Here is an alternate view of Amma's rule. Why is it so difficult to build these school buildings, when funds are freely available. Is all this talk of great administration just an eye wash?
vikatan articlel
here are some excerpts..
ஊர்ப்பக்கத்தில் ஒரு கிராமப்புற தொடக்கப் பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியிருக்கிறார்கள். ‘பள்ளிக்கு கட்டிடங்களே இல்லை...ஏதாவது உதவ முடியுமா?’ என்றார்கள். விசாரித்த வரையில் அந்தப் பள்ளிக்கு மட்டும் மத்திய அரசின் நிதி ஒரு கோடியே இருபது லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆச்சரியமாக இருந்தது. இந்தத் தொகை இருந்தால் சொந்தமாக இடம் வாங்கி புதிய பள்ளிக்கூடத்தையே கட்டிவிடலாம். பள்ளிக்கும் இடம் பிரச்சினை இல்லை- ஏக்கர் கணக்கில் சொந்த இடம் இருக்கிறது. கட்டிடங்கள் மட்டும்தான் தேவை. சர்க்கரையை வைத்துக் கொண்டு இலுப்பைப் பூவைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பிரச்சினை என்னவென்றால் ஒதுக்கப்பட்ட நிதி இன்னமும் கைக்கு வந்து சேரவில்லை. பணமாகத் தர மாட்டார்கள். மாநில பொதுப்பணித்துறைதான் கட்டிட வேலைகளை முடித்துத் தர வேண்டும் என்பதால் மாநில அரசுதான் இதை முன்னெடுக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறது. இதுவரை கிட்டத்தட்ட நான்காயிரத்து நானூறு கோடி தமிழக பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்டு பயன்படுத்தாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த ஆனந்தவிகடனின் கட்டுரையை வாசித்த போதுதான் திக்கென்றிருந்தது. புரட்சித்தலைவியை மந்திரி தந்திரி தொடரில் நார் நாராகக் கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறார்கள்.
கட்டுரை வந்த காரணத்தினால் இந்த வார ஆனந்தவிகடனை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அள்ளியெடுத்துச் சென்று விட்டார்களாம். விகடனை எரித்துவிட்டால் எல்லாவற்றையும் நம்புகிறார்கள் போலிருக்கிறது. இன்னொருபக்கம் இணையத்தில் இயங்கும் அதிமுக விசுவாசிகள் விகடன் குழுமத்தை திமுக வாங்கிவிட்டதாகப் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் பேச முடியுமே தவிர கட்டுரையின் எந்தத் தகவலையும் அவர்களால் மறுக்க முடியாது. வரிக்கு வரி நிதர்சனத்தைத்தான் எழுதியிருக்கிறார்கள். மேலே சொன்ன பள்ளி உதாரணம் என்பது சாம்பிள்தான். தமிழகத்தின் எல்லாவிதமான அவலங்களுக்கும் செயல்படாத அம்மாவின் ஆட்சி காரணமாக இருக்கிறது என்பதை விலாவாரியாக எடுத்து வைத்திருக்கிறார்கள்.
.............
மனசாட்சியே இல்லாமல் பல நூறு கோடி ரூபாயை இலக்கு வைத்து ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது அரசாங்கம். தேர்தலுக்கு இன்னமும் ஆறு மாதம் கூட இல்லை. மந்தத் தன்மை துளி கூட மாறவில்லை. எல்லாவற்றையும் பணம் சரி செய்துவிடும் என்று நம்புகிறார்கள் போலிருக்கிறது. இவற்றையெல்லாம்தான் விகடன் கட்டுரை புள்ளிவிவரங்ளோடு விளாசியிருக்கிறது. தமிழகத்தின் கடன் சுமையான இரண்டரை லட்சம் கோடி ரூபாயில் ஆரம்பித்து பந்தாடப்பட்ட அமைச்சர்களின் எண்ணிக்கை கோகோ கோலாவுக்கு முகவராகச் செயல்பட்ட அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வரை அத்தனை விவரங்களையும் சேகரித்திருக்கிறார்கள். இந்தக் கட்டுரைக்காக விகடனைப் பாராட்டியே தீர வேண்டும். தீவிரமான உழைப்பினால் மட்டுமே இது சாத்தியம்.
