தீராத விளையாட்டுப் பிள்ளை
தீராத விளையாட்டுப் பிள்ளை
வரிகள் : பாரதியார்
ராகம் : ராகமாலிகா
…………………………………..
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை (தீராத)
தின்னப் பழங்கொண்டு தருவான் - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்:
என்னப்பன் என்னைய்யன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான் (தீராத)
அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழ அழச் செய்தபின் 'கண்ணை மூடிக்கொள்:
குழலிலே சூட்டுவேன்' என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான் (தீராத)
பின்னலைப் பின்னின் றிழுப்பான் - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்:
வண்ணப் புதுசேலைதனிலே- புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்(தீராத)
புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்:
கள்ளால் மயங்குவது போலே - அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம் (தீராத)
6. அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? (தீராத)
7. விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்
வேலையென்றால் அதைக் கேளா திழுப்பான்;
இளையாரொடு ஆடிக் குதிப்பான்; - எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். (தீராத)
8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத)
9. கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்; - பொய்ம்மை
சூத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத)
பாரதியின் இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. முதல் காரணம் இது தீராத விளையாட்டுப் பிள்ளையைப் பற்றியது. இரண்டாவது இது பாரதியார் எழுதியது. smile emoticon ஒவ்வொரு வரியும் பாசுர வரிகளைப் போல் தித்திக்கும்.பல முறை குழந்தைக்குத் தாலாட்டாகப் பாடும் பாடல் இது.
தீராத விளையாட்டுப் பிள்ளை
வரிகள் : பாரதியார்
ராகம் : ராகமாலிகா
…………………………………..
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை (தீராத)
தின்னப் பழங்கொண்டு தருவான் - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்:
என்னப்பன் என்னைய்யன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான் (தீராத)
அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழ அழச் செய்தபின் 'கண்ணை மூடிக்கொள்:
குழலிலே சூட்டுவேன்' என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான் (தீராத)
பின்னலைப் பின்னின் றிழுப்பான் - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்:
வண்ணப் புதுசேலைதனிலே- புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்(தீராத)
புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்:
கள்ளால் மயங்குவது போலே - அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம் (தீராத)
6. அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? (தீராத)
7. விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்
வேலையென்றால் அதைக் கேளா திழுப்பான்;
இளையாரொடு ஆடிக் குதிப்பான்; - எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். (தீராத)
8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத)
9. கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்; - பொய்ம்மை
சூத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத)
பாரதியின் இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. முதல் காரணம் இது தீராத விளையாட்டுப் பிள்ளையைப் பற்றியது. இரண்டாவது இது பாரதியார் எழுதியது. smile emoticon ஒவ்வொரு வரியும் பாசுர வரிகளைப் போல் தித்திக்கும்.பல முறை குழந்தைக்குத் தாலாட்டாகப் பாடும் பாடல் இது.