ஆஜ்ய ஸம்ஸ்காரம்.
ஹோமத்திற்காக பயன்படுத்த இருக்கும் நெய்யை சுத்தபடுத்துவதே ஆஜ்ய ஸம்ஸ்காரம் எனப்படுகிறது.
நமக்கு எதிரில் உள்ள தர்பைகளின் மேல் , வடக்கிலிருக்கும் நெய் பாத்திரத்தை வைக்க வெண்டும். நெய் பாத்திரத்தின் மேல் ஆயாமத பவித்ரத்தை வைத்து நெய்யை அக்னியில் காண்பித்து , உருக்கிய பின் அதை நெய் பாத்திரத்தில் ஊற்றவும்.
அக்னியின் வடக்கிலிருந்து மூன்று தணல்களை எடுத்து நமக்கு இடப்புறமாக , பரிஸ்தரணத்திற்கு வெளியில் வைக்கப்பட்ட விராட்டியின் மேல் வைக்கவும். அதன் மேல் நெய் பாத்திரத்தை வைக்கவும்.
ஒரு தர்பையை எடுத்து ஹோம அக்னியில் காண்பிக்கவும். ஜ்வாலையோடு இருக்கும் அந்த தர்பையை நெய் பாத்திரத்தை பிரதக்ஷிணமாக சுற்றி வடக்கில் போடவும்.
இரண்டு தர்பை நுனிகளை கத்தியால் ஒரு அங்குல நீளத்திற்கு வெட்டி ஜலத்தில் நனைத்து நுனி கிழக்காக நெய்யில் போடவும்.
மறுபடியும் ஒரு தர்பையை அக்னியில் காண்பித்து ஜ்வாலையுடன் நெய்யை மூன்று தடவை ப்ரதக்ஷிணமாக சுற்றி வடக்கில் போடவும்.
வரட்டியின் மேல் அக்னி தணலின் மேல் வைத்த நெய் பாத்திரத்தை வடக்கில் இறக்கி வைத்து அந்த அக்னி தணல்கலை ஹோம அக்னி குண்டத்தில் சேர்க்கவும்.
நெய் பாத்திரத்தை நமக்கு எதிரில் உள்ள பரப்பிய தர்பைமேல் வைத்து ஆயாமத பவித்ரத்தை வடக்கு நுனியாக அதில் வைக்கவும்.
இரு கைகளின் கட்டை விரல் மற்றும் மோதிர விரல்களால் ஆயாமத பவித்ரத்தை நுனி வடக்காக பிடித்துக்கொண்டு நெய்யை கிழக்கிலிருந்து மேற்காகவும் மறுபடியும் கிழக்காகவும் ,
இவ்வாறு மூன்று முறை செய்த பிறகு ஆயாமத பவித்ரத்தை முடிச்சை அவிழ்த்து ஜலத்தில் தொட்டு நுனி கிழக்காக அக்னியில் பவித்ரத்தை போடவும்.
மரக்கரண்டிகள் அல்லது காய்ந்த புரச இலைகளை சுத்தப்படுத்துவதே தர்வீ ஸம்ஸ்காரம் எனப்படும்.
இரண்டு தர்வீகளையும் உட்புறமாக அக்னியில் காண்பித்து இடது கையில் வைத்துக்கொள்ளவும். இரண்டு தர்பைகளை வலது கையில் வைத்துக்கொண்டு தர்வியின் உள் புறமும் வெளிப்புறமும் துடைக்கவும்.
மறுபடியும் தர்விகளை அக்னியில் காண்பிக்கவும். மறுபடியும் தர்பைகளால் உட்புறமும் வெளிப்புறமும் துடைக்கவும். தர்விகளை நெய் பாத்திரத்தின் வடக்கே வைத்துவிட்டு துடைத்த தர்பைகளை ஜலத்தில் தொட்டு அக்னியில் வைக்கவும்.
பரிதி வைக்க வேண்டும். அதாவது ஹோம குண்டத்தின் பக்கங்களில் ஸமித்து வைப்பதே பரிதி என்று பெயர். புரஸு ஸமித்தில் நடுவில் தடியாக இருக்கும் ஸமித்தை அக்னியின் மேற்கிலும், நீளமான சமித்தை தெற்கேயும் மெல்லிய குட்டையான ஸமித்தை வடக்கேயும் வைக்க வேண்டும். .
