• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Bharathi Paappaa paattu

Status
Not open for further replies.
I imagined as to how today's children would view Subramanya Bharathiyaar's "Paappaa Paattu" and the result is below. I am not pessimistic. I have given my views as I thought is the fact today.

பாரதியின் பாப்பா பாட்டு பாப்பாவின் பாரதி பாட்டு


ஓடி விளையாடு பாப்பா - நீ ஒய்ந்து உட்கார்ந்தோம் பாரதி - டி.வி. முன்னே
ஒய்ந்திருக்க லாகாது பாப்பா ஒடுங்கிப் போனோம் பாரதி
கூடி விளையாடு பாப்பா - ஒரு அடுக்குமாடிக் குடியில் அடைந்தோம் பாரதி
குழந்தையை வையாதே பாப்பா அடுத்த வீட்டு குழந்தையை அறியோம் பாரதி

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக் கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா குருமா செய்தோம் பாரதி
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது வாலைக் குழைத்துவரும் நாய் - அதன்
மனிதர்க்கு தோழனடி பாப்பா வாலில் பட்டாசு வைப்போம் பாரதி

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு காலை எழும்போதே கடுப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு கல்விகற்க செல்லும் பரபரப்பு
மாலை முழுதும் விளையாட்டு - என்று மாலை முழுதும் வீட்டுப்பாடம் - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா வழக்கப் படுதிக்கொண்டோம் பாரதி

பாதகஞ் செய்வோரைக் கண்டால் - நாம் பாதகஞ் செய்வோர் பலர் - எம்மைப்
பயங்கொள்ள லாகாது பாப்பா பள்ளியிலும் துரத்துகிறார் பாரதி
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர் ஓடி ஒளிகிறோம் பாரதி - ஒரு
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா ஓரமாய் ஒதுங்கியழுதோம் பாரதி

சாதிகள் இல்லையடி பாப்பா - குலத் சாதிக லிருக்கிறது பாரதி - எங்கள்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் சான்றிதழ் பகரு மதனை
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு இட ஒதுக்கீடு பெற்றோர் மேலோர் - அது
நிறைய உடையவர்கள மேலோர் இல்லாமல் போனோர் கீழோர்

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள் தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா தாயென்று நினைத்த காரணத்தால்
அமிழ்தில் இனியதடி பாப்பா - நம் இரண்டையும் விட்டுவிட்டு - வெளிநாட்டில்
ஆன்றோர்கள் தேசமடி paaப்பா இரண்டாம் குடிமக்களானோம் பாரதி



Loka samasta sukhino bavantu.
 
After spelling corrections you may give only the nakkal /nagal kavithai .

If you want to give both side by side, then please use

two different lines- one for the 'original' poem and the other for 'nagal' poem;

or better still with two different fonts/colors/or both.
 
Thank you, VR for the suggestion. I am placing it again as per your advice.

பாரதியின் பாப்பா பாட்டு
பாப்பாவின் பாரதி பாட்டு

ஓடி விளையாடு பாப்பா - நீ
ஒய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா

ஒய்ந்து உட்கார்ந்தோம் பாரதி - t.v. முன்னே
ஒடுங்கிப் போனோம் பாரதி
அடுக்குமாடிக் குடியில் அடைந்தோம் பாரதி
அடுத்த வீட்டு குழந்தையை அறியோம் பாரதி

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்கு தோழனடி பாப்பா

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
குருமா செய்தோம் பாரதி
வாலைக் குழைத்துவரும் நாய் - அதன்
வாலில் பட்டாசு வைப்போம் பாரதி

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா

காலை எழும்போதே கடுப்பு - பின்பு
கல்விகற்க செல்லும் பரபரப்பு
மாலை முழுதும் வீட்டுப்பாடம் - என்று
வழக்கப் படுதிக்கொண்டோம் பாரதி

பாதகஞ் செய்வோரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

பாதகஞ் செய்வோர் பலர் - எம்மைப்
பள்ளியிலும் துரத்துகிறார் பாரதி
ஓடி ஒளிகிறோம் பாரதி - ஒரு
ஓரமாய் ஒதுங்கியழுதோம் பாரதி

சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள மேலோர்

சாதிக ளிருக்கிறது பாரதி - எங்கள்
சான்றிதழ் பகரு மதனை
இட ஒதுக்கீடு பெற்றோர் மேலோர் - அது
இல்லாமல் போனோர் கீழோர்

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று நினைத்த காரணத்தால்
இரண்டையும் விட்டுவிட்டு - வெளிநாட்டில்
இரண்டாம் குடிமக்களானோம் பாரதி





Loka samasta sukhino bavantu.


 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top