ஆயிரம் கண் போதாதடி வண்ணக் கிளியே!
ஆயிரம் கண் போதாதடி வண்ணக் கிளியே, குற்றால அழகை நாமும் கண்பதற்கு வண்ணக் கிளியே!
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பார்
கமன சித்தர் வந்தவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவி திரை எழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் தேர்க்காலும் பரிக்காலும் வழுகும்
கூனல் இளம்பிறைமுடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே
ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
வாடக் காண்பது மின்னார் மருங்குல்
வருந்தக் காண்பது சூலுளைச் சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து
புலம்பக் காண்பது கிண்கிணிக்கொத்து
தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி
திருக்குற்றாலர் தென் ஆரிய நாடே
ஞானிகளும் அறியார்கள் சித்ர நதி மூலம்
நானறிந்தவகை சிறிது பேசக்கேள் அம்மே
மேன்மை பெறுந்த் திரிகூடத் தேனருவித் துறைக்கே
மேவுமொரு சிவலிங்கம் தேவ ரகசியமாய்
ஆனதுறை அயன் உரைத்த தானம் அறியாமல்
அருந்தவத்துக்காய்த் தேடித்திரிந்தலையும் காலம்
மோனவானவர்க்கெங்கள் கானவர்கள் காட்டும்
முது கங்கை ஆறு சிவ மதுகங்கை ஆறே
****
செழுங் குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்
தேனலர் சண்பகவாசம் வானுலகில் வெடிக்கும்
வழங்கு கொடை மகராசர் குறும் பலவில் ஈசர்
வளம் பெருகும் திரிகூட மலை எங்கள் மலையே
Photos are taken by me in 1996. Unfortunately I cant go to Honey Falls. We went there botanical collections in 1960s.
ஆயிரம் கண் போதாதடி வண்ணக் கிளியே, குற்றால அழகை நாமும் கண்பதற்கு வண்ணக் கிளியே!
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பார்
கமன சித்தர் வந்தவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவி திரை எழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் தேர்க்காலும் பரிக்காலும் வழுகும்
கூனல் இளம்பிறைமுடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே
ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
வாடக் காண்பது மின்னார் மருங்குல்
வருந்தக் காண்பது சூலுளைச் சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து
புலம்பக் காண்பது கிண்கிணிக்கொத்து
தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி
திருக்குற்றாலர் தென் ஆரிய நாடே
ஞானிகளும் அறியார்கள் சித்ர நதி மூலம்
நானறிந்தவகை சிறிது பேசக்கேள் அம்மே
மேன்மை பெறுந்த் திரிகூடத் தேனருவித் துறைக்கே
மேவுமொரு சிவலிங்கம் தேவ ரகசியமாய்
ஆனதுறை அயன் உரைத்த தானம் அறியாமல்
அருந்தவத்துக்காய்த் தேடித்திரிந்தலையும் காலம்
மோனவானவர்க்கெங்கள் கானவர்கள் காட்டும்
முது கங்கை ஆறு சிவ மதுகங்கை ஆறே
****
செழுங் குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்
தேனலர் சண்பகவாசம் வானுலகில் வெடிக்கும்
வழங்கு கொடை மகராசர் குறும் பலவில் ஈசர்
வளம் பெருகும் திரிகூட மலை எங்கள் மலையே
Photos are taken by me in 1996. Unfortunately I cant go to Honey Falls. We went there botanical collections in 1960s.