ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப
ஸக்ருன் மஹாளய சிராத்தே -------------கோத்ராணாம்---------------நாம்நீனாம் ( கர்த்தாவின் அப்பாவின் அம்மா,அப்பாவின் பாட்டி, அப்பாவின் கொள்ளு பாட்டி பெயர் சொல்லவும்.)
வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹி, பிது: பிதாமஹி; பிது: ப்ரபிதா மஹீனாம் அக்ஷய்ய த்ருப்தி யர்த்தம் யத்தேய மந்நம் தத் ப்ரதிநிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம்,
ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் , வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாப்ய: அஸ்மத் பிதாமஹி, பிது: பிதாமஹி, பிது: ப்ரபிதா மஹீப்ய: ஸம்ப்ர ததே ந மம. என்று சொல்லி கொடுக்கவும்.
மாதா மஹ வர்க்கம் தாம்பூலம் தக்ஷிணை.
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே -------------கோத்ராணாம்
-(கர்த்தாவின் அம்மாவின் அப்பாவின் கோத்திரம் சொல்லவும்)--------------சர்மணாம் ( கர்த்தாவின் தாய் வழி தாத்தா, பாட்டி, தாத்தாவின் அப்பா, அம்மா, தாத்தாவின் தாத்தா பாட்டி பெயர் சொல்லவும்.)
வஸு ருத்ர ஆதித்ய ஸ்வ ரூபாணாம் அஸ்மத் ஸ பத்நீக மாதா மஹ.
மாது: பிதாமஹ மாது: ப்ரபிதா மஹானாம் அக்ஷய்ய த்ருப்தி யர்த்தம் யத்தேய மந்நம் தத் ப்ரதிநிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம்,
ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் , வஸு ருத்ர ஆதித்ய ஸ்வ ரூபேப்ய: அஸ்மத் ஸ பத்நீக மாதா மஹ மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹேப்ய: ஸம்ப்ரததே ந மம.
காருணீக பித்ருகளுக்கு:
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபா வஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே தத்தத்--கோத்ராணாம்- தத்தத் சர்மணாம் வஸு வஸு
ஸ்வ ரூபாணாம் பித்ருவ்ய மாதுலா தீனாம் வர்கத்வ்ய அவ சிஷ்டானாம் ஸர்வே ஷாம் காருணீக பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்தி யர்த்தம் யத்தேய மந்நம் தத் ப்ரதி நிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம்,
ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் , வஸு வஸு ஸ்வரூபேப்ய: ஸர்வேப்ய: காருணிக பித்ருப்ய: ஸம்ப்ரததே ந மம.
மஹா விஷ்ணு விற்கு: உபவீதி பூணல் வலம்.
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபா வஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே ஸ்ராத்த ஸம் ரக்ஷக ஶ்ரீ மஹ விஷ்ணோ: த்ருப்தியர்த்தம்
யத்தேய மந்நம் தத் ப்ரதிநிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம்,
ஸ தக்ஷி ணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் , ஸ்ராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணவே துப்யமஹம் ஸம்ப்ர ததே ந மம.
ஆசீர்வாத அக்ஷதை இடது தோளில் அங்கவஸ்த்ரம் இருக்க வேண்டும். ஆசீர்வாத அக்ஷதை அங்கவஸ்திரத்தில் விழுமாறு பிடித்துக்கொள்ளவும்.
நமஸ் ஸதஸே நமஸ் ஸதஸஸ் பதயே நமஸ் ஸகீனாம் ப்ரோ காணாம்
சக்ஷுஷே நமோ திவே நம: ப்ருத்வ்யை ஹரி: ஓம்.
அனேன மயா ஹிரண்ய ரூபேண க்ருதேன (ஸக்ருன்) மஹாளய சிராத்தேன அஸ்மத் ஸ காருணீக வர்கத்வ்ய பிதர: துரிருசி சம்ருக விஷ்வே தேவ
ஸ்ராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணூ ஸஹிதா: ஸர்வே நித்ய த்ருப் தாஹா பூயாஸுஹு இதி பவந்த: மஹாந்த: அனுக்ரஹ ணந்து.
அனைத்து ப்ராஹ்மணர் களுக்கும் நமஸ்காரம் செய்யவும்.
மஹாளய சிராத்தாங்க தர்பணம் செய்ய வேண்டும்.
மஹாளய பக்ஷ விவரங்கள்.
விஸ்வே தேவர்கள் இறைவனின் ப்ரதிநிதிகள். இவர்கள் பித்ருக்களை , சிராத்த ஸமயத்தில் தம்முடைய ஸந்ததியர்களை நோக்கி அழைத்து வருகின்றவர்கள்.. மூதா தையர்களுக்கும் அவர்கள் ஸந்ததியர்களுக்கும் இணைப்பு ஏற்படுத்துகிறவர்கள்..
