• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திதிகளில் வரும் சிறப்பு வாய்ந்த விரதங்க&

  • Thread starter V.Balasubramani
  • Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
திதிகளில் வரும் சிறப்பு வாய்ந்த விரதங்க&


திதிகளில் வரும் சிறப்பு வாய்ந்த விரதங்கள்


திருவாதிரை விரதம் :
மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்திலே சிவனை குறித்து அனுஷ்டிக்கும் விரதமாம்.
இதில் உபவாசம் செய்தல் வேண்டும்.
இவ்விரதம் சிதம்பரத்தில் இருந்து அனுட்டிப்பது மிகவும் நல்லது.

விநாயக சஷ்டி விரதம் :
கார்த்திகை மாதத்து கிருஷ்ணபட்சப் பிரதமை முதல் மார்கழி மாதத்துச் சுக்கிலபட்ச சஷ்டி வரை இருபத்தொரு நாளும் விநாயகக் கடவுளைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதம் ஆகும்.
இதில் இருபத்தோரிழையாலாகிய காப்பை ஆடவர்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொண்டு முதலிருபது நாளும் ஒவ்வொரு பொழுது போசனம் செய்து இறுதி நாளாகிய சஷ்டியில் உபவாசம் செய்தல் வேண்டும்.

பிரதோஷ விரதம் :
சுக்கில பட்சம் கிருஷ்ணபட்சம் எனும் இரண்டு பட்சத்துக்கும் வருகின்ற திரியோதசி திதியிலே சூரியாஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் பின் மூன்றே முக்கால் நாழிகையுமாக உள்ள காலமாகிய பிரதோஷ காலத்திலே சிவபெருமானைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாகும்.
இவ்விரதம் ஐப்பசி, கார்த்திகை, சித்திரை, வைகாசி என்னும் நான்கு மாதங்களுள் ஒன்றிலே சனிப் பிரதோஷ முதலாகத் தொடங்கி அநுஷ்டித்தல் வேண்டும்.
பகலிலே சாப்பிடக்கூடாது. சூரியன் அஸ்தமிக்க நான்கு நாழிகை உண்டு என்னும் அளவிலே குறித்து சிவபூஜை பண்ணித் திருக்கோயில் சென்று சிவதரிசனம் செய்து கொண்டு பிரதோஷ காலங்கழிந்த பின் சிவனடியாரோடு போசனம் சாப்பிட வேண்டும்.
பிரதோஷ காலத்தில் போசனம், சயனம், ஸ்நானம், விஷ்ணு தரிசனம், எண்ணெய் தேய்த்தல், வாகனமேறல், மந்திர செபம், நூல் படித்தல் என்னும் இந்த எட்டும் செய்ய கூடாது.
பிரதோஷ காலத்திலே நியமமாக மெய்யன்போடு சிவதரிசனஞ்செய்து வந்தால் கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருந்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும்.
அஸ்தமனத்திற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையே சிவ திரிசனத்துக்கு சிறந்த காலம்.

கார்த்திகை விரதம் :
கார்த்திகை மாதத்து கார்த்திகை நட்சத்திரம் முதலாகத் தொடங்கி கார்த்திகை நட்சத்திரந்தோறும் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதம் ஆகும்.
இதில் உபவாசம் உத்தமம்.
அது கூடாதவர் பழம் முதலியன இரவில் உட்கொள்ளலாம்.
இவ்விரதம் பன்னிரெண்டு வருஷகாலம் இருத்தல் வேண்டும்.

சோமவார விரதம் :
கார்த்திகை மாத முதல் சோமவாம் தொடங்கிச் சோமவாரம் தோறும் சிவபெருமானைக் குறித்து கடைபிடிக்கும் விரதமாகும்.
அதில் உபவாசம் உத்தமம் அது கூடாதவர் ஒரு பொழுது சாப்பிடலாம்.
அதுவும் கூடாதவர் ஒரு பொழுது பகலிலே பதினைந்து நாழிகையின் பின் சாப்பிடலாம்.
இவ்விரதம் வாழ்நாள் முழுவதும் அல்லது பன்னிரண்டு வருஷகாலமாயினும் மூன்று வருஷ காலமாயினும் ஒரு வருஷ காலமாயினும் அனுட்டித்தல் வேண்டும்.
பன்னிரெண்டு மாதத்திலும் அனுட்டிக்க இயலாதவர் கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது இருக்க வேண்டும்

உமாமகேஸ்வர விரதம் :
கார்த்திகை மாதத்து பவுர்ணமியிலே உமாமகேஸ்வர மூர்த்தியைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாம். இதில் ஒரு பொழுது பகலிலே சாப்பிடலாம். இரவிலே பணியாரம் பழம் உட்கொள்ளலாம்.

