• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

5 Saraswathi Mantras to Increase Memory in Students

சரஸ்வதி தேவி, பிரம்மாவின் நாவில் இருந்து தோன்றியவள் என்றும், பிரம்மா உலகை படைக்கின்ற போது அவரது உடல் இரண்டாக பிரிந்த போது ஒரு கூறு ஆணாகவும், மறு கூறு பெண்ணாகவும் ஆனது.*

இதில் பெண்ணெ சரஸ்வதி தேவி என்றும் சில புராண கதைகள் சொல்கின்றன. ரிக் வேத பாடல்களின் வடிவில் சரஸ்வதி தேவியே வசிப்தாக சொல்லப்படுகிறது. சரஸ்வதி தேவியை நதியாகவும் சில வேதங்கள் குறிப்பிடுகின்றன.

சரஸ்வதி வழிபாடு :

ஞானம், அறிவு, கலைகள் ஆகியவற்றின் தெய்வமாக விளங்குபவள் சரஸ்வதி தேவி. கையில் வீணை, ஜப மாலை ஏந்தி, வெண் தாமரையின் மீது காட்சி தரக் கூடிய தேவியாகவும் சரஸ்வதி தேவி காட்சி தருகிறாள்.

மாணவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டோர் தங்களின் பணிகளை துவக்குவதற்கு முன், அந்த கலைகளில் தேர்ச்சி பெறுவதற்காக சரஸ்வதி தேவியை அருளை வேண்டி வழிபடுவது வழக்கம்.

படிப்பிற்கு மட்டுமின்றி வாக்குபலிதம் ஏற்படவும், ஒரு நிறுவனத்தையோ அல்லது குடும்பத்தையோ நிர்வகித்து, சிறப்பாக கொண்டு செல்வதற்கு உரிய திறமையை பெறுவதற்கும் சரஸ்வதி தேவியை வழிபடுவது சிறப்பானதாகும்.

மாணவர்களின் நினைவாற்றல் பெருக :

இன்று மாணவர்கள் சந்திக்கும் பெரிய பிரச்சனையே படித்தது நினைவில் தங்காமல், மறந்து விடுவது தான்.

மாணவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் குறைவு, கவன சிதறல் ஆகிய பிரச்சனைகளை நீங்கி, அவர்கள் கல்வியில் உயர்வான நிலையை பெறுவதற்கு சரஸ்வதி தேவியை வழிபடுவது மிகச் சிறந்த வழிபாடாகும்.

மனது தெளிவாகி, ஞானமும், அறிவும் மிளிருவதற்கு சரஸ்வதி தேவியை வழிபடுவது சிறப்பானதாகும். இதற்கு சரஸ்வதியின் மந்திரங்கள் நமக்கு துணை செய்யும்.

சரஸ்வதி தேவிக்குரிய மந்திரங்களை மாணவர்கள் தினமும் உச்சரித்து வந்தால் நம்பிக்கையும், அவர்களின் நினைவாற்றலும் பெருகும். மற்றவர்களுடன் திறமையாக பேசும் திறனும் அதிகரிக்கும்.

சரஸ்வதியின் அருளை பெற :

மாணவர்களின் நினைவாற்றல் பெருகுவதற்கும், அவர்கள் கல்வி, தேர்வு மற்றும் கலைகளில் தேர்ச்சி அடைவதற்கும் சரஸ்வதியின் அருளை பெறுவதற்கும், சரஸ்வதி தேவிக்குரிய மந்திரங்களை தொடர்ந்து உச்சரித்து வருவது நல்ல பலனை கொடுக்கும்.

அப்படி மாணவர்களின் கல்விக்கு உதவும் 5 முக்கியமான சரஸ்வதி மந்திரங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்களுக்கான சரஸ்வதி மந்திரங்கள் :

1.
"ஓம் ஐம் சரஸ்வத்யை நமஹ "

என்ற சரஸ்வதி மூல மந்திரத்தை காலை, மாலை இரு வேளைகளிலும் 108 முறை உச்சரிப்பது நன்மை தரும்.

