• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மனக்குழப்பம் நீக்கும் அருள்மிகு அபய ஆஞ்&

Status
Not open for further replies.
மனக்குழப்பம் நீக்கும் அருள்மிகு அபய ஆஞ்&

மனக்குழப்பம் நீக்கும் அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயில்

ஏப்ரல் 26, 2015


81275988-0193-411a-a532-d4c4707ef5f6_S_secvpf.gif


புகழ்பெற்ற தேசிய புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அருகில் 2 கி.மீ., தூரத்தில் இக்கோயில் உள்ளது.

குழந்தை பாக்கியம் கிடைக்க, பயம், மனக்குழப்பம் நீங்க, பாதுகாப்பு உண்டாக இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இலங்கை சென்று ராவணனை வென்ற ராமர், சீதையை மீட்டு கொண்டு வந்தபோது அவருக்கு தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்க பூஜை செய்ய எண்ணினார். அவரது பூஜைக்காக லிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயர், கைலாயம் சென்றார்.

அவ்வேளையில் சீதாதேவி, மணலில் ஒரு லிங்கம் பிடித்து வைத்தாள். ஆஞ்சநேயர் வர தாமதமாகவே, ராமர் மணல் லிங்கத்தை பூஜை செய்து வழிபட்டார். அதன்பின்பு வந்த ஆஞ்சநேயர், நடந்ததையறிந்து மிகவும் கோபம் கொண்டார்.

வாலால் லிங்கத்தை சுற்றி மணல் லிங்கத்தை பெயர்க்க முயன்றார். ஆனால் வால் அறுந்ததே தவிர, லிங்கத்தை அசைக்கக்கூட முடியவில்லை. தவறை உணர்ந்த ஆஞ்சநேயர், சிவஅபச்சாரம் செய்த குற்றம் நீங்க தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டார்.

இந்த நிகழ்வுக்காக இங்கு கோவில் ஏற்படுத்தப்பட்டு இத்தலத்தில் வாலறுந்த கோலத்தில் மூலவராக ஆஞ்சநேயராக காட்சி தருகிறார். இக்கோவிலில் ஆஞ்சநேயர் சன்னதி, எட்டு பட்டைகளுடன் கூடிய விமானத்துடன் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

மூலஸ்தானத்தில் அபய ஆஞ்சநேயர், வாலறுந்த ஆஞ்சநேயர் என இரண்டு ஆஞ்சநேயர்கள் அருகருகில் காட்சி தருகின்றனர். இவ்வாறு "இரட்டை ஆஞ்சநேயர்'களை இங்கு தரிசிக்கலாம்.

அபய ஆஞ்சநேயர் பீடத்திற்கு கீழே ஒரு கோடி ராமரக்ஷ' மந்திர எழுத்துக்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இத்தல ஆஞ்சநேயர் பக்தர்களின் பயத்தை போக்கி அருளுபவர் என்பதால், "அபய ஆஞ்சநேயர்' என்றழைக்கப்படுகிறார்.

வெள்ளிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. அன்று தேங்காய், வெல்லம், அவல் சேர்ந்த கலவையை விசேஷ நைவேத்யமாக படைத்து வழிபாடு செய்கின்றனர். மிகவும் சிறிய கோயிலாக இது உள்ளது ஆனாலும் பாரம்பரியம் மிக்கது சக்தி வாய்ந்தது.

ஆஞ்சநேயர் உருவாக்கிய தீர்த்தம், கோயிலுக்கு பின்புறம் உள்ளது. கோயில் முகப்பில் கடல் மணலில் உருவான சுயம்பு ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். இவருக்கும் வால் கிடையாது. இந்த ஆஞ்சநேயர் சிலை, கடலில் கிடைக்கும் சிப்பி பதிந்த நிலையில் இருப்பது வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசயம்.

கோயில் வளாகத்தில் தலவிருட்சம் அத்திமரம் இருக்கிறது. இந்த அத்தி மரத்தில் இளநீரை கட்டி, ஆஞ்சநேயரிடம் வேண்டிக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. வேண்டுதல் நிறைவேறியதும் ஆஞ்சநேயருக்கு, வேறு இளநீரால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

செல்லும் வழி: ராமேஸ்வரம் சென்று ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு கோவிலின் மேற்கு வாசல் வந்து அங்கிருந்து இக்கோவிலுக்கு ஆட்டோவில் செல்லலாம்.


???????????? ???????? ????????? ??? ????????? ???????????? || Eliminating confusion Sri Abhaya Hanuman temple
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top