விகடனுக்கு வாழ்த்துக்கள்.
add to it
savukku article
vikatan articlel
here are some excerpts..
ஊர்ப்பக்கத்தில் ஒரு கிராமப்புற தொடக்கப் பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியிருக்கிறார்கள். ‘பள்ளிக்கு கட்டிடங்களே இல்லை...ஏதாவது உதவ முடியுமா?’ என்றார்கள். விசாரித்த வரையில் அந்தப் பள்ளிக்கு மட்டும் மத்திய அரசின் நிதி ஒரு கோடியே இருபது லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆச்சரியமாக இருந்தது. இந்தத் தொகை இருந்தால் சொந்தமாக இடம் வாங்கி புதிய பள்ளிக்கூடத்தையே கட்டிவிடலாம். பள்ளிக்கும் இடம் பிரச்சினை இல்லை- ஏக்கர் கணக்கில் சொந்த இடம் இருக்கிறது. கட்டிடங்கள் மட்டும்தான் தேவை. சர்க்கரையை வைத்துக் கொண்டு இலுப்பைப் பூவைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பிரச்சினை என்னவென்றால் ஒதுக்கப்பட்ட நிதி இன்னமும் கைக்கு வந்து சேரவில்லை. பணமாகத் தர மாட்டார்கள். மாநில பொதுப்பணித்துறைதான் கட்டிட வேலைகளை முடித்துத் தர வேண்டும் என்பதால் மாநில அரசுதான் இதை முன்னெடுக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறது. இதுவரை கிட்டத்தட்ட நான்காயிரத்து நானூறு கோடி தமிழக பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்டு பயன்படுத்தாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த ஆனந்தவிகடனின் கட்டுரையை வாசித்த போதுதான் திக்கென்றிருந்தது. புரட்சித்தலைவியை மந்திரி தந்திரி தொடரில் நார் நாராகக் கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறார்கள்.
கட்டுரை வந்த காரணத்தினால் இந்த வார ஆனந்தவிகடனை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அள்ளியெடுத்துச் சென்று விட்டார்களாம். விகடனை எரித்துவிட்டால் எல்லாவற்றையும் நம்புகிறார்கள் போலிருக்கிறது. இன்னொருபக்கம் இணையத்தில் இயங்கும் அதிமுக விசுவாசிகள் விகடன் குழுமத்தை திமுக வாங்கிவிட்டதாகப் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் பேச முடியுமே தவிர கட்டுரையின் எந்தத் தகவலையும் அவர்களால் மறுக்க முடியாது. வரிக்கு வரி நிதர்சனத்தைத்தான் எழுதியிருக்கிறார்கள். மேலே சொன்ன பள்ளி உதாரணம் என்பது சாம்பிள்தான். தமிழகத்தின் எல்லாவிதமான அவலங்களுக்கும் செயல்படாத அம்மாவின் ஆட்சி காரணமாக இருக்கிறது என்பதை விலாவாரியாக எடுத்து வைத்திருக்கிறார்கள்.
.............
மனசாட்சியே இல்லாமல் பல நூறு கோடி ரூபாயை இலக்கு வைத்து ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது அரசாங்கம். தேர்தலுக்கு இன்னமும் ஆறு மாதம் கூட இல்லை. மந்தத் தன்மை துளி கூட மாறவில்லை. எல்லாவற்றையும் பணம் சரி செய்துவிடும் என்று நம்புகிறார்கள் போலிருக்கிறது. இவற்றையெல்லாம்தான் விகடன் கட்டுரை புள்ளிவிவரங்ளோடு விளாசியிருக்கிறது. தமிழகத்தின் கடன் சுமையான இரண்டரை லட்சம் கோடி ரூபாயில் ஆரம்பித்து பந்தாடப்பட்ட அமைச்சர்களின் எண்ணிக்கை கோகோ கோலாவுக்கு முகவராகச் செயல்பட்ட அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வரை அத்தனை விவரங்களையும் சேகரித்திருக்கிறார்கள். இந்தக் கட்டுரைக்காக விகடனைப் பாராட்டியே தீர வேண்டும். தீவிரமான உழைப்பினால் மட்டுமே இது சாத்தியம்.
விகடனுக்கு வாழ்த்துக்கள்.
add to it
savukku article
Last edited: