• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில்

Status
Not open for further replies.
அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில்

அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில்

T_500_761.jpg



கண்ணபிரான், நான்முகன், இந்திரன், வசிட்டர், விசுவாமித்திரர், நாரதர், கருடன், சூரியன், மன்மதன் முதலியோர் வழிபட்ட தலம் இது.

அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், அருள்மிகு திருவண்ணாமலை ஆதீ‌னம், குன்றக்குடி - 630 206 சிவகங்கை மாவட்டம்.

+91 - 4577 - 264227, 97905 83820

தலபெருமை:

மயில்மலை : முருகனது ஊர்தியாகிய மயில் அப்பெருமான் சாபத்தால் மயிலுருவத்தில் மலையாக இருந்து சாபவிமோசனம் பெற்றதால் மயில்மலை என்று பெயர் வந்தது. இம்மலை மயில்வடிவமாக இருப்பதாக கூறுகிறார்கர். இதன் உயரம் அடிவாரத்திலிருந்து 40 மீட்டம். மலை மீதுள்ள ராஜகோபுரத்தின் உயரம் 16.15 மீட்டம். ஆக மலைக்கோயிலின் உயரம் 56.15 மீட்டம். ஆறே முக்கால் ஏக்கர் பரப்பளவில் இம்மலை அமைந்துள்ளது.

மூலவர் : சண்முகநாதன் ஆறுதிருமுகங்களோடும் பன்னிரு திருக்கரங்களோடும் எழுந்தருளியுள்ளார். செட்டிமுருகன், குன்றையூருடையான், மயூரகிரிநாதன், மயில்கலைக்கந்தன். குன்றைமுருகன், தேனாறுடையான் என்று பலபெயர்கள் மூலவருக்கு உண்டு

தேனாற்று நாதர் : கீழ்க்கோயிலில் எழுந்தருளியிருப்பவர் சுயம்புமூர்த்தி. அகத்தியரால் வழிபாடு செய்யப்பெற்றவர். தேனாற்றங்கரையில் இருப்பதால் தேனாற்று நாதர் என்று பெயர் பெற்றுள்ளார்.

அம்மை : அழகே வடிவாய் அருட்சக்தியாய் எழுந்தருளியுள்ளார். இத்தலம் குறித்து அருணகிரி நாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

கோயிலின் பிற தீர்த்தங்கள் : சரவணப்பொய்கை, தேனாறு, மயில் தீர்த்தம்.

முருகன், வள்ளி, தெய்வானை மூவரும் தனித்தனி மயில் வாகனங்களில் அமர்ந்து காட்சி தருவது தினி சிறப்பு. மயில் மீது அமர்ந்து இருக்கும் மூலவர் இறங்கி வருவது போலவே இருக்கும். இந்தக் குன்றக்குடி மலை தோற்றத்தில் மயில் வடிவமாய் காட்சி தருகிறது.

மலையின் மேற்பகுதியில் ஞானிகள் வாழந்ததற்கான கற்படுக்ககைளும் பிராமிக் கல்வெட்டுகளும் உள்ள அமண்பாழியிருக்கிறது. இக்கோயிலில் குடவரைக்‌கோயில் சன்னதிகளும் நிறைய உள்ளன என்பது சிறப்பான சிறப் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. அகத்தியர் வழிபட்டதும், பாண்டவர்கள் வழிபட்டதும் இத்தலத்து சிறப்பு மிக்க அம்சங்கள். கலிங்கநாட்டு இடும்பன் காவடி எடுத்து வந்து வழிபட்டு வயிற்று வலி நீங்கப்பெற்றதும் இத்திருத்தலமாகும்.

தல வரலாறு:

சூரனாதியோர் தேவர்களை பழிவாங்கும் நோக்கில் மயிலிடம் நான்முரனின் அன்னம், திருமாலின் கருடன் ஆகியவை நாங்கள்தான் மயிலை விட வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று சொன்னதாக பொய் சொன்னதால் மயில் கோபம் அடைந்தது. அன்னத்தையும், கருடனையும் மயில் விழுங்கி விட்டது. இந்திரனும் திருமாலும் முருகனிடம் முறையிட அன்னத்தையும், கருடனையும் மீட்டு தந்தார். பின்பு செய்த குற்றத்திற்காக மயிலை மலையாகிப் போக சாபம் தந்தார். மயிலும் தன் தவறை உணர்ந்து அரச வனத்துக்கு (குன்றக்குடி) வந்து முருகப்பெருமானை நோக்கி தவம் இருந்தது. முருகனும் மயிலுக்கு சாப விமோசனம் தந்தார். பின் மியிலின் வேண்டுகோளுக்கிணங்க மயில் வடிவமாக தோற்றத்தில் உள்ள இம்மலையில் எழுந்தருளி அருள் தந்தார். மிகவும் சிறப்பு வாய்ந்த இக்‌கோயில் பாடல் பெற்ற திருத்தலமாகும்.

Shanmughanathar Temple : Shanmughanathar Temple Details | Shanmughanathar - Kundrakudi | Tamilnadu Temple | ???????????
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top