V
V.Balasubramani
Guest
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்
மாநிலம் முழுவதும் பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம்
தமிழக அரசு ஊழியர்களின் காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நீடித்து வரும் நிலையில், மேலும் பல சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளன. இன்று முதல், அரசுக்கு நெருக்கடி தரும் வகையில், போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ள தால், அரசுப் பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் சங்கம், பிப்., 10 முதல், காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தி வருகிறது. மூத்த அமைச்சர்கள் குழு பேச்சு நடத்தியும், தீர்வு கிடைக்காததால், பிப்., 12ல், தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்டது; இதில், அரசு ஊழியர்கள், 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டனர்.தொடர் போராட்டத்தால், வருவாய்த்துறை, வணிக வரித்துறை உள்ளிட்ட பல துறைகளிலும் பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளன. சத்துணவு வினியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டு, மாற்றுப் பணியாளர்கள் நியமித்து, நிலைமை சமாளிக்கப்படுகிறது. தலைமைச் செயலக சங்கம், அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, நீதித்துறை ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களும், போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளதால், போராட்டம் மேலும் தீவிரமாகிறது.
Read more at: http://www.dinamalar.com/news_detail.asp?id=1456941
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்
மாநிலம் முழுவதும் பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம்
தமிழக அரசு ஊழியர்களின் காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நீடித்து வரும் நிலையில், மேலும் பல சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளன. இன்று முதல், அரசுக்கு நெருக்கடி தரும் வகையில், போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ள தால், அரசுப் பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் சங்கம், பிப்., 10 முதல், காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தி வருகிறது. மூத்த அமைச்சர்கள் குழு பேச்சு நடத்தியும், தீர்வு கிடைக்காததால், பிப்., 12ல், தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்டது; இதில், அரசு ஊழியர்கள், 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டனர்.தொடர் போராட்டத்தால், வருவாய்த்துறை, வணிக வரித்துறை உள்ளிட்ட பல துறைகளிலும் பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளன. சத்துணவு வினியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டு, மாற்றுப் பணியாளர்கள் நியமித்து, நிலைமை சமாளிக்கப்படுகிறது. தலைமைச் செயலக சங்கம், அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, நீதித்துறை ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களும், போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளதால், போராட்டம் மேலும் தீவிரமாகிறது.
Read more at: http://www.dinamalar.com/news_detail.asp?id=1456941