என்றென்றும் அன்புடன் - thodarkathai - anamika -
என்றென்றும் அன்புடன்
*********************************
அத்தியாயம் - 1
*********************
உச்சிப் பிள்ளையார் அரசாளும் திருச்சி.
காலை எட்டேகால் மணி.
பொன்விழாக் கண்ட ஜே.எம். கல்லூரி; பொன்விழா நினைவாக அமைக்கப்பட்ட நுழைவாயில் வழியாக அதோ நிதிலா வந்து கொண்டிருக்கிறாள்.
இருபுறமும் மரங்கள் அணிவகுத்து அவளை வரவேற்க, தென்றல் மெல்ல தடவிச் சென்றது. முதல் நாள் மலர்ந்த பன்னீர் புஷ்பங்கள் சுவாசத்தை நிரப்பி, நெஞ்சத்தை இனிக்கச் செய்தன. இந்த இனிமையான அனுபவம் பெறவும், அலுவலக நேரத்தில் பேருந்தில் வரும் 'இடிமன்னர்கள்' தொல்லையைத் தவிர்க்கவும் சற்று முன்னதாகவே கல்லூரிக்கு வருவது நிதிலாவின் பழக்கம்.
'இன்றோடு இது கடைசி' என்று நினைத்தபோது, மனதின் மூலையில் லேசாய் ஒரு சோகமேகம் எட்டிப் பார்த்தது. ஆம்! இரண்டு வருட பட்ட மேற்படிப்புத் தேர்வுகள் முடிந்து, இன்று பிரிவுபசார விழா! அவர்கள் வகுப்பில் அனைவரும் இன்று தான் கடைசியாய் சந்தித்துக் கொள்ளப் போகிறார்கள்!!
நிதிலா மெல்ல வகுப்பறைக்குள் நுழைந்தாள். அங்கே கரும்பலகையில் ஒரு கோவிலின் மணிமண்டபம் உருவாகிக் கொண்டிருந்தது. அவள் வந்தது கூடத் தெரியாமல் வாசலுக்கு முதுகைக் காட்டியபடி தன்னை மறந்து படம் வரைந்து கொண்டிருந்தான் திலீப்!
கோவிலில் மணிமண்டபம்; அதை ஒட்டியபடி அழகான நீராழி மண்டபம்; அலை அலையான நீர்நிலையில் நீந்தும் இரு அன்னபட்சிகள்; மண்டபத்தில் சிற்பங்கள் வரைந்து கொண்டிருந்தான்.
நிதிலா சப்தம் செய்யாமல் எதிர்ப்புறம் இருந்த ஜன்னலை நோக்கிச் சென்றாள். வேப்பமரக் காற்றும், குயில் ஓசையும் தாலாட்ட, அங்கிருந்தபடி திலீப் வரைவதைப் பார்த்து வியந்து கொண்டிருந்தாள்.
யாரோ தன்னையே பார்ப்பது போலத் தோன்ற, திலீப் திரும்பினான். அவன் திரும்பிய மறுநொடி நிதிலா திரும்பி ஜன்னல் வழியே வெளியே பார்க்கத் தொடங்கினாள். திலீப் மனதுக்குள் ஆச்சர்யம்!
"நிதிலா! எப்போது வந்தாள்?" என்று.
கண்கள் அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க, மனது "இது தான் சமயம்; இதை நழுவ விடாதே" என உந்தியது. மேஜை மேல் இருந்த தன் டைரியின் உறையைப் பிரித்து அந்த வாழ்த்து மடலை எடுத்தான். நேற்று இரவு கண்விழித்து அவனே வரைந்து தயாரித்த மடல்; இரண்டு ரோஜா மலர்களை ஒரு இதயம் இணைத்துக் கொண்டிருந்தது. ஒரு முறை பிரித்துப் பார்த்தவன் மறுபடி உறையில் இட்டு, நிதிலா அருகில் சென்று,
"குட்மார்னிங்!" என்றான்.