இந்த விஸ்வே தேவர்களுக்கு சிராத்த ஸமயத்தில் ஆகாரம் கொடுக்கிறோம்.. இவர்கள் மனைவிக்கும், மகளுக்கும் சுமங்கலி ப்ரார்தனை என்று நடத்தி சாப்பாடு போடுகிறோம். இவர்களுடன் நம் வீட்டு சுமங்கலி.களும் வருகிறார்கள்.
மஹாளய பக்ஷத்தின் போது எண்ணைய் குளியல் கர்த்தாவிற்கு கூடாது.
முக க்ஷவரம், தலை முடி வெட்டுதல், நகம் வெட்டுதல் கூடாது.
ப்ரஹ்மசர்யம் அவச்யம் கடை பிடிக்கவும்.
வெங்காயம், பூண்டு, முருங்கை காய், சுரைகாய், முள்ளங்கி, கத்திரிக்காய், முதலியன உண்ண வேண்டாம்.
ஹோடெல் உணவை சாப்பிட வேண்டாம், மதியம் சாப்பாடு, இரவு பலகாரம் சாப்பிடவும். காலை உணவு வேண்டாம் .பசியுடன் தர்பணம் செய்ய வேண்டும். கர்த்தாவின் மனைவிக்கும் இதே கட்டுபாடுதான்.
ஸ்ராதத்தையும் மஹா விஷ்ணு காப்பாற்றி வருகிறார். ஆதலால் அவருக்கும் சாப்பாடு உண்டு.
கர்த்தா சூரிய உதயத்திற்கு முன்பே விடியற் காலையில் ஸ்நானம் செய்து நெற்றிக்கு இட்டுக்கொண்டு சந்தியாவந்தனம், ஒளபாஸனம் செய்து, ஒன்பது ஐந்து வேஷ்டி தண்ணீரில் நனைத்து உலர வைக்கவும்.
பத்தரை மணிக்கு மாத்யானிகம் செய்து ஸ்நானம் செய்து காலையில் காய வைத்த மடி வேஷ்டியை கட்டிக்கொள்ளவும். பஞ்ச கச்சம். கர்த்தாவின் மனைவியும் மடிசார் ஒன்பது கஜ புடவை கட்டிக்கொள்ள வேண்டும்..
மறைந்த முன்னோர்கள் மஹாளய பக்ஷம் 15 நாள்களிலும் பூமிக்கு வந்து தங்குவதாகவும் . ஒவ்வொருவரும் அவரவர் குடும்ப முன்னோர்களுக்கு சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்து முன்னோர்களை ஸந்தோஷ படுத்த வேண்டும் என. சாஸ்திரம் கூறுகிறது.
தினசரி பக்ஷம் முழுவதும் தர்ப்பணம் செய்யலாம். வேலைக்கு செல்பவர்கள் ஏதோ ஒரு நாள் தான் செய்ய முடியும். இவர்கள் பஞ்மிக்கு முன்பும் ப்ரதமை, சஷ்டி, ஏகாதசி, திதிகளிலும், வெள்ளிகிழமை அன்றும் கர்த்தாவின், மற்றும் அவரது மனைவி, மூத்த குமாரனின் ஜன்ம நக்ஷத்திர நாட்களிலும் செய்யக்கூடாது.என்று ஸ்ம்ருதிகள் பய முறுத்துகிறது.
ஆனால் வைத்தினாத தீக்ஷிதீயம் பக்கம் 239 சொல்கிறது. ::””அமா பாதே பரண்யாம், ச த்வாதஸ்யாம், பக்ஷ மத்யகே ததா திதிம் ச நக்ஷத்திரம் வாரம் ச விசோதயேத்””.
அமாவாஸை, மஹாவ்யதீ பாதம், மஹா பரணீ, த்வாதஸீ திதீ, மத்யாஷ்டமி, கஜச்சாயை, ஆகிய நாட்களில் (ஸக்ருத்) மஹாளயம் செய்யலாம், இந்த நாட்களுக்கு திதி, நக்ஷ்த்திரம்,கிழமை, ஆகியவற்றால் ஏர்படும் எந்த தோஷமும் கிடையாது . நிறைவான பலன் கிட்டும் என்கிறது ஹேமாத்ரி புத்தகம்.
முதலில் இளைய தம்பி மஹாளயம் செய்த பிறகு மூத்தவர்கள் வரிசையில் மஹாளயம் செய்யப்பட வேண்டும். . அண்ணன், தம்பிகள் ஒரே வீட்டில் ஒரே நேரத்தில் மஹாளயம் செய்யும் போது வரிக்கப்படும் பித்ருக்களில்
அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி ஒன்று தான். ஆனால் காருணீக பித்ருக்களில் , மாமனார், மைத்துனன்,, மனைவி, பெண், குரு, ஆசாரியன், யஜமானன் நண்பன் ஆகியோர் ஸஹோதரர் ஒவ்வொருவருக்கும் தனி தனி யானவர்கள்
ஆவதால் தனி தனி யாக செய்வதே சிறப்பு.வைத்தினாத தீக்ஷதீயம் பக்கம் 226 படி “”அஹ: ஷோடசகம் யத்து சுக்ல ப்ரதிபதா ஸஹ சந்த்ர க்ஷயா (அ)விசேஷேண ஸாபி தர்சாத்மிகா ஸ்ம்ருதா””
என்னும் தேவல மஹ ரிஷியின் வசனப்படி அமாவாசைக்கு மறு நாளும் சந்திரனின் தேய்மானம் தொடர்கிறது என்பதால் சுக்ல ப்ரதமையும் முதல்
நாளான அமாவாசையை சேர்ந்தது தான் என்னும் சாஸ்திரப்படி பக்ஷ மஹாளய தர்ப்பணம் செய்பவர்கள் அமாவாசைக்கு மறு நாள் ப்ரதமையும் தர்ப்பணம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்..
