மழை வெள்ள பாதிப்புகளும் குற்றம் குறைகளு&
சமீபத்திய பெருமழை வெள்ளச்சேதங்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் அதிகம் என்றும், முன்னெச்சரிக்கை வழங்கப்படவில்லை என்றும், மேலிட உத்தரவுக்காக காத்திருந்ததில் கால விரயம் ஏற்பட்டதாகவும், நிவாரணப்பணிகளை துவக்குவதில் தாமதம் இருந்ததாகவும் பலவேறு குற்றச்சாட்டுகள் விவாதிக்கப் படுகின்றன. அதுபற்றி விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து முடிவுக்கு வருவது நம்மைப் போன்ற நடுநிலையாளர்களின் கடமை.
1. கூகிள் உதவியுடன் செம்பரம்பாக்கம் ஏரியின் தேதி வாரியான தண்ணீர் இருப்பு, முழுக் கொள்ளளவு, நீர் வரத்து, நீர் வெளியேற்றம், அன்றைய தேதியில் பெய்த மழையளவு ஆகியவற்றை காண்க. நவம்பர் முதல் தேதி, அநேகமாக வற்றிய நிலையில் இருந்த ஏரியில், தண்ணீரை சேமிக்க வேண்டிய கட்டாயத்திலும், அதே நேரத்தில் பாதுகாப்பான அளவு மட்டுமே நீரைத் தேக்கிவைக்கவேண்டும் என்ற விதிக்கு உட்பட்டும், தினசரி நீர் வெளியேற்றம் நிகழ்ந்துள்ளது என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
2. டிசம்பர் முதல் தேதி மழையினாலும், தகவல் தொடர்பு (மின்சாரம், டெலிபோன், மொபைல் சேவை) பாதிப்பாலும் முன்னெச்சரிக்கை பெரும்பாலான மக்களை சென்றடையவில்லை என்பது உண்மையே. நான் வசிக்கும் அடையாறு, அருகிலுள்ள கோட்டூர்புரம் பகுதிகளில், காவல்துறை மற்றும் ரெவின்யு துறை அதிகாரிகள் கரையோர மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த மிகுந்த அக்கறை காட்டினர். எனினும் தரைத்தள மக்கள் மட்டுமே இதற்கு இணங்கினர். இத்தகைய சோதனையான சூழ்நிலையில் அரசு அதிகாரிகள் திறமையாகவும், பொறுப்புணர்வுடனும் செயல்பட்டதை நான் நேரில் கண்டேன்.
3. மேலிட உத்தவுக்காக காத்திருந்ததில் கால விரயம் ஏற்பட்டது என்பது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. கடலூர் மழைவெள்ளத்தின் போதே, மாவட்டக் கலெக்டர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட, பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டதை எல்லாரும் அறிவர். இதன் நோக்கம் அத்யாவசியமான அவசர முடிவுகள் எடுப்பதில் எந்த காலவிரையமும் ஏற்படக்கூடாது என்பதே. திரு ககன்தீப் பேடி, ஏற்கனவே தானே புயல் சமயத்தில் பணியாற்றிய கடலூருக்கு அனுப்பப்பட்டு பணிகளை திறம்பட நடத்தியதை நாமெல்லாரும் அறிவோம். மூத்த அமைச்சர்கள் ஏராளமான பணிகளை நேரில் சென்று துரிதப் படுத்தியதையும் எல்லா ஊடகங்களும் தெரிவித்தன.
சன் டி.வி., கலைஞர் டி.வி., ஜெயா டி.வி. ஆகியவற்றில் செய்திகள் சற்று மிகைப்படுத்தி சொல்லப்பட்டது உண்மை. சில டி.வி. சானல்கள் (பாலிமர் செய்திகள், தந்தி டி.வி., நியூஸ் 7 தமிழ் முதலியவை) பாரபட்சமின்றி செய்திகளை அளித்தன.