சிவராத்திரி விரதம் :
மாசி மாதத்து கிருஷ்ணபட்ச சதுர்த்ததி திதியிலே சிவபெருமானைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாகும்.
இதில் உபவாசம் செய்து நான்கு ஜமமும் நித்திரையின்றிச் சிவ பூசை செய்தல் வேண்டும்.
நான்கு யாமப் பூசையும் அவ்வக் காலத்தில் செய்வது நல்லது. சண்டேஸ்வர பூசை நான்கு யாமமும் செய்தல் வேண்டும்.
சிவ பூசை செய்பவர் நித்திரையின்றி ஸ்ரீபஞ்சாட்சர செபமும் சிவபுராண சிரவணமும் செய்தல் வேண்டும்.
இதில் உபவாசம் உத்தமம், நீரேனும் பாலேனும் சாப்பிடுவது மத்திமம்,
பழம் உண்பது அதமம், தோசை முதலிய பலகாரம் உண்பது அதர்மம்,
சிவராத்திரி தினத்திலே இராத்திரியில் பதினான்கு நாழிகைக்கு மேல் ஒரு முகூர்த்தம் லிங்கோற்பவ காலமாகும்.
நான்கு யாமமும் நித்திரையொழிக்க இயலாதவர் லிங்கோற்பவ காலம் நீங்கும் வரையுமாயினும் தூங்காமல் இருத்தல் வேண்டும்.
இக்காலத்திலே சிவதரிசனஞ் செய்வது உத்தமோத்தம புண்ணியம். இச்சிவராத்திரி விரதம் அனைவராலும் அவசியம் இருக்க வேண்டும்.

கேதார கவுரி விரதம் :
புரட்டாதி மாதத்திலே சுக்கிலபட்ச அட்டமி முதல் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியீறாகிய இருபத்தொரு நாளாயினும் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் சதுர்தசியீறாகிய ஏழு நாளாயினும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினும் கேதாரநாதரைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதமாம்.
இதில் இருபத்தோர் இழையாலாகிய காப்பை ஆண்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொண்டு முதலிருபது நாளும் ஒவ்வொரு வகை சாப்பாடு செய்து சாப்பிட்டு இறுதி நாளாகிய சதுர்த்தசியிலே கும்பஸ்தாபனம் பண்ணி பூஜை செய்து, உபவசித்தல் வேண்டும்.
உபவசிக்க இயலாதவர்கள் கேதாரநாதருக்கு நிவேதிக்கப்பட்ட உப்பில்லாப் பலகாரம் உட்கொள்ள வேண்டும்.

சுக்கிரவார விரதம் :
சித்திரை மாதத்து சுக்கிலபட்சத்து முதல் சுக்கிரவாரம் தொடங்கிச் சுக்கிர வாரம் தோறும் பார்வதி தேவியாரைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் ஆகும்.
இதில் ஒரு பொழுது பகலிலே சாப்பிட வேண்டும்.

நவராத்திரி விரதம் :
புரட்டாதி மாதத்து சுக்கிலபட்ச பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் பார்வதி தேவியாரைக் கும்பத்திலே பூசை செய்து அனுட்டிக்கும் விரதமாகும்.
இதிலே முதலெட்டு நாளும் பலகாரம் பழம் முதலியவை உட்கொண்டு மகாநவமியில் உபவாசம் செய்தல் வேண்டும்.

விநாயக சதுர்த்தி :
ஆவணி மாதத்துச் சுக்கிலபட்சத்து சதுர்த்தியிலே விநாயகக்கடவுளைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் ஆகும்.
இதில் ஒரு பொழுதில் பகலிலே போசனம் செய்து இரவிலே பழமேனும் பலகாரமேனும் உட்கொள்ளல் வேண்டும்.
இத்தினத்திலே சந்திரனைப் பார்க்க கூடாது.

கந்த சஷ்டி விரதம் :
ஐப்பசி மாதத்துச் சுக்கிலபட்சத்து பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாளும் சுப்பிரமணியக் கடவுளை குறித்து அனுஷ்டிக்கும் விரதமாகும்.
இதில் ஆறு நாளும் உபவாசம் செய்வது உத்தமம். அது முடியாதவர் முதல் 5 நாட்களும் ஒவ்வொரு பொழுது உண்டு சஷ்டியில் உபவாசம் செய்ய வேண்டும்.
இவ்விரதம் ஆறு வருஷ காலம் அனுஷ்டித்தல் வேண்டும்.
மாதந்தோறும் சுக்கிலபட்ஷ சஷ்டியிலே சுப்பிரமணியக் கடவுளை வழிபட்டு, மா, பழம், பால், பானகம், மிளகு என்பவைகளுள் ஏதாவது ஒன்று உட்கொண்டு வருவது உத்தமம்.