திரும்பிப் பார்த்த நிதிலாவுக்கு ஆச்சரியம்! அவள் கல்லூரியில் சேர்ந்த இந்த இரண்டு வருடங்களில் முதன் முதலாக இன்று தான் அவளிடம் பேசியிருக்கிறான்! பிரமிப்பு மாறாதவளாய், பதிலுக்கு 'குட்மார்னிங்' என்றாள்.
"எல்லார் கிட்டயும் ஆட்டோகிராஃப் வாங்கிட்டீங்க போலிருக்கு"
திலீப் கேட்க, "ஆமாம்" என்று சொல்லி முடிப்பதற்குள், இன்னும் அவனிடம் வாங்காதது நினைவுக்கு வந்தது.
"உங்க கிட்ட தான் இன்னும் வாங்க்லே"
"இந்தாங்க என்னோட ஆட்டோகிராஃப்" என்றபடி திலீப் கவரை அவளிடம் கொடுத்தான்.
"என்ன கவர் இது?"
நிதிலா புரியாமல் ஒரு நொடி விழித்து, பிறகு கவரைப் பிரித்தாள்.
அழகான படம்; ரோஜாக்களை இணைக்கும் இதயம்!
நிதிலாவுக்கு படபடப்பு கூடியது; உள்ளே பிரிக்க, முத்தான கையெழுத்தில் கவிதை!
"என் மனதில் நீயிருந்து
எப்போதும் சிரிக்கின்றாய்!
உன்னோடு கரம் இணைக்க
உரிமை எனக்குத் தருவாயா?"
என்றும் அன்புடன்,
நெஞ்சில் உன் நினைவுடன்,
திலீப்.
அப்படியானால்...அப்படியானால்....திலீப் என்னை விரும்புகிறானா? ஓ, கடவுளே! நிதிலாவின் மனது படபடத்தது. நிதிலாவின் முகம் நோக்கி திலீப் காத்திருக்க, அவளுக்கோ தன் நிலையை விளக்க முடியாத சூழ்நிலை! எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் நிறைந்த திலீப்பின் விழிகளை அவளால் சந்திக்க் முடியவில்லை; வார்த்தைகளை கவனமாய் தேர்ந்தெடுத்து,
"சாயந்தரம் நர்மதா வீட்டுக்கு வாங்க; ப்ளீஸ், எதுவானாலும் அங்கே பேசிக்கலாம்" என்றாள்.
வெளியே மாணவர்களின் பேச்சுக்கள் கேட்க ஆரம்பித்து விட, திலீப் தலையாட்டி விட்டு அவசரமாய் மறுபடி படம் வரைய சென்றான்.
நடந்த நிகழ்ச்சிகளை நிதிலாவால் நம்ப முடியவில்லை; ஆனால் கையில் வைத்திருந்த வாழ்த்துமடல் நடந்தவற்றுக்கு சாட்சியாய் சிரித்தது. அவசரமாய் தன் கைப்பையில் அதை மறைத்தாள். அன்றைய நிகழ்ச்சி எதிலுமே அவளால் மனமொன்றி ரசிக்க முடியவில்லை.
நிதிலாவின் தவிப்பை கவனித்து உணர்ந்த நர்மதா விவரத்தைக் கேட்க, அவளிடம் மட்டும் நடந்ததைக் கூறினாள்.
திலீப் நிலையோ வேறு; அவனைப் பொறுத்தவரை பாரத்தை இறக்கியாகி விட்டது; எதிர்மறையான பதில் இல்லாததால் வெற்றி நிச்சயம் என தனக்குள் சொல்லிக் கொண்டான். உற்சாகம் கரைபுரண்டது.
அவன் வரைந்திருந்த படத்துக்கு பாராட்டுக்கள் குவிந்தன. மெல்ல கலைநிகழ்ச்சிகள் களை கட்டத் துவங்கின. திலீப் பாடாமல் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடந்தது இல்லை. எல்லாரும் அவனை பாட அழைத்தனர்.
இனிமையான குரல்வளம்; கேட்பாரை உருக வைக்கும் பாவம்; முறையாக கர்நாடக சங்கீதம் பயின்ற ஞானம் - அத்தனையும் நிறைந்த அருமையான பாடல் திலீப்பினுடையது.
திலீப் பாட வந்ததுமே அரங்கில் முழு அமைதி; முதலில் "மஹா கணபதிம்..." பாடினான்; பாடல் முடிந்ததும், கைதட்டல் அதிர்ந்தது. அடுத்த பாடலுக்காக அனைவரும் ஆவலோடு காத்திருந்தனர்.
கூட்டம் முழுதும் சுற்றிய அவன் விழிகள், நிதிலாவைக் கண்டதும் ஒரு நொடி நின்றது; அடுத்த நொடி பாடல் ஆரம்பித்தது.
"என்னைத் தாலாட்ட வருவாளா?
நெஞ்சில் பூமஞ்சம் தருவாளா?
............கண்ணுக்கு இமையாக இருக்கின்றாள்;
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள் "
தன்னை மறந்த லயிப்புடன் திலீப் பாடிக் கொண்டிருக்க, நிதிலா சுற்றிலும் ஒரு முறை பார்த்தாள். அனைவரும் சொக்கிப் போய் பாடலை ரசித்துக் கொண்டிருக்க, அதற்கு உரியவளோ அதை ரசிக்கமுடியாத மனநிலையில் தவித்தாள்; இந்த அன்பை, இந்தக் குரலில் பிரதிபலிக்கும், கேட்பாரை உருக வைக்கும் காதலை நான் மறுக்கப் போகிறேனே? அது தெரிந்தால், அவன் மனது எப்படி வேதனைப்படும்? என்று எண்ணிய நிதிலா தனக்குள் வருந்தினாள்.
(தொடரும்.....)
என்றென்றும் அன்புடன்
*********************************
அத்தியாயம் - 1
*********************
உச்சிப் பிள்ளையார் அரசாளும் திருச்சி.
காலை எட்டேகால் மணி.
பொன்விழாக் கண்ட ஜே.எம். கல்லூரி; பொன்விழா நினைவாக அமைக்கப்பட்ட நுழைவாயில் வழியாக அதோ நிதிலா வந்து கொண்டிருக்கிறாள்.
இருபுறமும் மரங்கள் அணிவகுத்து அவளை வரவேற்க, தென்றல் மெல்ல தடவிச் சென்றது. முதல் நாள் மலர்ந்த பன்னீர் புஷ்பங்கள் சுவாசத்தை நிரப்பி, நெஞ்சத்தை இனிக்கச் செய்தன. இந்த இனிமையான அனுபவம் பெறவும், அலுவலக நேரத்தில் பேருந்தில் வரும் 'இடிமன்னர்கள்' தொல்லையைத் தவிர்க்கவும் சற்று முன்னதாகவே கல்லூரிக்கு வருவது நிதிலாவின் பழக்கம்.
'இன்றோடு இது கடைசி' என்று நினைத்தபோது, மனதின் மூலையில் லேசாய் ஒரு சோகமேகம் எட்டிப் பார்த்தது. ஆம்! இரண்டு வருட பட்ட மேற்படிப்புத் தேர்வுகள் முடிந்து, இன்று பிரிவுபசார விழா! அவர்கள் வகுப்பில் அனைவரும் இன்று தான் கடைசியாய் சந்தித்துக் கொள்ளப் போகிறார்கள்!!
நிதிலா மெல்ல வகுப்பறைக்குள் நுழைந்தாள். அங்கே கரும்பலகையில் ஒரு கோவிலின் மணிமண்டபம் உருவாகிக் கொண்டிருந்தது. அவள் வந்தது கூடத் தெரியாமல் வாசலுக்கு முதுகைக் காட்டியபடி தன்னை மறந்து படம் வரைந்து கொண்டிருந்தான் திலீப்!
கோவிலில் மணிமண்டபம்; அதை ஒட்டியபடி அழகான நீராழி மண்டபம்; அலை அலையான நீர்நிலையில் நீந்தும் இரு அன்னபட்சிகள்; மண்டபத்தில் சிற்பங்கள் வரைந்து கொண்டிருந்தான்.
நிதிலா சப்தம் செய்யாமல் எதிர்ப்புறம் இருந்த ஜன்னலை நோக்கிச் சென்றாள். வேப்பமரக் காற்றும், குயில் ஓசையும் தாலாட்ட, அங்கிருந்தபடி திலீப் வரைவதைப் பார்த்து வியந்து கொண்டிருந்தாள்.
யாரோ தன்னையே பார்ப்பது போலத் தோன்ற, திலீப் திரும்பினான். அவன் திரும்பிய மறுநொடி நிதிலா திரும்பி ஜன்னல் வழியே வெளியே பார்க்கத் தொடங்கினாள். திலீப் மனதுக்குள் ஆச்சர்யம்!
"நிதிலா! எப்போது வந்தாள்?" என்று.
கண்கள் அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க, மனது "இது தான் சமயம்; இதை நழுவ விடாதே" என உந்தியது. மேஜை மேல் இருந்த தன் டைரியின் உறையைப் பிரித்து அந்த வாழ்த்து மடலை எடுத்தான். நேற்று இரவு கண்விழித்து அவனே வரைந்து தயாரித்த மடல்; இரண்டு ரோஜா மலர்களை ஒரு இதயம் இணைத்துக் கொண்டிருந்தது. ஒரு முறை பிரித்துப் பார்த்தவன் மறுபடி உறையில் இட்டு, நிதிலா அருகில் சென்று,
"குட்மார்னிங்!" என்றான்.
திரும்பிப் பார்த்த நிதிலாவுக்கு ஆச்சரியம்! அவள் கல்லூரியில் சேர்ந்த இந்த இரண்டு வருடங்களில் முதன் முதலாக இன்று தான் அவளிடம் பேசியிருக்கிறான்! பிரமிப்பு மாறாதவளாய், பதிலுக்கு 'குட்மார்னிங்' என்றாள்.
"எல்லார் கிட்டயும் ஆட்டோகிராஃப் வாங்கிட்டீங்க போலிருக்கு"
திலீப் கேட்க, "ஆமாம்" என்று சொல்லி முடிப்பதற்குள், இன்னும் அவனிடம் வாங்காதது நினைவுக்கு வந்தது.
"உங்க கிட்ட தான் இன்னும் வாங்க்லே"
"இந்தாங்க என்னோட ஆட்டோகிராஃப்" என்றபடி திலீப் கவரை அவளிடம் கொடுத்தான்.
"என்ன கவர் இது?"
நிதிலா புரியாமல் ஒரு நொடி விழித்து, பிறகு கவரைப் பிரித்தாள்.
அழகான படம்; ரோஜாக்களை இணைக்கும் இதயம்!
நிதிலாவுக்கு படபடப்பு கூடியது; உள்ளே பிரிக்க, முத்தான கையெழுத்தில் கவிதை!
"என் மனதில் நீயிருந்து
எப்போதும் சிரிக்கின்றாய்!
உன்னோடு கரம் இணைக்க
உரிமை எனக்குத் தருவாயா?"
என்றும் அன்புடன்,
நெஞ்சில் உன் நினைவுடன்,
திலீப்.
அப்படியானால்...அப்படியானால்....திலீப் என்னை விரும்புகிறானா? ஓ, கடவுளே! நிதிலாவின் மனது படபடத்தது. நிதிலாவின் முகம் நோக்கி திலீப் காத்திருக்க, அவளுக்கோ தன் நிலையை விளக்க முடியாத சூழ்நிலை! எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் நிறைந்த திலீப்பின் விழிகளை அவளால் சந்திக்க் முடியவில்லை; வார்த்தைகளை கவனமாய் தேர்ந்தெடுத்து,
"சாயந்தரம் நர்மதா வீட்டுக்கு வாங்க; ப்ளீஸ், எதுவானாலும் அங்கே பேசிக்கலாம்" என்றாள்.
வெளியே மாணவர்களின் பேச்சுக்கள் கேட்க ஆரம்பித்து விட, திலீப் தலையாட்டி விட்டு அவசரமாய் மறுபடி படம் வரைய சென்றான்.
நடந்த நிகழ்ச்சிகளை நிதிலாவால் நம்ப முடியவில்லை; ஆனால் கையில் வைத்திருந்த வாழ்த்துமடல் நடந்தவற்றுக்கு சாட்சியாய் சிரித்தது. அவசரமாய் தன் கைப்பையில் அதை மறைத்தாள். அன்றைய நிகழ்ச்சி எதிலுமே அவளால் மனமொன்றி ரசிக்க முடியவில்லை.
நிதிலாவின் தவிப்பை கவனித்து உணர்ந்த நர்மதா விவரத்தைக் கேட்க, அவளிடம் மட்டும் நடந்ததைக் கூறினாள்.
திலீப் நிலையோ வேறு; அவனைப் பொறுத்தவரை பாரத்தை இறக்கியாகி விட்டது; எதிர்மறையான பதில் இல்லாததால் வெற்றி நிச்சயம் என தனக்குள் சொல்லிக் கொண்டான். உற்சாகம் கரைபுரண்டது.
அவன் வரைந்திருந்த படத்துக்கு பாராட்டுக்கள் குவிந்தன. மெல்ல கலைநிகழ்ச்சிகள் களை கட்டத் துவங்கின. திலீப் பாடாமல் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடந்தது இல்லை. எல்லாரும் அவனை பாட அழைத்தனர்.
இனிமையான குரல்வளம்; கேட்பாரை உருக வைக்கும் பாவம்; முறையாக கர்நாடக சங்கீதம் பயின்ற ஞானம் - அத்தனையும் நிறைந்த அருமையான பாடல் திலீப்பினுடையது.
திலீப் பாட வந்ததுமே அரங்கில் முழு அமைதி; முதலில் "மஹா கணபதிம்..." பாடினான்; பாடல் முடிந்ததும், கைதட்டல் அதிர்ந்தது. அடுத்த பாடலுக்காக அனைவரும் ஆவலோடு காத்திருந்தனர்.
கூட்டம் முழுதும் சுற்றிய அவன் விழிகள், நிதிலாவைக் கண்டதும் ஒரு நொடி நின்றது; அடுத்த நொடி பாடல் ஆரம்பித்தது.
"என்னைத் தாலாட்ட வருவாளா?
நெஞ்சில் பூமஞ்சம் தருவாளா?
............கண்ணுக்கு இமையாக இருக்கின்றாள்;
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள் "
தன்னை மறந்த லயிப்புடன் திலீப் பாடிக் கொண்டிருக்க, நிதிலா சுற்றிலும் ஒரு முறை பார்த்தாள். அனைவரும் சொக்கிப் போய் பாடலை ரசித்துக் கொண்டிருக்க, அதற்கு உரியவளோ அதை ரசிக்கமுடியாத மனநிலையில் தவித்தாள்; இந்த அன்பை, இந்தக் குரலில் பிரதிபலிக்கும், கேட்பாரை உருக வைக்கும் காதலை நான் மறுக்கப் போகிறேனே? அது தெரிந்தால், அவன் மனது எப்படி வேதனைப்படும்? என்று எண்ணிய நிதிலா தனக்குள் வருந்தினாள்.
(தொடரும்.....)