தீபாவளி பட்டாசுகளை வாங்கி வெடிக்க சொல்ல&
ஸ்வாமி தீபாவளி புது வஸ்திரம் எல்லாம் வாங்கியச்சா என்றவர் ஸ்வாமி புது வஸ்திரம் சரி பட்டாசுகளை வாங்கி வெடிக்க சொல்லி நரகாசுரன் கேட்டானா அந்த காலத்திலேயே பட்டாசுகள் இருந்தனவா? அல்லது சாஸ்த்திரத்தில் ஏதாவது சொல்லியுள்ளதா? காசை கரியாக்க தானே இப்படி ஒரு செயல் இதை ஏன் கேட்கிறேன் என்றால் சுப்ரீம் கோர்ட் பட்டாசுக்கு கட்டுபாடு விதித்துள்ளது என்றதும் மக்கள் அதை விமர்சனம் செய்கிறார்களே அதான் கேட்டேன் என்றார்
அவரிடம் அடியேன் தேவரீர் சொல்லுவது எல்லாம் சரிதான்
நரகாசுரன் காலத்தில் பட்டாசு என்பது இப்போது போல் இருந்திருக்காது அவன் பட்டாசு வெடிக்கனும் என கேட்கவில்லை
ஆனால்
நம் சாஸ்திரத்தில் மற்ற வெடிகளை வெடிப்பது பற்றி ஏதும் இல்லாவிட்டாலும் அவசியம் மத்தாப்பு கொளுத்த வேண்டும் என்று சொல்கிறது
ஸ்வாமி அப்போ மத்தாப்பு இருந்ததா
அடியேன் இன்று நாம் மத்தாப்பு என்று சொல்லுவதை அவர்கள் உல்கா என்று சொல்லியுள்ளனர்
ஸ்வாமி இது ஏதோ முகம்மதியர் சாப்பிடும் பொருள் பெயர் மாதிரி உள்ளதே நீர் எம்மிடம் விளையாடுகிறீரா
அடியேன் விளையாடவில்லை
ஸ்மிருதி கௌஸ் என்ற ஒரு ஸ்தோத்திரத்தில்
துலா ஹம்ஸ்தே ஸஹஸ்ராம்சௌ ப்ரதோஷே பூத தர்ஸ்யோ
உல்கா ஹஸ்தா நரா: குர்யு: பித்ரூணாம் மார்க தர்சனம்
என்ற இந்த ஸ்லோகத்தில்
துலா மாதமான ஐப்பசியில் அதாவது தீபாவளியன்று உல்கா எனப்படும் நெருப்பை கையில் பிடியுங்கள் என்கிறது இதை தான் அடியேன்
மத்தாப்பு கொளுத்த வேண்டும் என கூறியதாக கூறினேன்
இந்த ஸ்லோகத்தில் வரும் பூத என்ற வார்த்தை சதுர்த்தசியைக் குறிக்கும் அதாவது நரக சதுர்த்தசி எனப்படும் தீபாவளி
தர்சம் என்ற வார்த்தை அமாவாசை யைக் குறிக்கும்
நரக சதுர்த்தி & ஐப்பசி மாத அமாவாசை இந்த இரண்டு நாட்களும் நெருப்பைப் பிடிப்பது கட்டாயம் என்கிறது அந்த ஸ்லோகம்
ஏன்அப்படி பிடிக்கனும் என்றால்
பித்ரூணாம் என்ற வார்த்தை
இன்னும் சொல்லப்போனால் நம் பிதுர்கள் பகவத் திருவடி அடைந்தபின் அவரின் பூதவுடல் இடுகாட்டுக்கு எழுந்தருளும் போது பேரன்கள் தீபந்தம் பிடித்து வழி ஏற்படுத்தி செல்வார்களே அதுபோல
பித்ருக்கள் எனப்படும் நமது முன்னோர் நாம் காட்டும் இந்த இரண்டு நாட்களின் வெளிச்சத்தைப் பயன்படுத்தி தங்கள் வழியில் (சொர்க்கம் நோக்கி) முன்னேறிச் செல்வார்கள் ( மாஹாளய பட்சத்தில் பூமிக்கு வந்தவர்கள் ஐப்பசி மாத அமாவாசையுடன் மேல்லோகம் செல்வதாக ஐதீகம்) என்பதாக கூறியுள்ளது
