• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

Here is a piece of interesting information from Kanchi Maha Periyava. You may like it.

தமிழ் மொழியிலே கூட அவருக்கிருக்கும் அறிவு முத்தமிழ்க் காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது. ஒரு முறைகி.வா.ஜ-விடம், “தமிழ் என்றால் என்ன?” என்று கேட்டார். மேலும் “சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது சொல்லுங்கள்!” என்கிறார்.
கி,வா.ஜ. அடக்கமாக,”பெரியவா சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!” என்றார்
“எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு,இனிமை
அவற்றைக் குறிப்பதகாவே இருக்கும். மழலை,குழல், அழகு, குழந்தை,கழல்,நிழல்,பழம்,யாழ் இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான ‘ழ’வைத் தம்மிடத்தில் உடையது ‘தமிழ்’ (தமி+ழ்) என்று சொல்லலாமா” என்கிறார். உடனே கி.வா.ஜ., “இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி எல்லா மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்!”என்றாராம். சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும் ”யாமா மாநீ யாமா மா” என்ற மாற்றுமாலைப் பதிகம் மிகவும் கடினம். அவற்றுள் ஒன்றைப் பெரியவா எடுத்து, மிகவும் கடினமான அந்தப் பதிகத்தைப் பிரித்துப் பிரித்து மிக
எளிமைப்படுத்திப் பொருள் சொன்னார். பெரிய வித்வான்கள் பிரமித்துப் போனார்கள்.
அதுபோல் காளமேகப் புலவர் பாடிய பாடலில் ஒன்று,

முக்கால்,அரை,கால், அரைக்கால்,இருமா,மாகாணி,ஒருமா,கீழரை என்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்து
எழுதுகிறார், தெரியுமா?” என்று கேட்டு,​
முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்
விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்
கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது….
என்ற பாட்டை பெரியவா எடுத்துக் காட்டுகிறார்.அதன் பொருளையும் தனக்கே உரிய முறையில்,​
“முக்கால்னா மூன்று கால்கள். வயதான் பின் இரண்டு காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவது காலாகப் பயன்படுத்துகிறோமே…..அந்த நிலை வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்…நரை வருவதற்கு முன்னாலே விக்கலும் இருமலும் வருவதற்கு முன்….யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்…..ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப் போகும் முன்…காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ள ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!” என்று மிக அழகாக விளக்குகிறார்.
மேலும் “என்ன அழகு பார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக் கீழேயே கொண்டுவந்து கீழரை வரை எட்டு அளவுகளையும் கோத்துத் துதித்திருக்கிறாரே!” என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். எதையுமே இப்படி விளக்கமாகப் பொழிந்து தள்ளியதைக் கேட்டவர்கள் பாக்யசாலிகள். (எஸ்.கணேச சர்மா எழுதிய புத்தகத்தில் இருந்து வரகூரான் நாராயணனால் டைப் அடிக்கப்பட்டது; அங்கிருந்து மகேஷால் சுடப்பட்டது

Presented from Sage of Kanchi.

Balasubramanian
Ambattur
 
One more interesting article to read :