நமக்கு எதிரில் ந்டுவிலுள்ள ஸமித்தை கையால் தொடவும். வேறு இரண்டு ஸமித்து எடுத்து ஒன்றை வேதியின் தென் கிழக்கு மூலையிலும் மற்றொன்றை வட கிழக்கு மூலையிலும் அக்னிக்கு அருகில் சொருகவும். இது ஆகார ஸமித்தாகும்.
அக்னி பரிசேஷனம்.: அக்னிக்கு தெற்கில் மேற்கிலிருந்து கிழக்காக அதிதேனு மந்யஸ்வ என்று சொல்லிவலது கை யில் ஜலத்தை விட்டு கட்டை விரல் மேல் நோக்கிய வாறு சுண்டு விரல் அடி வழியாக ஜலம் வேதிக்கு பக்கங்களில் விடவும். ஏற்கில் தெற்கிலிருந்து வடக்காக அனுமதே அனுமந்யஸ்வ என்றும், வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக ஸரஸ்வதே அனுமந்யஸ்வ என்று சொல்லியும் ஜலம் பரிசேஷனம் செய்யவும்.
பிறகு வடகிழக்கு மூலையில் ஆரம்பித்து ப்ரதக்ஷிணமாக மறுபடியும் வடகிழக்கு மூலையில் முடியுமாறு தேவ ஸவித: ப்ரஸுவ:என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும்.
இத்ம தானம்: ஸமித்து கட்டுக்கு இத்மம் என்று பெயர். வடக்கே வைத்த சமித்து கட்டை எடுத்து சுற்றிய கட்டை அவிழ்த்து நெய்யால் இரு தடவை அபிகாரம் செய்து (நெய் கீழே வழியாதவாறு) “அஸ்மின் உபாகர்ம ஹோம கர்மணி ப்ரஹ்மன் இத்மமாதாஸ்யே என்று சொல்லி சாஸ்த்ரிகளை பார்த்து அல்லது தர்ப்பை கூர்ச்சத்தில் ப்ருஹ்மாவை ஆவாஹனம் செய்திருந்தால் அந்த ப்ருஹ்ம கூர்ச்சத்தை பார்த்து அக்னியில் வைக்கவும். இத்மத்தை நெய் பாத்ரத்திற்குள் முக்காதீர்கள்.
இதற்கு ப்ருஹ்மா ஒம் ஆதாத்ஸ்வ என்று ப்ரதி வசனம் சொல்ல வேண்டும்.
சொன்ன பிறகு இத்மத்தை அக்னியில் வைக்க வேண்டும்.
சின்ன இலையினால் நெய் எடுத்து வடமேற்கு மூலையிலிருந்து தென் கிழக்கு மூலை வரையிலும் ப்ரஜாபதியை மனதில் நினைத்து நெய்யை தாரையாக ஹோமாக்னியில் விட வேண்டும். பிறகு ப்ரஜாபதயே இதம் ந மம என்று சொல்ல வேண்டும்.
பிறகு பெரிய இலையினால் நெய் எடுத்து தென் மேற்கு மூலையிலிருந்து வட கிழக்கு மூலை வரை தாரையாக விடவும். இந்த்ராய இதம் ந மம என்று சொல்லவும்.
மறுபடியும் பெரிய தர்வீ யினால் அக்னயே ஸ்வாஹா என்று சொல்லிய படியே நெய்யை அக்னியில் வலப்புறமாக விட்டு அக்னயே இதம் ந மம என்று சொல்லவும்.
பிறகு தெற்கு பாகத்தில் ஸோமாய ஸ்வாஹா என்று சொல்லிய படியே நெய் ஊற்றவும். ஸோமாய இதம் ந மம.என்று சொல்லவும்.
மத்தியில் அக்னயே ஸ்வாஹா என்று ஜபித்தவாரே நெய்யை வலப்புறமாக ஹோமத்தில் விட்டு அக்னயே இதம் ந மம என்று சொல்லவும்.
பிராயசித்த ஹோமம். : பிறகு ஆரம்ப ப்ரப்ருதி ஏதத் க்ஷண பர்யந்தம் மத்யே ஸம்பாவிதே ஸமஸ்த தோஷ ப்ராயஸ்சித்தார்த்தம் ஸர்வ
ப்ராயஸ்சித்த ஆஹூதிம் ஹோஷ்யாமி---ஓம் பூர்புவஸுவஸ் ஸ்வாஹா.என்று கூறி ஹோமம் செய்யவும். ப்ரஜாபதயே இதம் ந மம என்று சொல்லவும்.