க்ருஷ்ண பக்ஷ ப்ரதமை, த்விதியை, த்ருதியை, சதுர்தியிலும் சந்திரன் பூர்ணமாக இருப்பதால் பஞ்சமி முதல் க்ருஷ்ன பக்ஷம் கணக்கிட படலாம் என்பதால் ஒரு நாள் ஸக்ருன் மஹாளயம் செய்பவர்கள் பஞ்சமி முதல் செய்யலாம்..
மஹாளய பக்ஷத்தில் ஒவ்வொரு நாளும் தர்ப்பணம் செய்பவர்கள் அந்த பக்ஷத்தில் நடுவில் வரும் ஷண்ணவதி தர்பணங்களை தனி தனியாக செய்ய வேண்டும்.
“”ஆப்தீகம் ப்ரதமம் குர்யாத் மாஸிகம் து தத:பரம் தர்ஸ ஸ்ராத்தம் த்ருதீயம் ஸ்யாத் சதுர்தஸ்து மஹாளய:””என்னும் வசனப்படி அமாவாசை, முதலிய ஷண்ணவதி தர்பணங்கள் செய்துவிட்டு
பிறகு மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டும். ,நடுவில் மாஸிகம் வந்தாலும் மாஸிகம் செய்து விட்டு பிறகு மஹாளய பக்ஷ தர்ப்பணம் செய்ய வேண்டும்.
தினசரி 16 நாட்களும் தர்பணம் செய்ய முடியாதவர்கள் மஹாளய பக்ஷ ப்ரதமை முதல் அமாவாசை முடிய 15 நாட்கள் செய்யலாம். அல்லது பஞ்சமி திதி முதல் , அல்லது தசமி திதி முதல்,
அல்லது அஷ்டமி திதி முதல் ஆரம்பித்து அமாவாசை முடிய தர்ப்பணம் செய்யலாம். அல்லது மஹாபரணி, அஷ்டமி, கஜசாயை போன்ற மூன்று நாட்களாவது அல்லது ஒரு நாளாவது தர்ப்பணம் செய்யலா.ம்.
நிர்ணய ஸிந்து பக்கம் 115 “” பக்ஷாத்யாதி தர்ஷாந்தம் பஞ்சம்யாதி தி கா தி ச அஷ்டம்யாதி, யதா சக்தி குர்யாதா பர பக்ஷகம்””
தாயார் இறந்து தந்தை ஜீவித்திருக்கும் போது பையன் மஹாளயம், அமாவாசை, சங்க்ரமன தர்பணங்கள் செய்ய வேண்டாம். வருடா வருடம் தாய்க்கு செய்ய வேண்டிய
ச்ராத்தத்தை மட்டும் ச்ரத்தையுடன் செய்தால் போதும் .தந்தை செய்யும் மஹாளய தர்ப்பணம், , மற்ற தர்பணங்களாலயே தாய்க்கு த்ருப்தி ஏற்பட்டு விடுகிறது.
1.
1. தர்பணத்தின் மூலம் நவகிரஹ த்ருப்தி:----
பித்ருக்களுக்கு தர்பணம் செய்வதால் நவகிரஹங்களின் அருள் கிட்டும் என த்தோன்றுகிறது.
ஸூர்ய ப்ரீதி:---பித்ருக்களுக்கு முறையாக சிராத்தம், தர்ப்ணம் செய்து வந்தாலே ஜாதகத்தில் காணும் தோஷங்கள் விலகி விடும் என தோன்றுகிறது.
பித்ரு கர்மாக்கள் செய்தால் நவகிரஹங்களுக்கும் ப்ரீதி செய்ததாக ஆகிவிடும்.. தனியாக நவகிரஹ சாந்தி செய்ய தேவையில்லை. சிராத்தம் தர்பணம் சூரியன் நடு வானில் அதி உஷ்ணத்துடன் ப்ரகாசிக்கும் வேளயில் இருக்கும் சமயத்தில் செய்ய சொல்லி சாஸ்திரம் வற்புறுத்துகிறது.