சோழவள நாட்டிலே அமைந்துள்ள எருக்கத்தம் புலியூர் என்னும் நகரில் ஓர் பெரிய சிவன் கோவில் உண்டு. அக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் சிவனுக்கு, நீலகண்டேசுவரர் என்றும், சக்திக்கு நீலமார்க் கண்ணம்மை என்றும் பெயர். தலவிருட்சம் வெள்ளெருக்கு. இத்தகைய தெய்வ வளமிக்க நகரில், பாணர் மரபில் பிறந்தவர் நீலகண்ட யாழ்ப்பாணர். இவரது மனைவி மதங்க சூளாமணி. இசையே உருவெடுத்த பாணரும், அவரது வாழ்க்கைத் துணைவியாரும், நீலகண்டேசுவரர் புகழை யாழில் இனிமையுடன் உள்ளம் உருக இசைத்து எல்லையில்லா இன்பம் எய்தினர். இவர்கள் சிவத்தலங்கள் தோறும் சென்று யாழ் இசைத்து எம்பெருமான் அருள் பெற்று பெருமையுற்றனர். சோழவள நாட்டிலுள்ள எல்லா சிவன் கோவில்களையும் கண்டுகளித்துப் பேரின்பம் பூண்ட பாணரும் அவரது மனைவியாரும் மதுரையம்பதிக்குச் சென்றனர். பாணர் தம் மனைவியோடு திரு ஆலவாய் அண்ணலாரது ஆலயத்தின் புறத்தே நின்று எம்பெருமானின் புகழை யாழில் சுருதிகூட்டி பண்ணமைத்துப் பாடிக் கொண்டிருந்தார். பண்டை நாட்களில், பாணர் மரபினோர் ஆலயத்துள் சென்று இறைவனை வழிபடுவது கிடையாது. புறத்தே நின்று வழிபடுவதையே நியதியாகக் கொண்டிருந்தார்கள். பாணரின் யாழிலே உள்ளம் உருகிய சோமசுந்தரக் கடவுள் தமது பக்தனைக் காக்க திருவுள்ளம் கொண்டு மதுரையம்பதி சிவத்தொண்டர்கள் கனவில் எழுந்தருளினார். யாழ்ப்பாணரையும், அவரது மனைவியாரையும் கோவிலுள் அழைத்து வந்து தரிசனம் செய்வதற்கு ஆணையிட்டார். அவ்வாறே பாணர் கனவிலும் எழுந்தருளினார்.
பாணரே ! உம்மை, எம்மிடம் அழைத்து வந்து தரிசனம் செய்து வைக்க ஆவன செய்துள்ளோம் என்று அருள்வாக்கு சொல்லி மறைந்தார். மறுநாள் வழக்கம்போல் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மனைவியாருடன் கோயிலின் புறத்தே அமர்ந்து யாழ் இசைத்து தம்மை மறைந்த நிலையில் பாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது தொண்டர்கள் அவர்களைக் கண்டு வணங்கி எம்பெருமானின் ஆணையைக்கூறி அவர்களை அகத்து எழுந்தருளுமாறு பணிவோடு கேட்டுக் கொண்டனர். அவர்களும் தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்கி கோயிலுக்குள் சென்று மண்டபத்தில் அமர்ந்தனர். பக்தி வெள்ளத்தில் மூழ்கிய அன்பர் இருவரும் தரை ஈரமாக இருப்பதனை கூட பொருட்படுத்தாமல், ஈரத்தரையில் அமர்ந்து மெய்மறந்து யாழை மீட்டி பாடத் தொடங்கினர். இவருடைய இன்ப இசையில் மயங்கிய மதுரையம்பதி ஈசன் தரையின் குளிர்ச்சி பட்டு யாழின் சுருதி கெட்டுவிடுமே என்று திருவுள்ளம் பற்றினார். அசரீரி வாயிலாக பெருமான் நிலத்திலிருந்து பாடினால் ஈரத்தால் யாழ் கெட்டுவிடும். எனவே அவர்கட்கு அமர்ந்து பாடப் பலகை ஒன்று இடுங்கள் என்று திருவாய் மலர்ந்து அருளினார். அப்பொழுது அத்தொண்டர்கள் அவர்களுக்கு அழகிய பீடம் ஒன்றை எடுத்து வந்து அதன் மீது அமர்ந்து பாடுமாறு செய்தனர். பீடத்தில் அமர்ந்த யாழ்பாணரும், மதங்கசூளாமணியும் அழகிய இனிய தெய்வ சக்திமிக்கப் பக்திப் பாடல்கள் பலவற்றைப் பாடி அனைவரையும் மெய்மறக்கச் செய்தனர். அதன் பிறகு இருவரும் மதுரையம்பதியில் நெடுநாள் தங்கியிருந்து தங்கள் யாத்திரையைத் தொடர்ந்தனர். அடுத்துள்ள பல சிவத்தலங்களையும் தரிசித்தவாறு திருவாரூரை அடைந்தனர்.
திருவாரூர் தியாகேசப்பெருமானும், பிராட்டியாரும் பாணர் இசையில் மயங்கினர். அன்றிரவு ஈசன் திருவாரூர் மெய்யன்பர்கள் கனவிலே எழுந்தருளி,எமது அன்பன் பாணனுக்கு திருக்கோயிலுள் வேறு வாயில் அமைத்து அதன் வழியாகக் கோயிலுக்குள் அழைத்து வந்து இசை பாடத் துணைபுரிவீர்களாக என்று கட்டளையிட்டருளினார். மறுநாள் தொண்டர்கள் திருநீலகண்ட யாழ்ப்பாணர் எழுந்தருளும் பொருட்டு வடதிசையில் வாயில் ஒன்று நிர்மாணித்தனர். அதன் வழியாக அவரையும், அவரது மனைவியாரையும் எம்பெருமான் திருமுன் எழுந்தருளச் செய்தனர். யாழ்ப்பாணர் வீதிவிடங்கப் பெருமானைக் கண்குளிரக் கண்டு மகிழ்ந்து பக்திப் பாடல்கள் பாடினார். சில நாட்களில் அங்கிருந்து புறப்பட்டார். சிவத்தலங்கள் பலவற்றைத் தரிசித்துக் கொண்டே, சீர்காழியை வந்தடைந்து சம்பந்தரை வணங்கினார். பாணரின் யாழிசையில் எல்லையில்லா இன்பம் எய்திய திருஞான சம்பந்தப் பெருமான் அவரையும், அவர் தம் மனைவியாரையும் தம்முடனேயே இருந்து தேவாரப் பதிகங்களை யாழில் இட்டு இசைத்து பாடும் வண்ணம் அருள்புரிந்தார். இறுதியில் திருபெருமணநல்லூரில் ஞானசம்பந்தர் திருமணத்தில் தோன்றிய சிவஜோதியில், பாணரும், அவர்தம் மனைவியாரும் கலந்து சிவபதவியை அடைந்தனர்.
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரின் குருபூஜை வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
திருநீலகண்டத்துப் பாணனார்க்கு அடியேன்.
 

