"பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த ந&a
[h=3]பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த........[/h]
"பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்".
இக்குறளுக்கு பொது விளக்கம்
குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால்
பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க
இடத்தைப் பெறும் என்பதாகும்.
இதில் வள்ளுவர் குறிப்பிடும் பொய்மை என்பதின்
பிறப்பிடம் எது என்பது ஆராயப்படவேண்டிய ஒன்றாகும்.
பொய்யுரைப்போரிடம் இருந்து வெளிப்படும் பொய் சொற்களால்
எந்த விதமான நன்மையும் எக்காலத்தும் ஏற்படவே ஏற்படாது.
ஆனால் சத்திய வழிதனை அறிந்து அதில் நடப்பவர்கள் அல்லது,
சத்திய வழிதனை அறிய முயற்சிப்பவர்கள் ஆகிய, இத்தகைய
வாய்மை உடையவர்களின் வாயில் இருந்து ஏதோ ஒரு இக்கட்டான
சந்தர்ப்பத்தில் பொய் சொற்கள் வெளிப்பட்டாலும், அதில் தன்னலம்
என்பது ஒரு துளியும் இருக்கவே இருக்காது. மாறாக பொதுநலன்
கருதியே அச்சொற்கள் வெளிப்படுவதால், தோற்றத்தில் அது
பொய்மையுடையதாக ஏனையோருக்கு தோன்றினாலும்,
வாய்மையுடைவர்கள் இதுவும் வாய்மையே என்னும் கருத்தையே
தங்களது கருத்தினில் கொள்வர் என்னும் பொருள் படவே வள்ளுவர்
இக்குறளை நமக்கு அருளியுள்ளார்.
[h=3]பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த........[/h]
"பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்".
இக்குறளுக்கு பொது விளக்கம்
குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால்
பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க
இடத்தைப் பெறும் என்பதாகும்.
இதில் வள்ளுவர் குறிப்பிடும் பொய்மை என்பதின்
பிறப்பிடம் எது என்பது ஆராயப்படவேண்டிய ஒன்றாகும்.
பொய்யுரைப்போரிடம் இருந்து வெளிப்படும் பொய் சொற்களால்
எந்த விதமான நன்மையும் எக்காலத்தும் ஏற்படவே ஏற்படாது.
ஆனால் சத்திய வழிதனை அறிந்து அதில் நடப்பவர்கள் அல்லது,
சத்திய வழிதனை அறிய முயற்சிப்பவர்கள் ஆகிய, இத்தகைய
வாய்மை உடையவர்களின் வாயில் இருந்து ஏதோ ஒரு இக்கட்டான
சந்தர்ப்பத்தில் பொய் சொற்கள் வெளிப்பட்டாலும், அதில் தன்னலம்
என்பது ஒரு துளியும் இருக்கவே இருக்காது. மாறாக பொதுநலன்
கருதியே அச்சொற்கள் வெளிப்படுவதால், தோற்றத்தில் அது
பொய்மையுடையதாக ஏனையோருக்கு தோன்றினாலும்,
வாய்மையுடைவர்கள் இதுவும் வாய்மையே என்னும் கருத்தையே
தங்களது கருத்தினில் கொள்வர் என்னும் பொருள் படவே வள்ளுவர்
இக்குறளை நமக்கு அருளியுள்ளார்.