மூலவர் - பக்தவத்சலப் பெருமாள்
உற்சவர் - பத்தராவிப் பெருமாள்
தாயார் - என்னைப் பெற்ற தாயார் - சுதாவல்லி
தல மரம் - பாரிஜாதம்
தீர்த்தம் - வருண புஷ்கரிணி
ஊரின் புராணப் பெயர் - தின்னனூர்
ஊரின் பெயர் - திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம்
மங்களாசாசனம் செய்தவர் - திருமங்கையாழ்வார்
திருவிழா
பங்குனி மாதம் - திருவோண விழா
சித்ரா பௌர்ணமி, திருக்கல்யாணம்,
தீபாவளி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல், ரதசப்தமி
தலச் சிறப்பு
குபேரன் தாயாரை வேண்டித் தன் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றான். ஆதிசேஷனுக்கென்று தனி சன்னதி இங்கு உள்ளது. ஆதிசேஷனை சனிக்கிழமையன்று நெய்விளக்கு இட்டு, பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் ராகு, கேது தோஷம், சர்ப்ப தோஷம் நீங்கும். மாங்கல்ய பலன் கிடைக்கும்.
59ஆவது திவ்ய ஆகும்.
மஹாவிஷ்ணுவிடம் சினம்கொண்டு தாயார் பூலோகத்தில் நின்ற இடமே திரு(மகள்)நின்றவூர்! தாயாரின் தகப்பானான சமுத்திரராஜன் அவரைச் சமாதானப் படுத்த முயன்றான். வரமறுத்துவிட்டார். பிறகு சமுத்திரராஜன் பெருமாளுடன் திருநின்றவூர் வந்துத் தாயாரை சமாதானப் படுத்தினான். "என்னைப் பெற்ற தாயே" என்று (எல்லா பெற்றோரும் குழந்தையிடம் மன்றாடுவதுபோல) கெஞ்சித் தாயாரை அமைதிப்படுத்தினான். பெருமாளும் அங்கு வந்து சமாதானப்படுத்தினார். சமுத்திரராஜன் என்ற பக்தனுக்காகப் பெருமாள் அங்கு வந்ததால் பக்தவத்சலப் பெருமாள் எனவும், சமுத்திரராஜன் அழைத்த அதே பெயரால் 'என்னைப் பெற்ற தாயார்' எனவும் இருவரும் அழைக்கப்படுகின்றனர். இருவரும் இங்கு திருமணக்கோலத்தில் காட்சி அளிக்கின்றனர்.
இக்கோவிலின் இராஜகோபுரம் விஜயநகர அரசர்கள் காலத்தியது.
பெருமாள் இருதேவியருடன் ஐந்து ஆயுதங்களுடன் பதினோரு அடி உயரத்தில் அருள்கின்றார். வலப்பக்கம் தாயாரின் சன்னதி. ஆண்டாள், ஆழ்வார்கள், ஹனுமன், ஏரி காத்த இராமன், ஆதிசேஷன் ஆகியோருக்குத் தனித்தனி சன்னதிகள் உள்ளன.
தல வரலாறு
திருமங்கை ஆழ்வார் இத்தலம் வழியாகச் சென்றும் மங்களாசாசனம் செய்யாமல் சென்றுவிட்டார். தாயார் பெருமாளிடம் இத்தலத்திற்காகப் பாடல் பெற்றுவருமாறு பணித்தார். ஆழ்வார் அதற்குள் திருக்கடல்மல்லைக்குச் (மாமல்லபுரம்) சென்றுவிட்டார். பக்தவத்சலப் பெருமாள் அங்கேயே வந்து ஆழ்வாரிடம் ஒருபாடல் வாங்கிச் சென்றார்.
உலகு புரக்கும் நாராயணர் பக்தனின் பெருமையைக் காட்டத் தாமே வந்து ஒரு பாட்டெழுதி வாங்கிச் சென்றார்!
தாயார் பெருமாளிடம், "மற்ற தலங்களுக்கெல்லாம் பத்துப் பாடல்கள்; இங்கு மட்டும் ஒரே பாடலா! மறுபடி போய் பாடல் கேட்டு வாங்கி வாருங்கள் என்று பெருமாளைத் திருமங்கை ஆழ்வாரிடம் அனுப்பிவைத்தார். மறுபடி பெருமாள் ஆழ்வாரைத் திருக்கண்ண மங்கை (திருவாரூர் அருகில்) சந்தித்தார். அங்கு ஆழ்வார் திருக்கண்ணமங்கை பெருமாளை மங்களாசாசனம் செய்துகொண்டிருந்தார். பக்தவத்சலப் பெருமாள் வந்து நிற்பதை ஓரக் கண்ணால் பார்த்த ஆழ்வார், அவரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்தார்!
