• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

குரு பெயர்ச்சி பலன்கள்:

Status
Not open for further replies.
குரு பெயர்ச்சி பலன்கள்:

குரு பெயர்ச்சி பலன்கள்:

பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்ரமணியன்

10385304_725171507524624_442457880722607099_n.jpg




குரு பெயர்ச்சி பலன்கள்:
-------------------------------------------
குரு பகவானின் பெயர்ச்சி காலம் 12 மாதங்கள் ஆகும்.ஒருவரின் ஜென்ம ஜாதகத்தில் நல்ல திசா புத்தி இல்லாதபோதும் கூட குரு பகவான் அவர் ராசிக்கு சுப இடத்தில் நின்றால் அருமையான பலன் கொடுப்பார் என்பது ஜோதிட விதியாகும்.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி குரு பகவான்,வைகாசி மாதம் 30-ம் தேதி வெள்ளிக்கிழமை(13-06-2014),மாலை 6 மணியளவில் மிதுன ராசியிலிருந்து,தன் உச்ச வீடான கடக ராசிக்கு இடம் பெயர்கிறார்.இதனால் 12 ராசிகளுக்கும் உண்டாகும் பலன்களை பார்ப்போமா?


மேஷ ராசி:
----------------
அசுவினி,பரணி,கார்த்திகை 1 பாதங்கள் கொண்ட மேச ராசி அன்பர்களே..,உங்கள் ராசிக்கு 3-ல் இருந்த குரு இப்போது 4-ஆம் இடத்துக்கு- கடகத்துக்கு மாறியிருக்கிறார்.3-ல் இருந்த குரு சில நன்மைகளை கொ0டுத்தாலும்,பெரிய தொந்தரவுகளை கொடுத்திருப்பார்.சரி 4-ம் இடத்து குரு என்ன செய்வார்?


இப்போது கடகத்துக்கு வந்துள்ள குரு உச்சம் பெற்றது சிறப்பான விசயயமாகும்.மேஷ ராசிக்கு 9-க்குடைய குரு 4-ல் உச்சம்பெற்று 8-மிடம்,10-இடம்,12-ம் இஅடம் போன்றவறை பார்க்கிறார். 10-ஆம் இடத்தைப் பார்ப்பது தொழில் முன்னேற்றை கொடுக்கும்.12-மிடத்து பார்வை குடும்பத்தில் சுப காரிங்களை கொடுக்கும்.8-மிடத்து பார்வை மறைமுக எதிரிகளிடமிருந்து காப்பற்றும்.


நாலாமிடத்தில் குரு உச்சம் பெறுவதால் வாகனம்,சொந்த வீடு அமையும் அதேபோல் மனை,நிலன்கள் கூட அமையும் இருந்தாலும் கடன்கள் மூலமாக இதை பெறக்கூடும் அதனால் கவலை படவேண்டியதில் சுப கடன்தானே!.நம்மால் பெரிய வீடு கட்ட முடியுமா குரு 8-ம் இடத்தை பார்ப்பதால் என்ற சந்தேகத்தை கொடுக்கும்.


12-மிடத்தை குரு பார்ப்பதால் வாருமானத்திற்கு தகுந்த செலவுகளும் இருக்கும்.சில நேரங்களில் வருமானத்தை மீறிகூட செலவு இருக்கக்கூடும்.


10-மிடத்தில் குரு பார்ப்பதால் உத்தியோஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் தொந்தரவு இருக்கும்.நீண்டா நாளாக கிடக்காமல் இருந்த வேலை மாறுதல் கிடைக்கும்.4-ல் இருக்கும் குரு தாயருக்கு சிறுசிறு உடல் உபாதைகளை கொடுக்கக்கூடியவர்.இந்த குரு பெயர்ச்சி சுப பலன்களை அதிகமாக தரக்கூடியவர் கவலை வேண்டாம்.


பரிகாரம்;திருசெந்தூர் சென்று வியாழக்கிழமை ஸ்ரீ தெட்சிணா மூர்த்தியை அவசியம் வழிபடவும்.
மதிப்பெண்=70/100.

ரிசபம்:
-------------
கார்த்திகை 2,3,4.ரோஹிணி,மிருக சீரிடம் 1,2 பாதங்கள் கொண்ட ரிசப ராசி அன்பர்களே..,உங்கள் ராசிக்கு 2-இருந்த குரு பகவான் தன்னுடைய உச்ச வீடான 3-ம் வீட்டுக்கு செல்கிறார்.கடக குரு ரிஷப ராசிக்கு 7-ஆமிடத்தையும், 9-ஆமிடத்தையும், 11-ஆமிடத்தையும் பார்க்கிறார். குரு நிற்குமிடம் மோசமான இடம் என்றாலும் பார்க்குமிடம் நல்லதாக அமைவதால் உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும்.

3-ம் இடத்து குரு உங்களுக்கு தொந்தரவுகளை கொடுத்தாலும் அவர் பார்க்கும் இடத்திற்கு நன்மையை கொடுப்பார்.நீண்ட காலமாக திருமணம் ஆகமல் இருந்தவர்களுக்கு வரன்கள் அமையும்.தந்தை வழி சொத்துகளால் நன்மை உண்டாகும்.


நீண்ட காலமாக பிரிந்த இருந்த கணவன்-மனைவி இணைவார்கள்.இதுவரை தொழிலால் நஷ்டபட்டவர்களுக்கு லாபம் உண்டாகும்.கருத்து வேறுபாட்டால் பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைவார்கள்.புரிந்து கொள்ளாத மனைவியை புரிந்துகொள்வார்கள்.


குருவின் 9-ம் பார்வை தர்ம சிந்தனை,தெய்வ பக்தி,தெய்வ அருள் கிடைக்கும்.தெய்வத்தின் சிந்தனை அடிக்கடி தோன்றும்.ஆனால் காரியங்களில் சில தடைகள் தோன்றும் அது நமக்கே புரியாது.
9-மிடத்து குருவால் தந்தையின் ஆசி கிடைக்கும்.தன்னம்பிக்கை,தைரியம் கிடைக்கும் ஆனால் சகோதர வழிகளில் தொல்லைகள் அடிக்கடி வந்து போகும்.சில நேரங்களில் அவர்களால் பொருள் இழப்பு ஏற்படலாம்.பொதுவாக தீமை குறைவாகவும்,நன்மை அதிகமாகவும் உள்ள வருடம் இது.
பரிகாரம்:திட்டை சென்று வியாழக்கிழமை ஸ்ரீதெட்சிணாமூர்த்தியை வழிபடம்.
மதிப்பெண்;65/100.


மிதுனம்;
---------------
மிருக சீரிடம் 3,4.திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 பாதங்கள் கொண்ட மிதுன ராசி அன்பர்களே..,இதுவரைக்கு உங்களை ஜென்மத்திலிருந்து பாடாய் படுத்திய குரு பகவான்,உங்களுக்கு தனஸ்தானமான 2-வீட்டுக்கு வருகிறார்.இதுவரைக்கு மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்திருப்பீர்கள் இனிமேல் எப்படி என்கிறீர்களா..,

இடண்டாமிடத்தில் இருந்து குரு பகவான் 6,8,10 இடங்களை பார்க்கிறார்.இரண்டில் உச்சம் பெற்ற குருவால் தனம் கஷ்டங்கள் தீரும்,வர வேண்டிய பணம் வசூலாகும்.குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.


சமுதாயத்தில் செல்வாக்கு உயரும்.படிப்பில் மந்தமாக இருந்த மாணவர்கள் அருமையாக படிப்பார்கள்.வைத்திய செலவுகள் குறையும்.புதிய தொழில்கள் தொடங்களாம் ஏற்கனவே தொழி நிறுவங்கள் நடத்துபவர்கள் புதிய தொழில் தொடங்கலாம்.


வெளிநாட்டு பயணம் அமையும்.சுபகாரியங்களுக்கு கடன் வாங்கலாம்.உறவினர்களோடு கூட்டு தொழி தொடங்கலாம்.திருமணத்தடை அகலும்.இதுவரைக்கு வரன்கள் இல்லாமல் இருப்பவர்களுக்கு உடனே வரன் அமையும்.மொத்தத்தில் மிதுன ராசி காரர்களுக்கு இந்த வருடம் அருமையாக இருக்கும்.


பரிகாரம்;உங்கள் அருகில் இருக்கும் சிவன் கோயில் இருக்கும் ஸ்ரீதெட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை அர்ச்சனை செய்யவும்.


ம்திப்பெண்;95/100.


கடகம்;
-----------
புனர்பூசம் 4,பூசம்,ஆயில்யம் பாதங்கள் கொண்ட கடக ராசி அன்பர்களே..,உங்கள் ராசிக்கு குரு பகவான் உச்சம் பெற்று ராசியிலே அமர போகிறார்.அவர் உங்கள் ராசியில் அமர்ந்து 5,7,9-மிடங்களை பார்க்கிறார்.குரு ஜென்மத்தில் அமர்வது தவறு என்றாலும்.அவர் பார்க்கும் இடம் சிறப்பு பெரும் ஏனென்றால் குரு பார்த்தால் கோடி நன்மை உண்டாகும்.



5-ஆம் இடம் மனசு, இதயம், திட்டம், எண்ணம், மகிழ்ச்சி, குரு உபதேசம் ஆகியவற்றையும் குறிக்கும். அதனால் உங்கள் நீண்டகால திட்டங்கள் நிறைவேறும்; எண்ணங்கள் ஈடேறும்; மனதில் மகிழ்ச்சியும் திருப்தியும் உண்டாகும். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தாலும், 5, 9-க்குடைய சம்பந்தம் பெற்றிருந்தாலும், ராகு- கேது சம்பந்தம் இருந்தாலும் ஆன்மிகம், குரு உபதேசம், ஜோதிடம், மருத்துவம், யோகா, தியானம் போன்ற ஆன்மிக ஈடுபாடும் பயிற்சிகளில் நாட்டமும் ஏற்படும்.


7-மிடத்தி குரு பார்ப்பதால் மனைவி வழியில் உதவி கிடைக்கும்.அந்நிய நண்பர்கள் உதவுவார்கள்.சில நேரங்களி உறவினர்களால் மறைமுக தொல்லைகள் உண்டு.காதலர்கள் ஒன்று கூடுவார்கள்.கூட்டு தொழில் நன்மை பயக்கும்.வெளிநாட்டு பயணத்தால் உடனடி நன்மை ஏர்படாவிட்டாலும் நஷ்டம் கிடையாது.
புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.9-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் பூர்வீகச் சொத்துகளிலுள்ள பிரச்சினைகளும் சிக்கல்களும் விலகும். பங்கு பாகங்களும் முறையாகப் பிரிக்கப்படும். அதுமட்டுமல்ல; வெகுகாலமாக குலதெய்வக் கோவிலுக்குப் போகமுடியாதவர்கள் அங்குபோய் சாமி கும்பிடலாம். குலதெய்வமே தெரியாதவர்களுக்கும்- குலதெய்வ எல்லையே தெரியாதவர்களுக்கும் அந்த குலதெய்வமே யார் ரூபத்திலாவது வந்து உணர்த்தி, எல்லைக்கு வந்து கும்பிட உத்தரவு கொடுக்கும்.மொத்தத்தில் நன்மையும்,தீமையும் கலந்த வருடம் இது.
பரிகாரம்:ஆலங்குடி ஸ்ரீ தெட்சிணா மூர்த்தியை வியாழன் அன்று வழிபடவும்.


மதிப்பெண்=65/100.


சிம்மம்;
----------------
மகம்,பூரம்,உத்திரம் 1-ம்பாதங்கள் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..,உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12-ம் இடத்திற்கு குருபகவான் வந்து அமர போகிறார்.12-ம் இடம் மறவு ஸ்தானம் என்றாலும்,ஆட்சி,உச்ச வீட்டுக்கு மறைவு ஸ்தானம் கிடையாது என்பதால் கவலைபடவேண்டியதில்லை.


சிம்ம ராசிக்கு 4-ஆம் இடத்தையும், 6-ஆம் இடத்தையும், 8-ஆம் இடத்தையும் கடக குரு பார்க்கிறார். 12-ல் இருக்கும் குரு சுப செலவுகளை கொடுப்பார்.


4-ஆம் இடம் பூமி, வீடு, வாகனம், சுகம், கல்வி, தாய் ஆகியவற்றைக் குறிக்கும். அந்த 4-ஆம் இடத்தை குரு12-ல் உச்சம் பெற்றுப் பார்க்கிறார். எனவே பூமி, வீடு, வாகன வகையில் முதலீடும் சுபச்செலவுகளும் செய்யலாம். விவசாயம் செய்யலாம். பால்பண்ணை, கோழிப்பண்ணை, மீன் பண்ணை, தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு போன்ற வகையில் முதலீடு செய்யலாம். அதேபோல் விவசாய உபகரணங்களும் வாங்கலாம்.


6-மிடத்தை குரு பார்ப்பதால் நீண்ட நாட்களாக குணமடையாமல் இருந்த நோய்கள் குணமடையும்.உடல் நோய்களுக்கு வைத்தியம் செய்ய உகந்த காலமாகும்.எக்காரணம் கொண்டும் அடுத்தவர் கடனுக்கு பொறுப்பேற்க வேண்டாம்.


8-மிடத்தை குரு பார்ப்பதால் முக்கிய பிரச்சினைகளில் ஒதுங்கி இருப்பது நல்லதாகும்.தேவையற்ற பஞ்சாயத்துகளில் ஈடுபட வேண்டாம்.சமர பேச்சுகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.


பொதுவாக 12-மிடத்தில் இருக்கும் உச்சம் பெற்ற குருவால் ஏகப்பட்ட சுப செலவுகள் உண்டாகும் சில நேரங்களில் நம் பட்ஜெட் மீறி செலவுகள் அதிரிக்கலாம் நல்ல செலவுகள் தானே!கவலை எதற்கு?
பரிகாரம்:அருகில் உள்ள சில ஆலயத்தில் நவக்கிரங்களில் குரு பகவானுக்கு வியாழக்கிழமை அர்ச்சனை செய்யவும்.


மதிப்பெண்:80/100.

கன்னி;
-------------
உத்திரம் 2,3,4 அஸ்தம்,சித்திரை 1,2 பாதங்கள் கொண்ட கன்னி ராசி நண்பர்களே..,இதுவரைக்கும் 10-ல் இருஇந்த குருவால் சில கஷ்டங்களையும்,தொந்தரவுகளையும் அனுபவித்திருப்பீர்கள்.இப்போது உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டுக்கு உச்சமாக வரப்போகிறார்.


ராசிக்கு 3,5,7-ம் இடங்களை பார்வையிடுகிறார்.3-ம் இடத்தை பார்வையிடுவதால் சகோதர- சகோதரி வகையில் சகாயமும் நன்மையும் உண்டாகலாம்.சகோதர ஒற்றுமை ஏற்படும்.மனதில் இருந்த கலக்கம் மறைந்து புது தைரியம் உருவாகும்.எதையும் சமாளிக்கு ஆற்றல் கிடைக்கும்.


5-மிடத்தை பார்வையிடுவதால் இதுவரைக்கும் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.புத்திர வழியில் சந்தோசமும்,லாபமும் கிடைக்கும்.பூர்வீக சொத்துகளால் லாபம் வரும்.பூர்வீக சொத்தினால் ஏற்ப்பட்ட பிரச்சினைகள் தீரும்.தாய் மாமன் உறவு நன்மை பயக்கும்.எண்ணிய காரியம் ஈடேறும்.


7-மிடத்தை பார்ப்பதால் 7- என்பது திருமணத்தையும் குறிக்கும். கணவன்- மனைவி உறவையும் குறிக்கும்.எனவே திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கூடும். பிரிந்திருந்த கணவன்- மனைவி இணைந்து வாழலாம். புதிய தொழில்களை ஆரம்பிக்கலாம். கூட்டுத் தொழிலும் செய்யலாம்.


லாப ஸ்தானத்தில் இருக்கும் குருவால் மூத்த சகோதரனின் உதவி கிடைக்கும்.பெரியவர்கள் ஆசி கிடைக்கும்.மந்தமாக இருந்த தொழில் லாபம் கொடுக்கும்.மொத்தத்தில் கன்னி ராசி காரர்களுக்கு இந்த வருடம் அருமையான வருடமாக அமையும்.


பரிகாரம்:திட்டை சென்று வியாழக்கிழமை ஸ்ரீதெட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யவும்.
மதிப்பெண்:99/100.


துலாம்;
---------------
சித்திரை 2,3.சுவாதி,விசாகம் 1,2,3. பாதங்கள் கொண்ட துலாம் ராசி அன்பர்களே..,உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருந்து பத்தாம் இடத்திற்கு செல்கிறார்.9-ம் வீடு நன்மையான வீடுதான் ஆனால் 9-ம் வீட்டில் இருந்த குரு நல்லது செய்தரா அதுதான் இல்லை ஏனென்றால் ஜென்ம ராகு, ஜென்மச் சனி பலனாக, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக கடன்பட்டும் பட்டினி- கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்ற நிலையில்தான் பலனை அனுபவித்திருப்பார்கள்.



இப்போது 10-ஆம் இடத்துக்கு வந்துள்ள குரு அங்கு உச்சம். அவருடைய பார்வை 2-ஆம் இடம். 4-ஆம் இடம், 6-ஆம் இடங்களை பார்க்கிறார்.இதில் 2-ம், 4-ம் நல்ல இடம். 6 சுமாரான இடம்.


2-ம் இடம் கல்வி ஸ்தானமாகும்.அதனால் IAS,IPS கல்வியில் தடை பட்டவர்கள் மீண்டும் எழுதினால் தேர்ச்சி பெறுவார்கள்.விட்டுப்போன பாடத்திட்டத்தையும் பூர்த்தி செய்யலாம். பட்டப்படிப்பையும் முடிக்கலாம். குரூப்-1, குரூப்-2 தேர்வும் எழுதி பாஸாகலாம்.அதேபோல் மந்தமாக இருப்பவரும் இந்த ஆண்டில் சிறப்பாக படிப்பார்கள்.நல்ல வாருமானம் கிடைக்கும் ஆனால் அதே அளவுக்கு செலவும் உண்டு.


4-ம் சுக ஸ்தானமாகும் வீடு,வாகனம் அமையும்.புது இடம்,மனை வாங்கலாம்.ராசியில் உச்சம் பெற்ற சனி,உச்ச குருவை பார்ப்பதால் தாயர் வழியில் அன்பும்,சஒத்தும் கிடைக்கும்.அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் தொல்லைகள் ஏற்படலாம்.கண் திருஷ்டி பாதிப்புகள் இருக்கும்.வாகனங்களை கவனமாக பார்த்து கொள்ளவேண்டும்.


6-ஆம் இடத்தை குரு பார்த்த பலனாக, எதிரிகளால் சில இடையூறுகளையும் சங்கடங்களையும் சந்தித்தாலும், குரு உச்சம் என்பதால் முடிவில் சத்ரு ஜெயம், கடன் நிவர்த்தி, பீடை நிவர்த்தி ஆகிய நன்மையும் நடக்கும்.பொதுவாக நன்மை அதிகமாகவும்,தீமை குறைவாகவும் உள்ள வருடமிது.
பரிகாரம்:வியாழக்கிழமை குருபகவானுக்கு தாமரை தண்டு நூலால் அகல் விளக்கு ஏற்றி வழிபடவும்.
மதிப்பெண்; 70/100.


விருச்சிகம்:

---------------------
விசாகம் 4,அனுசம்,கேட்டை நட்சத்திர பாதங்கள் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே..,அகப்பட்டவனுக்கு அட்டமச் சனி- ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்து குரு' என்பது பழமொழி.8-ம் இருந்த குரு பகவான் உங்களை படாத பாடு படுத்திருப்பார்.மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருந்தீருப்பீர்கள்.கவலை வேண்டாம் இப்போது வரப்போகும் 9-ம் இடத்து குரு அருமையான பலன்களை அள்ளி கொடுப்பார்.


9-ம் இடத்து உச்ச குருவால் தவறு செய்தாலும் நீங்கள் சரியானவர் என்று சொல்வார்கள்.. 9-ல் குரு இருந்தால் குருவருளும் திருவருளும் பெருகும். இதுவரை நீங்கள் செய்த வழிபாடு, பிரார்த்தனை, பூஜை, ஜெபம், தியானம், தான தருமம் எல்லாம் இனிமேல்தான் முழுமையான பலனை தரும்.கடந்த காலத்தில் கடன் வாங்கி அடைக்க முடியாமல் ஊரைவிட்டு போவோமா என்பவர்களுக்கு எல்லா பிரச்சினையும் தீரும்.

ஜென்ம ராசியைப் பார்ப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும்; மதிப்பு, மரியாதை, கௌரவம் உயரும்.

உங்களை தவறாக மதிப்பிட்டவர்களும் உங்களை பார்த்து ஆச்சரியபடுவார்கள்' உங்களுக்கு வளர்ச்சியும் முன்னேற்றமும் யோகமும் அமையும்.


9-ம் இடத்து குரு தன் ராசி,3-ம் இடம்,5-ம் இடங்களை பார்க்கிறார்.3-ம் இடத்தை பார்ப்பதால் சகோதர வழியில் நன்மை உண்டு.மிகுந்த தைரியம் கிடைக்கும்.தன்னம்பிக்கை மேம்படும்.நினைத்த காரியம் நடக்கும்.எந்த காரணமில்லாமல் விலகியவர்கள் மீண்டும் உறவாடுவார்கள்.