தீபத் திருநாள்!


தீபாவளித் திருநாளைத் தொடர்ந்து வருவது,

தீபத் திருநாளாகிய கார்த்திகைத் திருநாள்!

கார்த்திகைத் திங்கள், பௌர்ணமி தினத்தில்,
கார்த்திகை நக்ஷத்திரமும் கூடி வந்திடும்! நம்

புராணக் கதைகளின் ஒன்றுதான், பொய்யைப்
பிரமன் சிவ பெருமானிடம் கூறிய ஒரு கதை.

மகா தீப வடிவிலே தோன்றிய சிவ பெருமான்,
மகா விஷ்ணுவையும், பிரமனையும் அழைத்து,

தன் திருவடிகளையும், திருமுடியையும் கண்டு
தன்னிடம் வந்து உரைக்குமாறு கேட்ட உடனே,

திருமால் ஒரு வராக வடிவம் எடுத்துக்கொண்டு,
திருவடிகளைத் தேடி பூமியின் உள்ளே சென்று,

காணவில்லை என்று தோல்வியை உரைத்திட,
காணாத திருமுடியைக் கண்டதாக உரைத்தார்,

தன் அன்ன வாஹனத்தில் ஆகாயத்தில் சென்று,
தன் கூற்றை ஆதரிக்க, தாழம்பூவையும் அழைத்த

பிரமன்! இந்தப் பொய்யுரையால் வெகுண்ட சிவ-
பெருமான், பிரமனுக்கும், பூவுக்கும் சாபமளித்திட,

பரந்த உலகில், பிரமனுக்குக் கோவிலே இல்லை;
சிறந்த மணமுள்ள தாழம்பூ பூஜையிலே இல்லை!