உற்சவர் - பத்தராவிப் பெருமாள்
தாயார் - என்னைப் பெற்ற தாயார் - சுதாவல்லி
தல மரம் - பாரிஜாதம்
தீர்த்தம் - வருண புஷ்கரிணி
ஊரின் புராணப் பெயர் - தின்னனூர்
ஊரின் பெயர் - திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம்
மங்களாசாசனம் செய்தவர் - திருமங்கையாழ்வார்
திருவிழா
பங்குனி மாதம் - திருவோண விழா
சித்ரா பௌர்ணமி, திருக்கல்யாணம்,
தீபாவளி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல், ரதசப்தமி
தலச் சிறப்பு
குபேரன் தாயாரை வேண்டித் தன் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றான். ஆதிசேஷனுக்கென்று தனி சன்னதி இங்கு உள்ளது. ஆதிசேஷனை சனிக்கிழமையன்று நெய்விளக்கு இட்டு, பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் ராகு, கேது தோஷம், சர்ப்ப தோஷம் நீங்கும். மாங்கல்ய பலன் கிடைக்கும்.
59ஆவது திவ்ய ஆகும்.
மஹாவிஷ்ணுவிடம் சினம்கொண்டு தாயார் பூலோகத்தில் நின்ற இடமே திரு(மகள்)நின்றவூர்! தாயாரின் தகப்பானான சமுத்திரராஜன் அவரைச் சமாதானப் படுத்த முயன்றான். வரமறுத்துவிட்டார். பிறகு சமுத்திரராஜன் பெருமாளுடன் திருநின்றவூர் வந்துத் தாயாரை சமாதானப் படுத்தினான். "என்னைப் பெற்ற தாயே" என்று (எல்லா பெற்றோரும் குழந்தையிடம் மன்றாடுவதுபோல) கெஞ்சித் தாயாரை அமைதிப்படுத்தினான். பெருமாளும் அங்கு வந்து சமாதானப்படுத்தினார். சமுத்திரராஜன் என்ற பக்தனுக்காகப் பெருமாள் அங்கு வந்ததால் பக்தவத்சலப் பெருமாள் எனவும், சமுத்திரராஜன் அழைத்த அதே பெயரால் 'என்னைப் பெற்ற தாயார்' எனவும் இருவரும் அழைக்கப்படுகின்றனர். இருவரும் இங்கு திருமணக்கோலத்தில் காட்சி அளிக்கின்றனர்.
இக்கோவிலின் இராஜகோபுரம் விஜயநகர அரசர்கள் காலத்தியது.
பெருமாள் இருதேவியருடன் ஐந்து ஆயுதங்களுடன் பதினோரு அடி உயரத்தில் அருள்கின்றார். வலப்பக்கம் தாயாரின் சன்னதி. ஆண்டாள், ஆழ்வார்கள், ஹனுமன், ஏரி காத்த இராமன், ஆதிசேஷன் ஆகியோருக்குத் தனித்தனி சன்னதிகள் உள்ளன.
தல வரலாறு
திருமங்கை ஆழ்வார் இத்தலம் வழியாகச் சென்றும் மங்களாசாசனம் செய்யாமல் சென்றுவிட்டார். தாயார் பெருமாளிடம் இத்தலத்திற்காகப் பாடல் பெற்றுவருமாறு பணித்தார். ஆழ்வார் அதற்குள் திருக்கடல்மல்லைக்குச் (மாமல்லபுரம்) சென்றுவிட்டார். பக்தவத்சலப் பெருமாள் அங்கேயே வந்து ஆழ்வாரிடம் ஒருபாடல் வாங்கிச் சென்றார்.
உலகு புரக்கும் நாராயணர் பக்தனின் பெருமையைக் காட்டத் தாமே வந்து ஒரு பாட்டெழுதி வாங்கிச் சென்றார்!
தாயார் பெருமாளிடம், "மற்ற தலங்களுக்கெல்லாம் பத்துப் பாடல்கள்; இங்கு மட்டும் ஒரே பாடலா! மறுபடி போய் பாடல் கேட்டு வாங்கி வாருங்கள் என்று பெருமாளைத் திருமங்கை ஆழ்வாரிடம் அனுப்பிவைத்தார். மறுபடி பெருமாள் ஆழ்வாரைத் திருக்கண்ண மங்கை (திருவாரூர் அருகில்) சந்தித்தார். அங்கு ஆழ்வார் திருக்கண்ணமங்கை பெருமாளை மங்களாசாசனம் செய்துகொண்டிருந்தார். பக்தவத்சலப் பெருமாள் வந்து நிற்பதை ஓரக் கண்ணால் பார்த்த ஆழ்வார், அவரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்தார்!