Navigation »Tamil Brahmins > Customs and Traditions > Temples » Holy Places


Holy Places - Page 2


Expired Thread The thread "Holy Places" has not received any replies for six months. It has been automatically closed as a result. You may start a new thread on the topic if the information in this thread is not sufficient.

Closed Thread
 
LinkBack Thread Tools Display Modes
  #11 (permalink)  
Old 02-03-2007, 01:31 PM
Junior Member
 
Join Date: Mar 2007
Posts: 22
Downloads: 0
Uploads: 0
கொரட்டூர் தவ முனீஸ்வரர் - ஒரு ஊரே முனீஸ்வரரைக் கும்பிடுவதை இங்கு காணலாம். ரெட்டேரிக் கரையில் குடிகொண்டு ஸாந்தமான கோலத்தில் அருள் புரியும் முனீஸ்வரர் பார்க்கும் போதே மனதில் ஆனந்தம் அப்பிக்கொள்கிறது. அவரைச் சுற்றி பாம்புகள் உலாத்துவதை சகஜமாய் காணலாம். இங்கிருக்கும் சிறுவர் சிறுமிகள் (உண்மை) சர்வ சகஜமாய் பாம்புகளைப் பிடித்து விளையாடிவிட்டு மீண்டும் ஏரியில் கொண்டு விட்டு விடுகிறார்கள். பாம்புகளும் சமத்தாய் இவர்களோடு விளையாடி விட்டு ஏரிக்குள் சென்று விடுகின்றன.வழி கொரட்டூர் ரயில்வே கேட் தாண்டி 1/2 கி.மீ வடக்கே சென்றால் இந்த கோவிலை அடையலாம்
__________________
SARVE JANA: SUKHINO BHAVANTHU
Reply With Quote
All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  #12 (permalink)  
Old 02-03-2007, 01:31 PM
Junior Member
 
Join Date: Mar 2007
Posts: 22
Downloads: 0
Uploads: 0
இலஞ்சிக் குமரன் - குற்றால சாரல் வீச குளிர் காற்று தாலாட்ட மலைகள் சூழ உள்ள தலம் இலஞ்சி. இங்கிருக்கும் குமரன் அடியார்களை வா என்று வரவேற்கும் தோரணையிலிருக்கிறார்.
கூடுதல் தகவல்:- ஒரு முறை பெரியார் இங்கு அவருடைய நண்பரின் மகளின் திருமணத்திற்கு வந்தாராம். கோவிலுக்குள்ளேயே போகாத பெரியார் இங்கு வந்து திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு, முருகப் பெருமானின் கோலத்தைப் பார்த்து, இத்தனை கனிவாக எல்லோரும் தரிசனம் செய்வதனால் தான், இறை நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
நண்பரின் கல்யாண நிகழ்ச்சியினால் இங்கு முருகனின் அழகைப் பார்க்க முடிந்ததே என்று நன்றி சொன்னாராம். கொள்கைகளுக்காக, சில நல்ல விஷயங்களும் நம்மை விட்டு தள்ளிப் போய்விடுகிறது முருகப் பெருமானைப் பார்த்து விட்டு சொன்னாராம்.
இதை அங்கிருக்கும் பெரியவர் ஒருவர் சொல்லி மகிழ்ந்தார்.

தென்காசி - குற்றாலம் - செங்கோட்டை அருகேயுள்ள தலம்
__________________
__________________
SARVE JANA: SUKHINO BHAVANTHU
Reply With Quote
All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  #13 (permalink)  
Old 02-03-2007, 01:32 PM
Junior Member
 
Join Date: Mar 2007
Posts: 22
Downloads: 0
Uploads: 0
திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் - வாழ்க்கையில் யாருமே நமக்கு கை கொடுக்கவில்லை என துயரப்படுபவர்கள், இத்தலத்தில் அருள்மிகு குளிர்ந்தநாயகி உடனுறை ஸ்ரீ ஒத்தாண்டேஸ்வரரை நிஜமான பக்தியோடு துதித்தால் கைகொடுத்து கரை சேர்க்கிறார். இது தான் இத்தலத்து மஹாத்மியம். தொண்டைமண்டல மன்னனுக்கு வெட்டுபட்ட கை மீண்டும் முளைக்க அருள் பண்ணிய ஈசன் இந்த மஹிஸார க்ஷேத்ரத்தில் கை கொடுக்கிறார். சிவ வாக்கியராக இருந்து திருமழிசை ஆழ்வாராக மாறிய பக்தி ஸாரரின் ஊரும் இதுவே. சென்னை பூவிருந்தவல்லியிலிருந்து திருத்தணி சாலையில் 3 கி.மீ தொலைவில் உள்ள அழகிய தலம். அழகான குளத்தைக் காணும் யாவரையும் நீராடு எண்ணத்தை ஏற்படுத்தும் தலம்.
__________________
__________________
SARVE JANA: SUKHINO BHAVANTHU
Reply With Quote
All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  #14 (permalink)  
Old 06-03-2007, 11:45 AM
Junior Member
 