ஸூரியனின் கிரணம் தர்பணம் செய்பவரின் உடல்மீது படுமாறு வீட்டு வாசல், கொல்லை, தோட்டம் போன்ற இடங்களில் பித்ரு தர்பணம் செய்வதாலும், காப்பர் எனப்படும் தாமிர (செம்பு) தாம்பாளம், சொம்பு,
பஞ்சபாத்ரம் வைத்துக்கொண்டு செய்வதாலும் ஸூர்ய கிரஹ ப்ரீதி ஏற்படும். ஸூர்ய ப்ரீதியால் ஆரோக்கியம் கிடைக்கிறது. கண் சம்பந்த, நரம்பு ஸம்பந்த வ்யாதி நீங்கும்.
சந்திர ப்ரீதி:--சந்திரன் ஜல கிரஹம். ஆதலால் தர்பணத்திற்கு அதிக தண்ணிர் உபயோகிக்க வேண்டும் .வீட்டில் பெரிய பித்தளை குடத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு இரு கைகள் நிறைய ஜலம் எடுத்து மந்திரம் சொல்லி பித்ரு தர்பணம் செய்ய வேண்டும்.சந்திர ப்ரீதியால் மனசில் குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். சந்திரன் தாய் காரகன். தாய்க்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.
செவ்வாய் ப்ரீதி:_ செவ்வாய் பூமி காரகன், ருண காரகன். கடன் தொல்லையிலிருந்து விடுபடலம். பூமியில் உட்கார்ந்துகொண் டு பலகை, தர்பை போன்ற ஆஸனத்தில் அமர்ந்து இரு முழங்கால் மூட்டுகளும்
பூமியில் படுமாறு பித்ரு தர்பணம் செய்யலாம் .ஸஹோதர காரகன் செவ்வாய்; ஆதலால் சகோதரருடன் பகை நீங்கி அன்பு வளரும். சஹோதரர் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ப்ள்ட் பிரஷர் விலகும்./ வராது..
புத கிரஹ ப்ரீதி:--“ யே யஜந்தி பித்ரூன் தேவான் விஷ்ணுமேவ யஜந்தி தே” என்பதாக பித்ருக்கள் என்பவர் ஶ்ரீ மஹா விஷ்ணு ஸ்வரூபம். பித்ருக்களுக்கு தர்பணம், சிராத்தம் செய்யும் நபர் தனது முன்னோர்களை மகிழ்விக்கும்
நோக்கத்தில் ஶ்ரீ மஹவிஷ்ணுவையே மகிழ்விக்கிறார் என்கிறது தர்ம சாஸ்திரம்.புத கிரஹத்திற்கு அதிதேவதை மஹாவிஷ்ணு. ஆதலால் புத கிரஹம் ப்ரீதி கிடைக்கிறது.
புதன் வித்யா காரகன் படிப்பு நன்றாக வரும். மாதுல காரகன் ஆதலால் தாயின் ஸஹோதரர்ரான மாமாவிற்கும் ஆரோக்கியம் ஏற்படும்.தோல் ஸம்பந்தமான வ்யாதி விலகும்.
குரு ப்ரீதி:---குரு கிரஹத்தை வேத மந்திரங்கள் மூலமே மகிழ்விக்க முடியும்.
பித்ருக்களுக்கு செய்யும் தர்பண சிராத்த மந்திரங்களை தகுந்த ஆசிரியர் மூலம் கற்று ஸ்வர பிசகு இல்லாமல் மந்திரங்கள். சொல்லவும்.
ருத்திரம், சமகம், புருஷ ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம் துர்கா ஸூக்தம், பாக்கிய ஸூக்தம்.தகுந்த ஆசிரியர் மூலம் கற்றுக்கொண்டு தினமும் சொல்லி
வருவதால் குரு கிரக ப்ரீதி ஆகிறது. குரு புத்ர காரகன். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.கிட்னி ஸம்பந்த நோய் விலகும்./ வராமலும் இருக்கும்.
சுக்கிர கிரஹ ப்ரீதி:--- பித்ருக்களுக்கு வெள்ளி தாம்பாளத்தில் தர்பணம் செய்வதால் சுக்ர கிரஹ ப்ரீதி ஏற்படுகிறது. வெள்ளி கிண்ணம், வெள்ளி கூஜா, வெள்ளி பஞ்சபாத்ர உத்ரிணி உபயோக படுத்தலாம்.
சுக்ரன் கலைகளுக்கு அதிபதி . எல்லா கலைகளிலும், அறிவாற்றல், ஆர்வம், ரஸிப்பு தன்மை ஏற்படும். களத்திர காரகன். ஆதலால் கணவன் மனைவிக்குள், அன்பு, பாசம், ஒற்றுமை ஏற்படும்.
சனி கிரஹ ப்ரீதி: கறுப்பு எள். உபயோகித்து தர்பணம் செய்வதால் சனி ப்ரீதி ஏற்படுகிறது.கறுப்பு எள்ளுடன் சேர்ந்த ஜலத்தால் தர்பணம் செய்வதால் ஆயுள் காரகன் சனியினால் நீண்ட ஆயுள் கிட்டும்.