இரவு பகல் பாராது பணியாற்றிய காவலர்கள், போக்குவரத்து காவலர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், மின்சாரத்துறை அலுவலர்கள், தகவல் தொடர்புத்துறை அலுவலர்கள், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தியாக உள்ளம் கொண்ட இளைஞர்கள், திரைப்பட கலைஞர்கள், அனைத்து அரசியல் கட்சிகள் அனைவருக்கும் பொதுமக்களாகிய நாம் கடமைப் பட்டுள்ளோம்.
டிசம்பர் நான்கு முதல் நான்கு நாட்களுக்கு இலவச பேருந்துப் பயண சலுகை, நிவாரண முகாம்களில் தங்கியிருந்த லட்சக் கணக்கான மக்களுக்கு சுடச்சுட உணவு, மருத்துவ உதவி, போர்வை ஆகியவை தரப்பட்டது நிறைவாக இருந்தன. குறுகிய காலத்தில், பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.முதல்வர் செல்வி ஜெயலலிதா, இயற்கைப் பேரிடரை சமாளிப்பதில் தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். தயவு தாட்சணியமின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றல், அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்படல், வடிகால்கள் செப்பனிடப்படல், தரமான சாலைகள் அமைத்தல் ஆகியவை அவசரமாக செய்யப்பட வேண்டும்.
இந்த இயற்கை பேரிடர் திறமையான அதிகாரிகளையும் (விக்ரம் கபூர், சைலேந்திரபாபு, கஜலக்ஷ்மி, சுந்தரவல்லி, அமுதா, சுரேஷ்குமார், ககன்தீப் பேடி, சாய்குமார்), தியாக மனப்பான்மை கொண்ட நல்லவர்களையும் (ஆர்.ஜே.பாலாஜி, சித்தார்த், இளைய ராஜா மற்றும் எண்ணிலடங்கா இளைஞர் பட்டாளத்தையும்) காட்டியுள்ளது. குறைகள் சில இருப்பினும், மொத்தத்தில் தமிழகத்துக்கு சபாஷ் தான். நம் பங்கிற்கு, இறையருளை வேண்டி விரைவில் அனைவரும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துவோம்.
சமீபத்திய பெருமழை வெள்ளச்சேதங்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் அதிகம் என்றும், முன்னெச்சரிக்கை வழங்கப்படவில்லை என்றும், மேலிட உத்தரவுக்காக காத்திருந்ததில் கால விரயம் ஏற்பட்டதாகவும், நிவாரணப்பணிகளை துவக்குவதில் தாமதம் இருந்ததாகவும் பலவேறு குற்றச்சாட்டுகள் விவாதிக்கப் படுகின்றன. அதுபற்றி விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து முடிவுக்கு வருவது நம்மைப் போன்ற நடுநிலையாளர்களின் கடமை.
1. கூகிள் உதவியுடன் செம்பரம்பாக்கம் ஏரியின் தேதி வாரியான தண்ணீர் இருப்பு, முழுக் கொள்ளளவு, நீர் வரத்து, நீர் வெளியேற்றம், அன்றைய தேதியில் பெய்த மழையளவு ஆகியவற்றை காண்க. நவம்பர் முதல் தேதி, அநேகமாக வற்றிய நிலையில் இருந்த ஏரியில், தண்ணீரை சேமிக்க வேண்டிய கட்டாயத்திலும், அதே நேரத்தில் பாதுகாப்பான அளவு மட்டுமே நீரைத் தேக்கிவைக்கவேண்டும் என்ற விதிக்கு உட்பட்டும், தினசரி நீர் வெளியேற்றம் நிகழ்ந்துள்ளது என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
2. டிசம்பர் முதல் தேதி மழையினாலும், தகவல் தொடர்பு (மின்சாரம், டெலிபோன், மொபைல் சேவை) பாதிப்பாலும் முன்னெச்சரிக்கை பெரும்பாலான மக்களை சென்றடையவில்லை என்பது உண்மையே. நான் வசிக்கும் அடையாறு, அருகிலுள்ள கோட்டூர்புரம் பகுதிகளில், காவல்துறை மற்றும் ரெவின்யு துறை அதிகாரிகள் கரையோர மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த மிகுந்த அக்கறை காட்டினர். எனினும் தரைத்தள மக்கள் மட்டுமே இதற்கு இணங்கினர். இத்தகைய சோதனையான சூழ்நிலையில் அரசு அதிகாரிகள் திறமையாகவும், பொறுப்புணர்வுடனும் செயல்பட்டதை நான் நேரில் கண்டேன்.