5-ம் இஅடத்தை குரு பார்ப்பதால் குழந்தைகளால் பெருமையும் பாராட்டும் உண்டாகும். உங்களுடைய நீண்டகால திட்டங்கள் நிறைவேறும். பாட்டனார், தகப்பனார் வழி பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் தீர்க்கப்படும். சொத்து சுகங்கள் இருந்தும்- அனுபவிக்க முடியாமலும், விற்கவும் முடியாமலும் இருந்த சொத்துகளை நல்ல விலைக்கு விற்கலாம்.மொத்தத்தில் விருச்சிக ராசிக்கு அருமையான வருடம்.
மதிப்பெண்;99/100.

தனுசு;
-----------
மூலம்,பூராடம்,உத்திராடம் 1-ம் நட்சத்திர பாதங்கள் கொண்ட தனுசு ராசி நண்பர்களே..,இதுவரைக்கும் 7-ல் இருந்த குரு இப்போது 8-மிடத்திற்கு செல்கிறார்.ஆனால் அசுப பலனை கொடுக்க மாட்டார்.ஏனென்றால் குரு தற்போது உச்ச வீட்டுக்கு வருகிறார் உச்ச,ஆட்சி வீட்டுக்கு மறைவு ஸ்தானம் கிடையாது என “உத்திர காலாமிர்தம்”என்ற ஜோதிட நூலில் ”மகாகவி காளிதாசர்” கூறியிருக்கிறார்


8-ல் இருக்கும் குரு தனுசு ராசிக்கு 12-ஆம் இடம், 2-ஆம் இடம், 4-ஆம் இடங்களைப் பார்க்கிறார்.12 என்பது பயணம், வெளியூர் வாசம், அயன சயன போகம், விரயம், செலவு, மாற்றம் இவற்றைக் குறிக்கும். அதனால் வீடு மாறலாம். வேலையில் அல்லது தொழில் துறையில் மாற்றம் ஏற்படலாம். ஊர் மாறலாம். வெளியூர் போகலாம்.வெளிநாடும் செல்லலாம்.வேலை கிடத்தாலும் மனதுக்கு திருப்தி இல்லாமல் இருக்கும்.


12-ஆம் இடத்தைப் பார்க்கும் குரு உங்களுக்குத் தவிர்க்கமுடியாத விரயத்தையும் செலவையும் ஏற்படுத்தினாலும், 2-ஆம் இடத்தையும் பார்ப்பதால் தனவரவுக்கும் வழிவகுப்பார்.வரவுக்கேற்ற செலவு இருக்கும்.வராத பணம் வசூலாகும்.அடிக்கடி தேவையில்லாத செலவுகள் வந்தாலும் அதைபற்றி கவலைபட மாட்டீர்கள்.வரவுக்கேத்த செலவு உண்டு.


4-ம் இடத்தை குரு பார்ப்பதால் பூமி, வீடு, வாகனம், மனை யோகம் அமையும்.கடன் வாங்கி புது வீடு கட்டலாம் அல்லது வாங்கலாம்.வாடகை வீட்டில் குடி இருப்பவர்கள் புது வீடு மாறலாம்.விற்க முடியாத சொத்துகள் விற்கலாம்.மொத்தத்தில் சுமாரன வருடமிது.


பரிகாரம்:ஸ்ரீதெட்சிணாமூர்த்திக்கு 11 வாரம்,நெய் விளக்கில் தீபம் ஏற்றி வழிபடவும்.
மதிப்பெண்; 55/100.


மகரம்;
-----------
உத்திராடம்2,3,4.திருவோணம்,அவிட்டம் 1,2 நட்சத்திர பாதங்கள் கொண்ட மகர ராசி அன்பர்களே..,இதுவரை மகர ராசிக்கு 6-ல் இருந்த குரு இப்போது 7-ஆம் இடம் கடகத்துக்கு மாறுகிறார்; அங்கு உச்சமாக இருந்து உங்கள் ராசியை நேரடியாகப் பார்க்கிறார்.இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலமாக உன்னத ராஜயோகத்தையும் நன்மையையும் அடையப்போகிறீர்கள்.கடந்த காலத்தில் 6-ல் இருந்த குரு உங்களில் பலரை கடன்காரர் ஆக்கியிருக்கும் காரணமில்லாமல் இல்லாமலேயே பலரின் வெறுப்புக்கும் விரோதத்துக்கும் ஆளாக்கியிருக்கும்.. தேவையில்லாமல் வைத்தியச் செலவை உண்டாக்கியிருக்கும்.


7-ம் இடம் மனைவி, திருமணம், உபதொழில் ஆகியவற்றைக் குறிக்குமிடம். இவர் உச்சமாக 7-மிடத்தில் அமருவதால் 35 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு திருமணம் அமையும்.பெண்களுக்கு எந்தவிதமான பரிகாரமும் தேவையில்லாமல் திருமணம் கூடிவரும்.ஆண்கள்,பெண்கள் இருவருக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.வயதாகியும் நிரந்தர தொழில் இல்லாதவர்களுக்கு நிரந்தரமான தொழில் அமையும்.


5-ஆம் பார்வையாக மகரத்துக்கு 11-ஆம் இடம் விருச்சிகத்தையும், 7-ஆம் பார்வையாக ஜென்ம ராசியான மகரத்தையும், 9-ஆம் பார்வையாக 3-ஆம் இடம் மீன ராசியையும் பார்க்கிறார்.11-ஆம் இடம் என்பது லாபஸ்தானம், வெற்றிஸ்தானம், ஜெயஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம் ஆகும்.அதேபோல் மறுமனம் ஸ்தானமும் ஆகும்.இந்த இஅடத்திற்கு குருபார்வை அனுகூலமாக அமைவதால் தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத லாபம் உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு தன லாபம் உண்டாகும்.


குருபகவான் ஜென்ம ராசியையும் பார்க்கிறார் ஜென்ம ராசியைப் பார்ப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும்; மதிப்பு, மரியாதை, கௌரவம் உயரும்.பொதுநலம், அரசியல் கட்சி ஈடுபாடு உடையவர்களுக்கு பட்டம், பதவிகள் தேடிவரும். சிலர் அரசியலில் கட்சிவிட்டு கட்சி மாறுவதன்மூலம் தன் எதிர்காலத்தை உயர்த்தி கொள்ளலாம்.


3-ம் இடத்தை பார்ப்பதால் தரியம்,புகழ்,செல்வாக்கு கிடைக்கும்.பங்காளி சண்டைகள் தீரும்.நீண்ட நாட்களாக நடைபெறும் சொத்து வழக்குகள் தீரும்.வருங்காலம், எதிர்காலம் பற்றிய உங்கள் கனவுகளும் கற்பனைகளும் திட்டங்களும் நிச்சயமாய் நிறைவேறும் பக்கத்து வீட்டார் பிரச்ச்சினைகள் குறையும்.மொத்தத்தில் சிறப்பான வருடமிது.


மதிப்பெண்; 95/100.


கும்பம்;
-------------
அவிட்டம் 3,4.சதயம்,பூரட்டாதி 1,2,3 நட்சத்திர பாதங்கள் கொண்ட கும்ப ராசி அன்பர்களே.., 5-ல் இருந்த குரு இப்போது 6-ஆம் இடத்துக்கு மாறுகிறார். குரு 5-ஆம் பார்வையாக 10-ஆம் இடத்தையும், 12-ஆம் இடத்தையும், 2-ஆம் இடத்தையும் பார்க்கிறார். எனவே கடந்த காலத்தில் தொழில்துறையிலும் வியாபாரத்திலும் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படும்.புதிய மாறுதலும் புதிய முயற்சிகளும் வளர்ச்சியும் கிடைக்கும்.


2-க்குடையவர் 6-ல் உச்சம் பெற்று 12-ஆம் இடத்தையும், 2-ஆம் இடத்தையும் பார்ப்பதால் அரசாங்க வழியில் கடன் அமையும்.பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். வரவுக்குப் பஞ்சமிருக்காதுஅஅதேபோல வாக்கு நாணயம் கெடாதவகையில் காப்பாற்றப்படும்.


10-ம் இடத்தை குரு பார்ப்பதால் பதவி உயர்வு அல்லது வெளியூர் மாற்றம் ஏற்படலாம்.நல்ல வேலையாக அமைந்தாலும் உங்களுக்கு திருதி ஏற்படாது.வேலை மாற்றம் அமையும்.வேலை விசயமாக அடிக்கடி வெளீயூர் பயணம் அமையும்.


12-ம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும்.உறவினர்கள் சுப காரியங்களா;ல் செலவுகள் உண்டாகும்.எதிர்பாராத பணம் வந்தாலும் அதற்கு உண்டான செலவுகள் தயாராக இருக்கும்.விற்க முடியாத நிலமோ,மனையோ விற்கலாம்.மொத்தத்தில் சுமரான வருடமிது.
பரிகாரம்;வியாழக்கிழமை தோறும் குருபகவானுக்கு தாமரை தண்டு நூலால் அகல் விளக்கு ஏற்றி வழிபடவும்
மதிப்பெண்; 67/100.