ஜோதி வடிவமான சிவனாரைப் போற்றுவதே, நாம்
ஜோதிகளை வரிசையாக வைக்கும் இத் திருநாள்!

கார்த்திகேயனாக முருகனை அன்புடன் வளர்த்த,
கார்த்திகைப் பெண்களைப் போற்றி மகிழ்வோம்!

பரம் பொருளான, மகா தீப வடிவினனான, உயர்ந்த
பரமசிவனைப் பணிந்து, உலகில் நன்கு உய்வோம்!


:hail: . . .
:flame: . . . :pray:
 

அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!


உலகம் உய்ய வேண்டும்,

ராஜி ராம் :pray2:

kd+two.gif


​Picture courtesy: Google images

 

ஜோதி வடிவானவனே!


வானுயர் ஜோதி வடிவாய் நெடிதே நின்று,
நான்முகன் பொய்யுரை கண்டனம் செய்து,

தன்னில் சரி பாதியை உமைக்கு அளித்து,
எண்ணில் அடங்கா அதிசயங்கள் புரிந்து,

நெற்றிக் கண்ணால் தீமைகளை அழித்து,

வெற்றி வேல் குமரனை உதிக்க வைத்து,

அவனிடம் பிரணவப் பொருளை அறிந்து,

அவனியில் அவன் புகழ் பரவிடச் செய்து,

சிந்தையில் நிற்கும் வினாயகன் வழியே,

தந்தை தாயே உலகம் என்றுணர வைத்து,

கண்ணப்பன், நந்தன் போன்ற அடியவரை,
கண்ணென உலகினர் போற்றிட வைத்து,

மனித குலத்திற்கு உயர்வு, தாழ்வுகளை
மனதில் கொள்ளாது இருக்க வழி காட்டி,

தன்னிகர் இல்லாது திகழும் பெருமானே!
உன் தாள் பணிவோம் உலகில் உய்யவே!


அண்ணாமலையானே போற்றி! போற்றி!!



:pray: . . . :hail: . . . :pray:
 

தொலைக்காட்சி உபயம்!


தொலை தூரம் சென்று, பக்தர் கூட்டம்

அலை பாயும் வெள்ளத்திலே உழன்று,

நெரிசலில் அடிபட்டு, மிதிபட்டு, வருந்தி,
தரிசனம் பெற்றிட நொந்து நூலாகாமல்,

இனிய இல்லத்தின் வரவேற்பறையில்,
இனிதே அமர்ந்து, தொலைக்காட்சியின்

உபயத்தால் கண்டோம், என்றும் நமக்கு
அபயம் தந்திடும் அண்ணாமலையானை!

உலா வரும் மூர்த்திகளை அருகில் கண்டு,
விழாவிலே நாமே கலந்து கொண்டாலும்

காணக் கிடைக்காத காட்சிகளில் மகிழ்ந்து,
கார்த்திகை தீப ஜோதியை தரிசித்தோம்!

மலை மீது ஏற்றிடும் அரிய, பெரிய ஜோதி,
மலை மீது ஒளிருமே பதினோரு நாட்கள்!

விஞ்ஞானம் தந்த மேன்மையான காட்சி;
மெய்ஞானம் பெருக வைத்திடும் மாட்சி!


:couch2: . . . :pray:
 
அவனிடம் பிரணவப் பொருளை அறிந்து,
அவனியில் அவன் புகழ் பரவிடச் செய்து,
Dear RR maam, i read that this be littles Lord Shiva as if he does not Know the meaning of Pranava. He knows every thing and he just wanted to know whether Karthikeya also knows it or not as it should be known, so the question of hearing it from him.
You must be having better knowledge than me on this. If what i stated above is wrong kindly excuse.

cheers.
 

குறைகள் மறையும்!


அன்பு இன்றி நெஞ்சில் இருள் பரவினால்,

நன்கு தெரியும் பிறரின் குறைகள் மட்டும்!

நெஞ்சில் அன்பு பெருகிய நிலையில், நாம்
கொஞ்சமும் காணோம் பிறரின் குறைகள்!