நம் முன்னோருக்களுக்கு வழிகாட்டும் விதமாக
காலை மாலை இரண்டு வேளைகள் சந்திக்கும் ப்ரதோஷ-காலத்தில் நாம் மட்டும் உல்கா என்னும் மத்தாப்பு கொளுத்தாமல் நம் நட்பு மற்றும் உறவினர்களுக்கும் உல்காதானம் செய்வோம்
உல்கா என்றால் தமிழில் என்ன அர்த்தம்
உல்கா என்றால் நெருப்புடன் கூடிய ஒரு கட்டை (தற்காலத்தில் மத்தாப்பு)
வடநாட்டில் தீபாவளி என்றால் தீபம்+ஆவளி அதாவது தீபங்களை வீட்டில் வரிசையாக ஏற்றுதல் ( கார்த்திகையில் ஏற்றுவது போல்) என்றும் அர்த்தம்
நாம் வசிக்கும் இடங்களை பல விதமான தீபங்களை ஏற்றி அதையே லக்ஷ்மி தேவிக்கு விசேஷ நீராஜனம் செய்தால் ஐஸ்வர்யத்தை நிரம்பப் பெற்று வாழலாம் என்பதை
நீராஜிதோ மஹாலக்ஷ்மீ மர்ச்சயன் ச்ரியமச்னுதே தீபைர் நீராஜிதா யத்ர தீபாவளிரிதி ஸ்ம்ருதா
என்ற ஸ்லோக வரிகள் சொல்லுகிறது
எனவே தீபாவளிக்கு பட்டாசுகளை கொளுத்தவேண்டும் என்று சொல்லவில்லை மத்தாப்பு போன்ற ஒன்றை ஏற்றவேண்டும் என சொல்லியுள்ளது நாம் அவசியம் மத்தாப்புவாவது கொளுத்துவோம்
என்று கூறியதும்
ஜெய் ஶ்ரீராம் என்றவாறே சென்றார்
நாமும் வெடிகளை அதிகம் வெடிக்காமல் மத்தாப்பு போன்ற வெளிச்சம் தரும் பொருட்களையே பயன்படுத்துவோம்
ஸ்வாமி தீபாவளி புது வஸ்திரம் எல்லாம் வாங்கியச்சா என்றவர் ஸ்வாமி புது வஸ்திரம் சரி பட்டாசுகளை வாங்கி வெடிக்க சொல்லி நரகாசுரன் கேட்டானா அந்த காலத்திலேயே பட்டாசுகள் இருந்தனவா? அல்லது சாஸ்த்திரத்தில் ஏதாவது சொல்லியுள்ளதா? காசை கரியாக்க தானே இப்படி ஒரு செயல் இதை ஏன் கேட்கிறேன் என்றால் சுப்ரீம் கோர்ட் பட்டாசுக்கு கட்டுபாடு விதித்துள்ளது என்றதும் மக்கள் அதை விமர்சனம் செய்கிறார்களே அதான் கேட்டேன் என்றார்
அவரிடம் அடியேன் தேவரீர் சொல்லுவது எல்லாம் சரிதான்
நரகாசுரன் காலத்தில் பட்டாசு என்பது இப்போது போல் இருந்திருக்காது அவன் பட்டாசு வெடிக்கனும் என கேட்கவில்லை
ஆனால்
நம் சாஸ்திரத்தில் மற்ற வெடிகளை வெடிப்பது பற்றி ஏதும் இல்லாவிட்டாலும் அவசியம் மத்தாப்பு கொளுத்த வேண்டும் என்று சொல்கிறது
ஸ்வாமி அப்போ மத்தாப்பு இருந்ததா
அடியேன் இன்று நாம் மத்தாப்பு என்று சொல்லுவதை அவர்கள் உல்கா என்று சொல்லியுள்ளனர்
ஸ்வாமி இது ஏதோ முகம்மதியர் சாப்பிடும் பொருள் பெயர் மாதிரி உள்ளதே நீர் எம்மிடம் விளையாடுகிறீரா
அடியேன் விளையாடவில்லை
ஸ்மிருதி கௌஸ் என்ற ஒரு ஸ்தோத்திரத்தில்
துலா ஹம்ஸ்தே ஸஹஸ்ராம்சௌ ப்ரதோஷே பூத தர்ஸ்யோ