வ்யாதி மறையும்.அனாவசியமான சிலவுகள் ஏற்படாமல் சிலவுகள் கட்டுக்குள் அடங்கும்.வீணான சிலவுகளை தரும் குணமுடையவன் சனி. அது நீங்கும்.
அஷ்டம சனி, ஏழரை சனி, , அர்த்தாஷ்டம சனி தொல்லகள் இருக்காது.
எக்காரணங்கொண்டும் எள்ளை கடன் வாங்கி தர்பணம் செய்யக்கூடாது என்கிறது தர்ம சாஸ்திரம். வெளியூர் சென்று உறவினர் வீட்டில் தர்பணம் செய்தாலும் எள் மாத்திரம் நீங்கள் கையில் எடுத்து செல்ல வேண்டும். அல்லது அங்கு கடையில் உங்கள் பைசாவில் வாங்கி கொள்ள வேண்டும்.
மற்ற பொருட்கள் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு தர்பணம் செய்யலாம்.
ராஹு/கேது ப்ரீதி:--இவர்களுக்கு அருகம் புல்லும் தர்பையும் சமித்துகளாகும்.
நாந்தி சிராத்தம் செய்த பிறுகு 6 மாத்த்திற்கு தர்பை உபயோகித்து தர்பணம் அமாவசைக்கு, மாத பிறப்பிற்கு செய்ய க்கூடாது. அப்போது அருகம் புல்லால் பவித்ரம், கூர்ச்சம் செய்து தர்பணம் செய்ய வேண்டும் என்கிறது. சாஸ்திரம்..
கறுப்பு எள்ளுக்கு பதில் பச்சரிசி.. .ஆதலால் அருகம் புல்லுக்கும் தர்பைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
தர்பை பறிக்க வேண்டிய நாட்களில் தானே சென்று பறித்து வந்து நுனி தர்பைகளினால் கூர்ச்சம் பவித்ரம் செய்து கொண்டு பித்ருக்களுக்கு தர்பணம் செய்வதால் ராஹு கேது ப்ரீதி ஏற்படுகிறது.
இதனால் நீதி மன்ற வழக்கில் வெற்றி கிடைக்கிறது. வ்யாபாரம் செழிக்கும். கேது ஞான காரகன். நல்ல மந்த்ர உபதேசமும் ஆத்ம ஞானமும் சித்திக்கும்.
எந்த புத்தகத்திலும் இவை காணப்படவில்லை. நவகிரஹ ப்ரீதி செய்வதில் உள்ள ஈடுபாட்டை-- சிரத்தையை--பித்ரு கார்யங்களிலும் காட்ட வேண்டும் என்னும் நோக்கத்தில் எழுதப்பட்டது.
தோஷ நிவ்ருத்திக்காக தனியாக நவகிரஹ பரிஹாரம் தேவையில்லை .என்பதை உணர்ந்து கொள்ளலாம்..
தர்பமும் (குசம்) அதன் மகிமையும்
(ஸ்ரீ சர்மா சாஸ்திரிகளின் "வேதமும் பண்பாடும்" புத்தகத்தில் இருந்து)
பிராஹ்மணன் வாழ்க்கையில் இன்றியமையாத வஸ்து குசம் என்று அழைக்கப்படும் தர்ப்பங்கள். பொதுவாக க்ருஹத்தில் தர்ப்பங்கள் இருப்பதே பெரும் ஐஸ்வர்யமாகும். இதில் சந்தேகமே வேண்டாம். பாவங்களைப் போக்கக் கூடியது தர்ப்பம். நம்மைச் சுத்தமாக்கும் சக்தி இதற்குண்டு.
குச ப்ரசம்ஸை:
தர்ப்பத்தின் நவீன விஞ்ஞான பெயர் போவா சைநோசுராய்ட்ஸ் என்பதாகும், நவீன் ஆராய்ச்சியாளர்களும் தர்ப்பங்கள் தன்னகத்தே கொண்டுள்ள அறிய குணாதிசயங்களையும் நல்ல ஒளிர்வீச்சுக்களையும் எடுத்துக் கூறி வருவதும் நம் கண்ணில்படுகின்றது.
தேவதாம்ஸம்:
தர்ப்பத்தின் அடியில் பிரஹ்மாவும். மத்தியில் கேசவனும் நுனியில் சங்கரனும், நான்கு திசைகளில் எல்லா தேவர்களும் ஸான்னித்யம் கொண்டுள்ளதாக ஐதீகம். ஹாரீதர், மார்க்கண்டேயர், அத்ரி, கௌசிகர், வ்யாஸர், சாதாதபர், ஸம்வர்த்தர், காத்யாயனர், பரத்வாஜர், சாலஸ்காயனர், யாக்ஞவல்க்யர், ஆஸ்வலாயனர், ஆபஸ்தம்பர் போன்ற மகரிஷிகள் தர்ப்பத்தின் விசேஷ தன்மை பற்றி அருள்
செய்துள்ளனர். கர்மானுஷ்டானங்களிலும், தேவ, பித்ரு கார்யங்களிலும் தர்ப்பங்களை உபயோகப்படுத்தும் வழிகளில் ஓரிரு வித்யாசங்கள் இவர்களிடையே தென்பட்டாலும், பொதுவாக தர்ப்பத்தின் மகிமையை இம்மகான்கள் அருள் பாலித்துள்ள விதம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றது. இது நமது பாக்யமே.