கார்த்திகை தீபங்களை ஏற்றிய பொழுதில்,
பார்த்து உணர்ந்தேன் இந்த விஷயத்தினை!

வண்ணம் தீட்டி ஆண்டுகள் சில சென்றதால்,
எண்ணம் வந்தது சுவர்களில் வண்ணமடிக்க!

கார்த்திகை தீபங்களின் அழகிய ஒளியிலே,
பார்த்தாலும் தெரியவில்லை அந்தக் குறை!

ஒளி வெள்ளத்தின் மிக அருகே, குறைகளும்
ஒளிந்துகொள்ளுமோ நம் கண்களில் படாது?

புதிதாய் வண்ணம் தீட்டிய சுவர்கள் போலவே,
அழகாய் வந்தன எடுத்த வண்ணப் படங்களில்!

அன்பெனும் ஒளியை நெஞ்சிலே ஏற்றுவோம்!
அன்புடன் வாழ்ந்து பிறர் குறைகள் மறப்போம்!


:angel: . . . :grouphug:

 

கார்த்திகை தீபங்களின் அழகிய ஒளியிலே,

பார்த்தாலும் தெரியவில்லை அந்தக் குறை!

IMG_3943.JPG
 

ஒளி வெள்ளத்தின் மிக அருகே, குறைகளும்

ஒளிந்துகொள்ளுமோ நம் கண்களில் படாது?

IMG_3945.JPG
 

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி,
மனோஹர் சார்!



நெற்றிக் கண்ணால் தீமைகளை அழித்து, வெற்றி வேல் குமரனை உதிக்க வைத்து,

அவனிடம் பிரணவப் பொருளை அறிந்துகொள்ளுவது (நடிப்பது!) அவர் புரிந்த
எண்ணி
டங்கா அதிசயங்களில் ஒன்று!

குமரனின் புகழ் அவனியில் பரவச் செய்திட அவரின் ஒரு திருவிளையாடல்
அது! அதனால் அப்படி எழுதினேன்.

இது எவ்விததிலும் சிவ பெருமானைச் சிறுமைப் படுத்துவது அல்ல
என்று எண்ணுகின்றேன். :)


இருந்தாலும் உங்கள் மன அமைதிக்காக, இதோ திருத்திய கவிதை:


ஜோதி வடிவானவனே!


வானுயர் ஜோதி வடிவாய் நெடிதே நின்று,
நான்முகன் பொய்யுரை கண்டனம் செய்து,

தன்னில் சரி பாதியை உமைக்கு அளித்து,
எண்ணில் அடங்கா அதிசயங்கள் புரிந்து,

நெற்றிக் கண்ணால் தீமைகளை அழித்து,

வெற்றி வேல் குமரனை உதிக்க வைத்து,

தானறிந்த பிரணவப் பொருளைக் கேட்டு,

வானுயர அவனது புகழ் பரவிடச் செய்து,

சிந்தையில் நிற்கும் வினாயகன் வழியே,

தந்தை தாயே உலகம் என்றுணர வைத்து,

கண்ணப்பன், நந்தன் போன்ற அடியவரை,
கண்ணென உலகினர் போற்றிட வைத்து,

மனித குலத்திற்கு உயர்வு, தாழ்வுகளை
மனதில் கொள்ளாது இருக்க வழி காட்டி,

தன்னிகர் இல்லாது திகழும் பெருமானே!
உன் தாள் பணிவோம் உலகில் உய்யவே!


:pray: . . . :hail:


 
Dear RR maam,

Thanks. I never doubted your intentions.Just thought will write visavis the line. The amended one has come out even beautifully. Yo have the ability to change the words without blemishing the peom. Thats a great gift. Cheers for that maam.
 

'அவன்' சித்தம்!


'அவன்' ஒருவனே நம்மை ஆட்டுவிப்பவன்;

'அவன்' இன்றி ஓர் அணுவும் அசையாது! நம்

தினசரி அனுபவங்கள் இதனை உணர்த்தும்;
தினமும் அவன் பதங்களை நாட வைக்கும்!

