P.J.
0
ராம நாம ஜபம்
ஒரு குரு, விஷ்ணு சஹஸ்ரநாமம் ஸ்லோகத்தைச் சில சிறுவர்களுக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் ஸ்லோகத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!
சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!!
பிறகு சிறுவர்களிடம் கூறலானார், “ராம நாமத்தை மூன்று முறை ஆழ்ந்த பக்தியுடன் ஜபித்தால், விஷ்ணு சஹஸ்ர நாமத்தை அல்லது கடவுளின் சஹஸ்ர நாமாவளியை படித்த பலன் கிடைக்கும்.”
ஒரு சிஷ்யன் குரு சொன்னதை ஒத்துக் கொள்ளவில்லை. “மூன்று முறை சொன்னால் எப்படி ஆயிரத்திற்குச் சமமாகும்” என்று குருவிடம் கேட்டான்.
அறிவும், திறமையும், ராம பக்தியும் நிறைந்த குரு உடனடியாக பதிலளித்தார். “சிவபெருமான் என்ன சொல்கிறார் தெரியுமா? எல்லா வார்த்தைகளையும் விட ராம நாம ஜபம் தான் மிகவும் இனிமையானது. அவர் பெயரைச் சொல்வது விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களைச் சொல்வதற்குச் சமம்.” என்று கூறினார்.
குரு கணித்தல் மூலம் “மூன்று முறை ராம நாம ஜபம் செய்வது ஆயிரத்திற்குச் சமம்” என்பதை விளக்கினார். ராமா என்ற பெயரை எடுத்துக்கொண்டால் அதில் இரண்டு சமஸ்கிருத வார்த்தைகள் இருக்கின்றன. ரா வும் மா வும்.
‘ரா’{சமஸ்கிருதத்தில் இரண்டாவது இடையின எழுத்து}
‘மா’{ஐந்தாவது மெல்லின எழுத்து}:
‘ரா’ வுக்கு இரண்டு மதிப்பும், மா வுக்கு ஐந்து மதிப்பும் கொடுத்தால், ராமா என்ற வார்த்தைக்கு இரண்டு × ஐந்து = பத்தாகிவிடும். ராமா என்ற வார்த்தையை மூன்று முறை சொன்னால் ஆயிரத்திற்குச் சமமாகும். இரண்டு × ஐந்து × இரண்டு × ஐந்து × இரண்டு × ஐந்து = பத்து × பத்து × பத்து = ஆயிரம்.
இந்த விளக்கம் கேட்டவுடன் சிறுவன் சமாதானமாகவும், சந்தோஷமாகவும் இருந்தான். விஷ்ணு சஹஸ்ர நாமத்தைப் பக்தியுடனும், கவனத்துடனும் கற்றுக் கொண்டான்.
ஆவலாகக் கேள்வி கேட்ட சிறுவனுக்கு நன்றி கூறி, எல்லோரிடமும் இந்த விளக்கத்தை சொன்னால், தினமும் மூன்று தடவை ராம நாமத்தை ஜபிப்பது சுலபமாகி விடும்.
நீதி:
சடங்கு முறைகளின் அர்த்தத்தை மற்றவர்களுக்குச் சொன்னால், குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு, அதைப் பாராட்டிக் கட்டாயமாகப் பின்பற்றுவார்கள். கட்டாயப்படுத்துவதை விட அர்த்தத்தைப் புரிந்து செய்வது சிறப்பாகும்.அனுபவங்களையும், அறிவு சார்ந்த விஷயங்களையும் தெரிந்து கொள்வதின் மூலம் தான் ஒரு மனிதனுக்கு ஞானம் வளரும்.
மொழி பெயர்ப்பு:
சரஸ்வதி, ரஞ்சனி
http://saibalsanskaar.wordpress.com
https://saibalsanskaartamil.wordpress.com/2014/07/04/ராம-நாம-ஜபம்/
ஒரு குரு, விஷ்ணு சஹஸ்ரநாமம் ஸ்லோகத்தைச் சில சிறுவர்களுக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் ஸ்லோகத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!
சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!!
பிறகு சிறுவர்களிடம் கூறலானார், “ராம நாமத்தை மூன்று முறை ஆழ்ந்த பக்தியுடன் ஜபித்தால், விஷ்ணு சஹஸ்ர நாமத்தை அல்லது கடவுளின் சஹஸ்ர நாமாவளியை படித்த பலன் கிடைக்கும்.”
ஒரு சிஷ்யன் குரு சொன்னதை ஒத்துக் கொள்ளவில்லை. “மூன்று முறை சொன்னால் எப்படி ஆயிரத்திற்குச் சமமாகும்” என்று குருவிடம் கேட்டான்.
அறிவும், திறமையும், ராம பக்தியும் நிறைந்த குரு உடனடியாக பதிலளித்தார். “சிவபெருமான் என்ன சொல்கிறார் தெரியுமா? எல்லா வார்த்தைகளையும் விட ராம நாம ஜபம் தான் மிகவும் இனிமையானது. அவர் பெயரைச் சொல்வது விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களைச் சொல்வதற்குச் சமம்.” என்று கூறினார்.
குரு கணித்தல் மூலம் “மூன்று முறை ராம நாம ஜபம் செய்வது ஆயிரத்திற்குச் சமம்” என்பதை விளக்கினார். ராமா என்ற பெயரை எடுத்துக்கொண்டால் அதில் இரண்டு சமஸ்கிருத வார்த்தைகள் இருக்கின்றன. ரா வும் மா வும்.
‘ரா’{சமஸ்கிருதத்தில் இரண்டாவது இடையின எழுத்து}
‘மா’{ஐந்தாவது மெல்லின எழுத்து}:
‘ரா’ வுக்கு இரண்டு மதிப்பும், மா வுக்கு ஐந்து மதிப்பும் கொடுத்தால், ராமா என்ற வார்த்தைக்கு இரண்டு × ஐந்து = பத்தாகிவிடும். ராமா என்ற வார்த்தையை மூன்று முறை சொன்னால் ஆயிரத்திற்குச் சமமாகும். இரண்டு × ஐந்து × இரண்டு × ஐந்து × இரண்டு × ஐந்து = பத்து × பத்து × பத்து = ஆயிரம்.
இந்த விளக்கம் கேட்டவுடன் சிறுவன் சமாதானமாகவும், சந்தோஷமாகவும் இருந்தான். விஷ்ணு சஹஸ்ர நாமத்தைப் பக்தியுடனும், கவனத்துடனும் கற்றுக் கொண்டான்.
ஆவலாகக் கேள்வி கேட்ட சிறுவனுக்கு நன்றி கூறி, எல்லோரிடமும் இந்த விளக்கத்தை சொன்னால், தினமும் மூன்று தடவை ராம நாமத்தை ஜபிப்பது சுலபமாகி விடும்.
நீதி:
சடங்கு முறைகளின் அர்த்தத்தை மற்றவர்களுக்குச் சொன்னால், குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு, அதைப் பாராட்டிக் கட்டாயமாகப் பின்பற்றுவார்கள். கட்டாயப்படுத்துவதை விட அர்த்தத்தைப் புரிந்து செய்வது சிறப்பாகும்.அனுபவங்களையும், அறிவு சார்ந்த விஷயங்களையும் தெரிந்து கொள்வதின் மூலம் தான் ஒரு மனிதனுக்கு ஞானம் வளரும்.
மொழி பெயர்ப்பு:
சரஸ்வதி, ரஞ்சனி
http://saibalsanskaar.wordpress.com
https://saibalsanskaartamil.wordpress.com/2014/07/04/ராம-நாம-ஜபம்/