வேதத்தில் தர்ப்பம்:
தர்ப்பத்தின் மகிமை பற்றியும், அதனது அபரிமிதமான சக்தியைப் பற்றியும் வேதம் எடுத்துரைக்கின்றது. இதைவிட நமக்கு வேறு என்ன வேண்டும்? இதன் விசேஷமான சக்தியைப் புரிந்து கொள்வதற்கு இது ஒன்றே போதுமே. யஜுர் வேத ப்ராஹ்மணத்தில் (அச்சித்ரம்) நேரிடையாகவே தர்ப்ப ப்ரசம்ஸையைக் காண்கின்றோம்.
மேலும் ஸாரசமுச்சம், ஸம்ருதிஸாரம், ஸ்ம்ருதி ரத்னம், ஸ்ம்ருதி சந்தாமணி, ஸ்ம்ருதி பாஸ்கரம், விஷ்ணுபுராணம் போன்ற கிரந்தங்களிலும் தர்ப்பத்தின் விவரங்கள் காணக்கிடைக்கின்றன.
தர்ப்பத்தைச் சுற்றி நிறைய புராண சம்பவங்களும் உண்டு. மஹாபாரதம் (கருடன் & அம்ருதம் & நாகர்கள் சம்பவம்), ராமாயணம் (இந்த்ரபுத்ரன் ஜயந்தன் & காகம் & சீதாதேவி சம்பம்), கூர்மாவதாரம் (ஸமுத்ர மந்தன்), வானமாவதாரம் (மஹாபலியின் தான சம்பவம்) போன்றவைகள் சில உதாரணங்களாகும். புத்த சம்பிரதாயத்தில் தர்ப்ப அம்சம் உண்டு.
பவித்ரம் :
தர்ப்பத்தினால் விதிப்படி செய்யப்பட்ட பவித்ரத்தை அந்துதான் ஜபம், தானம், ஹோமம், தேவ, பித்ரு மற்ற சில கார்யங்கள் செய்ய வேண்டும். யாகங்களில் மிக அவசியம். தர்ப்ப பவித்ரம் இல்லாத கார்யம் செல்லுபடியாகாது. பொதுவாகவே ப்ராஹ்மணன் எப்பொழுதுமே
பவித்ரபாணியாக இருப்பது ச்ரேஷ்டம் என்று ஒரு வாக்யமும் உண்டு. அதனால்தானோ என்னமோ காத்யாயனர், ஹாரீதர் போன்ற ரிஷிகள் மோதிர விரலில் ஸ்வர்ண பவித்ரத்தை பிராஹ்மணன் தரிக்க «வ்டும் எனக் கூறியுள்ளனர். மோதிர விரலில் தங்கத்தாலான பவித்ரம்
தரிப்பதோடு ஆள்காட்டி விரலில் தர்ஜனி எனப்படும் வெள்ளி மோதிரத்தையும் அணிய வேண்டும். ஆனால் ஜீவஜ்யேஷ்டன் வெள்ளியினாலான தர்ஜனியைத் தவிர்க்க வேண்டும். ஒருவன் தங்கத்தினாலான பவித்ரத்தை நிரந்தரமாக அணிந்திருந்தாலும் கர்மாக்களில் தர்ப்ப பவித்ரம்
இன்றியமையாதது. பவித்ரம் எனப் பொதுவாக கூறினால் அது தர்ப்பத்தினால் செய்த பவித்ரம்தான். கர்மா முடியும் வரையில் குச பவித்ரபாணியாக இருந்துதான் ஆக வேண்டும். கர்மா முடிவில் முடிச்சை அவிழ்த்துவிட்டு பரிஹரிக்க வேண்டும்.
வலது கை மோதிர விரலில்:
எந்தவிதமான கர்மாவாக இருப்பினும் பவித்ரத்தை வலது கை மோதிர விரலில் தான் அணிய வேண்டும். பொதுவாக நமக்கு நாமே
பவித்ரத்தை கர்மாக்களில் தயார் செய்து அணிந்து கொள்வதில்லை ஆச்சார்யன் மூலமாகவோ அல்லது வயதில், யோக்யாம்சத்தில் சிறந்தவர் மூலமாக மந்த்ர பூர்வமாக பவித்ரத்தைப் பெற்றுக் கொண்டு அணிவது சம்பிரதாயம். தவிர்க்க முடியாத நேரங்களில் நமக்கு நாமே
பவித்ரம் தயார் செய்து அணிந்து கொள்வதில் தோஷமில்லை. ஆனால் பவித்ரத்தை வெகு நாட்களுக்கு முன்பாகவே மற்ற பொருட்கள் மாதிரி நிறைய தயார் செய்து வைத்துக் கொள்வது உசிதமல்ல. அவ்வப்«£து தயார் செய்து கொள்ள வேண்டும்.
பவித்ரத்தில் அடங்கியுள்ள தர்ப்பங்களின் ஸங்க்யை அமைவதற்கு விதிமுறை உண்டு. கர்மாவின் தன்மையைப் பொருத்து ஸங்க்யை வித்தியாசப்படும். அதன் விவரங்கள்
கர்மாவின் பெயர் ஸங்க்யை
*ஜபம், தேவ பூஜைகள்,
ஹோமங்கள் இத்யாதி 2 புல்
*ச்ராத்தம், தர்ப்பணாதிகள் 3 புல்
*ப்ரேத கார்யங்கள் 1 புல்
** பவித்ரத்தில் அடங்கியுள்ள புல்லின் எண்ணிக்கை மாறினாலும் ரூபம் (செய்யும் விதம்) மாறாது. பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் பொதுவாக எல்லாவிதமான பவித்ரமும் அமைந்திருக்கும்.
நியமங்கள்:
பவித்ரம் அணிவதற்கு முன்பு ஆசமனம் சொல்லியுள்ளது. அதே மாதிரி கர்மா முடிவில் பவித்ர முடிச்சை அவிழ்த்த பிறகு ஆசமனம் செய்ய வேண்டும். இங்கு ஒன்றை கவனித்தல் நல்லது. முடிச்சை அவிழ்ப்பதற்கு முன்பு பவித்ரத்தைக் காதில் வைத்துக் கொண்டு ஓர் ஆசமனம் செய்ய வேண்டும். பிறகு பவித்ர கிரந்தியை அவிழ்த்துவிட்டு அதை கீழே «£ட்ட பிறகு மீண்டும் ஓர் ஆசமனம் செய்ய வேண்டும்.
நிர்ருதி மூலை:
பவித்ரத்தின் முடிச்சை அவிழ்த்து கையிலிருந்து நாம் எப்போதெல்லாம் கீழே போடுகிறோமோ போடுகிற திசை நிர்ருதி மூலையாகத்தான் போடச் சொல்லியுள்ளது. அது மாத்திரம் அல்ல. எந்தத் தர்ப்பங்களை விஸர்ஜனம் செய்தாலும் (கையில் இடுக்கிக் கொண்டிருந்த
தர்ப்பங்கள், பத்னியிடமிருந்து வாங்கும் தர்ப்பங்கள் முதலியவை) நிர்ருதி மூலையில்தான் போட வேண்டும். எந்தக் கர்மாவாக இருந்தாலும் இதுதான் விதி.
கையில் பவித்ரம் அணிந்திருக்கும் போது (கர்மா நடுவில்) நீர் அருந்த நேரிட்டால், பவித்ரத்தை வலது காதில் வைத்துக் கொண்டு ஜலபாணம் செய்ய வேண்டும். பிறகு காதிலிருக்கும் பவிரத்தைத் தானே கையில் தரித்துக் கொண்டு கர்மாவைத் தொடர்ந்து செய்யலாம். (பவித்ரத்தை வலகு காதில் அல்லாது வேறு இடங்களில் வைப்பதோ, மற்றவர்களிடம் கொடுத்து வைப்பதோ உசிதமல்ல)
ப்ராஹ்மணர்களின் பாதங்களை அலம்பும் போதும். பவித்ரம் வவவது காதில்தான் இருக்க வேண்டும்.
மற்ற உபயோகங்கள்:
தர்ப்ப பவித்ரம் அணிவது மிகவும் ச்ரேஷ்டம் என ஏற்கெனவே பார்த்தோம். தர்ப்ப பவித்ரத்தைத் தவிர மேலும் பல இடங்களிலும் தர்ப்ப உபயோகத்தை நமக்கு சாஸ்த்ரம் விதித்துள்ளது. அவை
*தர்ப்பத்தினாலான ஜப ஆஸனம் மிகவும் விசேஷம்.
கர்மாக்களின் துவக்கத்தில் கணவன் ஸங்கல்பம் செய்யும் போது மனைவி கணவனை நேரிடையாக தொட்டுக் கொள்வதில்லை. தர்ப்பங்களினால் தான் கணவனை ஸ்பரிக்கச் சொல்லியுள்ளது. தர்ப்பங்கள் தான் அவர்களுக்கு அங்கே இணைப்பாக உபயோகப் படுத்தப்படுகிறது.
*க்ரஹண காலங்களில் (சூர்ய மற்றும் சந்திர) இல்லத்தில் ஏற்கெனவே பக்குவமாக்கி இருக்கும் பதார்த்தங்களிலும் குடிநீரிலும், தர்ப்பங்களைப் போட்டு வைத்தால் எந்த தோஷமும் அவற்றுக்கு ஏற்படாது.