மீனம்:
-----------
பூராட்டாதி 4,உத்திராட்டாதி,ரேவதி நட்சத்திர பாதங்கள் கொணட மீன ராசி அன்பர்களே..,இதுவரைக்கு நாலாமிடத்து குருவாலும்,அட்டம சனியாலும் தாங்க முடியாத துயரங்களை அனுபவித்து இருப்பீர்கள்.இப்போது 5-ஆம் இடத்துக்கு வந்திருக்கும் குரு உங்கள் ராசி மீனத்தைப் பார்க்கிறார். 11-ஆம் இடம் மகரத்தைப் பார்க்கிறார். 9-ஆம் இடம் விருச்சிகத்தையும் பார்க்கிறார். இதுவரை அட்டமத்துச் சனி பயங்கரமாக தொல்லை படுத்தியவர் இனி நன்மையை கொடுப்பார்.


5-ஆம் இடம் என்பது புத்திர ஸ்தானம், மகிழ்ச்சி, திட்டம், எண்ணம், குரு உபதேசம், பக்தி, பூர்வ புண்ணியம் ஆகியவற்றை குறிக்கும் இடமாகும்.மக்கள்பேறு, மகிழ்ச்சி, உண்மையான நண்பர்கள், விசுவாசமான வேலையாட்கள், செல்வம், பாக்கியம், பக்தி வழிபாடு, இஷ்ட தெய்வ- குலதெய்வ வழிபாடு, பூஜை, தாய்மாமன் ஆதரவு, பாட்டனார் அல்லது முன்னோர் சொத்துக்கிடைத்தல் ஆகிய பலன்கள் நடக்கும். உங்களுடைய நீண்டகாலக் கனவுகளும் திட்டங்களும் நிறைவேறும். ஆசைகளும் ஈடேறும்.
திருமணமாகி பல ஆண்டுகளாக வாரிசு இல்லாமல் எதிர்பார்த்து ஏங்கியவர்களுக்கு வாரிசு உண்டாகும். திருமண வயதில் காத்திருக்கும் ஆண்களுக்கும்,பெண்களுக்கும் திருமணம் நிறைவேறும். பருவ வயதுடைய பெண்களுக்கும் பூப்பெய்தல் சடங்கு போன்ற சுபமங்கள காரியங்களும் நிறைவேறும்.



9-ம் இடத்தை குரு பார்ப்பதால் 9-ஆம் இடம் தகப்பனார், பூர்வபுண்ணியம், பாக்கிய ஸ்தானம் ஆகும் அதனால் தந்தை வழியில் உள்ள பூர்வீக சொத்துகள் கிடைக்கும்.தந்தையின் பாராட்டுதலையும்,அன்பையும் பெறலாம்.இந்த குருப்பெயர்ச்சி ஒரு நல்ல திருப்பத்தையும் அனுகூலத்தையும் ஏற்படுத்திக்கொடுக்கும். தெய்வத் திருவருளினாலும் குருவருளினாலும் எல்லாவிதமான சௌகர்யங்களும் நன்மைகளும் பாக்கியங்களும் வசதிகளும் ஏற்படும்.


11-ம் இடத்தை பார்ப்பதால் தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும் நீண்ட நெடுங்காலமாக நடந்துவந்த வில்லங்கம், விவகாரத்தில் சாதகமான திருப்பமும் நல்ல தீர்ப்பும் எதிர்பார்க்கலாம். மூத்த சகோதர- சகோதரி வகையிலும் சகாயமும் அனுகூலமும் கிடைக்கும்.


ஜென்ம ராசியைப் பார்க்கிறார். அவர் ராசிநாதனும் ஆவார். உச்சம்! உங்கள் செல்வாக்கு, திறமை, செயல்பாடு, ஆற்றல், கீர்த்தி, பெருமை, அந்தஸ்து ஆகியவையெல்லாம் உயர்வடையும். உழைப்பிற்கேற்ற ஊதியமும், திறமைக்கேற்ற பெருமையும், பண்புக்கேற்ற பாராட்டும் கிடைக்கும். இதுவரை பட்டபாட்டுக்கு நல்ல பலன் உண்டாகும்.மொத்தைத்தில் மீன ராசிக்கு அருமையான வருடம்.


மதிப்பெண்; 97/100.


குறிப்பு;இந்த பலன்கள் குருபெயர்ச்சி அடிப்படையாக கணிக்கப்பட்டது.இது பொதுவான பலன்கள் ஆகும்.


Source:

பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்ரமணியன்
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top