இதற்கு மேல் அவரவர் ஸம்ப்ரதாயதிற்கு ஏற்றார் போல் ஹோமம் செய்யவும்.
இங்கு முதல் ஆவணி அவிட்ட ப்ருஹ்மசாரிகள் சாஸ்த்ரிகள் அருகில் உட்கார்ந்து தர்பையினால் அவரை தொட்டவாறே மந்திரங்களை சொல்லவும்.
கீழ் வரும் ஒவ்வொரு மந்திரத்திலும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு நெய் விடவும்
ப்ரஜாபதயே காண்டரிஷயே ஸ்வாஹா---ப்ரஜாபதயே காண்டரிஷயே இதம் ந மம.
ஸோமாய காண்டரிஷயே ஸ்வாஹா ஸோமாய காண்டரிஷயே ந மம.
அக்னயே காண்டரிஷயே ஸ்வாஹா—அக்னயே காண்டரிஷய இதம் ந மம
விச்வேப்யோ தேவேப்ய:காண்டரிஷிப்ய:ஸ்வாஹா—விச்வேப்யோ தேவேப்ய: காண்டரிஷிப்ய: இதம் ந மம
ஸாம்ஹிதிப்யோ தேவதாப்ய: உபநிஷத்ப்ய:ஸ்வாஹா--. ஸாம்ஹிதீப்யோ தேவதாப்ய: உபநிஷத்ப்ய: இதம் ந மம
யாஜ்ஞிகீப்யோ தேவதாப்ய: உபநிஷத்ப்ய: ஸ்வாஹா---யாஜ்ஞிகீப்யோ தேவதாப்ய: உபநிஷத்ப்ய: இதம் ந மம.
வாருணீப்யோ தேவதாப்ய: உபநிஷத்ப்ய: ஸ்வாஹா---வாருணீப்யோ தேவதாப்ய; உபநிஷத்ப்ய: இதம் நமம
ப்ரஹ்மணே ஸ்வயம்புவே ஸ்வாஹா; .—ப்ருஹ்மணே ஸ்வயம்புவே ந மம
ஸதஸஸ்பதிம் அத்புதம் ப்ரியம் இந்த்ரஸ்ய காம்யம் ஸநி மேதாம் ஆயாஸிஷம் ஸ்வாஹா---ஸதஸஸ்பதய இதம் ந மம
ஹோம குண்டம் அருகில் தர்வீயை வைக்கவும்..
தலை ஆவணி அவிட்டகாரர்கள் மட்டும் சங்கல்பம் செய்ய வேண்டும்.
மற்றவர்கள் மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்தம் அத்யாயோபக்ரம கர்மணி வேதாரம்பம் கரிஷ்யே என்று சொல்லவும்.
தலை ஆவணி அவிட்ட குழந்தைகள் மமோபாத்த ஸமஸ்த துரித்யக்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் அத்யாயோபக்ரம கர்மணி ததங்கம் க்ரகப்ரீதி தாநம், ஆப்யுதயிகம், ஹிரண்யரூபேன ச கரிஷ்யே ததங்கம் புண்யாகாவாசனம் ச கரிஷ்யே. அப உப ஸ்ப்ருச்ய.. .
க்ரஹப்ரீதி:------ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே.------------நக்ஷத்ரே---------ராஸெள----------ஜாதஸ்ய ------------சர்மண: அஸ்ய குமாரஸ்ய
வேதாரம்ப முஹூர்த்த லக்னாபேக்ஷயா ஆதித்யானாம் நவாநாம் க்ரஹானாம் ஆனுகூல்ய ஸித்தியர்த்தம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரீதிம் காம்யமான: இதம் ஹிரண்யம் ப்ராஹ்மணேப்ய: ஸம்ப்ரத்தே ந மம.
நாந்தி----------ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ அனந்த புன்ய பலதம் அத:சாந்திம் ப்ரயஸ்சமே. இதம் ஆக்னேயம் ஹிரண்யம் --------நக்ஷத்ரே ---------ராஸெள ஜாதஸ்ய அஸ்ய குமாரஸ்ய ப்ரதமோபா கர்மாங்க