தக்காளி ரசத்தின் மகிமை
தமிழர்களின் சாப்பாட்டில் சாம்பார், ரசம், தயிர்/மோர் என்று மூன்று ‘கோர்ஸ்’ உணவு இருக்கும். இன்றும் தமிழ்நாட்டு ஹோட்டல்களில் இதே முறை பின்பற்றப்படுகிறது. கல்யாணச் சாப்பாடுகளிலும் இதுதான் பிரதானம். சப்பாத்தி, பரொட்டா போன்றவை எல்லாம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை. கூட்டு, காய்கறிகள் மற்ற வெஞ்சனம் (சைட் டிஷ்) ஆகும். தமிழ் பிராமணர் வீடுகளில் இன்றும் இதே வழக்கம் நீடிக்கிறது. இந்த தக்காளி புற்றுநோயை ஒழித்துவிடும் என்று இப்போது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
தக்காளிக்கு சிவப்பு நிறம் கிடைக்க உதவுவது லைகோபின் என்னும் ஒரு பொருளாகும். இது புற்றுநோயின் எதிரி. அதாவது புற்று நோய் செல்களுக்கான ரத்த சப்ளையத் தடுத்துவிடுகிறது. இதை பிரிட்டனில் போர்ட்மவுத் பல்கலைக்கழகத்தில் பார்மஸி பிரிவைச் சேர்ந்த ம்ருதுலா சோப்ராவும் அவருடைய சகாக்களும் கண்டுபிடித்தனர். சமைக்கப்பட்ட தக்காளி நன்கு வேலை செய்கிறது. புற்றுநோய் செல்கள் ரத்த ஓட்டத்தைக் கடத்திச் சென்று தங்களுக்குப் பயன்படுத்தும். அதை தக்காளியின் லைகோபின் தடுக்கிறது அல்லது மெதுவாகச் செயல்படவைக்கிறது.
சோதனைச் சாலையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி மனித உடலிலும் நடைபெறுகிறதா என்பதை அடுத்து ஆராயப்போகிறார்கள்.அவர்கள் முடிவை அறிவிப்பதற்கு முன்னால் நானே சொல்லிவிடுகிறேன். தமிழர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகச் சாப்பிடுவதன் காரணமே அதன் மருத்துவ குணத்தால்தானே.
தக்காளியை 2500 ஆண்டுகளுக்கு முன் தென் அமெரிக்க அஸ்டெக் (ஆஸ்தீக) நாகரீக மக்கள் கண்டுபிடித்தனர். பிறகு ஸ்பானியர்கள் இதை இலகம் முழுதும் கொண்டுசென்றனர். பிரிட்டிஷார் மூலம் நமக்கும் 300 ஆண்டுகளுக்கு முன் வந்து சேர்ந்தது.
If you are a health freak, please read also other posts by Santanam Swaminathan:
1.இளநீர் மகிமையும் தென்னையின் பெருமையும் 2.நெல்லிக்காய் மகிமை: அவ்வையாரும் ஆல்பிரூனியும் அலெக்சாண்டரும் 3.வடக்கே தலை வைக்காதே 4. Amazing Medical Knowledge of Tamils 5. Why do Hindus practise Homeopathy? 6. Hindu Wisdom: Copper Kills Bacteria 7. Copper kills Cancer 8. How did a Pandya King get a Golden Hand?
தமிழர்களின் சாப்பாட்டில் சாம்பார், ரசம், தயிர்/மோர் என்று மூன்று ‘கோர்ஸ்’ உணவு இருக்கும். இன்றும் தமிழ்நாட்டு ஹோட்டல்களில் இதே முறை பின்பற்றப்படுகிறது. கல்யாணச் சாப்பாடுகளிலும் இதுதான் பிரதானம். சப்பாத்தி, பரொட்டா போன்றவை எல்லாம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை. கூட்டு, காய்கறிகள் மற்ற வெஞ்சனம் (சைட் டிஷ்) ஆகும். தமிழ் பிராமணர் வீடுகளில் இன்றும் இதே வழக்கம் நீடிக்கிறது. இந்த தக்காளி புற்றுநோயை ஒழித்துவிடும் என்று இப்போது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
தக்காளிக்கு சிவப்பு நிறம் கிடைக்க உதவுவது லைகோபின் என்னும் ஒரு பொருளாகும். இது புற்றுநோயின் எதிரி. அதாவது புற்று நோய் செல்களுக்கான ரத்த சப்ளையத் தடுத்துவிடுகிறது. இதை பிரிட்டனில் போர்ட்மவுத் பல்கலைக்கழகத்தில் பார்மஸி பிரிவைச் சேர்ந்த ம்ருதுலா சோப்ராவும் அவருடைய சகாக்களும் கண்டுபிடித்தனர். சமைக்கப்பட்ட தக்காளி நன்கு வேலை செய்கிறது. புற்றுநோய் செல்கள் ரத்த ஓட்டத்தைக் கடத்திச் சென்று தங்களுக்குப் பயன்படுத்தும். அதை தக்காளியின் லைகோபின் தடுக்கிறது அல்லது மெதுவாகச் செயல்படவைக்கிறது.
சோதனைச் சாலையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி மனித உடலிலும் நடைபெறுகிறதா என்பதை அடுத்து ஆராயப்போகிறார்கள்.அவர்கள் முடிவை அறிவிப்பதற்கு முன்னால் நானே சொல்லிவிடுகிறேன். தமிழர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகச் சாப்பிடுவதன் காரணமே அதன் மருத்துவ குணத்தால்தானே.
தக்காளியை 2500 ஆண்டுகளுக்கு முன் தென் அமெரிக்க அஸ்டெக் (ஆஸ்தீக) நாகரீக மக்கள் கண்டுபிடித்தனர். பிறகு ஸ்பானியர்கள் இதை இலகம் முழுதும் கொண்டுசென்றனர். பிரிட்டிஷார் மூலம் நமக்கும் 300 ஆண்டுகளுக்கு முன் வந்து சேர்ந்தது.
If you are a health freak, please read also other posts by Santanam Swaminathan:
1.இளநீர் மகிமையும் தென்னையின் பெருமையும் 2.நெல்லிக்காய் மகிமை: அவ்வையாரும் ஆல்பிரூனியும் அலெக்சாண்டரும் 3.வடக்கே தலை வைக்காதே 4. Amazing Medical Knowledge of Tamils 5. Why do Hindus practise Homeopathy? 6. Hindu Wisdom: Copper Kills Bacteria 7. Copper kills Cancer 8. How did a Pandya King get a Golden Hand?