• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஆரிய ஹிட்லரும் ஹிந்து ஸ்வஸ்திகாவும்

Status
Not open for further replies.
ஆரிய ஹிட்லரும் ஹிந்து ஸ்வஸ்திகாவும்

swastik_on_head.jpg


Brahmin boy with Swastika on head.


ஆரிய ஹிட்லரும் ஹிந்து ஸ்வஸ்திகாவும்

’சாதிகள் இல்லையடி பாப்பா!—குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!’’ (பாரதி)



6 கோடி பேரைக் கொன்ற ஆரிய இனவெறிக் கொள்கை:


இந்து மதத்தினரின் புனிதச் சின்னம் ஸ்வஸ்திகா. ‘’ஸ்வஸ்தி’’ என்றால் மங்களம் உண்டாகட்டும் என்பது பொருள். ஆயிரக் கணக்கான தமிழ் கல்வெட்டுகள் ஸ்வஸ்தி என்ற மங்களச் சொல்லுடன் தான் துவங்கும். சிந்து சமவெளியில் நிறைய ஸ்வஸ்திகா முத்திரைகள் கிடைத்துள்ளன. வட இந்திய பிராமணர்கள் பூணுல் போடுகையில் சிறு பிள்ளைகளின் தலையை மொட்டை அடித்து தலையில் இந்த சின்னத்தை வரைவார்கள். வணிகர்கள் கடையில் லாபம் தரும் இந்த சின்னத்தை வரைவார்கள்.( இந்தியன் எக்ஸ்பிரஸ் உரிமையாளர் ராம்நாத் கோயங்கா, அவருடைய பெண் கல்யாணத்துக்கு அடித்த பத்திரிகையில் பெரிய ஸ்வஸ்திகா சின்னம் இருந்தது. அவர், எனது தந்தைக்கு அனுப்பியதை வெகு காலம் வரை நான் பாதுகாத்து வைத்திருந்தேன்).


ஸ்வஸ்திகாவை ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் தனது கொடியில் பயன்படுத்தும் வரை, மேலை நாட்டிலும் இதற்கு நல்ல பெயரே இருந்தது. ஐரோப்பாவில் 10,000 ஆண்டுப் பழமையான தொல் பொருட் துறை சின்னங்களிலும் இந்த சின்னம் காணப்படுகிறது. இதை சூரியனைக் குறிக்கும் சின்னம் என்று மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ளனர்.
ஆரிய திராவிடக் கொள்கை என்னும் விஷப் பாம்பை வளர்த்தவர்கள் வெள்ளைக்காரகள். அந்த விஷப் பாம்புக்கு பால் ஊற்றி வளர்த்தவர்களை அதுவே கொன்றது என்றால் மிகையல்ல. ஆறு கோடிப் பேரை பலிவாங்கிய இரண்டாவது உலகப் போருக்கு ஆரிய இனவாதக் கொள்கைதான் காரணம் என்பதை உலகம் அறியும். ஆறு லட்சம் யூதர்களும், ஐந்து லட்சம் ‘’ஹிந்து ஜிப்சி’’ இனத்தவர்களும், பல்லாயிரகணக்கான இந்திய சிப்பாய்களும் இந்த ஆறு கோடித் தியாகிகளில் அடங்குவர்.



ஹிட்லர் தான் எழுதிய ‘’மெயின் காம்ப்’’ என்னும் சுய சரிதை டயரியில் ஆரிய இன வெறிக் கொள்கையை விளக்கி, உலகில் தூய ஆரியர்கள் மட்டுமே வாழ வேண்டும் என்றும் அவர்கள் மற்றவர்களுடன் கலந்து பிள்ளைகளைப் பெற்றதே ஜெர்மானிய வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் எழுதியுள்ளார். (ஆங்கிலக் கட்டுரையில் ஹிட்லரின் சொற்களை அப்படியே கொடுத்துள்ளேன்).
அவர் யூத மதத்தினரை வெறுத்ததற்குப் பல காரணங்கள் உண்டு. முதல் உலக யுத்தத்தில் ஜெர்மனியின் வீழ்ச்சிக்கும், பொருளாதாரச் சுரண்டலுக்கும் அவர்களே காரணம் என்றும் நினைத்ததோடு அவர்கள் ஆரியரால்லாத தாழ்ந்த இனத்தினர் என்றும் கருதினார்.