இரு நாட்கள் முன், நின்றது ஒரு மின் விசிறி.
இரு நாட்கள் தீபத் திருவிழா நெருக்கடி! எம்

மின் பொருட்களைப் பழுது பார்ப்பவர் 'லீவு'!
என் முயற்சியால் பழுது பார்த்திட இயலாது!

மேஜையில் வைக்கும் குட்டி மின் விசிறியே,
பூஜை அறைக்கு இடம் மாறியது! திடீரென்று

தொலைபேசி கிணுகிணுக்க, எடுத்துப் பேச,
தொலைவிலிருந்து வந்த மின் வல்லுனரே

கேட்டார், 'Inverter - ஐ சர்வீஸ் செய்யலாமா?'
கேட்ட கேள்வி தேனென இனித்தது! உடனே

வருமாறு வேண்ட, பத்து நிமிடத்திலே ஆஜர்!
ஒரு சில நிமிடங்களிலே மின் விசிறி தயார்!

எல்லாம் நம் செயல் என நம் எண்ணம்; ஆனால்,
எல்லாம் 'அவன்' சித்தம்! அதுவே நம் பாக்கியம்!

:angel: . . . . . :thumb:
 

எளிய வழி!

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம், நம்
மண்ணை விட்டே மெதுவாக மறைந்து போக,

முழங்காலில் வலி தோன்றுவது இந் நாளில்
முன்னைவிடப் பெருக, மருத்துவ மனைகள்

பல்வேறு சிகிச்சை முறைகளால், மக்களின்
அல்லல் தீர்க்க முனைவதைப் பார்க்கிறோம்!

முழங்கால் சில்லைக் காத்திட இருக்கின்றது
முழங்கால் மூட்டு உறை! அதை அணிந்தால்,

ஆதரவாக முழங்கால் எலும்பை அணைத்து,
ஆதரவு தரும் நன்றாக, நடக்கும் சமயத்தில்!

'மசாஜ்' செய்தால் வலி குறையும் என்பதால்,
'மசாஜ்' தரும் விளைவை எதிர்பார்த்து, நான்

சென்ற ஒரு மாதமாக தினந்தோறும் அணிய,
சென்ற இடம் தெரியாமல் வலியும் போனது!

காலை குளியல் முடித்ததும், பவுடர் போட்டு,
கால்கள் இரண்டில் உறைகள் இட்டு, கணினி

வேலை செய்யும் போது கால்களை அசைத்து,
மாலை மயங்கும் நேரம் வரை வைத்திருந்து,

தினப்படி எல்லா வேலைகளைச் செய்திருக்க,
தினப்படி வருத்துவதை வலியும் நிறுத்தியது!


:thumb: . . . :dance:
 
Dear RR Maam,

Thanks for the post 1666/1667. Would request to let me know the brand and the place from where you got this? Is this available in all medical shops?. Need one for my wifey. She had gone to Dr and was advised Physyiothearapy but the pain has not come down much. thanks is advance for the help.

regards & Cheers.
 
Dear Manohar Sir,

I wanted to share my experience here because many middle aged ladies seem to suffer from pain in the knees.

The 'knee caps' are available in most of the medical shops and also in sports shops. The correct measurement of

the knee to be taken, for purchasing the correct size. You will be surprised to know that the cost is much less in

Palakkad! I bought a double knitted knee cap for Rs. 110 and single knitted one for Rs. 90! In Sing. Chennai it may

cost a bit more due to the high rents! Nothing wrong in trying this out. Make sure that your better half wears the

knee caps for at least 7 to 8 hours every day and keeps moving her ankles while sitting down to watch TV. The action

like moving the foot pedal of a swing machine helps a lot. She can use any cream before wearing it, for a soothing feel.

I smear a little bit of anti fungal cream (candid - plain) since I sweat a lot and don't want to get any fungal infection,

by the prolonged use.
 