3. மேலிட உத்தவுக்காக காத்திருந்ததில் கால விரயம் ஏற்பட்டது என்பது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. கடலூர் மழைவெள்ளத்தின் போதே, மாவட்டக் கலெக்டர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட, பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டதை எல்லாரும் அறிவர். இதன் நோக்கம் அத்யாவசியமான அவசர முடிவுகள் எடுப்பதில் எந்த காலவிரையமும் ஏற்படக்கூடாது என்பதே. திரு ககன்தீப் பேடி, ஏற்கனவே தானே புயல் சமயத்தில் பணியாற்றிய கடலூருக்கு அனுப்பப்பட்டு பணிகளை திறம்பட நடத்தியதை நாமெல்லாரும் அறிவோம். மூத்த அமைச்சர்கள் ஏராளமான பணிகளை நேரில் சென்று துரிதப் படுத்தியதையும் எல்லா ஊடகங்களும் தெரிவித்தன.
சன் டி.வி., கலைஞர் டி.வி., ஜெயா டி.வி. ஆகியவற்றில் செய்திகள் சற்று மிகைப்படுத்தி சொல்லப்பட்டது உண்மை. சில டி.வி. சானல்கள் (பாலிமர் செய்திகள், தந்தி டி.வி., நியூஸ் 7 தமிழ் முதலியவை) பாரபட்சமின்றி செய்திகளை அளித்தன.
இரவு பகல் பாராது பணியாற்றிய காவலர்கள், போக்குவரத்து காவலர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், மின்சாரத்துறை அலுவலர்கள், தகவல் தொடர்புத்துறை அலுவலர்கள், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தியாக உள்ளம் கொண்ட இளைஞர்கள், திரைப்பட கலைஞர்கள், அனைத்து அரசியல் கட்சிகள் அனைவருக்கும் பொதுமக்களாகிய நாம் கடமைப் பட்டுள்ளோம்.
டிசம்பர் நான்கு முதல் நான்கு நாட்களுக்கு இலவச பேருந்துப் பயண சலுகை, நிவாரண முகாம்களில் தங்கியிருந்த லட்சக் கணக்கான மக்களுக்கு சுடச்சுட உணவு, மருத்துவ உதவி, போர்வை ஆகியவை தரப்பட்டது நிறைவாக இருந்தன. குறுகிய காலத்தில், பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.முதல்வர் செல்வி ஜெயலலிதா, இயற்கைப் பேரிடரை சமாளிப்பதில் தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். தயவு தாட்சணியமின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றல், அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்படல், வடிகால்கள் செப்பனிடப்படல், தரமான சாலைகள் அமைத்தல் ஆகியவை அவசரமாக செய்யப்பட வேண்டும்.
இந்த இயற்கை பேரிடர் திறமையான அதிகாரிகளையும் (விக்ரம் கபூர், சைலேந்திரபாபு, கஜலக்ஷ்மி, சுந்தரவல்லி, அமுதா, சுரேஷ்குமார், ககன்தீப் பேடி, சாய்குமார்), தியாக மனப்பான்மை கொண்ட நல்லவர்களையும் (ஆர்.ஜே.பாலாஜி, சித்தார்த், இளைய ராஜா மற்றும் எண்ணிலடங்கா இளைஞர் பட்டாளத்தையும்) காட்டியுள்ளது. குறைகள் சில இருப்பினும், மொத்தத்தில் தமிழகத்துக்கு சபாஷ் தான். நம் பங்கிற்கு, இறையருளை வேண்டி விரைவில் அனைவரும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துவோம்.