உல்கா ஹஸ்தா நரா: குர்யு: பித்ரூணாம் மார்க தர்சனம்
என்ற இந்த ஸ்லோகத்தில்
துலா மாதமான ஐப்பசியில் அதாவது தீபாவளியன்று உல்கா எனப்படும் நெருப்பை கையில் பிடியுங்கள் என்கிறது இதை தான் அடியேன்
மத்தாப்பு கொளுத்த வேண்டும் என கூறியதாக கூறினேன்
இந்த ஸ்லோகத்தில் வரும் பூத என்ற வார்த்தை சதுர்த்தசியைக் குறிக்கும் அதாவது நரக சதுர்த்தசி எனப்படும் தீபாவளி
தர்சம் என்ற வார்த்தை அமாவாசை யைக் குறிக்கும்
நரக சதுர்த்தி & ஐப்பசி மாத அமாவாசை இந்த இரண்டு நாட்களும் நெருப்பைப் பிடிப்பது கட்டாயம் என்கிறது அந்த ஸ்லோகம்
ஏன்அப்படி பிடிக்கனும் என்றால்
பித்ரூணாம் என்ற வார்த்தை
இன்னும் சொல்லப்போனால் நம் பிதுர்கள் பகவத் திருவடி அடைந்தபின் அவரின் பூதவுடல் இடுகாட்டுக்கு எழுந்தருளும் போது பேரன்கள் தீபந்தம் பிடித்து வழி ஏற்படுத்தி செல்வார்களே அதுபோல
பித்ருக்கள் எனப்படும் நமது முன்னோர் நாம் காட்டும் இந்த இரண்டு நாட்களின் வெளிச்சத்தைப் பயன்படுத்தி தங்கள் வழியில் (சொர்க்கம் நோக்கி) முன்னேறிச் செல்வார்கள் ( மாஹாளய பட்சத்தில் பூமிக்கு வந்தவர்கள் ஐப்பசி மாத அமாவாசையுடன் மேல்லோகம் செல்வதாக ஐதீகம்) என்பதாக கூறியுள்ளது
நம் முன்னோருக்களுக்கு வழிகாட்டும் விதமாக
காலை மாலை இரண்டு வேளைகள் சந்திக்கும் ப்ரதோஷ-காலத்தில் நாம் மட்டும் உல்கா என்னும் மத்தாப்பு கொளுத்தாமல் நம் நட்பு மற்றும் உறவினர்களுக்கும் உல்காதானம் செய்வோம்
உல்கா என்றால் தமிழில் என்ன அர்த்தம்
உல்கா என்றால் நெருப்புடன் கூடிய ஒரு கட்டை (தற்காலத்தில் மத்தாப்பு)
வடநாட்டில் தீபாவளி என்றால் தீபம்+ஆவளி அதாவது தீபங்களை வீட்டில் வரிசையாக ஏற்றுதல் ( கார்த்திகையில் ஏற்றுவது போல்) என்றும் அர்த்தம்
நாம் வசிக்கும் இடங்களை பல விதமான தீபங்களை ஏற்றி அதையே லக்ஷ்மி தேவிக்கு விசேஷ நீராஜனம் செய்தால் ஐஸ்வர்யத்தை நிரம்பப் பெற்று வாழலாம் என்பதை
நீராஜிதோ மஹாலக்ஷ்மீ மர்ச்சயன் ச்ரியமச்னுதே தீபைர் நீராஜிதா யத்ர தீபாவளிரிதி ஸ்ம்ருதா
என்ற ஸ்லோக வரிகள் சொல்லுகிறது
எனவே தீபாவளிக்கு பட்டாசுகளை கொளுத்தவேண்டும் என்று சொல்லவில்லை மத்தாப்பு போன்ற ஒன்றை ஏற்றவேண்டும் என சொல்லியுள்ளது நாம் அவசியம் மத்தாப்புவாவது கொளுத்துவோம்
என்று கூறியதும்
ஜெய் ஶ்ரீராம் என்றவாறே சென்றார்
நாமும் வெடிகளை அதிகம் வெடிக்காமல் மத்தாப்பு போன்ற வெளிச்சம் தரும் பொருட்களையே பயன்படுத்துவோம்