தினமும் முடியாதவர்கள் புதன்கிழமைகள் மற்றும் சரஸ்வதி பூஜை தினத்தில் மாலையில் விளக்கேற்றி சரஸ்வதி தேவியை பிரார்த்தனை செய்து கொண்டு இந்த மந்திரத்தை 108 முறை சொல்வது சிறப்பு.

2. " ஓம் ஐம் ஹ்ரீம் க்ளீம் மகா சரஸ்வதி தேவியே நமஹ "

இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.

இந்த மந்திரத்தை 108 முறை சொல்வது சிறப்பானதாகும்.

3. "ஓம் சரஸ்வத்யை ச வித்மஹே
*பிரம்ம பத்னியை ச தீமஹி*
*தந்நோ வாணி ப்ரசோதயாத்"*

- இந்த சரஸ்வதி காயத்ரி மந்திரத்தை, இசைல பாட்டு, நடனம் என எந்த கலையை கற்க துவங்குவதற்கு முன்பும் மாணவர்கள் உச்சரித்து வந்தால் கலைவாணியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். தினமும் இந்த மந்திரத்தை பாராயணம் செய்வது நலம் தரும்,

நினைவாற்றல் பெருக வைக்கும் மந்திரம் :

4.
"சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா"

- இந்த மந்திரத்தை தினமும் 21 முறை உச்சரித்து வந்தால் நினைவாற்றல் பெருகும்.

மாணவர்கள், படிப்பில் தங்களின் திறமையை வளர்த்துக் கொள்வதற்கு இந்த மந்திரம் துணை நிற்கும்.

5. " ஓம் வத வத வாக்வாதினி ஸ்வாஹா"

- இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்த வந்தால் உணர்ச்சிகளும் மனமும் கட்டுப்படும். படிப்பில் அல்லது வேலையில் கவனம் செலுத்த முடியாமல், நினைவை ஒருமுகப்படுத்த முடியாமல் இருப்பவர்கள் இந்த மந்திரத்தை தினமும் 51 முறை உச்சரித்து வரலாம்.
 
சரஸ்வதி தேவி, பிரம்மாவின் நாவில் இருந்து தோன்றியவள் என்றும், பிரம்மா உலகை படைக்கின்ற போது அவரது உடல் இரண்டாக பிரிந்த போது ஒரு கூறு ஆணாகவும், மறு கூறு பெண்ணாகவும் ஆனது.*

இதில் பெண்ணெ சரஸ்வதி தேவி என்றும் சில புராண கதைகள் சொல்கின்றன. ரிக் வேத பாடல்களின் வடிவில் சரஸ்வதி தேவியே வசிப்தாக சொல்லப்படுகிறது. சரஸ்வதி தேவியை நதியாகவும் சில வேதங்கள் குறிப்பிடுகின்றன.

சரஸ்வதி வழிபாடு :

ஞானம், அறிவு, கலைகள் ஆகியவற்றின் தெய்வமாக விளங்குபவள் சரஸ்வதி தேவி. கையில் வீணை, ஜப மாலை ஏந்தி, வெண் தாமரையின் மீது காட்சி தரக் கூடிய தேவியாகவும் சரஸ்வதி தேவி காட்சி தருகிறாள்.

மாணவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டோர் தங்களின் பணிகளை துவக்குவதற்கு முன், அந்த கலைகளில் தேர்ச்சி பெறுவதற்காக சரஸ்வதி தேவியை அருளை வேண்டி வழிபடுவது வழக்கம்.

படிப்பிற்கு மட்டுமின்றி வாக்குபலிதம் ஏற்படவும், ஒரு நிறுவனத்தையோ அல்லது குடும்பத்தையோ நிர்வகித்து, சிறப்பாக கொண்டு செல்வதற்கு உரிய திறமையை பெறுவதற்கும் சரஸ்வதி தேவியை வழிபடுவது சிறப்பானதாகும்.

மாணவர்களின் நினைவாற்றல் பெருக :

இன்று மாணவர்கள் சந்திக்கும் பெரிய பிரச்சனையே படித்தது நினைவில் தங்காமல், மறந்து விடுவது தான்.

மாணவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் குறைவு, கவன சிதறல் ஆகிய பிரச்சனைகளை நீங்கி, அவர்கள் கல்வியில் உயர்வான நிலையை பெறுவதற்கு சரஸ்வதி தேவியை வழிபடுவது மிகச் சிறந்த வழிபாடாகும்.

மனது தெளிவாகி, ஞானமும், அறிவும் மிளிருவதற்கு சரஸ்வதி தேவியை வழிபடுவது சிறப்பானதாகும். இதற்கு சரஸ்வதியின் மந்திரங்கள் நமக்கு துணை செய்யும்.

சரஸ்வதி தேவிக்குரிய மந்திரங்களை மாணவர்கள் தினமும் உச்சரித்து வந்தால் நம்பிக்கையும், அவர்களின் நினைவாற்றலும் பெருகும். மற்றவர்களுடன் திறமையாக பேசும் திறனும் அதிகரிக்கும்.

சரஸ்வதியின் அருளை பெற :

மாணவர்களின் நினைவாற்றல் பெருகுவதற்கும், அவர்கள் கல்வி, தேர்வு மற்றும் கலைகளில் தேர்ச்சி அடைவதற்கும் சரஸ்வதியின் அருளை பெறுவதற்கும், சரஸ்வதி தேவிக்குரிய மந்திரங்களை தொடர்ந்து உச்சரித்து வருவது நல்ல பலனை கொடுக்கும்.

அப்படி மாணவர்களின் கல்விக்கு உதவும் 5 முக்கியமான சரஸ்வதி மந்திரங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்களுக்கான சரஸ்வதி மந்திரங்கள் :

1.
"ஓம் ஐம் சரஸ்வத்யை நமஹ "

என்ற சரஸ்வதி மூல மந்திரத்தை காலை, மாலை இரு வேளைகளிலும் 108 முறை உச்சரிப்பது நன்மை தரும்.

தினமும் முடியாதவர்கள் புதன்கிழமைகள் மற்றும் சரஸ்வதி பூஜை தினத்தில் மாலையில் விளக்கேற்றி சரஸ்வதி தேவியை பிரார்த்தனை செய்து கொண்டு இந்த மந்திரத்தை 108 முறை சொல்வது சிறப்பு.

2. " ஓம் ஐம் ஹ்ரீம் க்ளீம் மகா சரஸ்வதி தேவியே நமஹ "

இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.

இந்த மந்திரத்தை 108 முறை சொல்வது சிறப்பானதாகும்.

3. "ஓம் சரஸ்வத்யை ச வித்மஹே
*பிரம்ம பத்னியை ச தீமஹி*
*தந்நோ வாணி ப்ரசோதயாத்"*

- இந்த சரஸ்வதி காயத்ரி மந்திரத்தை, இசைல பாட்டு, நடனம் என எந்த கலையை கற்க துவங்குவதற்கு முன்பும் மாணவர்கள் உச்சரித்து வந்தால் கலைவாணியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். தினமும் இந்த மந்திரத்தை பாராயணம் செய்வது நலம் தரும்,

நினைவாற்றல் பெருக வைக்கும் மந்திரம் :

4.
"சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா"

- இந்த மந்திரத்தை தினமும் 21 முறை உச்சரித்து வந்தால் நினைவாற்றல் பெருகும்.

மாணவர்கள், படிப்பில் தங்களின் திறமையை வளர்த்துக் கொள்வதற்கு இந்த மந்திரம் துணை நிற்கும்.

5. " ஓம் வத வத வாக்வாதினி ஸ்வாஹா"

- இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்த வந்தால் உணர்ச்சிகளும் மனமும் கட்டுப்படும். படிப்பில் அல்லது வேலையில் கவனம் செலுத்த முடியாமல், நினைவை ஒருமுகப்படுத்த முடியாமல் இருப்பவர்கள் இந்த மந்திரத்தை தினமும் 51 முறை உச்சரித்து வரலாம்.
A very simple prayer for every moment to chant by students:
1708662150048.png
 

Latest ads

Back
Top