*ஹோமங்களில் பரிஸ்தரணம், ஆயாமிதம், ப்ரணீதா போன்றவைகளிலும் தர்ப்பங்கள் இடம் பெற்றுள்ளன, ச்ராத்த மற்றும் தர்ப்பண காலங்களில் ஸ்தல சுத்தி, ஆஸனம், கூர்ச்சம் போன்றவைகள் தர்ப்பங்களினால்தான் செய்யப்படுகின்றன.
*குறிப்பாக தர்ப்பங்களில் தர்ப்ப கூர்ச்சத்தினால்தான் (அல்லது தர்ப்ப ஸ்தம்பம்) ப்த்ருக்களை ஆவாஹணம் செய்யச் சொல்லியுள்ளது.
*கலச ஸ்தாபனம் போதும். மாவிலை கொத்து தேங்காயுடன் தர்ப்ப கூர்ச்சம் வைப்பது இன்றியமையாதது.
*கல்யாணத்தில் கல்யாண பெண்ணிற்கும், அதே மாதிரி உபநயனனத்தில் விடுவிற்கும் இடுப்பில் தர்ப்பங்களினாலான கயிற்றை மந்த்ர பூர்வமாக கட்டும் ப்ரயோகமும் இருந்து வருகின்றது.
உபயோகப்படுத்தும் தர்ப்பங்களின் நுனி உடையாமல் இருக்க வேண்டும். ப்ரயோகங்களில் நுனி இல்லாத தர்ப்பங்கள் (ஆஸனத்தைத் விர) உபயோகப்படுவதில்லை.
தர்ப்ப முஷ்டியிலிருந்து (கட்டிலிருந்து) நமக்குத் தேவையான தர்ப்பங்களை எடுத்துக் கொள்ளும் போது மேலிருந்து (நுனி பக்கம்) எடுக்கக்கூடாது. மேலிருந்து எடுப்பது வசதியாக இருந்தாலும் அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும். கட்டின் அடியிலிருந்து தான் உருவ வேண்டும்.
தர்ப்பங்களைக் கீழே வைக்கும் போது (அல்லது சேமித்து வைக்கும் போது) அதன் நுனி மேற்கு அல்லது தெற்கு நோக்கி இருக்கக்கூடாது. கிழக்கு அல்லது வடக்கு நோக்கித்தான் நுனி இருக்கும்படி வைக்க வேண்டும்.
தர்ப்ப முஷ்டியையோ அல்லது தர்ப்பங்களையோ வெறும் தரையில் வைக்கக்கூடாது.
கால் மதிபட்ட தர்ப்பங்கள். பரிஸ்தானம் போன்றவைகளில் உபயோகப்படுத்தப்பட்ட தர்ப்பங்களை வர்ஜிக்க வேண்டும். மீண்டும் உபயோகப் படுத்தக்கூடாது.
தர்ப்பங்களை விரல் நகத்தினர் கிள்ளக்கூடாது. உபயோகத்திற்காக சேமித்து வைத்திருக்கும் தர்ப்பங்களை அலட்சியமாக பார்க்கக் கூடாது.
மகத்துவம் :
குச பவித்ரம் நம்மை சுத்தமாக்குகின்றது. கர்மா நன்கு நடைபெற நமக்கு நல்ல பாதுகாப்பாகவும் செயல்படுகின்றது. பவித்ரபாணி
சுத்தமானவன். இதில் சந்தேகம் வேண்டாம். குசத்தை ஹஸ்தத்தில் தரித்துச் செய்த ஜபம், தானம், ஹோமம் ஆகியவற்றின் புண்யத்திற்கு கணக்கில்லை என்கிறார் மகரிஷி ஹாரீதார். மற்றுமொரு ரிஷி குசத்தைப் பற்றி கூறுவதைக் கேளுங்கள்.
இந்த்ரனின் கையில் வஜ்ரம் போலவும், பரமேஸ்வரனின் கையில் சூலம் போன்லவும், விஷ்ணுவின் கையில் சக்ரா£யுதம் போலவும், பிராஹ்மணன் கையில் குசமுள்ளது. பூதங்கள், பிசாசங்கள், ப்ரேதங்க்ள வேறு ப்ரஹ்மராக்ஷசர்கள் என்ற எல்லோரும் ப்ராஹ்மணன் கைவிரலில் உள்ள குசங்களைப் பார்த்தால் தலைகுனிந்தவர்களாய்த் தூரத்தில் செல்லுகின்றனர்.
இப்பேற்பட்ட தர்ப்பங்களின் மகத்துவத்தை நாம் தெரிந்து கொள்வதே நமக்கு புண்ணியமாகும்.
இனி தர்மாக்களின் பவித்ரத்தை மந்த்ர பூர்வமாகப் பெற்றுக் கொள்ளும் போதும், மற்ற நேரங்களில் தர்ப்பங்களைப் பார்க்கும் போதும் தர்ப்பங்களின் முக்யத்துவத்தை நினைவில் கொள்வோமாக, நன்மையடைவோமாக.