Janaki Jambunathan
Active member
கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம்.
சிலப்பதிகாரத்தைப் பற்றி ஒரு மிகப் பெரிய தமிழ்ப் பேராசிரியர் எழுதிய கட்டுரை ஒன்றை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்படியான சோதனை எனக்கு ஒரு தடவை ஏற்பட்டது. அவர் எழுதியிருந்தார்: 'கண்ணகி பழங்குடிமகளிர் வழி வந்த பச்சைத் தமிழ்ப்பெண். மழலைப் பருவத்திலேயே தமிழிப் பண்பாம் கற்பு நெறி உணர்ந்த பொற்பின் செல்வி. எல்லாக் கலைகளிலும் தேர்ச்சி பெற்ற ஆரணங்கு..... '
'மழலைப் பருவத்திலேயே தமிழ்ப் பண்பாம் கற்புநெறி உணர்ந்த பொற்பின் செல்வி ' என்ற வரிதான் எனக்கு மிகவும் தொந்தரவு கொடுத்தது. பச்சைத் தமிழ்ப் பெண் குழ்ந்தைக்கு மழலைப்பருவத்திலேயே கற்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால், ஃப்ராய்ட் இதைப்பற்றி என்ன சொல்லுவார் என்று சிந்தித்துப் பார்த்தேன்.... மேலும் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள அக்குழந்தை என்ன நடவடிக்கை மேற்கொள்ள முடியும் ? இருபத்திநாலு மணி நேரமும் ஜட்டியைக் கழற்றாமலிருக்கலாம். கண்ணகி காலத்தில் ஜட்டி இல்லை என்றால், அரசியலை தவறிப்போய்க்கூட ஒதுங்கக் கூடாது என்று கவனமாக இருக்கலாம்.... நான் என் சிந்தனையை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது, அவர்கள் சிரித்ததுதான். பழைய இலக்கியங்களைப் பற்றித் தமிழ்ப் 'பைத்தியக்காரத்தனம் ' ஏதுமில்லாமல், நல்ல இலக்கியக் கட்டுரைகள் எழுதினால், இதற்கு வரவேற்பு இருக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படக் காரணமாயிற்று.
Full article by இந்திரா பார்த்தசாரதி. in the link
http://www.thinnai.com/index.php?mo..._id=20108255&format=print&edition_id=20010825
சிலப்பதிகாரத்தைப் பற்றி ஒரு மிகப் பெரிய தமிழ்ப் பேராசிரியர் எழுதிய கட்டுரை ஒன்றை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்படியான சோதனை எனக்கு ஒரு தடவை ஏற்பட்டது. அவர் எழுதியிருந்தார்: 'கண்ணகி பழங்குடிமகளிர் வழி வந்த பச்சைத் தமிழ்ப்பெண். மழலைப் பருவத்திலேயே தமிழிப் பண்பாம் கற்பு நெறி உணர்ந்த பொற்பின் செல்வி. எல்லாக் கலைகளிலும் தேர்ச்சி பெற்ற ஆரணங்கு..... '
'மழலைப் பருவத்திலேயே தமிழ்ப் பண்பாம் கற்புநெறி உணர்ந்த பொற்பின் செல்வி ' என்ற வரிதான் எனக்கு மிகவும் தொந்தரவு கொடுத்தது. பச்சைத் தமிழ்ப் பெண் குழ்ந்தைக்கு மழலைப்பருவத்திலேயே கற்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால், ஃப்ராய்ட் இதைப்பற்றி என்ன சொல்லுவார் என்று சிந்தித்துப் பார்த்தேன்.... மேலும் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள அக்குழந்தை என்ன நடவடிக்கை மேற்கொள்ள முடியும் ? இருபத்திநாலு மணி நேரமும் ஜட்டியைக் கழற்றாமலிருக்கலாம். கண்ணகி காலத்தில் ஜட்டி இல்லை என்றால், அரசியலை தவறிப்போய்க்கூட ஒதுங்கக் கூடாது என்று கவனமாக இருக்கலாம்.... நான் என் சிந்தனையை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது, அவர்கள் சிரித்ததுதான். பழைய இலக்கியங்களைப் பற்றித் தமிழ்ப் 'பைத்தியக்காரத்தனம் ' ஏதுமில்லாமல், நல்ல இலக்கியக் கட்டுரைகள் எழுதினால், இதற்கு வரவேற்பு இருக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படக் காரணமாயிற்று.
Full article by இந்திரா பார்த்தசாரதி. in the link
http://www.thinnai.com/index.php?mo..._id=20108255&format=print&edition_id=20010825