The best way to avoid knee pain is to move the knee cap up and down every time you sit down.. try to do what dancers do, sit half way and get up a few times.. and take 1/4 or less teaspoon of turmeric or manjal or haldi with hot milk and sugar be added if you like, every night and in two weeks, you will find a lot of relief, but you have to exercise the knee or any joint and keep it in motion every day.. I have severe arthritis in my joints and this milk with haldi was recommended by an ayurvedic doctor when he visited New Jersey, and the exercise to move the knee cap was prescribed by a famous doctor (can't remember his name) for my uncle and he had great relief and my uncle would walk morning and evening at least an hour.. walking not jogging is the best to relieve any pain.. please wear supporting shoes.. all this will greatly help..
 

Some very simple exercises taught by an orthopedic surgeon:

1. Lie down on a mat and try to stretch the legs as far as possible.

2. Lie down on a mat; raise the legs one at a time, without bending the knee, upto 45 degrees; hold for a few seconds

and then bring it down. Repeat 10 times.

3. Sit down on a mat with legs stretched out (L shape); keep a tightly rolled small bed sheet under the knee joints;

slowly press the knees against the rolls and release; start with 30 on the first day and gradually increase upto 500.

This takes hardly 10 mts. This can be done twice a day also, while watching the TV!!!



These are the very easy exercises. But some Sing. Chennai home makers kept so busy that they can't find time for these!

But they walk a lot in the house, if they are active. So, wearing the elastic knee cap helps the God given knee caps (ours!)

with a constant massaging effect. My appA (medical practitioner) used to say that our knees are the best indicators of the

on set of the cold season, because they start troubling, as soon as the temperature drops down ! Since the elastic knee caps

give support and warmth, the pain reduces without extra effort. This is my recent experience. Hence shared! :D
 
Great information Raji, I too enjoy my interaction with you, Mrs. Visala and a few others.. I may not know many newer ones, since I am not a regular here.. but enjoy all the useful and thought provoking information..

About the knee, my left knee has an old injury after an accident in 1985, it never healed properly, if the knee had broken perhaps it would have but still bothers me, and in 2010, just a month before I retired I tore my meniscus, it was swollen and excruciating pain and had to take time off from work and I was packing to come here, it was a big mess, on top of all that the doctor said I will never heal without surgery, and here I am after nearly 2 1/2 years later, have healed quite a bit, but there is still discomfort but I am able to have full function of my knee.. but again, it is always better to exercise at my age every day, that is the way to be healthy apart from a healthy diet.. :) I do my stretch exercises and also have my haldi milk every night some nights I do forget.. some say pain or discomfort is more when you know it is going to rain, even before the precipitation.

Anyway, stay healthy and safe... :)
 

SKIP செய்வதே அது
!


உடல் எடை அதிகரித்து அவதியுற்ற நங்கை,

உடன் பணி புரியும் நண்பி ஆலோசனை கூற,

மருத்துவரிடம் சென்று ஓர் உபாயம் கேட்டி.
மருத்துவர், 'ஓர் எளிய வழி உள்ளது', என்றார்!

'இரண்டு நாட்கள் எப்போதும் போலவே உண்டு,
ஒரு நாள் SKIP செய்வதே அது' என உரைத்தார்!

இரண்டு மாதங்கள் கழிந்த பின்பு வந்த நங்கை,
சிறந்த அழகியாக மாறிட, ஆச்சரியித்து, 'இது

எப்படி சாத்தியம்?' என வினவ, பதிலளித்தாள்,
'எப்படி என்று கேட்கின்றீரா? இரண்டு மாதமாக

நான் பட்ட பாடு உங்களுக்குத் தெரியுமா? இது
நான் சொல்லித் தெரியணுமா? முதல் இரண்டு

நாட்கள் நன்கு உணவு உண்ட பின்பு, மூன்றாம்
நாள் முழுவதும்
SKIP செய்ய, உயிரே போனது!'

உணவை
SKIP செய்யச் சொன்னார் மருத்துவர்!
உண்மையாய் ​
SKIP செய்து இளைத்தாள் அவள்!!


:target:
 

Latest ads

Back
Top