V
V.Balasubramani
Guest
நவராத்திரி ஒரு சிறப்பு தொகுப்பு
நவராத்திரி ஒரு சிறப்பு தொகுப்பு
ஒரு மனிதனிற்கு உடல்வலிமை, பராக்கிரம், மனோதிடம்,புத்திபலம், தீர்க்காயுள், ஞானம் , தேவைகளிற்கு பணம் போன்றஅனைத்து அம்சமும் நிறைந்திருந்தால் தான் அவன் சிறந்த வெற்றியாளனாக திகழமுடியும். அதாவது வீரம், செல்வம், கல்விஆகியவை அனைத்தும் நிறைந்திருக்கவேண்டும்.
இவற்றை பெறுவதற்காகவேநவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
வாழ்க்கையின் எல்லா தேவைகளையும் அடைய பணம்
வேண்டும்.
இதற்காக மகாலட்சுமி தேவியை வணங்குகிறோம்.
பெற்ற பணத்தை பாதுகாக்க வீரம் வேண்டும் அதற்காக துர்க்காதேவியை வழிபடுகிறோம்.
பெற்று பாதுகாக்கப்பட்ட பணத்தை நல்வழியில் பயனள்ள
காரியங்களுக்கு பயன்படுத்த அறிவு
அதாவது கல்வியறிவு வேண்டும்.
அதற்கு சரசுவதித்தாயைவணங்குகிறோம்.
இப்படியாக காரண காரியங்களுடன் இந்த விரதமுறை
அமைந்துள்ளது.
நவ என்ற சொல்லிற்கு ஒன்பது, புதியதுஎன்ற இரண்டு அர்த்தங்கள் உள்ளன.
இங்கு ஒன்பது ராத்திரிகள்என்பதே நவராத்திரி எனபபபடுகிறது.
ஒன்பது ராத்திரிகள் சக்தியைநோன்பு நோற்று வழிபட்டு 10ம் நாள் நோன்பை நிறைவு செய்யவேண்டும்.
உத்தராயண காலமான தை முதல் ஆனி வரையிலானகாலத்தின் நடுவில் வருவது வசந்த ருது -- சித்திரை, தட்சிணாயணகாலமான ஆடி முதல் மார்கழி வரையிலான காலத்தின்நடுப்பகுதியான சரத் ருது -- புரட்டாசி.
இவ்விரு பருவ காலங்களும்எமனின் கோரைப்பற்களைக்
குறிக்கின்றன.
இக்காலங்கள் பொதுவாக மனிதற்கு தீமை விளைவிக்கும்
காலங்களாகும்.
இதனால் தான் இக் காலங்களில் திருமணம் போன்ற
சுபகாரியங்கள் நடத்தப்படுவதில்லை.
இந்த ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரான மலைமகள்
(துர்க்கை), அலைமகள்(மகாலட்சுமி), கலைமகள் (சரசுவதி)
ஆகியோர்க்கு மும்மூன்று நாட்களாக வழிபடும் ஒரு
முறையும் உள்ளது.
மற்றும் ஒன்பதுசக்தியிரை ஒன்பது நாட்கள் வழிபடும்
முறையம் உள்ளது.
ஈழம்போன்ற நாடுகளில் முதல் முறையே கடைப்பிடிக்கப்படுகிறது.
பண்டைய காலத்தில் மன்னர்கள் மற்றும் படைவீரர்கள்ஒன்பதுநாட்களும் தங்கள் ஆயுதங்களை (போர்க் கருவிகளை)
பூசையில் வைத்து பத்தாம் நாள் விஜய தசமியன்று விழா
எடுத்து தமது வெற்றிக்கு தமது ஆயுதங்களிற்கு சிறப்பு சக்தி
கிடைக்கவேண்டும் என வழிபட்டு வந்தனர்.
இதற்கு சான்று கிருஷ்ணஅவதாரத்தில் கம்சனின் படலத்தில் காணப்படுகிறது.
