• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சிவ தொண்டு செய்வதன் பலன்....

Status
Not open for further replies.
சிவ தொண்டு செய்வதன் பலன்....

ஒரு ஊரில் நந்திவர்மன் என்ற பேரரசன் இருந்தான்.

ஒரு சூழலில் அவனுக்கு கப்பம் கட்டி வந்த அனைத்து குருநில மன்னர்கள் அனைவரும் ஒன்றுகூடி அவனை தோற்க்கடித்து,அவனது அறியனையினை பிடுங்கிகொண்டு அவனை நாட்டைவிட்டு துறத்திவிட்டனர்.

மணிமுடி இழந்த்து,நாட்டை இழந்த்து காட்டில் பரிதாபமாக வாழ்ந்துவந்தான்.தன்னுடய போராத காலத்தை எண்ணி வருந்திய நந்திவர்மன் தன்னுடய எதிர்காலத்தை தெரிந்துகொள்ள அண்டை நாட்டை சேர்ந்த பிரபலமான ஜோதிடரை தேடி போனான்.இவனது ஜாதகத்தை வாங்கி பார்த்த மாத்திரத்திலேயே தன்னை ஒரு வாரகாலம் கழித்து வந்து பார்க்குமாறு ஜோதிடர் திருப்பி அனுப்பிவிடுகிரார்.

இங்கும் தன் நிழலாக தனது விதி செயல்படுவதாக எண்ணி வருந்திய நந்திவர்மன் காட்டு வழியே நடந்து செல்கிறான். அவனால் அதிக தூரம் செல்ல முடியவில்லை.

உணவின்றி தவித்த தவிப்பும்,கால் நடையாய் நடந்த களைப்பும் அவனை சோர்வடய செய்தது.கூடவே இடி மின்னலுடன் கடும் மழையும் பெய்தது.

நந்திவர்மன் அருகாமையில் இருந்த பாழடைந்த சிவாலயத்தில் தஞ்சமடைந்தான்.

களைப்பின் மிகுதியால் உற்க்கம் வரவே சற்று கண் அயர்ந்தான்.

தூக்கத்தில் அவன் பேரரசனாக அறியணையில் வீற்றிருந்த காலம் வந்தது கனவில்.

கனவில் இந்த சிவாலயத்தை அவன் புனரமைப்பதுபோலவும்,அப்படி புனரமைப்பு பணியில் சிற்பிகளுக்கு கட்டளையிட்டுக்கொண்டிருப்பது போலவும் நிகழ்வு....

நந்திவர்மன் பேரரசனாக கட்டளையிட்டான்.....

கர்ப கிரகத்தின் எழில் எந்த நாட்டிலும் இல்லாதபடி இருக்கவேண்டும்...நந்தி மண்டபம் எழில் கொஞ்சுவதாக இருக்கவேண்டும்....ஊஞ்சல் மண்டபம் சுமார் 1000 பேராவது நிற்பதுபோல் இருத்தல் வேண்டும்....

கணபதி,முருகபெருமானுக்கு இறைவனின் கர்ப கிரகதின் பின் புறம் ஆங்காங்கே ஆகம விதிகளின்படி இருக்க வேண்டும்....

கைதேர்ந்த ஓவியர்களைக் கொண்டு பல வ்ண்ண மூலிகை கலவைகள் எக்காலதிலும் அழியா வண்ணம் அழகுடன் காட்சி அளிக்க வேண்டும்...

இப்படியாக கனவு அவன் உள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. திடீரென்று உஷ் .... என்ற சத்தம் கேட்டு திடுக்கிற்று விழிக்கிறான்...சுமார் 8 அடி நீள நாகம் இவனை துரத்தியது...

அய்யகோ... இதுவரையில் நான் கண்டது கனவு தானா... இந்த பாழடைந்த மண்டபத்தில் கூட நிம்மதியாக உறங்க முடிய வில்லயே... என்று தன் விதியை நொந்தபடி வெளியேருகிறான்.

என்ன ஆச்சரியம்... இவன் வெளியேருவதற்கும், ஆலய மண்டபம் இடிந்து விழுவ்தற்கும் மிக சரியாக இருந்தது.

கனவில் கூட சிவாலயத்தை கட்டி அதன் கும்பாபிஷேகத்தை காணமுடியவில்லையே...என்ன போராத காலம் என்று தன்னை தானே நொந்துகொண்டு ஒரு வார காலத்தை காட்டில் கழித்துவிட்டு மீண்டும் ஜோதிடர் இல்லம் நோக்கி செல்கிறான் நந்திவர்மன்.

இவன் வருவதை தூரத்திலிருந்தபடியே கவனித்த ஜோதிடர் தனக்கு தானே தூக்கு மாட்டிக் கொள்கிறார்....

அதை கவனித்துவிட்ட நந்திவர்மன் ஓடிவந்து ஜோதிடரை காப்பாற்றுகிறான்...

சர்வ வேதங்களையும் கற்று அறிந்த தாங்களா இவ்வாறு செய்வது ?....

நான் நாட்டை இழந்தபோது கூட கவலை கொள்ளவில்லை...என்ன காரியம் செய்துவிட்டீர்கள்.

என்று ஜோதிடரை வினவினான்.....

மீதி நாளை....
 
Last edited:
gud morning sir ,such a nice story(even known ) &u made it more intersting ,waiting for u post .(certain story really give us the valuable thought in easy way )
 
#1 Really a very good presentation. Especially, people who do not have faith
in God must read this thread.

Like those days, we may not be able to render Service to the Temple. Now a
days, normally we see people are quite busy and some even do not get
time to go to Temple. May be owing to their own preoccupation. Such people
must take a oath that they will visit the Temple once in a month, if not a week
and try some simple things like...

Go to the at least nearby Temple, Bow before Lord Ganesha and have Dharshan
of Presiding God and Deity Chant Slokas/Mantras etc whatever one knows. Offer
your mite to the Gurukkal (as you please) are drop it in the Temple Hundi

Lighting the Lamp and Incense at the permitted place

Go round the Temple Praharam

Come out and prostrate before the Dwajasthampam

Donate whatever possible to the people who are anxiously looking for from the
persons coming out of the Temple.

Balasubramanian
Ambattur
 
தொடர்சி.....


ஜோதிடர் தொடர்ந்தார்....

பேரரசே... உங்கள் அன்புக்கு என்றும் நான் அடிமை. உங்கள் ஜாதகத்தை பார்த்த உடனேயே உங்கள் ஆயுள் ஒரு வாரத்தில் முடிய போகிறது என்று எனக்கு தெரியும்.

அதை தாங்களிடம் எவ்வாறு சோல்வது என்று தயங்கியதால் தான் தாங்களை ஒரு வாரம் கழித்து வரசொன்னேன்.

தங்களை உயிரோடு பார்த்த உடனேயே, எனக்கே எனக்கு எனது ஜோதிடத்தில் இருந்த நம்பிக்கை போய்விட்டது. தாங்கள் எவ்வாறு உயிரோடு வந்தீர்கள்..... என்ன நடந்தது? என்று வினவினார்...

நந்திவர்மன் சிவாலயத்தில் நடந்தவைகளை விவரித்தான்.

கனவில் சிவாலயம் கட்டியதற்க்கே சாவிலிருந்து விடுதலை அளித்தார் சிவபிரான்.அப்படியேன்றால் வெகு விறைவில் உங்களுக்கு இழந்த அறியணை கிடைக்கும். கிடைத்தபின் தங்கள் கனவுப்படியே அந்த சிவாலய திருப்பணியை தாங்கள் தொடர்வீர்களாக... என்று ஆசி வழங்கினார் ஜோதிடர்.

அதேபோன்று மன்னனுக்கு அறியணை காத்துக்கொண்டிருந்தது...மீண்டும் பேரரசனானான். தனது கனவுப்படியே அந்த சிவாலயத்தை சீரோடும் சிறப்போடும் கட்டி முடித்தான்....

இந்த கதையை, நான் இந்த இணையதளத்தில், இந்த தருணத்தில் குறிப்பிடுவதன் நோக்கம் என்னவேன்றால்
பெங்களுர் ,ஒயிட்ஃபீல்ட்,ரயில்நிலையம் அருகில்,காடுகுடி என்ற சிற்றூர் உள்ளது.

அங்கு அருள் மிகு காசி விஸ்வேஷ்வர சுவாமி சமேத விசாலாஷி அம்மன் ஆலயம் திருப்பணி நடைபெற்று வருகிறது.

அந்த ஆலயம் குலொதுங்க சோழன் பேரரசனால் கட்டப்பட்டது. அருகாமையில் இருக்கும் ஒரு மிகப் பெரிய ஆலமர வேரால் மிகப்பெரிய விரிசல் அடைந்து 80% கட்டுமானம் பலமிழந்து காணப்பட்டது.

பல உள்ளுர் முக்கியஸ்த்தர்கள் முயற்சித்தும்கூட அதன் புனரமைப்பு பனிகளை மேற்கொள்ள முடியவில்லை.

இறுதியாக,எனது நண்பர் திரு டி.விஜயகுமார் ரெட்டி ( தலைவர்,பெங்களுர் மாநகர விஸ்வ ஹிந்து பரிஷத் ) அவர்கள் பெரு முயர்ச்சியால் அரசிடம் போராடி அனுமதி பெற்று கடந்த 8 மாதங்களாக சீரோடும்,சிறப்போடும் நடைபெற்று வருகிறது. அதன் படங்களை எனது ப்ரோபைலில் இணைதுள்ளேன்.

தற்போது சற்று நிதி பற்றாக்குறையில் உள்ளது.

விருப்பம் உள்ளவர்கள் திரு ரெட்டி அவர்களை அவரது மொபைலில் தொடர்புகொண்டு ( 098867-40977 ) தங்களால் இயன்ற பொருள் உதவி அளித்து ரசீது பெற்றுக் கொள்ளவும்.

மறக்காமல் எனது பெயரையும், தமிழ் பிறாமின்ஸ் இணையதளத்தின் அடையாளத்தையும் குறிப்பிடவும்...

ஓம் நம சிவாய.... தென்னாடுடய சிவனே போற்றி..... என் நாட்டவற்கும் இறைவா போற்றி.....
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top