Join Date: Mar 2007
Posts: 22
Downloads: 0
Uploads: 0
ப்ருங்கி மாமலை : தொண்டை மண்டலத்திலிருக்கும் பழம் பதிகளில் இந்த ப்ரிங்கி மாமலை தொன்மையானது. ப்ருங்கி மகரிஷி வழிபட்ட மலைக்கடவுளாம் ஈசன் இங்கே காசி விஸ்வநாதனாய் காசி விசாலாட்சியோடு அருட் கோலம் அருளுகிறார். ப்ருங்கி மாமலையில் இருந்த சிவன் கோவில் கால வெள்ளத்தில் கீழே இறக்கப்பட்டு இப்பொழுது தரையில் இருக்கிறது. st. thomas mount மலைக்கு அருகேயுள்ள சிவத்தலம் அவ்வளவாக யாரும் அறியாமல் இருக்கிறது. கோவிலின் பழமையைப் பார்க்கும் போது தொன்மை புலப்படுகிறது. அத்துடன் இங்கு ஒரு சரித்திரம் சத்தமில்லாமல் அழிந்து வருகிறது. கோவிலுக்கு நேரே ஒரு பெரிய கிணறு ஒன்று கோபுரங்களுடன் வடிவமைக்கப்பட்டு தற்சமயம் பாழ்பட்டு, அழகான படிக்கட்டுகளுடன் இருக்கின்றன். கிணற்றின் அடிவரை இறங்கிச் சென்று நீர் எடுக்கும் வகையில் அமைக்கப்பட்யிருக்கிறது. இது தான் மலையிலே சிவாலயம் இருந்த பொழுது அபிஷேகத்திற்கு பயன் பட்டது என யூகிக்கிறோம். இப்பொழுது பாழடைந்து கிடக்கிறது. கிண்டி கத்திபாராவிலிருந்து ராமாவரம் போரூர் பாதையில் பரங்கிமலை அடிவாரத்தில் இருக்கிறது. கோவில் அழகாக பராமரிக்கப்படுகிறது. ப்ருங்கி மா முனிவர் பூசித்த ஆலயம் பகதர்களுக்காக காத்திருக்கிறது.
__________________


ப்ருங்கி முனிவர் உபசரித்த பட்டாபிஷேக ராமன்: ராமபிரான் அயோத்தி திரும்பும் வேளையில் இந்த ப்ருங்கி மலையில் ப்ருங்கி முனவரின் உபசாரத்தை ஏற்று தங்கினாராம். சில நாட்கள் கழித்து அயோத்திக்கு புறப்படும் போது, ராம்பிரானை ப்ருங்கிமுனிவர் வேண்ட தன்னுடைய "உயிர்க்கலை"யை அர்ச்சாவதாரத்திலே த்ந்து அனுக்ரகித்தாரம். அதன் படி ராம் பிரானை அயோத்தியிலும், இந்த நந்தம்பாக்கத்திலும் தான் உயிராக தரிசிக்கமுடியும் என்பது சிறப்பு. ஒரு முறை தரிசிப்பவர்கள் மனமுருகி விடுவர். ப்ரஸன்ன சீனிவாசப் பெருமாள் சன்னதியும், ச்ரீ சுதர்ஸனரின் சன்னதி கோசாலை என பேரழகுடன் திருக்கோவில் திகழ்கிறது. chennai trade centre எதிரே செல்லும் சிறு சந்தில் இந்த பெரிய கோவில் இருக்கிறது. ராமபிரான் இங்கு தங்கியதன் அடையாளமாய் இன்றும் ராமாவரம், சீதாவரம், தேவிபுரம் என பல கிராமங்கள் இன்றும் உள்ளன. ராம் ராம்ராம்ராம்ராம்ராம்ராம்ராம்ராம்ராம்ராம்ராம்ராம்ரா ம்ராம்
__________________


பூவரசன் குப்பம் - லக்ஷ்மி நரசிம்மர் : சனிக்கிழமையன்று இத்தலத்திற்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. விழுப்புரத்திலிருந்து 16 கிமீட்டர் தொலைவில் விழு - பாண்டி சாலையில் வளவனூரிலிருந்து தெற்கே செல்லும் சாலையில் 6 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது. லக்ஷ்மி நரசிம்மரின் ஆலயம் தொன்மையானதாய் இருக்கிறது. இக்கோவிலில் பக்தர்கள் அனைவரும் சட்டை பனியன் கழற்றி தான் உள்ளே செல்லவேண்டும் என்று வைத்திருப்பதே இங்கு வருபவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு சாட்சியாய் இருக்கிறது.

அருமையான சன்னதி.


சிறுவந்தாடு - சிறு பந்தாடு : பூவரசன்குப்பம் போகும் வழியில் உள்ள வைப்பு தலம். சிறுபந்தாடும் ஈசனே என்று பாடப்பெற்ற சிவத்தலம். உமையவள் ஈசனோடு சிறு மலர் பந்துகளை வைத்து விளையாடி மகிழ்ந்த தலம். கோவில் இடிந்து கிடக்கிறது. திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது. அழகேசன் எனும் அழகிய நாமத்துடன் ஈசன் காட்சி தரும் கோலம் மனதை மயக்கும்.

இவ்வாலயத்தில் ஒரு மாது தானே ஈசனுக்கும் அம்பிகைக்கும் பணி செய்து வரும் காட்சி இறைவனின் அருட்திறத்தை எடுத்துக் காட்டுகிறது. அந்த மாது இறைவனுக்கு தோத்திரங்கள் பாடி தீபாராதனை செய்த பொழுது மனம் குளிர்ந்தது.
__________________
__________________
SARVE JANA: SUKHINO BHAVANTHU
Reply With Quote
All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
Closed Thread

Expired Thread The thread "Holy Places" has not received any replies for six months. It has been automatically closed as a result. You may start a new thread on the topic if the information in this thread is not sufficient.


Thread Tools
Display Modes

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off
Trackbacks are On
Pingbacks are On
Refbacks are On




All times are GMT +5.5. The time now is 11:23 AM.


Tamilbrahmins.com is not affiliated with Thambraas or endorsed by them in any way.
Search Engine Friendly URLs by vBSEO 3.3.2 ©2009, Crawlability, Inc.