நவராத்திரிகொலு வைக்கும் முறையையும், நவராத்திரி
என்பது பெண்தெய்வங்களிற்கு மட்டுமே உரிய ஒரு வழிபாட்டு முறை போலவும்,அது பெண்கள் மட்டுமே கடைப்பிடிக்கும் ஒரு விரத வழிபாட்டுமுறை போலவும் ஒரு தவறான தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த நவராத்திரி விரதம் குறிப்பாக வெற்றிக்கனியை
பறிக்க விரும்பும் ஆண், பெண், குழந்தைகள் அனைவரும்
கடைப்பிடிக்க வேண்டிய விரதமாகும்.
ஆண்கள் இந்த விரதத்தினைஅனுஸ்டிப்பதிற்கு சான்றாக
ஏற்கனவே கூறியது போல கம்சன் சிறப்பாக ஆயுத பூசை
செய்ததையும் தற்காலத்தில்தொழிலாளரகள் தங்கள்
ஆயுதங்களுக்கு ஆயுத பூசை அன்று சிறப்பு வழிபாடு செய்வதையும் காணலாம்.
மற்றும் விஜயதசமிஅன்று பிள்ளைகளிற்கு ஏடு தொடங்கல்
என்ற கல்வியின் ஆரம்பநாளாக கடைப்பிடிப்பதையும் நாம்
காணலாம்.
ஒன்பது தேவியரின் வழிபாட்டு முறையையும்இனிப்பார்ப்போம்
நவராத்திரி கொலு
நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும்.
கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில்பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்துவைப்பதேயாகும். ஐம்பூதங்களில் ஒன்றானமண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளைசக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில்பூசிப்பவர்களிற்கு சகல நலங்களையும் தருவேன்என்று அம்பிகையே கூறியிருக்கின்றா. இனிநவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும்என்று பார்ப்போம். கொலுமேடை 9 படிகள் கொண்டதாக இருக்கவேண்டும்.
Contd……../2
நவராத்திரி ஒரு சிறப்பு தொகுப்பு
ஒரு மனிதனிற்கு உடல்வலிமை, பராக்கிரம், மனோதிடம்,புத்திபலம், தீர்க்காயுள், ஞானம் , தேவைகளிற்கு பணம் போன்றஅனைத்து அம்சமும் நிறைந்திருந்தால் தான் அவன் சிறந்த வெற்றியாளனாக திகழமுடியும். அதாவது வீரம், செல்வம், கல்விஆகியவை அனைத்தும் நிறைந்திருக்கவேண்டும்.
இவற்றை பெறுவதற்காகவேநவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
வாழ்க்கையின் எல்லா தேவைகளையும் அடைய பணம்
வேண்டும்.
இதற்காக மகாலட்சுமி தேவியை வணங்குகிறோம்.
பெற்ற பணத்தை பாதுகாக்க வீரம் வேண்டும் அதற்காக துர்க்காதேவியை வழிபடுகிறோம்.
பெற்று பாதுகாக்கப்பட்ட பணத்தை நல்வழியில் பயனள்ள
காரியங்களுக்கு பயன்படுத்த அறிவு
அதாவது கல்வியறிவு வேண்டும்.
அதற்கு சரசுவதித்தாயைவணங்குகிறோம்.
இப்படியாக காரண காரியங்களுடன் இந்த விரதமுறை
அமைந்துள்ளது.
நவ என்ற சொல்லிற்கு ஒன்பது, புதியதுஎன்ற இரண்டு அர்த்தங்கள் உள்ளன.
இங்கு ஒன்பது ராத்திரிகள்என்பதே நவராத்திரி எனபபபடுகிறது.
ஒன்பது ராத்திரிகள் சக்தியைநோன்பு நோற்று வழிபட்டு 10ம் நாள் நோன்பை நிறைவு செய்யவேண்டும்.
உத்தராயண காலமான தை முதல் ஆனி வரையிலானகாலத்தின் நடுவில் வருவது வசந்த ருது -- சித்திரை, தட்சிணாயணகாலமான ஆடி முதல் மார்கழி வரையிலான காலத்தின்நடுப்பகுதியான சரத் ருது -- புரட்டாசி.
இவ்விரு பருவ காலங்களும்எமனின் கோரைப்பற்களைக்
குறிக்கின்றன.
இக்காலங்கள் பொதுவாக மனிதற்கு தீமை விளைவிக்கும்
காலங்களாகும்.
இதனால் தான் இக் காலங்களில் திருமணம் போன்ற
சுபகாரியங்கள் நடத்தப்படுவதில்லை.
இந்த ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரான மலைமகள்
(துர்க்கை), அலைமகள்(மகாலட்சுமி), கலைமகள் (சரசுவதி)
ஆகியோர்க்கு மும்மூன்று நாட்களாக வழிபடும் ஒரு
முறையும் உள்ளது.
மற்றும் ஒன்பதுசக்தியிரை ஒன்பது நாட்கள் வழிபடும்
முறையம் உள்ளது.
ஈழம்போன்ற நாடுகளில் முதல் முறையே கடைப்பிடிக்கப்படுகிறது.
பண்டைய காலத்தில் மன்னர்கள் மற்றும் படைவீரர்கள்ஒன்பதுநாட்களும் தங்கள் ஆயுதங்களை (போர்க் கருவிகளை)
பூசையில் வைத்து பத்தாம் நாள் விஜய தசமியன்று விழா
எடுத்து தமது வெற்றிக்கு தமது ஆயுதங்களிற்கு சிறப்பு சக்தி
கிடைக்கவேண்டும் என வழிபட்டு வந்தனர்.
இதற்கு சான்று கிருஷ்ணஅவதாரத்தில் கம்சனின் படலத்தில் காணப்படுகிறது.
நவராத்திரிகொலு வைக்கும் முறையையும், நவராத்திரி
என்பது பெண்தெய்வங்களிற்கு மட்டுமே உரிய ஒரு வழிபாட்டு முறை போலவும்,அது பெண்கள் மட்டுமே கடைப்பிடிக்கும் ஒரு விரத வழிபாட்டுமுறை போலவும் ஒரு தவறான தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த நவராத்திரி விரதம் குறிப்பாக வெற்றிக்கனியை
பறிக்க விரும்பும் ஆண், பெண், குழந்தைகள் அனைவரும்
கடைப்பிடிக்க வேண்டிய விரதமாகும்.
ஆண்கள் இந்த விரதத்தினைஅனுஸ்டிப்பதிற்கு சான்றாக
ஏற்கனவே கூறியது போல கம்சன் சிறப்பாக ஆயுத பூசை
செய்ததையும் தற்காலத்தில்தொழிலாளரகள் தங்கள்
ஆயுதங்களுக்கு ஆயுத பூசை அன்று சிறப்பு வழிபாடு செய்வதையும் காணலாம்.
மற்றும் விஜயதசமிஅன்று பிள்ளைகளிற்கு ஏடு தொடங்கல்
என்ற கல்வியின் ஆரம்பநாளாக கடைப்பிடிப்பதையும் நாம்
காணலாம்.
ஒன்பது தேவியரின் வழிபாட்டு முறையையும்இனிப்பார்ப்போம்
நவராத்திரி கொலு
நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும்.
கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில்பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்துவைப்பதேயாகும். ஐம்பூதங்களில் ஒன்றானமண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளைசக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில்பூசிப்பவர்களிற்கு சகல நலங்களையும் தருவேன்என்று அம்பிகையே கூறியிருக்கின்றா. இனிநவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும்என்று பார்ப்போம். கொலுமேடை 9 படிகள் கொண்டதாக இருக்கவேண்டும்.
Contd……../2
Last edited by a moderator: