எனக்கு ஒரு சந்தேகம்! ஒரு மாமா எங்கள் அகத்துக்கு வந்திருந்தார். பேசிக்கொண்டு இருக்கும் சமயத்தில் சிரார்த்தம் பற்றி பேச்சு வந்தது. சாஸ்திரிகள் எல்லாம் நிறைய தக்ஷணை கேட்கிறார்கள், இருக்கிறவா கொடுக்க முடியறது, இல்லாதவா எல்லாம் என்ன பண்ணறது? இப்படியே போனால், இயலாதவா எல்லாம் தெவசம் பண்ணறதயே விட்டுடுவா போல இருக்கே? இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான் என்று எனக்கு த் தோன்றுகிறது, மேலும் இன்னொன்னு, பணக்காரா எல்லாம், ஆபீஸ் பிசினஸ் என்று காலை 7 மணிக்கெல்லாம் தெவசம் பண்ணச் சொல்லி வாத்தியாரை வரச் சொல்றா, அவாளும் பண்ணிட்டு போறா, இதுக்கு நம்ம என்ன செய்யறது?