும் நமது பித்ருக்களை பூஜிப்பதால் குடும்பத்தில் கிரக தோஷங்களினால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் விலகும்.

இதன் மகத்துவம் மிகவும் சூட்சமமானது. தற்கொலை செய்து கொண்டவர்கள், விபத்தினால் துர்மரணம் அடைந்தவர்கள், ஆயுதங்களினால் கொல்லப்பட்டவர்கள், ஆகியோருக்கு மகாளய பட்சத்தில் குறிப்பிட்ட தினங்களில் தான் திதி கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

மகாளய பட்சம் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இதனாலேயே தெரிந்து கொள்ளலாம்.

இறைவனே நமது வீட்டை தேடி வருவது போல் பித்ருக்கள் நமது வீட்டை தேடி வருவதுடன் நம்முடன் தங்கியிருந்து அளவற்ற தங்கள் சக்தியினால் நமது துன்பங்களை இந்த மகாலய பட்சத்தில் தீர்த்து வைக்கின்றனர்.

இதனால் துர்மரணம் அடைந்த முன்னோர்கள் கூட திருப்தியும் மன சாந்தியும் அடைகிறார்கள்.
மகாலய அமாவாசை அன்று தர்ப்பணம் மற்றும் பூஜைகள் செய்து நமது முன்னோர்களை மரியாதையுடனும் பக்தியுடனும் வழியனுப்பி வைக்கிறோம்.

ஆதலால் மகாளய பட்சமாகிய இந்த 15 நாட்களில் நாம் காலையும் நீராடி மனம் வாக்கு சரீரம் ஆகியவற்றில் தூய்மையாக இருந்து பூசிப்பது அளவற்ற நற்பலன்களை தரும்.

மகாளய பட்சத்தின் பித்ரு பூஜை அளிக்கும் நன்மைகளை பற்றி ‘நைமி சாரண்யம்’ என்ற பரம பவித்திரமான பாட்டில் மகரிஷிகள் கூடி விவாதித்து அதன் பெறுமையை தங்கள் திருவாக்கினால் கூறியுள்ளனர்.

நமது முன்னோர்களான பித்ருக்களை நாம் தேடிச் செல்ல வேண்டியதில்லை. அவர்களே நம்மை தேடி வரும் இத்தருணத்தை இழக்கலாகாது.

ஆதலால் இந்த 15 நாட்களும் உடலாலும் உள்ளத்தாலும் தூய்மையாக இருந்து பித்ருக்களை பூஜித்து வாருங்கள்.
அதன் பலன் கைமேல்!

(நன்றி : குமுதம் ஜோதிடம்)

Source: Anantha Narayanan / Face Book
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top