ஏகாதசி விரதம்
காயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை...
தாய்க்கு சமமான தெய்வம் இல்லை
காசியை விட சிறந்த தீர்த்தம் இல்லை
ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை
"ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் .
ஏகாதசி அன்று விரதம் மேற்கொள்வதை அனைத்து சாஸ்த்திரங்களும் வழியுருத்துகின்றன".
மற்ற விரதங்களைவிட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிக சிறப்பானதாகும் ,
வருடத்துக்கு 24 (அ) 25 ஏகாதசிகள் வரும்.
அனைத்து ஏகாதசி களிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர் என்பது_நம்பிக்கை.
வருடம்முழுதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டு மாவது விரதம் இருப்பது சிறப்பான பலனை தரும்.
மூன்றுகோடி ஏகாதசிகளில் விரதமிருந்த பலனை தர கூடியது என்பதால் வைகுண்ட_ஏகாதசி 'முக்கோடி ஏகாதசி' என்வும் அழைக்கப்படுகிறது.
தீட்டு காலத்தில்கூட ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளலாம்.
வைகுண்ட ஏகாதசி அன்று தான், அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசம்செய்தார் கிருஷ்ண பரமாத்மா.எனவே இந்தநாளை, "கீதா ஜயந்தி' என கொண்டாடுகின்றனர்.
ஏகாதசி விரதத்தின்போது எக்காரணத்தை கொண்டும் துளசி பறிக்ககூடாது. பூஜைக்கான துளசியை முதல் நாளே பறித்துவிட வேண்டும்.
ஏகாதசி விரதம் இருக்கும் முறை1.ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு_வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்
2 , ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜைசெய்து விரதத்தை மேற்க்கொள்ள வேண்டும்.
3 , ஏகாதசி திதி_முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக) இருக்கவேண்டும்.
குளிர்ந்த நீரை குடிக்கலாம் . ஏழு_முறை துளசி இலையை சாப்பிடலாம் .
ஏகாதசி குளிர்_மாதமான மார்கழியில் வருவதனால், உடலுக்கு வெப்பம்கிடைக்க துளசியை சாப்பிடவேண்டும்.
பட்டினி கிடப்பதினால் , ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வுகிடைக்கிறது. குளிர்ந்த_நீர் வயிறை சுத்தமாக்குகிறது.
அப்படி முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள்,பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து (பிரசாதமாக)_உண்ணலாம்.
4.இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும்,விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும்.
கண் விழிக்கிறோம் என்றபெயரில் சினிமா,டிவி பார்க்க கூடாது. .

துவாதசி
விரதம்
5. ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி வருகிறது . துவாதசி அன்று அதி காலையில் உணவு_அருந்துவதை பாரணை என அழைக்கிறோம் .
துவாதசியன்று அதி காலையில் உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளைசேர்த்து பல்லில்_படாமல் கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!! என மூன்று முறை_கூறி ஆல் இலையில் உணவுவிட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும். (அகத்தி கீரை பொரியல், நெல்லிக்காய்_துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை.)
துவாதசி அன்று காலையில் 21 வகையான கறி சமைத்து உண்ணவேண்டும்.
இதில் அகத்தி கீரை, நெல்லிக்காய், சுண்டை காய் அவசியம் இடம்பெறவேண்டும்.
6.துவாதசியன்று வைஷ்ணவ நாட்காட்டியில்_காட்டியபடி குறிப்பிட்டநேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும்.
விரதத்தை முடிப் தேன்பது நீரை கூட அருந்தாமல் விரதம் இருந்தவர்கள் துளசி தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவானுக்கு தானிய_உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம்.
ஏகாதசிவிரதத்தை கடைபிடிப்பது போன்றே இந்த துவாதசி விரதத்தை முடிப்பதும் மிக மிக முக்கியமாகும் .
இல்லாவிடில் விரதம்இருந்த முழுபலனும் கிடைப்பதில்லை.
7.உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும்.
அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும்.
ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி, பன்னிரண்டாம் திதியாகிய துவாதசி என மூன்று திதிகளிலும் மேற் கொள்ளும் விரதமாக அமைந்து உள்ளது.
ஏகாதசி, துவாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங் களையும் அடைவர்.
இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.


Source: Anantha Narayanan/ face book
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top