• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தமிழில் திட்டத் தெரியுமா? வசைபாடுவது எப்

Status
Not open for further replies.
தமிழில் திட்டத் தெரியுமா? வசைபாடுவது எப்

439px-Murugan_by_Raja_Ravi_Varma.jpg


திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை -4
தமிழில் திட்டத் தெரியுமா? வசைபாடுவது எப்படி?


திருப்புகழில் இருந்து பத்து வசவுப் பாட்டுகளைத் தேர்ந்தெடுத்து அதிலுள்ள வசவுகளைத் தொகுத்து உள்ளேன். அருணகிரிநாதரின் இளமைக் காலம் முழுதும் தீய பழக்க வழக்கங்களில் கழிந்ததால் அவர் இந்த வசவுகளில் ஒரு நிபுணர். ஆனால் அவர் முருகனால் காப்பாற்றப்பட்ட பின்னரும் இப்படி தன்னையே தாழ்த்திப் பாடுவது இது போன்ற ஆட்களையும் முருகன் காப்பாற்றுவான் என்பதைக் காட்டவே. பொதுவாக அவர் வசைமாறி பொழியும் இடங்கள் உண்மையில் இன்றும் தீய நிலையில் இருப்பவர்களைக் குறிப்பதாகும்.


அசடன், கவடன், விகடன், ஆதாளிவாயன்

அவகுண விரகனை வேதாள ரூபனை
அசடனை மசடனை ஆசார ஈனனை
அகதியை மறவனை ஆதாளிவாயனை--- அஞ்சுபூதம்
அடைசிய சவடனை மோடாதி மோடனை
அழிகருவழி வரு வீணாதி வீணனை
அழுகலை அவிசலை ஆறான வூணனை அன்பிலாத
கவடனை விகடனை நானா விகாரனை
வெகுளியை வெகுவித மூதேவி மூடிய
கலியனை அலியனை ஆதேச வாழ்வனை வெம்பி வீழுங்
களியனை அறிவுரை பேணாத மாநுட
கசனியை அசனியை மாபாதனாகிய
கதியிலி தனையடி நாயேனை ஆளுவது எந்நாளோ

I am a scoundrel, devil, wicked, stupid, refugee, loud mouth, hunter, stupid of all the stupid persons, idler of idlers, rotten stale foodstuff, glutton, cunning fellow devoid of love, sadist with a crooked mentality, man of foul temper, wretched harbinger of disasters, human scum, drinker, man of fickle life, sinner என்று அருணகிரி நாதர் தன்னையே நொந்துகொண்டு எனக்கு என்று அருளப் போகிறாய் என்கிறார்.

(திரு கோபாலசுந்தரம் அவர்களின் திருப்புகழ ஆங்கில மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தி இருக்கிறேன்).


துட்டர்கள் பட்டியல்

ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள்
மாதா பிதாவைப் பழித்த துட்டர்கள்
ஆமாவினைச் செகுத்த துட்டர்கள் பரதாரம்
ஆகாத எமனாற் பொசித்த துட்டர்கள்
நானாவு பாயச் சரித்ர துட்டர்கள்
ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் தமியோர்சொங்
கூசாது சேரப் பறித்த துட்டர்கள்
ஊரார்க ஆசைப் பிதற்று துட்டர்கள்
கோலால வாவிற் செருக்கு துட்டர்கள் குரு சேவை
கூடாத பாவத் தவத்த துட்டர்கள்
ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள்
கோமாள நாயிற் கடைப் பிறப்பினில் உழல்வாரே

List of bad people: Those despicable people lacking in discipline, engaging in arguments, base people who abuse their parents, who kill the cows and eat beef, who cohabit with others wives, confident tricksters, immoral people who get intoxicated by drinking alcohol, thieves who usurp others wealth, blabbermouths, arrogant rogues, sinful people who don’t serve their masters, stingy people who amass wealth—those people will take birth baser than a boisterous mad dog.

ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் என்று குடிகாரகளைச் சாடும் அழகு தனி அழகு

கசுமாலம்

சென்னை வாசிகளுக்கு மிகவும் பிடித்த வசவு கசுமாலம். இதை பகவத் கீதையில் அர்ஜுனனை நோக்கி கண்ண பிரானும் பயன்படுத்துகிறார். இந்த சம்ஸ்கிருத சொல்லுக்கு அழுக்கு என்று பொருள்
ஊனேறெலும்பு சீசீமலங்க
ளோடே நரம்பு கசுமாலம்
Bones wrapped in flesh and skin along with disgusting faeces and discharged slags, nervous system, other dirts……


சங்காளர் சூது கொலைகாரர் குடிகேடர் சுழல்
சிங்கார தோளர் பண ஆசையுளர் சாதியிலர்
சண்டாளர் சீசீயவர் மாயவலை………..
Cut throats, gamblers, murderers, destroyer of families, women loitering around with sensuous shoulders covetous after money, indulging in carnal pleasures, coming from the basest lineage

தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை
வறியனை நிறை பொறை வேண்டிடாமத
சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணனை மிகு கேள்வி
தவ நெறி தனைவிடு தாண்டு காலியை
அவமதி அதனில் பொலாங்கு தீமை செய் சமடனை வலிய அசாங்க மாகிய தமியேனை

I am an utter fool, crazy drunkard, arrogant scum, wastrel, roaming loafer, deliberately harmed others, an outcast, who went chasing after women என்று அருணகிரி நாதர் தன்னையே நொந்துகொண்டு எனக்கு என்று அருளப் போகிறாய் என்கிறார். காலி என்ற சொல் குறிப்பிடத்தக்கது.


பித்தர், அஞ்சர்,அவலர், பேய்க்கத்தர்

அறிவிலாப் பித்தர் உன்றன் அடிதொழாக் கெட்ட வஞ்சர்
அசடர் பேய்க் கத்தர் நன்றி அறியாத
அவலர், மேற் சொற்கள் கொண்டு கவிகளாகப் புகழ்ந்து
அவரை வாழ்த்தித் திரிந்து பொருள்தேடிச்
Stupid fools, evil people who never worship your feet, idiots, indulging in devilish deeds, thankless miserable ones—these are the people on whom I wasted words composing poems praising them, I went on heaping plaudits on them to make money.


சகல கருமிகள் சௌவிய சமயிகள்
சரியை கிரியைகள் தவமெனு மவர்சிலர்
சவலை யறிவினர் நெறியினை விடைனி யடியேனுக்
Ritualists, religious fanatics, those who worship through offerings and meditation, confused and unwise ones--- I wanted to give up all these things.

தவநெறி தவறிய குருடுகள் தலைபறி கதறிய பரபாதத்
தருமிகள் கருமிகள் வெகுவித சமயிகள் அவரொடு சருவாநின்

The blind people who departed from the righteous path, the proponents of other religions who boisterously thrust their tenets by plucking hairs (like the Jains), the evil doers and various religious zealots—I have been locking horns with all these people. ‘தவநெறி தவறிய குருடுகள்’ என்பது படித்து இன்புறத் தக்கது.


பாவி, கோபி, பேடி, மோடி, லோபி, கோழை, பேய்

மதிதனை யிலாத பாவி குரு நெறி இலாத கோபி
மனநிலை இலாத பேயன் அவ மாயை
வகையது விடாதபேடி தவநினைவிலாத மோடி
வரும் வகை யிதேது காயம் எனநாடும்

Sinner, coward, devil, hot tempered, ruffian, wicked miser, worthless fellow எனக்கும் அருள்புரி என்கிறார். பேடி, மோடி, கோபி, லோபி என்பன படிக்க சுவையாக இருக்கின்றன.
இன்னொரு இடத்தில் தேரா வ்ருதா, காமா விகாரன், ஆபாச ஈனன், அசாப சாசன், மோடாதி மோடன், கேடன், துரோகன், லோபன், வீணன் என்று அடுக்குகிறரர்.


குபேரன் யார்?

கொடாதவனை யேபு கழ்ந்து
குபேரனென வேமொ ழிந்து
குலாவியவ மேதி ரிந்து புவிமீதே
I used to praise a miser who had never given charity calling him the greatest giver like Kuberan and I kept on flattering him and wandering with him in vain!
பிறந்தார் கிடந்தார் இருந்தார் தவழ்ந்தார்
நடந்தார் தளர்ந்து பிணமானார்.
இந்தக் கருத்தை ஆதி சங்கரர், அப்பர் பெருமான் போன்றோர் அழகிய பாடல்களில் பாடியுள்ளனர் ( பாலனாய்க் கழிந்த நாளும்-------தேவாரம்; பாலஸ்தாவத் க்ரீடா சக்த:- ஆதி சங்கரரின் பஜ கோவிந்தம்)
 
i read in an article written by P.A.Krishnan, which he apparently repeated in a recent speech, that in Sanskrit are some of the vilest anti brahmin epithets.

Actually, the context was, that periyar should have learned sanskrit if he really wanted to வசை our kind :)

here is verbatim from an blog by badri

அறிவியல் எழுத்தாளரான பெ.நா.அப்புசாமி. அவர் பிராமணர். தீவிர நாத்திகர். அவரிடம் பி.ஏ.கே பெரியாரைப் பற்றிப் பேசியுள்ளார். பிராமணர்களை

நன்கு திட்டுவதற்கு பெரியார் சமஸ்கிருதத்தைப் படிக்கவேண்டும் என்று அப்புசாமி சொல்வாராம். உத்தர மீமாம்சை தவிர பிற இந்துத்

தத்துவங்களுக்கு (பூர்வ மீமாம்சை, யோகம், சாங்கியம், நியாயம், வைசேஷிகம்) கடவுளே தேவையில்லை. சமஸ்கிருத இலக்கியங்கள்

பிராமணர்களைக் கேலி செய்த மாதிரி யாரும் கேலி செய்ய முடியாது. பெரியாரின் கருத்துகளால் மக்களிடம் சிரிப்பை வரவழைக்கமுடியுமே தவிர

அவர்களைக் கடவுள் மறுப்பாளர்களாக மாற்றமுடியாது என்றாராம் அப்புசாமி.

அக்கிரகாரத்தில் பெரியார் - பி.ஏ.கிருஷ்ணன்
 
Last edited:

Very interesting article by Sri. Swaminathan and a nice reply from Sri. Kunjuppu.

சிங்காரச் சென்னைவாசிகளுக்குத் தெரியாத 'சென்னை செந்தமிழ்' வசவுகளா? சமஸ்கிருதம் மட்டுமன்றி, எல்லா

மொழி வசவுகளையும் 'அபேஸ்' செய்தவர்கள் இவர்கள்!! இதைத் தவிர புதுச் சொற்களும் கண்டுபிடிப்பார்களே!
icon3.png
 
hi RR madam,

இது சிங்கார சென்னை வசவு.......ஏய் கசுமாலம் ....எங்கே குந்துகிட்டு இருக்கே....என்ன வூட்டுலே சொல்லிட்டு வந்துட்டியா.......சும்மா கிட கிழவா.....

இது எப்படி இருக்கு....எங்க பேட்டையிலே தண்ணி வூட்டுடு .....என்ன நினசீடிருக்கே.....கத்தியாலே கீச்சுடுவேன்........

my chennai tamil ok?
 
Last edited:

Dear TBS Sir,

This Chennai Sentamizh comes under the category of 'descent scoldings'! :blah:
There are much more in the vocabulary! :popcorn: But I can't write them here! :lol:
 
பிறந்தார் கிடந்தார் இருந்தார் தவழ்ந்தார்
நடந்தார் தளர்ந்து பிணமானார்.

சுருக்கலாம் இதை இன்னமும்
பொருள் சற்றும் மாறாமலேயே!

பிறந்தார், இருந்தார், இறந்தார்!
(சராசரி மனிதர்களில் ஒருவர் இவர்)

வந்தாரு , உண்டாரு, போனாரு !!!
(உண்பதற்காகவே வருபவர் இவர் )

துண்ணல், தூறல், தூக்கம்!
(சிலரின் வாழ்க்கை குறிக்கோள்)
 

There is another similar anecdote!

On reaching the then Bombay airport, one guy shouted 'Bombay! Bombay!'

The air hostess told him, 'Be silent, please!'. Immediately he shouted, 'Ombay! Ombay!'
 
Milka singh, when he saw the plane, shouted - 'boeing going, boeing going'. Nehru admonished him -'be silent'. Milka resumed - 'oeing going, oeing going'.


Suppose 'g' were also silent
it would have been even more interesting
to listen to the "oeing oing! oeing oing!":)
 

There is another similar anecdote!

On reaching the then Bombay airport, one guy shouted 'Bombay! Bombay!'

The air hostess told him, 'Be silent, please!'. Immediately he shouted, 'Ombay! Ombay!'

How did he now which 'b' was silent???
It could have been Ombay! or Bomay!! or even Omay!!!
 
ஒரு ஊரில் ஒரு எஜமானர் இருந்தார். அவருக்கு மிகவும் மரியாதையான ஒரு வேலைக்காரன் இருந்தான். யார் வந்தாலும் எதைச் செய்தாலும் "திரு" என்று அடைமொழி போட்டுத்தான் பேசுவான. திரு சாப்பாட்டில் திரு கொத்தமல்லி போட்டாச்சு. திருத் தட்டில் திரு அமுது படைத்தாச்சு--- இப்படிப் பல. எஜமானருக்கு ஒரு நாள் பயங்கரக் கோபம் வந்துவிட்டது. இனி எதற்காவவது திரு என்று சொன்னால் உன் சீட்டைக் கிழித்துவிடுவேன் என்று எச்சரித்தார். அன்று இரவு அவர் வீட்டில் திருடன் வந்து எல்லாவற்றையும் திருடிக்கொண்டு போய்விட்டான். சத்தம் கேட்டு எழுந்த வேலைக்காரன் எஜமானரை எழுப்ப ஓடோடிப் போனான். அப்போது எஜமானர் போட்ட உத்தரவு நினைவுக்கு வரவே "திரு" எல்லாவற்றையும் விட்டு விட்டு "ட"ன் வந்து "டிக்" கொண்டு போய்ட்டான் டன் வந்து டிக் கொண்டு போய்ட்டான், என்று பல முறை சொல்லிக் கொண்டே இருந்தான. பாதி தூக்கத்தில் எழுந்த எஜமானருக்கு மஹா கோபம். மடையா நள்ளிரவில் உளறுவதோடு என்னை வேறு எழுப்பி விட்டாயா என்று தடியைக் கொண்டு அடித்தார். காலையில் எழுந்து பார்த்தபோது திருடன் வந்து எல்லாவற்றையும் திருடிக் கொண்டு போனதை அறிந்து அவனைத் திட்டினார். அவன் ஐயா நீங்கள் திரு சொல்லக் கூடாது என்றதால் இரவில் (திரு) டன் வந்து (திரு) டிக் கொண்டு போய்ட்டான் என்று பலமுறை சொன்னேனெ. அப்போதே (திரு) டனைப் பிடித்திருக்கலாமே என்றான்!!!
 
விசாலாட்சி ரமணி அவர்களின் கவனத்திற்கு. நீங்கள் கூறியது பாரதி பாடல் ஒன்றை என் நினைவுக்குக் கொண்டுவருகிறது.

தேடிச் சோறு நிதந்தின்று--பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி--மனம்
வாடித் துன்பம் மிக உழன்று-- பிறர்
வாடப் பலச் செயல்கள் செய்து--நரை
கூடிக் கிழப்பருவமெய்தி--கொடுங்
கூற்றுக்கு இரையெனப் பின்மாயும்-- பல
வேடிக்கை மனிதரைப் போலே---நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ
 

Ref: Post # 14

எங்கள் தமிழ் ஆசான் இதே போல வேறு கதையும் கூறியுள்ளார்!

'மரியாதைக் குறைவாகப் பேசக் கூடாது' என்று அறிவுரை சொன்ன ஆசிரியர், 'மரியாதைக்குரிய எதைச் சொன்னாலும்

'திரு' என்பதைச் சேர்த்துச் சொல்ல வேண்டும்', என்று
ம்
கூறினாராம். அன்று இரவு, ஒரு மாணவனுடைய வீட்டின் அருகில்

உள்ள கோவில் மணி அடித்தவுடன், அவன், 'திருடண்....., திருடண்....., திருடண்.....' என்று சத்தமாகக் கத்த, அனைவரும்

தடி, கம்புகளுடன் 'எங்கே? எங்கே?' என்று கேட்டு ஓடி வர, அவனோ, 'என்று கோவில் மணி அடித்தது!' என்று முடித்தானாம்!

கோவில் மணிக்கு மரியாதை! :hail:


 
விசாலாட்சி ரமணி அவர்களின் கவனத்திற்கு. நீங்கள் கூறியது பாரதி பாடல் ஒன்றை என் நினைவுக்குக் கொண்டுவருகிறது.

தேடிச் சோறு நிதந்தின்று--பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி--மனம்
வாடித் துன்பம் மிக உழன்று-- பிறர்
வாடப் பலச் செயல்கள் செய்து--நரை
கூடிக் கிழப்பருவமெய்தி--கொடுங்
கூற்றுக்கு இரையெனப் பின்மாயும்-- பல
வேடிக்கை மனிதரைப் போலே---நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ

Small persons
Small minds
Small needs
Small deeds
Small pleasures

There is a hairline separating these people from animals
(since they walk on two legs and go about dressed in clothes)
which do exactly the same things... eat, sleep, procreate and die.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top