வெள்ளைக்கார்கள் இந்தியாவில் விதைத்த அதே விஷ வித்தை ஐரோப்பாவிலும் விதைத்தனர். ஆறு கோடிப் பேரை அந்த இன வெறிக் கொள்கை பலி வாங்கிய பின்னர், அந்த கொள்கையைப் புதைத்து அதன் மேல் கல்லறை கட்டி விட்டனர். ஆனால் இந்தியாவில் இதை அரசியல்வாதிகள் இன்னும் பயன்படுத்தி வருகின்றனர். ஒருவேளை இங்கும் ஆறு கோடிப் பேரை இது பலி வாங்கினால்தான் கல்லரை கட்டுவார்களோ என்னவோ!


swastika-stamps.jpg


Swastika stamps issued during Hitler rule

ஹிட்லரின் தீப்பொறி கக்கும் பேச்சுகளும் ,நாஜி கட்சியினரின் துண்டுப் பிரசுரங்களும் இந்த ஆரிய இனவெறிக் கொகையையும் யூத மத எதிர்ப்புக் கொள்கைகளையும் வரி வரியாக விளக்குகின்றன. ஹிட்லர் எழுதிய ‘’மெயின் காம்ப்’’ புத்தகத்தில் ‘’ஆரிய இனம்’’ என்ற ஒரு தனி அத்தியாயமே இருக்கிறது.


தமிழ்ச் சங்க இலக்கியத்திலும் வேத இதிஹாச புராணங்களிலும் இல்லாத, வெள்ளைதோல்—கருப்புத் தோல் இனக் கொள்கை இந்தியாவை மெதுவாகக் கொல்லும் விஷம் என்பது வெள்ளைகாரனுக்குத் தெரியும். நெப்போலியனை தனித் தீவில் வைத்து உணவில் ஆர்சனிக் என்னும் ரசாயனத்தைக் கலந்து, பிரிட்டிஷ்காரகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றனர். இப்போது நெப்போலியன் தலைமுடியை ஆராய்ந்ததில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. அதுபோல ஆரிய திராவிட இனவெறிக் கொள்கை மூலம் கொஞ்சம் கொஞ்சமாக இந்து மதத்தை ஒழித்துகட்டவும் இந்தியாவைத் தகர்த்து அழிக்கவும் அவர்கள் திட்டம் போட்டதை இப்பொது மக்கள் உணரத் துவங்கிவிட்டனர்.


சிந்து சமவெளி நாகரீகம் இந்து மத நாகரீகம் என்பதையும் அது அழிந்ததற்கு சரஸ்வதி நதியின் போக்கே காரணம் என்பதும் விஞ்ஞானிகளால் நிரூபிக்கப் பட்டுவிட்டது. கிருஷ்ணரின் துவாரகை ‘சுனாமி’-யில் அழிந்தது பற்றி மஹா பாரதமும் புராணாங்களும் கூறியது உண்மைதான் என்பதும் கடலடித் தொல் பொருட் துறை அறிஞர்களால் உறுதி செய்யப்பட்டுவிட்டது.


திராவிடர்களை சிந்து சமவெளியிலிருந்து ஓடிவந்த ‘’கோழைகள்’’ என்றும் மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து வந்த ‘’வந்தேறு குடியினர்’’ என்றும் வெள்ளைகாரன் எழுதிய சரித்திரம் எல்லாம் பொய்யாய் பழங்கதையாய்ப் போய்விட்டன. சங்க இலக்கியமும் புராணங்களும் கூறும் 18 குடிகளே இந்தியாவின் பூர்வீகக் குடிகள் என்பதும் அது தோலின் நிறத்தின் அடிப்படையிலன்றி மக்களின் வாழ்க்கை முறை, குணங்களின் அடிப்படையில் அமைந்தது என்றும் எனது 600--க்கும் மேலான ஆய்வுக் கட்டுரைகளில் விளக்கி வந்துள்ளேன். மேலும் வரும்……..

indusvalleyseals_swastikas.jpg


Indus Seals with Swastika

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்யாதீர்கள். தமிழ்த் தாய் பொறுக்கமாட்டாள்.)


Hitler about SWASTIKA

In 1920, Adolf Hitler decided that the Nazi Party needed its own insignia and flag. For Hitler, the new flag had to be "a symbol of our own struggle" as well as "highly effective as a poster." (Mein Kampf, pg. 495)

On August 7, 1920, at the Salzburg Congress, the red flag with a white circle and black swastika became the official emblem of the Nazi Party.
In Mein Kampf, Hitler described the Nazis' new flag: "In red we see the social idea of the movement, in white the nationalistic idea, in the swastika the mission of the struggle for the victory of the Aryan man, and, by the same token, the victory of the idea of creative work, which as such always has been and always will be anti-Semitic." (pg. 496-497)
Because of the Nazis' flag, the swastika soon became a symbol of hate, anti semitism, violence, death, and murder.


The Aryan Race

Extracted from Mein Kampf, volume 1, chapter 11, Race and People

‘’If we divide mankind into three categories – founders of culture, bearers of culture, and destroyers of culture – the Aryan alone can be considered as representing the first category.’’
‘’Every manifestation of human culture, every product of art, science and technical skill, which we see before our eyes to-day, is almost exclusively the product of the Aryan creative power’’.
‘’The readiness to sacrifice one’s personal work and, if necessary, even one’s life for others shows its most highly developed form in the Aryan race. The greatness of the Aryan is not based on his intellectual powers, but rather on his willingness to devote all his faculties to the service of the community.’’

Pictures are taken from Wikipedia and other sites; thanks.

Contact [email protected]
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top